பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாசன் | ஹரிஹரன் & சுஜாதா மோகன் | பரணி | பெரியண்ணா |
Nilave Nilave Sarigama Pathani Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்…
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்…
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு…
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு…
ஆண் : நீ மாலையில் வருவதும்…
காலையில் மறைவதும்…
என்னடி விளையாட்டு…
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
—BGM—
பெண் : காதல் பேசும்…
வயதுக்கு வந்த நிலா…
உன்னை நெஞ்சைத் தீண்ட
அனுமதி தந்த நிலா…
தன் மனதைச் சொல்லிவிட
தயங்குது தங்க நிலா…
ஆண் : அட ஆதாம் ஏவாள்…
பார்த்தது பழைய நிலா…
என் ஆசை நெஞ்சை…
ஈர்த்தது புதிய நிலா…
பெண் : தன் கனவுகளை…
மெல்ல முனகும் நிலா…
ஆண் : என் ஆயுளையே…
அள்ளிப் பருகும் நிலா…
பெண் : பகலுடன் இரவும்…
பதினெட்டு வருடம்…
வளர்ந்தது இந்த நிலா…
இது உனக்கே சொந்த நிலா…
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
—BGM—
ஆண் : கண்ணில் கண்ணில்…
கனவுகள் பூசுகிறாய்…
என் காதல் நெஞ்சில்…
நினைவுகள் வீசுகிறாய்…
தொட தொட நான் வருகையிலே…
தொலைவினில் ஓடுகிறாய்…
பெண் : அட நானும் உன்னை…
பார்ப்பது தெரியாதா…
நான் பேசும் வார்த்தை…
உனக்கது புரியாதா…
ஆண் : அடி நான் இருந்தேன்…
உன் ஞாபகமாய்…
பெண் : அதை சொல்லுகிறேன்…
நான் சூசகமாய்…
ஆண் : அருகில் நானும்…
தொலைவில் நீயும்…
இருந்தால் காதல் எது…
மனம் கேட்கும் கேள்வி இது…
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
ஆண் : உன்னை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்…
நீ தேய்கின்ற நாளில் வாடுகிறேன்…
உன் மௌனத்தில் ஆயிரம் பாட்டு…
நான் மயங்குகிறேன் அதைக் கேட்டு…
ஆண் : நீ மாலையில் வருவதும்…
காலையில் மறைவதும்…
என்னடி விளையாட்டு…
ஆண் : நிலவே நிலவே…
சரிகம பதநி பாடு…
என் கனவைத் திருடி…
பல்லவி வரியாய்ப் போடு…
Notes : Nilave Nilave Sarigama Pathani Song Lyrics in Tamil. This Song from Periyanna (1999). Song Lyrics penned by Vasan. நிலவே நிலவே சரிகம பதநி பாடல் வரிகள்.