சுற்றாதே பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்கலையரசிஇளையராஜாநிலவே முகம் காட்டு

Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil


பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

பெண் : கோடி விண்மீன்களில் எந்தன் விண்மீன் எங்கே…
என்னை தாலாட்டுமே அந்த ராகம் எங்கே…
எந்தன் சொர்கத்தை சொல்கின்ற சொல் ஏது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…

BGM

பெண் : அதி காலையில் துயில் வேளையில்…
கனவாக தீண்டிவிட்டு நீ போனாய்…
துயில் நீங்கினேன் உன்னை தேடினேன்…
விழி தாண்டி தூரம் என்று நீ ஆனாய்…

BGM

பெண் : உள்ளுக்குள் உன்னை கண்டு கொண்டேன்…
உன் கண்ணில் என்னை காண வேண்டும்…
வானத்தில் வெண்ணிலாவின் வீதி…
சொல்லாதோ உன்னை காணும் தேதி…

பெண் : உந்தன் தோளில் பூவாய் விழ வேண்டும்…
எந்தன் சோகம் சொல்லி அழ வேண்டும்…
அந்த நாள் காண என் நெஞ்சம் தவிக்கும்… ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…

BGM

பெண் : ஒரு நாழிகை உன்னை பார்த்த பின்…
மீண்டும் பார்வை போகும் இனி போகட்டும்…
உந்தன் தேன் குரல் கொஞ்சம் கேட்ட பின்…
எந்தன் ஜீவன் ஓயும் இனி ஓயட்டும்…

பெண் : என்றேனும் உன்னை காண கூடும்…
என்று எண்ணி எந்தன் ஜீவன் வாழும்…
சாகாத காதல் வரம் வேண்டும்…
ஓயாமல் உன்னை தொழ வேண்டும்…

பெண் : காற்றை தேடும் புல்லாங்குழல் போலே…
ஏங்கி பாடும் ஒற்றை குயில் ஆனேன்…
உன்னை காணாமல் என் கண்கள் தூங்காது…

பெண் : சுற்றாதே பூமி தாயே நில்லு…
என் மன்னன் எங்கே என்று சொல்லு…
வீசாதே தென்றல் காற்றே நில்லு…
நான் தேடும் ஜீவன் எங்கே சொல்லு…


Notes : Suttrathe Bhoomithaye Song Lyrics in Tamil. This Song from Nilave Mugam Kaattu (1999). Song Lyrics penned by Vasan. சுற்றாதே பூமி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top