Tag Archives: திப்பு

kadhal-vandhal-song-lyrics-in-tamil

காதல் வந்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & மாணிக்க விநாயகம்வித்யாசாகர்இயற்கை

Kadhal Vandhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…

ஆண் : சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து…
கடல் நீர் மட்டம் கூடுதடி…

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…

BGM

ஆண் : உயிரை தவிர சொந்தம் இல்லையே…
காதலிக்கும் முன்பு…
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே…
காதல் வந்த பின்பு…

BGM

ஆண் : சாவை அழைத்து கடிதம் போட்டேன்…
காதலிக்கும் முன்பு…
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்…
காதல் வந்த பின்பு…

ஆண் : உன்னால் என் கடல் அலை…
உறங்கவே இல்லை…
உன்னால் என் நிலவுக்கு…
உடல் நலம் இல்லை…

ஆண் : கடல் துயில் கொள்வதும்…
நிலா குணம் கொள்வதும்…
நான் உயிர் வாழ்வதும்…
உன் சொல்லில் உள்ளதடி…

ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…

BGM

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணில்…

BGM

ஆண் : பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை காணும் முன்பு…
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை கண்ட பின்பு…

BGM

ஆண் : அன்னை தந்தை கண்டதில்லை நான்…
கண் திறந்த பின்பு…
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்…
உன்னை கண்ட பின்பு…

ஆண் : பெண்ணே என் பயணமோ…
தொடங்கவே இல்லை…
அதற்குள் அது முடிவதா…
விளங்கவே இல்லை…

ஆண் : நான் கரையாவதும்…
இல்லை நுரையாவதும்…
வளர் பிறையாவதும்…
உன் சொல்லில் உள்ளதடி…

ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…

BGM

ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…


Notes : Kadhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Iyarkai (2003). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்தால் பாடல் வரிகள்.


சூர்ய பறவைகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதிப்பு & ரவி. ஜிஜி. வி. பிரகாஷ் குமார்வாத்தி

Sooriya Paravaigaley Song Lyrics in Tamil


BGM

ஆண் : சூர்ய பறவைகளே…
சுடர் ஏந்திய சிறகுகளே…
இனி வானமும் பூமியும் நம் வசமாகிட ஓடிடும் கவலைகளே…

ஆண் : போயின இரவுகளே…
புதிதாயின பொழுதுகளே…
வரலாறுகள் மாறிடும் நாளையும் பார்த்திட பூத்திடும் கனவுகளே…

ஆண் : அறிவுதான் உயரமே…
எழுந்து வா நம் புரட்சியிலே இமயமுமே…
இனி படிக்கட்டாய் ஆகிடுமே…

BGM

ஆண் : பிறப்பது ஒரு முறை…
இறப்பது ஒரு முறை…
துணிந்தே செல்…
துணிந்தே செல்…

ஆண் : பெரியது சிறியதை அடக்கிட முயல்வது…
சரியா சொல்…
சரியா சொல்…

ஆண் : அறிவெனும் நெருப்பினில்…
உலகையும் கொளுத்திட…
நிமிர்ந்தே நில்…
நிமிர்ந்தே நில்…

ஆண் : விழவா பிறந்தோம்…
விதையா எழுவோம்…

ஆண் : உள் மனதிலே ஒளி இருந்தால்…
விளக்கு வரும் தொடர்ந்தே…
கொடியேற்றிட வா…

ஆண் : ஏறு முன்னேறு…
நீ அடங்காத காட்டாறு…
உன் நிழலின் கண்ணீரு…


Notes : Sooriya Paravaigaley Song Lyrics in Tamil. This Song from Vaathi (2023). Song Lyrics penned by Yugabharathi. சூர்ய பறவைகளே பாடல் வரிகள்.


மூங்கில் காடுகளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & திப்புஹாரிஸ் ஜெயராஜ்சாமுராய்

Moongil Kaadugale Song Lyrics in Tamil


ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : சேற்று தண்ணீரில்…
மலரும் சிவப்பு தாமரையில்…
சேறும் மணப்பதில்லை…
பூவின் ஜீவன் மணக்கிறது…

ஆண் : வேரை அறுத்தாலும்…
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை…
அறுத்த நதியின் மேல்…
மரங்கள் ஆனந்த பூசொறியும்…

ஆண் : தாமரை பூவாய் மாறேனோ…
ஜென்ம சாபல் எங்கே காணேனோ…
மரமாய் நானும் மாறேனோ…
என் மனித பிறவியில் உய்யேனோ… ஓஓ…

ஆண் : வெயிலோ முயலோ…
பருகும் வண்ணம்…
வெள்ளை பனி துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
ஓஹோ… தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

BGM

ஆண் : உப்பு கடலோடு…
மேகம் உற்பத்தி ஆனாலும்…
உப்பு தண்ணீரை…
மேகம் ஒரு போதும் சிந்தாது…

ஆண் : மலையில் விழுந்தாலும்…
சூரியன் மறித்து போவதில்லை…
நிலவுக்கு ஒளியூட்டி…
தன்னை நீட்டித்து கொள்கிறதே…

ஆண் : மேகமாய் நானும் மாறேனோ…
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ…
சூரியன் போலவே மாறேனோ…
என் ஜோதியில் உலகை ஆளேனோ…

ஆண் : ஜனனம் மரணம் அறியா வண்ணம்…
நானும் மழை துளி ஆவேனோ…

ஆண் : மூங்கில் காடுகளே…
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே…

ஆண் : இயற்கை தாயின் மடியில் பிறந்து…
இப்படி வாழ இதயம் தொலைந்து…
சலித்து போனேன் மனிதனாய் இருந்து…
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து…
பறந்து பறந்து…

BGM


Notes : Moongil Kaadugale Song Lyrics in Tamil. This Song from Samurai (2002). Song Lyrics penned by Vairamuthu. மூங்கில் காடுகளே பாடல் வரிகள்.


பாக்காத என்ன பாக்காத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுமங்கலி & திப்புதேவி ஸ்ரீ பிரசாத்ஆறு

Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

ஆண் : கொடுத்தத திருப்பி நீ கேட்க…
காதலும் கடனுமில்ல…
கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள…
நடப்பது கூத்துமில்ல…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

ஆண் : வேணா வேணாணு நான் இருந்தேன்…
நீதானே என்ன இழுத்துவிட்ட…
போடி போடின்னு நான் துரத்த…
வம்புல நீதானே மாட்டிவிட்ட…

ஆண் : நல்லா இருந்த என் மனச…
நாராக கிழிச்சிப்புட்ட…
கறுப்பா இருந்த என் இரவ…
கலரா மாத்திப்புட்ட…

ஆண் : என்னுடன் நடந்த என் நிழல…
தனியா நடக்கவிட்ட…
உள்ள இருந்த என் உசுர…
வெளிய மிதக்கவிட்ட…

ஆண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

BGM

பெண் : வேணா வேணாண்ணு நினைக்கலையே…
நானும் உன்ன வெறுக்கலையே…
காணும் காணும்ணு நீ தேட…
காதல் ஒன்னும் தொலையலையே…

பெண் : ஒன்னா இருந்த ஞாபகத்த…
நெஞ்சோடு சேர்த்து வச்சேன்…
தனியா இருக்கும் வலிய மட்டும்…
தனியா அனுபவிச்சேன்…

பெண் : பறவையின் சிறகுகள் விரிஞ்சால்தான்…
வானத்தில் அது பறக்கும்…
காத்திருந்தால்தான் இருவருக்கும்…
காதல் அதிகரிக்கும்…

பெண் : பாக்காத என்ன பாக்காத…
குத்தும் பார்வையால என்ன பாக்காத…
போகாத தள்ளிப் போகாத…
என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத…

பெண் : கொடுத்தத திருப்பி நான் கேட்க…
கடனா கொடுக்கலையே…
உனக்குள்ளதானே நான் இருக்கேன்…
உனக்கது புரியலையே…

BGM


Notes : Paakatha Enna Paakatha Song Lyrics in Tamil. This Song from Aaru (2005). Song Lyrics penned by Na. Muthukumar. பாக்காத என்ன பாக்காத பாடல் வரிகள்.


மனிதா மனிதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்புதேவி ஸ்ரீ பிரசாத்புலி

Manidha Manidha Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…
ஓ… மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

ஆண் : காற்றின் பிள்ளைகள் நீங்கள்…
இந்தக் காடே உங்கள் உரிமை…
யாரும் இல்லை அடிமை…
அட யாவும் இங்கே பொதுவுடைமை…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

—BGM—

ஆண் : கூட்டுப் பறவைகளாய்…
இந்தக் காட்டில் பிறந்தோம் கை வீசி திரிந்தோம்…
சிந்தும் வேர்வையினால்…
நவ தானியம் விளைந்தது நம்மாலே…

ஆண் : பட்டாம் பூச்சிகளாய் இங்கு பறந்தோம் திரிந்தோம்…
ஒன்னாக வளர்ந்தோம்…
வஞ்சகர் சூழ்ச்சியிலே…
நம் வாழ்க்கை தேய்ந்தது பின்னாலே…

ஆண் : உடையட்டும் உடையட்டும்…
விலங்குகள் உடையட்டும்…
முடிவெடு தமிழ் இனமே…

ஆண் : திசையெட்டும் திசையெட்டும்…
தெறிக்கட்டும் திறக்கட்டும்…
புறப்படு புலி இனமே…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

—BGM—

ஆண் : ஓ… ஓ… மண்ணின் மைந்தர்களே…
சொந்த மண்ணை மீட்போம்…
என்னோடு வாங்க…

ஆண் : ஆயுதம் தேவையில்லை…
சில ஆயிரம் பேர்கள் கைகொடுங்க…

ஆண் : வாழ்வது ஒருமுறைதான்…
உயிர் போவதும் போவதும்…
ஒருமுறை தானே…

ஆண் : தலைமுறை வாழ்வதற்கு…
சில தலைகளை பலியிடத் தயங்காதே…

ஆண் : விதிகளும் பொடிபட…
வேதனை உடைபட…
விடுதலை கொடுத்துவிடு…

ஆண் : விடிவதில் விடிவதில்…
தாமதம் ஆனால்…
வானத்தைக் கிழித்துவிடு…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…


Notes :  Manidha Manidha Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. மனிதா மனிதா பாடல் வரிகள்.


வெண்மதி வெண்மதியே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதிப்பு & ரூப் குமார் ரத்தோட்ஹாரிஸ் ஜெயராஜ்மின்னலே

Venmathi Venmathiye Song Lyrics in Tamil


ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…

BGM

ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு நான் மறப்பேனே…
நான் மறப்பேனே…
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்…
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு…
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு…
நான் மறப்பேனே நான் மறப்பேனே…
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்…
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

BGM

ஆண்: அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது…
ஆசையின் மழை அதில் நனை ந்தது…
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்…
அது போல இந்த நாள் வரை உயிர் உருகிய…
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்…
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்…

ஆண்: ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை…
விவரம் ஏதும் அவள் அறியவில்லை…
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே…
மறந்து போ என் மனமே…

BGM

ஆண்: வெண்மதி வெண்மதியே நில்லு…
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு..
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்…
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்…
உன்னை இன்றோடு…
நான் மறப்பேனே நான் மறப்பேனே…
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்…
மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்…

BGM

ஆண்: ஜன்னலில் வழி வந்து விழந்தது…
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது…
அழகு தேவதை அதிசய முகமே…
ஆ..ஹ ஹா ஹா…..

ஆண்: தீப்பொறி என இரு விழிகளும்..
தீக்குச்சி என எனை உரசிட..
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே…
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே…
அளந்து பார்க்க பல விழி இல்லையே…
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே…
மறந்து போ என் மனமே……

BGM


Notes : Venmathi Venmathiye Song Lyrics in Tamil. This Song from Minnale (2001). Song Lyrics penned by Vaali. வெண்மதி வெண்மதியே பாடல் வரிகள்.


குட்டி புலி கூட்டம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஹரிஹரன், திப்பு, சத்யன், நாராயணன் & ரணினா ரெட்டிஹாரிஸ் ஜெயராஜ்துப்பாக்கி

Kutti Puli Kootam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

ஆண் : ஹேய்… நானும் இப்போ மும்மை வாலா…
நாளை முதல் தவுசன் வாலா…
மேல போர சிக்சர் வாலா…
சாலா சாலா…

குழு (ஆண்கள்) : சாலா சாலா…

ஆண் : நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு…
ஆசி வாங்கி பிகர வெட்டு…
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு…
போடா போடா …

குழு (ஆண்கள்) : போடா போடா…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

—BGM—

ஆண் : ஏலே… மாப்புள்ள அட கட்டுப்பட்டு…
வாழும் நாட்கள் வேப்பல…
வா வா கேப்புல…
நீ வம்பு செய்து திட்டு வாங்கு தப்பில்லை…

ஆண் : எதை எதை உலகம் பதை பதைகிறதோ…
அதை அதை மனதும் விரும்புதே…
கரைகளை தீண்டும் அலைகளை போல…
கனவுகள் தினமும் அரும்புதே…

ஆண் : இதபிடி அதபிடி…
இருக்கட்டும் அடிதடி…
இளமையின் கதபடி…
இருதியில் சுகமடி…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டுபோட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

—BGM—

ஆண் : ஐயோ… நெஞ்சம் தான்…
அது பெண்ணை தாண்டி என்னும் என்னம் கொஞ்சம் தான்…
பெண்ணே இன்பம் தான்…
அது வேண்டாம் என்று சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்…

ஆண் : அழகிகள் உலவும் தெருவெல்லாம் திரிந்து…
அதில் மிக அழகியை விரும்பலாம்…
யுவதிகள் தேடி அவதிகள் கோடி…
இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்…

ஆண் : துரு துரு துருவென இருந்திடு இருந்திடு…
துருப்பிடிக்காம்லே இருந்திட பறந்திடு…

—BGM—

ஆண் : குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…

குழு (ஆண்கள்) : பல்லே பல்லே பாட்டு போட்டோம்

ஆண் : சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

குழு (ஆண்கள்) : சாலை எங்கும் சேலைத் தோட்டம்…

ஆண் : ஹேய்… நானும் இப்போ மும்மை வாலா…
நாளை முதல் தவுசன் வாலா…
மேல போர சிக்சர் வாலா…
சாலா சாலா…

ஆண் : நீ பாட்டி தாத்தா பாதம் தொட்டு…
ஆசி வாங்கி பிகர வெட்டு…
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு…
போடா போடா…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

குழு (ஆண்கள்) : டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…
டிங்கு டிங்கு டிங்கு…
டிங்குடாங் டிங்குடாங்…
டிங்கு டிங்கு டிங் டிங்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஹா ஹா… ஹா ஹா… ஹா ஹா…

—BGM—


Notes : Kutti Puli Kootam Song Lyrics in Tamil. This Song from Thuppakki (2012). Song Lyrics penned by Viveka. குட்டி புலி கூட்டம் பாடல் வரிகள்.


கண்ணை விட்டு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிதிப்பு, பிரவின் சாய்வி & ஸ்ரீ மதுமிதாஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Kannai Vittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…
என் கண்ணீரே என் கண்ணீரே…
வானம் விட்டு என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
என் கண்ணீரே என் கண்ணீரே…

ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய் பெண்ணே…
இசையாய் அன்று கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய் பின்னே… ஏ…

BGM

ஆண் : இன்னும் இன்னும் என்னை…
என்னச் செய்வாய் அன்பே…
உன் விழியோடு நான் புதைவேனோ…
காதல் இன்றி ஈரம் இன்றி…
போனாய் அன்பே…
உன் மனதோடு நான் முளைப்பேனோ…

ஆண் : செதிலாய்ச் செதிலாய் இதயம் உதிர…
உள்ளே உள்ளே நீயே…
துகளாய்த் துகளாய்…
நினைவோச் சிதற…
நெஞ்சம் எல்லாம் நீ கீறினாயே…

BGM

ஆண் : தனி உலகினில் உனக்கென நானும்…
ஓா் உறவென எனக்கென நீயும்…
அழகாய் பூத்திடும் என் வானமாய்…
நீயேத் தெரிந்தாயே…

ஆண் : உன் விழி இனி எனதெனக் கண்டேன்…
என் உயிர் இனி நீ எனக் கொண்டேன்…
நான் கண் இமைக்கும் நொடியினில் பிரிந்தாயே…
பிணமாய்த் தூங்கினேன் ஏன் எழுப்பி நீ…
கொன்றாய் அன்பே…

ஆண் : கனவில் இனித்த நீ…
ஏன் நிஜத்திலே கசந்தாய் பின்பே…
யார் யாரோப் போலே நாமும் இங்கே…
நம்முள் பூத்த காதல் எங்கே…

BGM

ஆண் : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோ போனாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : வானம் விட்டு என்னைத் தொட்டு…
நீயே வந்தாய்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : மழையாய் அன்று பிழையாய் இன்று…
நின்றாய் நின்றாய் பெண்ணே…
இசையாய் அன்று கசையாய் இன்று…
கொன்றாய்க் கொன்றாய்…
பின்னேப் பின்னே…

BGM

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு…
எங்கோப் போனாய்…

BGM

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய் வானம் விட்டு…
என்னைத் தொட்டு நீயே வந்தாய்…

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக் கன்னம் பட்டு…
எங்கோப் போனாய் வானம் விட்டு…
என்னைத் தொட்டு நீயே வந்தாய்…

குழு (பெண்கள்) : கண்ணை விட்டுக்…
கன்னம் பட்டு……


Notes : Kannai Vittu Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Madhan Karky. கண்ணை விட்டு பாடல் வரிகள்.


சரட்டு வண்டில

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு, நிகிதா காந்தி & ஏ. ஆா். ரெய்ஹனாஏ. ஆர். ரகுமான்காற்று வெளியிடை

Saarattu Vandiyila Song Lyrics in Tamil


BGM

பெண் : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

BGM

பெண் : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

BGM

பெண் : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

பெண் : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

ஆண் : அடி வெத்தலபோட்ட…
உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்குடு…
நான் கொடுத்த கடன…
திருப்பிக் கொடுக்க…
சத்தியம் பண்ணிக்குடு…
என் இரத்தம் சூடு கொள்ள…
பத்து நிமிசம் தான்…
ராசாத்தி…

குழு (பெண்கள்) : ஆணுக்கோ…
பத்து நிமிசம்… ஹா…
பொண்ணுக்கோ… அஞ்சு நிமிசம் ஹா…
பொதுவா சண்டித்தனம் பண்ணும்…
ஆம்பளைய பொண்ணு…
கிண்டி கெழங்கெடுப்பா…

குழு (ஆண்கள்) : சேலைக்கு சாயம்
போகு மட்டும்…
உன்ன நான் வெளுக்க வேணுமடி…
பாடுபட்டு விடியும் பொழுது…
வெளியில் சொல்ல…
பொய்கள் வேணுமடி…

குழு (ஆண்கள்) : புது பொண்ணே… ஏ…
அதுதாண்டி தமிழ் நாட்டு பாணி…

குழு (பெண்கள்) : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

குழு (பெண்கள்) : சரட்டு வண்டில…
சிரட்டொலியில…
ஓரந் தெரிஞ்சது… ஓன் முகம்…

குழு (பெண்கள்) : உள்ளம் கிள்ளும்…
அந்த கள்ளச் சிரிப்பில…
மெல்லச் சிவந்தது… என் முகம்…

BGM

பெண் : ஓ… ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள்) : வெக்கத்தையே…
கொழச்சி கொழச்சி…
குங்குமம் பூசிக்கோடி…
ஆசையுள்ள வோ்வையப் போல்…
வாசம் ஏதடி…

குழு (பெண்கள்) : ஏ… பூங்கொடி…
வந்து தேன் குடி…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அவன் கைகளில்…
உடையட்டும்… கண்ணி கண்ணாடி…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (ஆண்கள்) : அவன் மன்மதகாட்டு…
சந்தனம் எடுத்து மார்பில்…
அப்பிக்கிட்டான்…
இவ குரங்கு கழுத்தில்…
குட்டிய போல…
தோளில் ஒட்டிக்கிட்டா…

குழு (பெண்கள்) : இனி புத்தி கலங்குற…
முத்தம் கொடுத்திடு… ராசாவே…

ஆண் & பெண் : பொண்ணுதான்…
ரத்தனக்கட்டி ஹா..
மாப்பிள்ள வெத்தலப்பொட்டி…
எடுத்து ரத்தினகட்டிய…
வெத்தல பொட்டியில்…
மூடச் சொல்லுங்கடி…

ஆண் & பெண் : முதலில் மாலை
மாத்துங்கடி…
பிறகு பாலை மாத்துங்கடி…
கட்டில் விட்டு…
காலையிலே கசங்கி வந்தா…
சேலை மாத்துங்கடி…

பெண் : மகராணி…
அதுதாண்டி தமிழ்நாட்டு பானி…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு…
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

குழு (பெண்கள்) : கத்தாழங்காட்டுக்குள்…
மத்தாளம் கேக்குது…
சித்தானை ரெண்டுக்கும் கொண்டாட்டம்…
குத்தாலச் சாரலே…
முத்தானப் பன்னீரு
வித்தாரக்கல்லிக்கு தள்ளாட்டம்…

ஆண் : புது பொண்ணே…
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

ஆண் : புது பொண்ணே…
அது தாண்டி தமிழ் நாட்டு பாணி…

BGM


Notes : Saarattu Vandiyila Song Lyrics in Tamil. This Song from Kaatru Veliyidai (2017). Song Lyrics penned by Vairamuthu. சரட்டு வண்டில பாடல் வரிகள்