பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | திப்பு & மாணிக்க விநாயகம் | வித்யாசாகர் | இயற்கை |
Kadhal Vandhal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…
ஆண் : சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
சுட்ட மண்ணிலே மீனாக…
மனம் வெட்ட வெளியிலே வாடுதடி…
கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து…
கடல் நீர் மட்டம் கூடுதடி…
ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
—BGM—
ஆண் : உயிரை தவிர சொந்தம் இல்லையே…
காதலிக்கும் முன்பு…
இந்த உலகே எந்தன் சொந்தம் ஆனதே…
காதல் வந்த பின்பு…
—BGM—
ஆண் : சாவை அழைத்து கடிதம் போட்டேன்…
காதலிக்கும் முன்பு…
ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்…
காதல் வந்த பின்பு…
ஆண் : உன்னால் என் கடல் அலை…
உறங்கவே இல்லை…
உன்னால் என் நிலவுக்கு…
உடல் நலம் இல்லை…
ஆண் : கடல் துயில் கொள்வதும்…
நிலா குணம் கொள்வதும்…
நான் உயிர் வாழ்வதும்…
உன் சொல்லில் உள்ளதடி…
ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…
—BGM—
ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணில்…
—BGM—
ஆண் : பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை காணும் முன்பு…
நீ நடந்த மண்ணை அள்ளி தின்றேன்…
உன்னை கண்ட பின்பு…
—BGM—
ஆண் : அன்னை தந்தை கண்டதில்லை நான்…
கண் திறந்த பின்பு…
என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்…
உன்னை கண்ட பின்பு…
ஆண் : பெண்ணே என் பயணமோ…
தொடங்கவே இல்லை…
அதற்குள் அது முடிவதா…
விளங்கவே இல்லை…
ஆண் : நான் கரையாவதும்…
இல்லை நுரையாவதும்…
வளர் பிறையாவதும்…
உன் சொல்லில் உள்ளதடி…
ஆண் : உன் இறுக்கம்தான் என் உயிரை…
கொல்லுதடி கொல்லுதடி…
—BGM—
ஆண் : காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…
சொல்லி அனுப்பு…
Notes : Kadhal Vandhal Song Lyrics in Tamil. This Song from Iyarkai (2003). Song Lyrics penned by Vairamuthu. காதல் வந்தால் பாடல் வரிகள்.