Tag Archives: டி.எம்.சௌந்தரராஜன்

Pon Ondru Kanden Song Lyrics in Tamil

பொன் ஒன்று கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி.பி.ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திபடித்தால் மட்டும் போதுமா

Pon Ondru Kanden Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…

ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

BGM

ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

BGM

ஆண் : நடமாடும் மேகம்…
நவநாகரீகம்…
அலங்கார சின்னம்…
அலை போல மின்னும்…

ஆண் : நடமாடும் செல்வம்…
பணிவான தெய்வம்…
பழங்காலச் சின்னம்…
உயிராக மின்னும்…

ஆண் : துள்ளி வரும்…
வெள்ளி நிலா…
துள்ளி வரும் வெள்ளி நிலா…

ஆண் : துவண்டு விழும்…
கொடி இடையால்…
துவண்டு விழும் கொடி இடையால்…

ஆண் : விண்ணோடு விளையாடும்…
பெண் அந்த பெண்ணல்லவோ…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

BGM

ஆண் : நான் பார்த்த பெண்ணை…
நீ பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…
நீ பார்த்த பெண்ணை…
நான் பார்க்க வில்லை…

ஆண் : உன் பார்வை போலே…
என் பார்வை இல்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…
நான் கண்ட காட்சி…
நீ காண வில்லை…

ஆண் : என் விழியில்…
நீ இருந்தாய்…
என் விழியில் நீ இருந்தாய்…

ஆண் : உன் வடிவில்…
நான் இருந்தேன்…
உன் வடிவில் நான் இருந்தேன்…

ஆண் : நீ இன்றி நான் இல்லை…
நான் இன்றி நீ இல்லை…
ஆண் : சென்றேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : கண்டேன்…
ஆண் : ஹ்ம்ம்…
ஆண் : வந்தேன்…
ஆண் : ஹ்ம்ம்…

ஆண் : பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…

ஆண் : பூ ஒன்று கண்டேன்…
முகம் காண வில்லை…
ஆண் : என்னென்று நான் சொல்லலாகுமா…
ஆண் : என்னென்று நான் சொல்ல வேண்டுமா…


Notes : Pon Ondru Kanden Song Lyrics in Tamil. This Song from Padithal Mattum Podhuma (1962). Song Lyrics penned by Kannadasan. பொன் ஒன்று கண்டேன் பாடல் வரிகள்.


பூமாலையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ஊட்டி வரை உறவு

Poo Malayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…

BGM

ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

BGM

ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…

பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

BGM

பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்…

BGM

பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்…

BGM

ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்…
இளமை அழகின் இயற்கை வடிவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…

ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…

பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…

ஆண் & பெண் : இன்னும் வேண்டுமா என்றது…


Notes : Poo Malayil Song Lyrics in Tamil. This Song from Ooty Varai Uravu (1967). Song Lyrics penned by Kannadasan. பூமாலையில் பாடல் வரிகள்.


ஆகாய பந்தலிலே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்பொன்னூஞ்சல்

Aagaya Pandhalile Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

BGM

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

பெண் : ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

BGM

பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பெண் : மீனாளின் குங்குமத்தை…
மீனாளின் குங்குமத்தை…
நானாள வேண்டுமம்மா…
மானோடு நீராட…
மஞ்சள் கொண்டு செல்வோமா…

பெண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

BGM

ஆண் : பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

BGM

ஆண் : பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

ஆண் : ஊராரின் சன்னதியில்…
ஒன்றாக வேண்டுமம்மா…
தாயென்றும் சேயென்றும்…
தந்தையென்றும் ஆவோமா…

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

BGM

பெண் : கண்ணென்றும்…
வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள்…
நீ வாழும் இல்லங்கள்…

ஆண் : பொன்மாலை அந்தியிலே…
என் மாலை தேடி வரும்…
அம்மா உன் பெண்ணுள்ளம்…
நாணம் சொல்லி ஆடி வரும்…

ஆண் & பெண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

BGM


Notes : Aagaya Pandhalile Song Lyrics in Tamil. This Song from Ponnunjal (1973). Song Lyrics penned by Kannadasan. ஆகாய பந்தலிலே பாடல் வரிகள்.


பரமசிவன் கழுத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்சூரியகாந்தி

Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil


BGM

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

BGM

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : உயர்ந்த இடத்தில் இருக்கும்போது…
உலகம் உன்னை மதிக்கும்…
உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்…
நிழலும் கூட மிதிக்கும்…

ஆண் : மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று…
மானமுள்ள மனிதருக்கு ஔவை சொன்னது…
அது ஔவை சொன்னது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : வண்டி ஓட சக்கரங்கள்…
இரண்டு மட்டும் வேண்டும்…
அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்…
எந்த வண்டி ஓடும்…

ஆண் : உனைப்போலே அளவோடு…
உறவாட வேண்டும்…
உயர்ந்தோரும் தாழ்ந்தோறும்…
உறவு கொள்வது…

ஆண் : அது சிறுமை என்பது…
அதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…

BGM

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : நீயும் நானும் சேர்ந்திருந்தோம்…
நிலவும் வானும் போலே…
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன்…
நீ வளர்ந்ததாலே…

ஆண் : என்னுள்ளம் எனைப்பார்த்து…
கேலி செய்யும் போது…
இல்லாதான் இல்வாழ்வில்…
நிம்மதி ஏது…

ஆண் : இது கணவன் சொன்னது…
இதில் அர்த்தம் உள்ளது…

ஆண் : பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…

ஆண் : யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
கருடன் சொன்னது…
அதில் அர்த்தமும் உள்ளது…


Notes : Paramasivan Kazhuthil Song Lyrics in Tamil. This Song from Suryagandhi (1973). Song Lyrics penned by Kannadasan. பரமசிவன் கழுத்தில் பாடல் வரிகள்.


அழகிய தமிழ் மகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்ரிக்‌ஷாக்காரன்

Azhagiya Thamizh Magal Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆணி பொன் தேர் கொண்டு…
மாணிக்க சிலை என்று…
வந்தாய் நின்றாய் இங்கே…

BGM

பெண் : காணிக்கை பொருளாகும்…
காதல் என் உயிராகும்…
நெஞ்சை தந்தேன் அங்கே…

BGM

ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

பெண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

பெண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

BGM

ஆண் : வானுலகமென்னும்…
மாளிகையில் மின்னும்…
பூமகளின் கன்னம்…
தேனிலவின் வண்ணம்…

ஆண் : வானுலகமென்னும்…
மாளிகையில் மின்னும்…
பூமகளின் கன்னம்…
தேனிலவின் வண்ணம்…

பெண் : நீல விழி பந்தல்…
நீ இருக்கும் மேடை…
கோலமிடும் ஆசை…
தூது விடும் ஜாடை…

பெண் : நீல விழி பந்தல்…
நீ இருக்கும் மேடை…
கோலமிடும் ஆசை…
தூது விடும் ஜாடை…

பெண் : இளமையில் இனியது சுகம்…
இதை பெறுவதில் பல வித ரகம்…
இந்த அனுபவம் தனி ஒரு விதம்…
மலரும் வளரும் பல நாள் தொடரும்…

ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

BGM

பெண் : பாலில் விழும் பழம் எனும்…
போதை பெறும் இளம் மனம்…
பாலில் விழும் பழம் எனும்…
போதை பெறும் இளம் மனம்…
அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்…

ஆண் : காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…

ஆண் : காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்…

பெண் : கொடியிடை விளைவது கனி…
இந்த கனியிடை விளைவது சுவை…

பெண் : அந்த சுவை பெற நமக்கென்ன குறை…
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்…

ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…

BGM

ஆண் : பாவை உனை நினைக்கையில்…
பாடல் பெறும் கவிக்குயில்…
பக்கம் வா இன்னும் பக்கம் வா…

பெண் : கோவை இதழ் இதோ இதோ…
கொஞ்சும் கிளி அதோ அதோ…
கோவை இதழ் இதோ இதோ…
கொஞ்சும் கிளி அதோ அதோ…

பெண் : இன்னும் நான் சொல்ல…
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்…

ஆண் : மழை தரும் முகிலென குழல்…
நல்ல இசை தரும் குழலென குரல்…

ஆண் : உயிர் சிலையென உலவிடும் உடல்…
நினைத்தேன் அணைத்தேன்…
மலர்போல் பறித்தேன்…

பெண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…

பெண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…


Notes : Azhagiya Thamizh Magal Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. அழகிய தமிழ் மகள் பாடல் வரிகள்.


துள்ளுவதோ இளமை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன் & L. R. ஈஸ்வரிஎம்.எஸ்.விஸ்வநாதன்குடியிருந்த கோயில்

Thulluvatho Ilamai Song Lyrics in Tamil


BGM

குழு : பட்டு முகத்து சுட்டி பெண்ணை…
கட்டி அணைக்கும் இந்த கைகள்…
வட்டம் அடிக்கும் வண்டு கண்கள்…
பித்தம் அனைத்தும் இன்ப கதைகள்…
ஆஆஆஆ…

பெண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

BGM

பெண் : மேல் ஆடை நீந்தும்…
பால் ஆடை மேனி…
மேல் ஆடை நீந்தும்…
பால் ஆடை மேனி…
நீராட ஓடிவா…
நீராட ஓடிவா…

பெண் : வேல் ஆடும் பார்வை…
தாளாத போது…
வேல் ஆடும் பார்வை…
தாளாத போது…
நோகாமல் ஆடவா…
நோகாமல் ஆடவா…

பெண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

BGM

ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…
ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…

ஆண் : தேன் ஊறும் பாவை…
பூ மேடை தேவை…
தேன் ஊறும் பாவை…
பூ மேடை தேவை…
நானாக அள்ளவா…
நானாக அள்ளவா…

ஆண் : தீராத தாகம்…
பாடாத ராகம்…
தீராத தாகம்…
பாடாத ராகம்…
நாளெல்லாம் சொல்லவா…
நாளெல்லாம் சொல்லவா…

ஆண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…

BGM

பெண் : காணாத கோலம்…
நீ காணும் நேரம்…
வாய் பேச தோன்றுமா…
வாய் பேச தோன்றுமா…

ஆண் : ஆணோடு பெண்மை…
ஆறாகும் போது…
வேர் இன்பம் வேண்டுமா…
வேர் இன்பம் வேண்டுமா…

ஆண் & பெண் : துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…

ஆண் : ஹோய் பப்பா…
குழு : ஹோய் பப்பா…

BGM


Notes : Thulluvatho Ilamai Song Lyrics in Tamil. This Song from Kudiyirundha Koyil (1968). Song Lyrics penned by Vaali. துள்ளுவதோ இளமை பாடல் வரிகள்.


நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாதியாகம்

Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil


BGM

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

ஆண் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

BGM

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்…
நதி செய்த குற்றம் இல்லை…
விதி செய்த குற்றம் அன்றி…
வேறு யாரம்மா…

ஆண் : பறவைகளே பதில் சொல்லுங்கள்…
மனிதர்கள் மயங்கும் போது…
நீங்கள் பேசுங்கள்…
மனதிற்கு மனதை கொஞ்சம்…
தூது செல்லுங்கள்…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
தெய்வத்தின் சாட்சியம்மா…

BGM

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : ஆண்டவன் அறிய நெஞ்சில்…
ஒரு துளி வஞ்சம் இல்லை…
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை…

ஆண் : மனிதனம்மா மயங்குகிறேன்…
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே…
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே…

ஆண் : நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…

ஆண் : நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால்…
தெய்வத்தின் காட்சியம்மா…
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா…
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா…

BGM


Notes : Nallavarkellam Satchigal Rendu Song Lyrics in Tamil. This Song from Thyagam (1978). Song Lyrics penned by Kannadasan. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு பாடல் வரிகள்.


நான் ஆணையிட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஎங்க வீட்டுப் பிள்ளை

Naan Aanaiyittal Song Lyrics in Tamil


ஆண் : நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…

ஆண் : நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்…

ஆண் : உயிர் உள்ள வரை…
ஒரு துன்பமில்லை…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…

BGM

ஆண் : நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்…

ஆண் : உயிர் உள்ள வரை…
ஒரு துன்பமில்லை…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…

BGM

ஆண் : ஒரு தவறு செய்தால்…
அதைத் தெரிந்து செய்தால்…
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்…

ஆண் : ஒரு தவறு செய்தால்…
அதைத் தெரிந்து செய்தால்…
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்…

ஆண் : உடல் உழைக்கச் சொல்வேன்…
அதில் பிழைக்கச் சொல்வேன்…
அவர் உரிமைப் பொருள்களை தொடமாட்டேன்…

ஆண் : நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்…

ஆண் : உயிர் உள்ள வரை…
ஒரு துன்பமில்லை…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…

BGM

ஆண் : சிலர் ஆசைக்கும் தேவைக்கும்…
வாழ்வுக்கும் வசதிக்கும்…
ஊரார் கால் பிடிப்பார்…

ஆண் : ஒரு மானமில்லை…
அதில் ஈனமில்லை…
அவர் எப்போதும் வால் பிடிப்பார்…

ஆண் : எதிர் காலம் வரும்…
என் கடமை வரும்…
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்…

ஆண் : பொது நீதியிலே…
புதுப் பாதையிலே…
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்…
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்…

ஆண் : நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்…

ஆண் : உயிர் உள்ள வரை…
ஒரு துன்பமில்லை…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…

BGM

ஆண் : இங்கு ஊமைகள் ஏங்கவும்…
உண்மைகள் தூங்கவும்…
நானா பார்த்திருப்பேன்…

ஆண் : ஒரு கடவுள் உண்டு…
அவன் கொள்கை உண்டு…
அதை எப்போதும் காத்திருப்பேன்…

ஆண் : முன்பு ஏசு வந்தார்…
பின்பு காந்தி வந்தார்…
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்…

ஆண் : இவர் திருந்தவில்லை…
மனம் வருந்தவில்லை…
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்…
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்…

ஆண் : நான் ஆணையிட்டால்…
அது நடந்துவிட்டால்…
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்…

ஆண் : உயிர் உள்ள வரை…
ஒரு துன்பமில்லை…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்…

BGM


Notes : Naan Aanaiyittal Song Lyrics in Tamil. This Song from Enga Veettu PIllai (1965). Song Lyrics penned by Vaali. நான் ஆணையிட்டால் பாடல் வரிகள்.


பச்சைக்கிளி முத்துச்சரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்உலகம் சுற்றும் வாலிபன்

Pachaikili Muthucharam Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…

BGM

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

BGM

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ… ஆஆஆ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

BGM

ஆண் : தத்தை போலத் தாவும்…
பாவை பாதம் நோகும் என்று…
மெத்தை போல பூவைத் தூவும்…
வாடைக் காற்றும் உண்டு…

பெண் : வண்ணச்சோலை வானம் பூமி…
யாவும் இன்பம் இங்கு…
இந்தக் கோலம் நாளும் காண…
நானும் நீயும் பங்கு…

ஆண் : கண்ணில் ஆடும் மாங்கனி…
கையில் ஆடுமோ…
கண்ணில் ஆடும் மாங்கனி…
கையில் ஆடுமோ…

பெண் : நானே தரும்…
நாளும் வரும்…
ஏனிந்த அவசரமோ…

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

BGM

பெண் : மெல்ல பேசும் கள்ள பார்வை…
ஜாதி பூவின் மென்மை…
சொல்ல போகும் பாடல் நூறும்…
ஜாடை காட்டும் பெண்மை…

ஆண் : முள்ளில்லாத தாளை போல…
தோகை மேனி என்று…
அள்ளும் போது மேலும் கீழும்…
ஆடும் ஆசை உண்டு…

பெண் : அந்த நேரம் நேரிலே…
சொர்க்கம் தோன்றுமோ…
அந்த நேரம் நேரிலே…
சொர்க்கம் தோன்றுமோ…

ஆண் : காணாததும் கேளாததும்…
காதலில் விளங்கிடுமோ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

BGM

ஆண் : பொன்பட்டாடை மூடிச்செல்லும்…
தேன்சிட்டோடு மெல்ல…
நான் தொட்டாடும் வேளைதோறும்…
போதை என்ன சொல்ல…

பெண் : கை தொட்டாட காலம் நேரம்…
போகப் போக உண்டு…
கண்பட்டாலும் காதல் வேகம்…
பாதிப்பாதி இன்று…

ஆண் : பள்ளிக் கூடம் போகலாம்…
பக்கம் ஓடி வா…
பள்ளிக் கூடம் போகலாம்…
பக்கம் ஓடி வா…

பெண் : கூடம்தனில் பாடம் பெறும்…
காலங்கள் சுவையல்லவோ…

பெண் : பொன்னின் நிறம்…
பிள்ளை மனம்…
வள்ளல் குணம் யாரோ…

பெண் : மன்னன் என்னும் தேரில் வரும்…
தேவன் மகன் நீயோ…

ஆண் : பச்சைக்கிளி முத்துச்சரம்…
முல்லைக்கொடி யாரோ…
பாவை என்னும் தேரில் வரும்…
தேவன் மகள் நீயோ…

BGM


Notes : Pachaikili Muthucharam Song Lyrics in Tamil. This Song from Ulagam Sutrum Valiban (1973). Song Lyrics penned by Vaali. பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல் வரிகள்.


அடி என்னடி ராக்கம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்பட்டிக்காடா பட்டணமா

Adi Ennadi Rakkamma Song Lyrics in Tamil


ஆண் : அடி ராக்கு என் மூக்கு…
என் கண்ணு என் பல்லு…
என் ராஜாயி…

BGM

ஆண் : அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…

ஆண் : சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

BGM

ஆண் : அடி என்னடி ராக்கு…

BGM

ஆண் : அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…

ஆண் : சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

BGM

ஆண் : அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை…
உன் கழுத்துக்கு பொருத்தமடி…
அஞ்சாறு ரூபாய்க்கு மணிமாலை…
உன் கழுத்துக்கு பொருத்தமடி…

ஆண் : அம்மூரு மீனாட்சி பாத்தாலும்…
அவ கண்ணுக்கு வருத்தமடி…
அஹா… அம்மூரு மீனாட்சி பாத்தாலும்…
அவ கண்ணுக்கு வருத்தமடி…

ஆண் : சின்னாளப்பட்டியிலே கண்டாங்கி எடுத்து…
என் கையாலே கட்டி விடவா…
என் அத்த அவ பெத்த என் சொத்தே…
அடி ராக்கம்மா கொத்தோட முத்து தரவோ…

ஆண் : அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…

ஆண் : சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…

BGM

ஆண் : தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி…
நம்ம கதையிலே இருக்குதடி…
தெய்வானை சக்களத்தி வள்ளி குறத்தி…
நம்ம கதையிலே இருக்குதடி…

ஆண் : சிங்கார மதுரையின் வெள்ளையம்மா…
கதை தினம் தினம் நடக்குதடி…
அஹா… சிங்கார மதுரையின் வெள்ளையம்மா…
கதை தினம் தினம் நடக்குதடி…

ஆண் : அடி தப்பாமல் நான் உன்னை…
சிறை எடுப்பேன்…
ஒன்னு ரெண்டாக இருக்கட்டுமே…

ஆண் : என் கண்ணு என் மூக்கு…
என் பல்லு… என் ராஜாயி…
கல்யாண வைபோகமே…

ஆண் : அட பிபிபி டும்டும்டும்…
பிபிபி டும்டும்டும்…
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்…

ஆண் : அட பிபிபி பிபிபி டும்டும்டும்…
பிபிபி டும்டும்டும் டும்டும்டும் டும்…

BGM


Notes : Adi Ennadi Rakkamma Song Lyrics in Tamil. This Song from Pattikada Pattanama (1972). Song Lyrics penned by Kannadasan. அடி என்னடி ராக்கம்மா பாடல் வரிகள்.