பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | ரிக்ஷாக்காரன் |
Azhagiya Thamizh Magal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஆணி பொன் தேர் கொண்டு…
மாணிக்க சிலை என்று…
வந்தாய் நின்றாய் இங்கே…
—BGM—
பெண் : காணிக்கை பொருளாகும்…
காதல் என் உயிராகும்…
நெஞ்சை தந்தேன் அங்கே…
—BGM—
ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
பெண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
பெண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
—BGM—
ஆண் : வானுலகமென்னும்…
மாளிகையில் மின்னும்…
பூமகளின் கன்னம்…
தேனிலவின் வண்ணம்…
ஆண் : வானுலகமென்னும்…
மாளிகையில் மின்னும்…
பூமகளின் கன்னம்…
தேனிலவின் வண்ணம்…
பெண் : நீல விழி பந்தல்…
நீ இருக்கும் மேடை…
கோலமிடும் ஆசை…
தூது விடும் ஜாடை…
பெண் : நீல விழி பந்தல்…
நீ இருக்கும் மேடை…
கோலமிடும் ஆசை…
தூது விடும் ஜாடை…
பெண் : இளமையில் இனியது சுகம்…
இதை பெறுவதில் பல வித ரகம்…
இந்த அனுபவம் தனி ஒரு விதம்…
மலரும் வளரும் பல நாள் தொடரும்…
ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
—BGM—
பெண் : பாலில் விழும் பழம் எனும்…
போதை பெறும் இளம் மனம்…
பாலில் விழும் பழம் எனும்…
போதை பெறும் இளம் மனம்…
அள்ளத்தான் அள்ளிக்கொள்ளத்தான்…
ஆண் : காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
ஆண் : காதல் நிலா முகம் முகம்…
கண்ணில் உலா வரும் வரும்…
மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்…
பெண் : கொடியிடை விளைவது கனி…
இந்த கனியிடை விளைவது சுவை…
பெண் : அந்த சுவை பெற நமக்கென்ன குறை…
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்…
ஆண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
ஆண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
—BGM—
ஆண் : பாவை உனை நினைக்கையில்…
பாடல் பெறும் கவிக்குயில்…
பக்கம் வா இன்னும் பக்கம் வா…
பெண் : கோவை இதழ் இதோ இதோ…
கொஞ்சும் கிளி அதோ அதோ…
கோவை இதழ் இதோ இதோ…
கொஞ்சும் கிளி அதோ அதோ…
பெண் : இன்னும் நான் சொல்ல…
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்…
ஆண் : மழை தரும் முகிலென குழல்…
நல்ல இசை தரும் குழலென குரல்…
ஆண் : உயிர் சிலையென உலவிடும் உடல்…
நினைத்தேன் அணைத்தேன்…
மலர்போல் பறித்தேன்…
பெண் : அழகிய தமிழ் மகள் இவள்…
இரு விழிகளில் எழுதிய மடல்…
மெல்ல மொழிவது உறவெனும் குரல்…
பெண் : படித்தால் ரசிக்கும்…
கனிபோல் இனிக்கும்…
Notes : Azhagiya Thamizh Magal Song Lyrics in Tamil. This Song from Rickshawkaran (1971). Song Lyrics penned by Vaali. அழகிய தமிழ் மகள் பாடல் வரிகள்.