Tag Archives: கே கே

penne-kadhal-song-lyrics-in-tamil

பெண்ணே காதல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.கேதேவாபம்மல் கே. சம்பந்தம்

Penne Kadhal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…
கண்ணால் கண்ணீர் துளி…
எந்த நாளும் பார்த்ததுண்டோடி…

ஆண் : பெண் என்றால்…
ஆணுலகம் கவிதை என்கிறதே…
கவிதை ஓர் கை வாளாய்…
ஆளை கொள்கிறதே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

ஆண் : உண்மையில் நீ பூ பந்தோ… ஓஓ…
ஊர் எரிக்கும் தீ பந்தோ… ஓஓ…
ஆணின் நெஞ்சம் அம்மம்மா… ஓஓ…
நீ அடிக்கும் கார் பந்தோ…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : உன் மீது காதல் வைத்து…
உயிர் உனக்கு என்றான்… ஹோ…
அம்மா நீ எய்தும் கூட…
அதை பொறுத்து நின்றான்…

ஆண் : உந்தன் மீது குற்றம் ஏதும்…
விழாமல் செய்தான்…
உள் மனதில் கண்ணீர் வெள்ளம்…
விடாமல் பெய்தான்…

ஆண் : கை அணைத்து கையை கழுவ…
வந்தாயோ பெண்ணே…
காலகாலம் ஆணின் பாவம்…
வாராதோ பெண்ணே…

ஆண் : பெண்ணே காதல் வலி…
என்னவென்று பார்த்ததுண்டோடி…

BGM

ஆண் : விட்டதை மீண்டும் பெற…
விரும்பிடுதோ நெஞ்சம்… ஹோ…
தொட்டதை மீண்டும் தொட்டு…
தொடர்கின்றதோ எண்ணம்…

ஆண் : பொத்தி பொத்தி வைத்தால் கூட…
பொல்லாத காதல்…
எந்த நேரம் என்ன செய்யும்…
சொல்லாது காதல்…

ஆண் : கத்தி கூட காதல் போல…
கொல்லாது பெண்ணே…
காய பட்ட பின்னால் ஞானம்…
உண்டாச்சோ கண்ணே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…
கண்ணில் கண்ணீர் நதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…

ஆண் : உன்னாலே ஓர் நிஜமே…
நிழலாய் போகிறதே…
அம்மம்மா ஓர் இதயம்…
தழலாய் வேகிறதே…

ஆண் : காதல் காலாவதி காரணம் யார்…
சொல்லடி அம்மா…


Notes : Penne Kadhal Song Lyrics in Tamil. This Song from Pammal K Sambandam (2002). Song Lyrics penned by Vaali. பெண்ணே காதல் பாடல் வரிகள்.


பத்துக்குள்ளே நம்பர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கே & ஸ்ரேயா கோஷல்பரத்வாஜ்வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்

Pathukulle Number Song Lyrics in Tamil


BGM

பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…

பெண் : ஏழு என்கிறாய் என் ஏழு ஸ்வரம் அவன்…
ஏழு ஜென்மமாய் என்னை ஆள வந்தவன்…
அவன் வேறு யாரு…
கண்ணாடி பாரு…

ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
ஐந்து என்கிறாய்…
என் ஐந்து நிலமவள்…

ஆண் : ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்…
அவள் வேறு யாரு…
கண்ணாடி பாரு…

பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…

BGM

பெண் : மாயங்கள் செய்தது உன் சூழ்ச்சி…
என் மாா்புக்கு நடுவிலே நீர்வீழ்ச்சி…

ஆண் : ஹே… ஆசைக்கு ஏனடி ஆராய்ச்சி…
என் மீசைக்கு பதில் சொல்லு மீனாட்சி…

பெண் : ஈஸ்கிமொகள் நாட்டில்…
அட ஐஸ் என்ன புதுசா…
காமராஜன் உதட்டில்…
அட கிஸ் என்ன புதுசா…

ஆண் : அட கிஸ்சு என்றால் உதடுகள் பிரியும்…
தமிழ் முத்தம் என்றால் உதடுகள் இணையும்…

பெண் : தகராறு ஏது…
தமிழ் முத்தம் போடு…

ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…

BGM

ஆண் : உள்ளாடும் உணர்ச்சி தீயாக…
ஏன் உள்ளத்தை மறைத்தாய் நீயாக…

பெண் : ஹா… தண்ணீரில் விழுந்த நிழல் போல…
நான் நனையாமல் இருந்தேன் நானாக…

ஆண் : துாரம் நின்று பார்த்தால்…
நீ பஞ்சடைத்த மேனி…
நெருங்கி வந்து பார்த்தேன்…
நீ நெஞ்சழுத்த காரி…

பெண் : நெஞ்சில் விதைத்தேன்…
முதல் நாள் உனையே…
என் மடியில் முளைத்தாய்…
மறுநாள் வெளியே…

ஆண் : நல் வார்த்தை சொன்னாய்…
நடமாடும் தீவே…

ஆண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…
ஐந்து என்கிறாய் என் ஐந்து நிலமவள்…
ஐந்து புலங்களில் என்னை ஆட்சி செய்பவள்…
அவள் வேறு யாரு…
கண்ணாடி பாரு…

பெண் : பத்துக்குள்ளே நம்பர் ஒன்னு சொல்லு…
என் நெஞ்சுக்குள்ளே யார் என்று சொல்வேன்…


Notes : Pathukulle Number Song Lyrics in Tamil. This Song from Vasool Raja MBBS (2004). Song Lyrics penned by Vairamuthu. பத்துக்குள்ளே நம்பர் பாடல் வரிகள்.


லவ் பண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.கே. & பிரசாந்தினிஹாரிஸ் ஜெயராஜ்12பி

Love Pannu Song Lyrics in Tamil


ஆண் : ஒரு புன்னகை…
பூவே சிறு பூக்களின் தீவே…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : ஒரு புன்னகை பூவே…
சிறு பூக்களின் தீவே…
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

ஆண் : என் வாலிப நெஞ்சம்…
உன் காலடி கெஞ்சும்…
சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

ஆண் : நா கெஞ்சி கேட்கும் நேரம்…
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்…
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

BGM

ஆண் : சூரியன் வாசல் வந்து…
ஐஸ்க்ரீம் கொடுக்கும்…

குழு : உடாதம்மா… பீலாதம்மா…

பெண் : சந்திரன் உள்ளே வந்து…
சாக்லெட் கொடுக்கும்…

குழு : சுத்தாதம்மா… ரீலுதாம்மா…

ஆண் : உன் படுக்கை அறையிலே…
ஒரு வசந்தம் வேண்டுமா…
உன் குளியல் அறையிலே…
விண்டர் சீசன் வேண்டுமா…

ஆண் : நீ மாற சொன்னதும்…
நான்கு சீசனும் மாற வேண்டுமா…
லவ் பண்ணு…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

BGM

ஆண் : எண்பது ஆண்டுகள்…
இளமை வேண்டுமா…

குழு : மெய்யாகுமா… மெய்யாகுமா…

ஆண் : சொடக்கொன்று போட்டதும்…
சொர்க்கம் வேண்டுமா…

குழு : மெய்யாகுமா… மெய்யாகுமா…

பெண் : அட வெள்ளை வெள்ளையாய்…
ஓர் இரவு வேண்டுமா…
புது வெளிச்சம் போடவே…
இரு நிலவு வேண்டுமா…

ஆண் : உன்னை காலை மாலையும்…
சுற்றி வருவது…
காதல் செய்யவே…
லவ் பண்ணு…

குழு : ஐயோ பண்ணு…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு…

குழு : லவ் பண்ணு… லவ் பண்ணு…
ஐயோ பண்ணு…

ஆண் : ஒரு புன்னகை பூவே…
சிறு பூக்களின் தீவே…
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

ஆண் : என் வாலிப நெஞ்சம்…
உன் காலடி கெஞ்சும்…
சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

பெண் : நீ கெஞ்சி கேட்கும் நேரம்…
என் நெஞ்சின் ஓரம் ஈரம்…
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ…

BGM


Notes : Love Pannu Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. லவ் பண்ணு பாடல் வரிகள்.


உன் பனித்துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகே கே & ஸ்ரேயா கோஷல்யுவன் சங்கர் ராஜாகண்ட நாள் முதல்

Un panithuli panithuli Song Lyrics in Tamil


பெண் : கரு கரு கரு கரு…
கண்ணு பட்டு வாடிவிடும்…
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க…
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு…
மாமியாரு கேட்கும் முன்னே…
அரை டஜன் பெத்து கொடுங்க…

பெண் : தக தக தக தக தங்க…
சிலை தவிக்குது வெக்கத்துல…
போதும் அத விட்டுவிடுங்க…
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு…
தேவைப்படும் தாலாட்டுல…
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க…

BGM

பெண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

பெண் : இது நனவாய் தோன்றும் கனவு…
இது காலையில் தோன்றும் நிலவு…
இது கண்ணை கண்ணை பறித்து…
வெளிச்சம் தரும் இரவு…

ஆண் : காதலா காதலா எண்ணவும் கூசுதே…
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே…

பெண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது…
ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

BGM

பெண் : கரு கரு கரு கரு…
கண்ணு பட்டு வாடிவிடும்…
வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க…
அடுத்தது அடுத்தது எப்பவுன்னு…
மாமியாரு கேட்கும் முன்னே…
அரை டஜன் பெத்து கொடுங்க…

பெண் : தக தக தக தக தங்க…
சிலை தவிக்குது வெக்கத்துல…
போதும் அத விட்டுவிடுங்க…
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு…
தேவைப்படும் தாலாட்டுல…
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க…

BGM

ஆண் : விரல்களும் நகங்களும்…
தொட்டு கொண்ட நேரங்கள்…

பெண் : எண்ணி அதை பார்த்ததில்லை…
என்ற போதும் நூறுகள்…

ஆண் : ஏதோ ஒரு தென்றல் மோதி…
மெல்ல மெல்ல மாறினோம்…

பெண் : ஓ… உன்னை நானும் என்னை நீயும்…
எங்கே என்று தேடினோம்…

ஆண் : நம்மை சுற்றி கூட்டம் வந்தும்…
தனியானோம்…
தனிமையில் நெஞ்சுக்குள்ளே…
பேசலானோம்…

பெண் : பேசும் போதே பேசும் போதே…
மௌனம் ஆனோம்…

BGM

ஆண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…

BGM

பெண் : முகத்திரைகுள்ளே நின்று…
கண்ணாம் மூச்சி ஆடினாய்…

ஆண் : பொய்யால் ஒரு மாலை கட்டி…
பூசை செய்து சூடினாய்…

பெண் : நிழல்களின் உள்ளே உள்ள…
நிஜங்களை தேடினேன்…

ஆண் : நீயாய் அதை சொல்வாய் என…
நித்தமும் நான் வாடினேன்…

பெண் : சொல்ல நினைத்தேன்…
ஆனால் வார்த்தை இல்லை…
உன்னைவிட்டால் யாரும் எந்தன்…
சொந்தம் இல்லை…

ஆண் : சொந்தம் என்று யாரும் இனி…
தேவை இல்லை…

ஆண் : உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ… ஓஓ…

BGM


Notes : Un panithuli panithuli Song Lyrics in Tamil. This Song from Kanda Naal Mudhal (2005). Song Lyrics penned by Thamarai. உன் பனித்துளி பாடல் வரிகள்.


காதல் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கேயுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Kadhal Valarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ… இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

BGM

ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே…
என்னை உன் மனம் அறியாதா…
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்…
உன்னை பார்த்ததும் பொழியாதா…

ஆண் : பல கோடி பெண்கள்தான்…
பூமியிலே வாழலாம்…
ஒரு பார்வையால் மனதை…
பறித்து சென்றவள் நீயடி…

ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே…
கால் அடியில் வேர்களும் முளைக்கும்…
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…

ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை…
தாயின் அன்பு அது வளரும் வரை…
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ…
உயிரோடு வாழும் வரை…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள… ஏ புள்ள…
ஏ புள்ள… ஏ புள்ள…

BGM

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

BGM

ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி…
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்…
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்…
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்…

ஆண் : உன் முகத்தை பார்க்கவே…
என் விழிகள் வாழுதே…
பிரியும் நேரத்தில்…
பார்வை இழக்கிறேன் நானடி…

ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும்…
உனக்கெனவே தருவேன் பெண்ணே…
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…

ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல…
எனது பேரை நானும் எழுதி வச்சேன்…
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்…
மழை விட்டும் நான் நனைஞ்சேன்…
ஏ புள்ள… புள்ள…

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னு தான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…

BGM


Notes : Kadhal Valarthen Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்.


காதல் ஒரு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே கேமணி சா்மாஷாஜகான்

Kadhal Oru Song Lyrics in Tamil


குழு : ஆணும் பெண்ணும்…
ஒன்று கூடாவிட்டால்…
வானும் மன்னும் இங்கு வாழாது…
உள்ளம் உள்ளம்…
ரெண்டும் சேராவிட்டால்…
பூமியோடு ஒரு பூவேது…

குழு : ஆணும் பெண்ணும்…
ஒன்று கூடாவிட்டால்…
வானும் மன்னும் இங்கு வாழாது…
உள்ளம் உள்ளம்…
ரெண்டும் சேராவிட்டால்…
பூமியோடு ஒரு பூவேது…

ஆண் : காதல் ஒரு தனி கட்சி…
கொடியேத்து ஏத்து…
காதல் ஒரு வாக்குறுதி…
நிறைவேத்து ஏத்து…

ஆண் : காதல் ஒரு நந்தவனம்…
நீர் ஊத்து ஊத்து…
காதல் ஒரு கைக்குழந்தை…
காப்பாத்து பாத்து…

குழு : உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு…
இவன் நன்மை செய்ய…
நன்மை செய்ய பிறந்தவன்…
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை…
கட்டி வைக்க…
இவன் உயிரையும் கொடுப்பவன்…

ஆண் : காதலித்து தோல்வி…
கண்ட காதலரை…
அந்த கல்லறையை…
தட்டி தட்டி எழுப்புங்கள்…
நான் இமயத்தை விற்று கூட…
சேத்து வைப்பேன்…
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்…

BGM

குழு : லவ் பண்ணு…
லவ் பண்ணு லவ் பண்ணு…
நெஞ்சுக்குள் லப்பு டப்பு…
உள்ளமட்டும் லவ் பண்ணு…
உங்க காதலுக்கு…
வேலிகட்டி வாழவைக்க…
எங்க உயிரையும் கொடுப்போங்க…

ஆண் : காதலித்து தோல்வி…
கண்ட காதலரை…
அந்த கல்லறையை…
தட்டி தட்டி எழுப்புங்கள்…
நான் இமயத்தை விற்று கூட…
சேத்து வைப்பேன்…
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்…

BGM

ஆண் : லைலா மஜ்னு…
லவ் உண்மைதானே
ஏன் அன்று சேரவில்லை

குழு : லைலா மஜ்னு லவ் ஒன்று சேர்க்க..
அந்நாளில் நாங்கள் இல்லை…

ஆண் : மெய்யான காதல்…
மெய் சேர்த்தல் போல…
மேலான சேவை இல்லை…

குழு : பர்ஸ்ட் நைட் முடிய…
படை கொண்டு காப்போம்…
ஒரு தொல்லை இல்லை இல்லை…

ஆண் : ஜாதிகள் மத ஜாதகம்…
இவை தாண்டி காதல் வளர்ப்போம்…
காதலை ஒன்று சேர்க்கவே…
எங்க சதையை அறுத்து கொடுப்போம்…

ஆண் : ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும்…
உள்ள அன்பை வாழ வைப்போம்…
ஏன் வானுக்கும் இந்த மண்ணுக்கும்…
மலர் மாலை மாற்றி வைப்போம்…

BGM

குழு : உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு…
இவன் நன்மை செய்ய…
நன்மை செய்ய பிறந்தவன்…
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை…
கட்டி வைக்க…
இவன் உயிரையும் கொடுப்பவன்…

ஆண் : காதலித்து தோல்வி…
கண்ட காதலரை…
அந்த கல்லறையை…
தட்டி தட்டி எழுப்புங்கள்…
நான் இமயத்தை விற்று கூட…
சேத்து வைப்பேன்…
துணிந்து என்னிடம் அனுப்புங்கள்…

BGM

ஆண் : கிளியும் கிளியும்…
புலியும் புலியும் லவ் பன்ன…
தடைகள் இல்லை…

குழு : மனுஷன் மனுஷன் லவ் பன்னும்போது…
வாழ்வோடு நூறு தொல்லை…

ஆண் : இதயகங்கள் ரெண்டு…
உடைகின்ற போது…
இன்ஷூரன்ஸ் ஏதும் இல்லை…

குழு : இளம் காதல் ஜோடி…
பிறிகின்ற ஊரில்…
தெய்வங்கள் வாழ்வதில்லை…

ஆண் : வீதிக்கு ஒரு சங்கமாய்…
இங்கு ஜாதிக்கு இருக்கிறதே…
லவ்வர்கள் வெற்றி கொள்ளவே…
ஒரு சங்கம் இருக்கிறதா…

ஆண் : கார்கிலை வெற்றி கொண்டது…
நம்ப பாரத படை அல்லவா…
மெய் காதலை வெற்றி கொள்வது…
எங்கள் காவலர் படை அல்லவா…

BGM

குழு : உண்மையுள்ள உண்மையுள்ள காதலுக்கு…
இவன் நன்மை செய்ய…
நன்மை செய்ய பிறந்தவன்…
ரெண்டு உள்ளங்களை உள்ளங்களை…
கட்டி வைக்க…
இவன் உயிரையும் கொடுப்பவன்…

ஆண் : லவ் பண்ணு…
லவ் பண்ணு லவ் பண்ணு…
நெஞ்சுக்குள் லப்பு டப்பு…
உள்ளமட்டும் லவ் பண்ணு…
உங்க காதலுக்கு…
வேலிகட்டி வாழவைக்க…
எங்க உயிரையும் கொடுப்போங்க…
வ்ஹோ ஓ ஓ ஓ ஓ….


Notes : Kadhal Oru Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. காதல் ஒரு தனி கட்சி பாடல் வரிகள்.