பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கே கே | யுவன் ஷங்கர் ராஜா | மன்மதன் |
Kadhal Valarthen Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
ஆண் : ஏ… இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
—BGM—
ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே…
என்னை உன் மனம் அறியாதா…
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்…
உன்னை பார்த்ததும் பொழியாதா…
ஆண் : பல கோடி பெண்கள்தான்…
பூமியிலே வாழலாம்…
ஒரு பார்வையால் மனதை…
பறித்து சென்றவள் நீயடி…
ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே…
கால் அடியில் வேர்களும் முளைக்கும்…
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…
ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை…
தாயின் அன்பு அது வளரும் வரை…
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ…
உயிரோடு வாழும் வரை…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள… ஏ புள்ள…
ஏ புள்ள… ஏ புள்ள…
—BGM—
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
—BGM—
ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி…
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்…
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்…
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்…
ஆண் : உன் முகத்தை பார்க்கவே…
என் விழிகள் வாழுதே…
பிரியும் நேரத்தில்…
பார்வை இழக்கிறேன் நானடி…
ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும்…
உனக்கெனவே தருவேன் பெண்ணே…
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…
ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல…
எனது பேரை நானும் எழுதி வச்சேன்…
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்…
மழை விட்டும் நான் நனைஞ்சேன்…
ஏ புள்ள… புள்ள…
ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…
ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னு தான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…
ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…
—BGM—
Notes : Kadhal Valarthen Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்.