| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சினேகன் | சாதனா சர்கம் | யுவன் ஷங்கர் ராஜா | மன்மதன் |
Manmadhane Nee Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மன்மதனே நீ கலைஞன்தான்…
மன்மதனே நீ கவிஞன்தான்…
மன்மதனே நீ காதலன்தான்…
மன்மதனே நீ காவலன்தான்…
பெண் : என்னை உனக்குள்ளே தொலைத்தேன்…
ஏனோ தெரியல…
உன்னை கண்ட நொடி ஏனோ…
இன்னும் நகரல…
உந்தன் ரசிகை நானும்…
உனக்கேன் புரியவில்லை…
பெண் : எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்…
எவனையும் பிடிக்கவில்லை…
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்…
என்னையும் மயக்கவில்லை…
பெண் : எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்…
எவனையும் பிடிக்கவில்லை…
இருபது வருடம் உன்னைப்போல் எவனும்…
என்னையும் மயக்கவில்லை…
பெண் : மன்மதனே நீ கலைஞன்தான்…
மன்மதனே நீ கவிஞன்தான்…
மன்மதனே நீ காதலன்தான்…
மன்மதனே நீ காவலன்தான்…
—BGM—
பெண் : நானும் ஓர் பெண் என…
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்…
உன்னை நான் பார்த்த பின்…
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்…
பெண் : எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி…
ஆடிக் கொண்டே இருக்கிறாய்…
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்…
ஓடிக்கொண்டே இருக்கிறாய்…
பெண் : அழகாய் நானும் மாறுகிறேன்…
அறிவாய் நானும் பேசுகிறேன்…
சுகமாய் நானும் மலருகிறேன்…
உனக்கேதும் தெரிகிறதா…
பெண் : ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற…
என்ன விசித்திரமோ…
நண்பனே எனக்கு காதலன் ஆனால்…
அது தான் சரித்திரமோ…
பெண் : ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற…
என்ன விசித்திரமோ…
நண்பனே எனக்கு காதலன் ஆனால்…
அது தான் சரித்திரமோ…
பெண் : மன்மதனே உன்னை பார்க்கிறேன்…
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்…
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்…
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்…
பெண் : உன்னை முழுதாக நானும்…
மென்று முழுங்கவோ…
உந்தன் முன்னாடி மட்டும்…
வெட்கம் மறக்கவோ…
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்…
பேரை வைக்கவோ…
பெண் : அடிமை சாசனம் எழுதி தருகிறேன்…
என்னை ஏற்று கொள்ள…
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்…
அன்பாய் பார்த்துக்கொள்ள…
பெண் : அடிமை சாசனம் எழுதி தருகிறேன்…
என்னை ஏற்று கொள்ள…
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்…
அன்பாய் பார்த்துக்கொள்ள…
—BGM—
Notes : Manmadhane Nee Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Snehan. மன்மதனே நீ பாடல் வரிகள்.


