| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| மதன் கார்க்கி | ஹரிசரண் & சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | நிமிர்ந்து நில் |
Negizhiyinil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…
பெண் : அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட…
எனை தீண்டிடு உயிரே…
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட…
விரல் கோர்த்திடு உயிரே…
ஆண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ…
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்…
பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
உனை விலகி போனவள்…
நெருங்கி வர ஆசை கொண்டு…
உயிர் இளகி நிற்கிறேன்…
—BGM—
ஆண் : ஹே… பவள பாறை படலம் போலே…
மனதில் நிறைந்தாய்…
இமைகள் மூடி திறக்கும் முன்னே…
எதனால் மறைந்தாய்…
பெண் : உண்மையில் உன் உண்மையில்…
என் காதலை பிரிந்தேன்…
இன்மையில் உன் இன்மையில்…
உன் கண்மையை அறிந்தேன்…
கடந்தோடிடும் கணம் யாவிலும்…
எனதேக்கமே கணக்கோ…
ஆண் : நெகிழியினில் நெஞ்சம் என்றாய்…
நெருப்பை ஏன் கேட்கிறாய்…
நெருஞ்சி முல்லை போலே நின்றேன்…
நெருங்கி வர பார்க்கிறாய்…
—BGM—
பெண் : உலகம் அறியா குழந்தை எனவே…
உனை நான் நினைத்தேன்…
உனையே உலகம் வணங்கும் பொழுது…
என் மடமை உணர்ந்தேன்…
ஆண் : மாற்றிட எனை மாற்றிட…
இந்த பூமியே நினைக்க…
காதலே நீ மாறினாய்…
இதை எங்கு நான் உரைக்க…
பெண் : எனை ஏற்றிடு…
உனை ஊற்றிடு…
உயிர் ஏற்றிடு உயிரே…
பெண் : நெகிழியினில் நெஞ்சம் கொண்டே…
ஆண் : நெருப்பை ஏன் கேட்கிறாய்…
பெண் : நெருங்கி வர ஆசை கொண்டு…
ஆண் : உயிர் இளகி நிற்கிறாய்…
பெண் : அணையும் திரி தூண்டிட…
ஒளி மீண்டிட…
ஆண் : உனை தீண்டுவேன் அழகே…
பெண் : உனது விழி பார்த்திட…
விரல் கோர்த்திட…
ஆண் : துயர் தீர்ந்திடும் உயிரே…
ஆண் & பெண் : நாலாபுறமும் நாலாயிரம் நீ…
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்…
—BGM—
Notes : Negizhiyinil Song Lyrics in Tamil. This Song from Nimirnthu Nil (2014). Song Lyrics penned by Madhan Karky. நெகிழியினில் பாடல் வரிகள்.


