அழகாய் பூக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஜானகி ஐயர் & வி.வி. பிரசன்னாவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…
காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : கடவுளின் கனவில்…
இருவரும் இருப்போமே… ஓஹோ…
கவிதையின் வடிவில்…
வாழ்ந்திட நினைப்போமே… ஓஹோ…

ஆண் : இருவரும் நடந்தால்…
ஒரு நிழல் பார்ப்போமே… ஓஹோ…
ஒரு நிழல் அதிலே…
இருவரும் தெரிவோமே… ஓஹோ…

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்…
சில நேரம் அழுகிறேன்…
உன்னாலே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : ஒருமுறை நினைத்தேன்…
உயிர்வரை இனித்தாயே… ஓஹோ…
மறுமுறை நினைத்தேன்…
மனதினை வதைத்தாயே ஓஹோ…

ஆண் : சிறு துளி விழுந்து…
நிறைகுடம் ஆனாயே… ஓஹோ…
அரை கணம் நொடியில்…
நரை விழ செய்தாயே… ஓஹோ…

பெண் : நீ இல்லா நொடி முதல்…
உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…

ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…

பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…


Notes : Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Kalaikumar. அழகாய் பூக்குதே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top