Tag Archives: இளையகம்பன்

நிலவே நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன்தேவாதை பொறந்தாச்சு

Nilave Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா…
அக்கா மகள பாட வா பாட வா…
நான் பாடும் ராகம் அவள் அல்லவா… ஆஆ…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

BGM

ஆண் : கோலாரு தங்கம் இல்லாம…
அவ மேனி ஜொலிக்குமடி…
கோஹினூர் வைரம் இல்லாம…
அவ மூக்கு ஜொலிக்குமடி…

ஆண் : கோலாரு தங்கம் இல்லாம…
அவ மேனி ஜொலிக்குமடி…
கோஹினூர் வைரம் இல்லாம…
அவ மூக்கு ஜொலிக்குமடி…

ஆண் : என் வீட்டு தோட்டத்திலே…
மல்லிகைப்பூ செடி ஒண்ணு வச்சிருக்கேன்…
என்னோட ஆசையைத்தான்…
பூத்திருக்கும் பூக்களில் கொட்டி வச்சேன்…

ஆண் : ஆனியில நல்ல நாள் குறிச்சி…
ஆவணியில் ஒரு பாக்கு வச்சி…
என் அக்கா மக அவளத்தான் கை புடிக்கப்போறேன்…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

BGM

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்…
அவ மூச்சில் கலந்திருப்பேன்…
அவ மேலே மழை விழுந்தாலும்…
அடிபட்டு நான் துடிப்பேன்…

ஆண் : ஆகாயம் ரெண்டு பட்டாலும்…
அவ மூச்சில் கலந்திருப்பேன்…
அவ மேலே மழை விழுந்தாலும்…
அடிபட்டு நான் துடிப்பேன்…

ஆண் : வாழ்விருக்கும் காலம் எல்லாம்…
அவளுக்கு நிழலா நான் இருப்பேன்…
அவள் நடக்கும் பாதையெல்லாம்…
அனுதினம் பூவால் நான் துடைப்பேன்…

ஆண் : கண்ணுக்குள்ளே கோயில் கட்டி வைப்பேன்…
கண்மணிய அதில் விட்டு வைப்பேன்…
அவ கால் கொலுசா நான் இருக்க…
ஜென்மம் ஏழு எடுப்பேன்…

ஆண் : நிலவே நிலவே தாளம் போடு…
பாட்டொண்ணு பாட போறேன்…
மலரே மலரே ராகம் தேடி…
பாட்டொண்ணு பாட போறேன்…

ஆண் : நட்சத்திரமே கூட வா கூட வா…
அக்கா மகள பாட வா பாட வா…
நான் பாடும் ராகம் அவள் அல்லவா… ஆஆ…

BGM


Notes : Nilave Nilave Song Lyrics in Tamil. This Song from Thai Poranthachu (2000). Song Lyrics penned by Ilaya Kamban. நிலவே நிலவே பாடல் வரிகள்.


Kandupidi Kandupidi Song Lyrics in Tamil

கண்டுபிடி கண்டுபிடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன் & ஹரிணிசபேஷ் & முரளிசமுத்திரம்

Kandupidi Kandupidi Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

ஆண் : சேலை நூலையே கொண்டு…
இந்த சீன சுவரை இழுத்தாயே…
திருடனைத் திருடிக் கொண்டு…
நீ காதல் ஊடல் செய்தாயே…

பெண் : தினசரி தவனை முறையினில் வந்து…
செலவு செய் என்னை…

ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

ஆண் : கண்ணில் தூண்டில்கள் மாட்டி…
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி…
சுக கண் காட்சி நீ காட்டுறியே…
சுடும் சூரியனை அடி ஆக்குறியே…

BGM

பெண் : புத்தகம் இடையில் வாசி…
இந்த புயலை பூட்ட வழி யோசி…
நீ உடும்பாகி என்னை உருசேர்த்து…
தினம் உலை யேற்று…

ஆண் : மேகம் மழை சிந்தும் போது…
ஜலதோஷம் பூமிக்கு ஏது…
மன்மத நாட்டு புதயல்கள்…
உந்தன் புடவைக்குள் உள்ளது…

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM

பெண் : பண்டம் மாற்று முறை போல…
ஏன் முத்த மாற்று முறை செய்தாய்…
இந்த வீணைக்குள் புயல் வீசும்…
அது உன் விரலை விலைப்பேசும்…

BGM

ஆண் : கண்ணில் உன் அழகு ஊறும்…
என் இதயம் தலைகீழாய் மாறும்…
அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும்…
குளிர் ஜுரம் தாக்கும்…

பெண் : கட்டில் மேல் தேர்தல் வைத்து…
அட இணைந்து இருவரும் வெல்வோம்…
காமனின் நாட்டு தேசிய கீதம்…
கண்களால் எழுதுவோம்…

ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

பெண் : என் சேலை நூலையே கொண்டு…
இந்த சீன சுவரை இழுத்தேனே…
திருடனைத் திருடிக் கொண்டு…
நான் காதல் ஊடல் செய்வேனே…

ஆண் : தினசரி தவனை முறையினில் வந்து…
செலவு செய் என்னை…

பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி…
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி…

BGM


Notes : Kandupidi Kandupidi Song Lyrics in Tamil. This Song from Samudhiram (2001). Song Lyrics penned by Ilaiyakamban. கண்டுபிடி கண்டுபிடி பாடல் வரிகள்.


எழுந்தால் மலை போல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்எஸ். ஏ. ராஜ்குமார்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Eluntha Mala Pola Song Lyrics in Tamil


BGM

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…
எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

ஆண் : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்…
பொன்னான மனசிருக்கும்…
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு…
எப்போதும் திறந்து இருக்கும்…

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்…
எட்டூரும் பணிஞ்சிருக்கும்…
அவர் தொட்டு தந்த நெல்லுமணி…
முப்போகம் விளைஞ்சிருக்கும்…

குழு : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

BGM

ஆண் : வைகை ஆறும்தான் கடல பாக்கல…
வாசுதேவர் மனம் கடலாச்சி…
குழு : எங்க வாசுதேவர் மனம் கடலாச்சி…

ஆண் : வாழ்க்கை வெள்ளத்தில் நாங்க மூழ்கல…
வாசுதேவர் கை படகாச்சி…
குழு : எங்க வாசுதேவர் கை படகாச்சி…

ஆண் : கோவிலுக்குள்ள தெய்வம் இருக்கு…
தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு…
குழு : நாங்க தேடி வந்த தெய்வம் இங்க இருக்கு…

ஆண் : வீட்டுக்கு வீடு எரியுதுங்க…
வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு…
குழு : எங்க வாசுதேவர் ஏத்திய ஒளி விளக்கு…

குழு : எங்க உசுரெல்லாம் ஊடுருவும்…
உன்னோட புன்சிரிப்பு…
எங்க மனசாளும் மன்னனுக்கு…
மத்தாப்பு வரவேற்பு…

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

BGM

ஆண் : வில்லு வண்டியில போகும் மிடுக்குல…
வீரம் வெளையுது கழனியிலே…
குழு : அத கேட்டுப் பாருங்க வெடலைகள…

ஆண் : பார்வை ஒண்ணுதான் வார்த்தை ஒண்ணுதான்…
பயிசல் செய்யுது வழக்குகள…
குழு : இங்கு கோர்ட்டு கேஸ்கன்னு கவலையில்ல…

ஆண் : சுத்தி எரியும் எந்த நெருப்பும்…
தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை…
குழு : அத தொட்டதுண்டு உன்னை சுட்டதில்லை…

ஆண் : சத்தியத்தையும் தர்மத்தையும்…
காத்திருக்கும் எங்க தர்மதுரை…
குழு : உங்க கண்ணுக்குள்ளே இருக்கோம் கவலையில்லை…

ஆண் : இங்க நடமாடும் சூரியனை…
கும்பிட்டு பொங்க வச்சோம்…
எங்க பசி தீர்த்த தர்மனுக்கு…
பல்லாக்கு தூக்கி நிற்போம்…

ஆண் : எழுந்தால் மலை போல…
நடந்தால் நதி போல…

குழு : அந்த ஆகாயம் போல எண்ணாம கொடுக்கும்…
பொன்னான மனசிருக்கும்…
என்றும் மூடாத கோயில் உன் வாசல் கதவு…
எப்போதும் திறந்து இருக்கும்…

ஆண் : அந்த வெட்டருவா மீசைக்குத்தான்…
எட்டூரும் பணிஞ்சிருக்கும்…
அவர் தொட்டு தந்த நெல்லுமணி…
முப்போகம் விளைஞ்சிருக்கும்…

ஆண் : எழுந்தால் மலை போல…
குழு : எழுந்தால் மலை போல…
ஆண் : நடந்தால் நதி போல…
குழு : நடந்தால் நதி போல…


Notes : Eluntha Mala Pola Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by Ilaya Kamban. எழுந்தால் மலை போல பாடல் வரிகள்.


ஆரவள்ளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்வேல்முருகன் & சின்ன பொண்ணுஸ்ரீகாந்த் தேவாஅவர்களும் இவர்களும்

Aaravalli Song Lyrics in Tamil


ஆண் : அடி ஆரவள்ளி என் சூரவள்ளி…

BGM

ஆண் : ஆரவள்ளி… சூரவள்ளி…
ஆட்டிபடைக்கும் அம்சவள்ளி…
என்ன தொவச்சி எடுக்க வந்தகள்ளி…

ஆண் : ஒன்னகண்டா துடிக்கிறேன்டி…
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி…
அடி நண்டா அலையுறேன்டி…
நெசமா நல்லவள தேடுறேன்டி…

பெண் : ஏ கொறலிவித்த பேச்சிக்காரா…
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா…
கொடுக்கா பல்லு மூக்குக்காரா…

பெண் : சும்மா மல்லுகட்டி நிக்காதடா…
என்ன மாங்காதின்ன வெக்காதடா…
சப்புகொட்டி சொக்காதடா…
என்ன தாலிகட்டி தூக்கிகோடா…

BGM

ஆண் : ஒத்த மல்லி கொண்டையில…
பூவா என்ன சுத்திக்கடி…
கொழந்தையா என்ன அள்ளி…
இடுப்புல வச்சிக்கடி…

ஆண் : கோவப்பழ ஓன் உதட்ட…
என் உதட்டில் தச்சிக்கடி…
உச்சந்தல கொதிக்கிதடி…
என் உள்ளங்கையும் நமிக்குதடி…

பெண் : ஒன்னுடைய தோளில நான்…
ஊஞ்சல் கட்டி ஆடிகிறேன்…
ஒன்னுடைய வேட்டிய நான்…
சாமத்துல மாட்டிகிறேன்…

பெண் : ஓன் மீச முடிய பின்னி…
மோதிரமா போட்டுக்கிறேன்…
மனசுதான் பதைக்குதடா…
ஏன் மாராப்பு வழுக்குதடா…

ஆண் : நெசாமா நீ கூட வந்தா…
அந்த நெலாவுக்கே கூட்டிபோவேன்…

பெண் : பக்கத்துல நீயிருந்தா…
நா எப்போதுமே சிரிச்சிருப்பேன்…

ஆண் : அடி ஒம்மேலதான்…
வெயில் பட்டா துடிச்சி நிப்பேன்…
சூரியன ஔிச்சி வெப்பேன்…

பெண் : ஒன்ன ஒத்த நொடி வெலகாம…
அனைச்சி நிப்பேன்…
சேலையில முடிஞ்சி வெப்பேன்…

ஆண் : ஆரவள்ளி… ஏய் சூரவள்ளி…

BGM

ஆண் : அடிவெள்ளிரிக்கா வெதபோல…
வௌக்கேத்தும் பல்லழகி…
முந்திரிக்கா காச்சதுபோல…
முழுசானா முன்னழகி…

ஆண் : கத்தரிக்காய் காம்புபோல…
கதகேட்கும் காதழகி…
முத்தசோறு ஆக்கிதரட்டா…
வேற முக்குத்தி நான் வாங்கிதறட்டா…

பெண் : பாசங்கு பன்னாதடா…
பல்லு பூறா கொட்டி பூடும்…
கையகிய வெக்காதடா…
கட்டுசோறு கெட்டு பூடும்…

பெண் : அண்ணகிட்ட சொல்லிபுட்டா…
ஓன் வால வெட்டிபுடும்…
எங்க அப்பன் கோவகாரன்டா…
ஒன்ன உண்டு இல்லன்னு ஆக்கபோரான்டா…

ஆண் : வில்லுவண்டி நூறுகட்டி…
ஒனக்கு வேண்டிய சீர் ஏத்தி வாறேன்…

பெண் : காஞ்சி பட்டு கூரகட்டி…
ஓன் கைய கோத்து நானும் வாறேன்…

ஆண் : அடி வேணாம் புள்ள கோவமெல்லாம்…
கட்டி புடிடி அள்ளி என்ன நெட்டிமுறிடி…

பெண் : நான் சேத்து வச்ச ஆசையெல்லாம்…
உனக்கு தாறேன்…
ஓங்கூட தொனைக்கி வாறேன்…

ஆண் : ஆரவள்ளி சூரவள்ளி…
ஆட்டிபடைக்கும் அம்ச வள்ளி…
என்ன தொவச்சி எடுக்க வந்த கள்ளி…

பெண் : கொறலிவித்த பேச்சிக்காரா…
கொரங்கு சேட்ட கண்ணுக்காரா…
ஏ… கொடுக்கா பல்லு மூக்குக்காரா…

ஆண் : ஒன்ன கண்டா துடிக்கிறேன்டி…
தெனமும் கவுந்து நான் படுக்குறேன்டி…

பெண் : என்ன சப்புகொட்டி சொக்காதடா…
என்ன தாலிகட்டி தூக்கிகோடா…

BGM


Notes : Aaravalli Song Lyrics in Tamil. This Song from Avargalum Ivargalum (2011). Song Lyrics penned by Ilaya Kamban. ஆரவள்ளி பாடல் வரிகள்.


ஓலை ஓலை ஓலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுவர்ணலதா & அருண்மொழிஎஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Olai Olai Olai Song Lyrics in Tamil


BGM

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

பெண் : ஓலை ஓலை ஓலை
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…
குழு : அட கப்பலும் வந்திருச்சா…

பெண் : மீசை இருக்குது மாமா…
ஏன் ஆசை இருக்காதா…
பூத்து கிடக்குது ரோசா…
ஏன் வாசம் அடிக்காதா…

பெண் : பத்திக்கிருச்சு…
ஏய்… பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

குழு : ஓலை ஓலை ஓலை…
பெண் : ஏய்…
குழு : ஓலை குடிசையில்…
பெண் : ஹான்…
குழு : ஊசி ஊசி ஊசி…
பெண் : ஹான்…
குழு : ஊசி முனையில…

பெண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…

BGM

பெண் : பள்ளியறை போல இருக்கேன்…
பாடம் படிசிக்குயா…
பந்தி வச்சி காத்து கிடக்கேன்…
பசி எடுக்கலையா…

BGM

ஆண் : குண்டுமல்லி பூவ வீசி…
மலைய சாய்க்கிரியா…
கொசுவத்தில் உலக தள்ளி…
மறைக்க பாக்குறியா…

பெண் : ஒத்து உழைக்குறேன் நான்தான்…
அட ஒத்துக்க வேண்டும் நீதான்…
கணக்க முடிக்கும் வரைக்கும்…
நீ கட்டிக்கும் வேட்டி நான்தான்…

பெண் : கட்டில் மேல் ஒத்தையிலே…
சாகதையா…
காசிக்கு போனாலும்…
விடமாட்டேன்யா…

பெண் : என் இடுப்ப மின்னலும்…
இடம் புடிக்குது எடுத்துக்கையா…

பெண் : பத்திக்கிருச்சு…
ஏய்… பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

ஆண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருமா…
பெண் : ஆமா…

ஆண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருமா… ஓய்…

BGM

பெண் : வெட்கம் விட்டு விடிய விடிய…
விவரம் சொல்லட்டுமா…
வெத்தலை போல் உன்னாக்குல…
செவந்துகிரட்டுமா…

BGM

ஆண் : எக்குதப்பு நினைப்பெல்லாம்…
என்கிட்டே நடக்குமா…
ஏன்டியம்மா கரும்புகிட்ட…
இரும்பு உருகுமா…

பெண் : அள்ளி எடுக்கனும் மாமா…
உள்ள அனலடிகுது ஆமா…
அவரகொடி போல் மாமா…
என்ன வேட்டியில் சுத்தனும் ஆமா…

ஆண் : செந்தேனே என்மேலதான்…
சிந்தாதம்மா…
சேலைக்குள் அடங்கிடாத…
புயல் நானம்மா…

ஆண் : ஒன் ஊசி பட்டாசுல…
உசந்த வானம் உடந்திடுமா…

குழு : பத்திக்கிருச்சு…
அய்யோ பத்திக்கிருச்சு…
உன் பட்டுச் சட்டையில…
நெஞ்ச தொறந்து ஒத்திகிடுச்சு…

பெண் : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஒட்டகம் வந்திருச்சா…
குழு : அட ஒட்டகம் வந்திருச்சா…

பெண் : ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…
கப்பலும் வந்திருச்சா…
குழு : அட கப்பலும் வந்திருச்சா…

ஆண் : மன்மத கடலில் விழுக…
நான் இந்திரன் இல்லையம்மா…
பெண் : ஹான்… ஹான்…

ஆண் : மந்திரம் போட்டு மயக்க…
நான் சந்திரன் இல்லையம்மா…
பெண் : ஏய்…

ஆண் : ஏய்… பத்திகிருமா…
ஏய்… பத்திகிருமா…
இந்த பச்ச தண்ணதான்…
தீப்பொறி விழுந்து பத்திகிருமா…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…

குழு : ஓலை ஓலை ஓலை…
ஓலை குடிசையில்…
ஊசி ஊசி ஊசி…
ஊசி முனையில…


Notes : Olai Olai Olai Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. ஓலை ஓலை ஓலை பாடல் வரிகள்.


நிலவே வான் நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்மாயி

Nilave Vaan Nilave Song Lyrics in Tamil


BGM

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்று பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்க்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை பாடனும்…
கண்ணா என் கண்ணா…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

குழு : மார்கழி பூக்களில் மந்திர வாசத்தில்…
பாலகன் வருவான் தேனோட…
ஆண்டாள் நெஞ்சில் தேனோட…
அழகர் வந்தாரே நீராட…

BGM

பெண் : வானமழை இல்ல என்றால்…
வைகை நதி ஏது…
வைகை நதி இல்லையென்றால்…
சோலை மலர் ஏது…

பெண் : கண்களை மூடி கொண்டால்…
வெளிச்சம் இருக்காது…
தீ நடுவில் நீயே நின்றால்…
தீர்வு கிடைக்காது…

பெண் : சூரியன் உதிப்பதை நிறுத்தித்கொண்டால்…
உலகில் விடிவேது…
சுவாசிக்கும் காற்று வீசிட மறுத்தால்…
உயிர்கள் கிடையாது…

பெண் : உடலை தள்ளி உயிர் போனால்…
என்ன செய்வது…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…

BGM

பெண் : உன்பேரை எந்தன் மூச்சில்…
எழுதி வச்சேன் பாரு…
அழிக்கும் நிலை வந்தால்…
எனக்கு ஆயுள் இருக்காது…

பெண் : கடலுக்கு சொந்தமென்று…
கரை இருக்கு பாரு…
கன்னிமகள் சொந்தம் கொள்ள…
உன்னயின்றி யாரு…

பெண் : இன்னொரு தாயாயை நானும் மாறி…
உன்னை தாங்கிடுவேன்…
உன்னிழலாக வாழ்ந்திடகோடி…
ஜென்மம் வாங்கிடுவேன்…

பெண் : கண்ணன் வாழ்ந்த கால் தடமா…
மண்ணில் வாழ்கிறேன்…

பெண் : நிலவே வான் நிலவே வான் நிலவே…
வார்த்தை ஒன்றை பேசு…
கண்ணன் காலடியே ராதை இவள்…
வாழ்கை என்று கூறு…

பெண் : பெண் உள்ளம் என்வென்று அறியாதவனோ…
பேதை மனம் படும் பாட்டை புரியாதவனோ…
அந்த காற்றும் ஒரு நாள் இன்னிசை மாறனும்…
கண்ணா என் கண்ணா…

BGM


Notes : Nilave Vaan Nilave Song Lyrics in Tamil. This Song from Maayi (2000). Song Lyrics penned by Ilayakamban. நிலவே வான் நிலவே பாடல் வரிகள்.


பொம்மை நாயகி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்சித்தன் ஜெயமூர்த்திசுந்தரமூர்த்தி கே.எஸ்பொம்மை நாயகி

Bommai Nayagi Song Lyrics in Tamil


ஆண் : தெற்கத்தி சீமையிலே…
சீராள பூமியிலே…
வங்கக் கடலாடும் அனப்பான கடலூரு…

ஆண் : பெண்ணையாருக்கு அடியிலும் பரவனாறு ஓடி வரும்…
இங்க வாழும் மக்க கதையத்தான்…
அது வரலாறா பாடி வரும்…

BGM

ஆண் : தண்டோடரா அடிங்கடா…
சரவெடி வெடிங்கடா…
தண்டோடரா அடிங்கடா…
சரவெடி வெடிங்கடா…

ஆண் : முண்டாச கட்டுங்கடா…
முட்டிவரையில ஒட்டுங்கடா…
முண்டாச கட்டுங்கடா…
முட்டிவரையில ஒட்டுங்கடா…

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : மூணுபோகம் தருவா…
பக்கத்துண வருவா… ஆஅ…

BGM

ஆண் : ஏ… மூணுபோகம் தருவா…
பக்கத்துண வருவா…

ஆண் : தீமையெல்லாம் அட தீமையெல்லாம்…
அட தீமையெல்லாம் சாயதான்…
தீட்டுவாடா அருவா…

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

BGM

ஆண் : தத்தோம் தத்தோம் தா தை தை தா…

ஆண் : எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…
அட வாழ்க்கை இது நல்ல வரம்தாண்டா…
வாழச்சொன்னார் வள்ளுவர்தாண்டா…

ஆண் : அட ஆதியில் புறந்தோம்…
ஒ்ண்ணாக இருந்தோம்…
ஆணவ ஜாதி உன் நெஞ்சில ஏண்டா…

குழு : எல்லோரும் பத்து மாசம்தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா
எல்லோரும் பத்து மாசம்தான்டா
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா

ஆண் : ஆண் பெண் இரண்டு ஜாதி…
அவ்வையார் சொன்ன நீதி…
ஆமா… ஆண் பெண் இரண்டு ஜாதி…
அவ்வையார் சொன்ன நீதி…

ஆண் : கேளடா நான் சொல்லும் சேதி…
விளக்கு விடியும் தேதி…
கேளடா நான் சொல்லும் சேதி…
விளக்கு விடியும் தேதி…

ஆண் : அட நீயென்ன நானென்ன…
கீழென்ன மேலென்ன…
எல்லாரும் ஒன்னுடா…
சொல்லுது மண்ணுடா…

குழு : எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…
எல்லோரும் பத்து மாசம்தான்டா…
நமக்குள்ள ஜாதி சண்ட ஏன்டா…

BGM

ஆண் : ஹே… அன்புதான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

குழு : அட அன்புதான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

ஆண் : ஏ… மதச்சண்ட வேணாம்மடா…
அண்ணன் தம்பி ஆனோமடா…
எத கொண்டு போகப் போறோம்…
எல்லாம் சரி சமம்மடா…

குழு : அன்பு தான்டா இங்க மகத்துவம்…
இத மனுச பய புரிஞ்சிக்கிட்டா எல்லாம் சமத்துவம்…

BGM

ஆண் : பொம்மை நாயகி பொம்மை நாயகி…
பொம்மை நாயகி புயலேறி வாராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

ஆண் : பொம்மை நாயகி புயலேறி வாராடா…
மண்ண காக்கதான் மழைபோல வாராடா…

BGM


Notes : Bommai Nayagi Song Lyrics in Tamil. This Song from Bommai Nayagi (2023). Song Lyrics penned by Illaya Kamban. பொம்மை நாயகி பாடல் வரிகள்.


இதயத்தை காணவில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
இளையகம்பன்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜசேகர்உன்னை கொடு என்னை தருவேன்

Idhayathai Kanavillai Song Lyrics in Tamil


ஆண் : வானில் இருந்து வானவில் ஒன்று…
மண்ணில் இரங்கி வந்ததுவோ…
மங்கை அவளது மந்திரக்கண்கள்…
சந்திர சூரியன் ஆனதுவோ…

ஆண் : கண்டேன் அழகிய கொலுசு கொலுசு…
திருகாணி ஆனது மனசு மனசு…
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு…
அவள் பாத கொலுசொலி கேட்கும் போது…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

ஆண் : சிட்டுக்குருவியின் சிறகு வாங்கி…
அட பறக்கணும் போல இருக்கு…
வெட்டுக்கிளியின் கால்கள் வாங்கி…
அட குதிக்கணும் போல இருக்கு…
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே…
இது உண்மை தானே…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

BGM

ஆண் : பௌர்ணமி நிலவை…
மிக அருகினில் பார்த்தேன்…
பரவச கடலில்…
நான் படகாய் ஆனேன்…

BGM

ஆண் : தேவதை கண்ணில்…
இரு தூண்டிலை பார்த்தேன்…
மாட்டிய மீனாய்…
நான் ஆனேன் ஆனேன்…

ஆண் : பல்லவன் உளிகள் கூடி…
செதுக்கிய சிலை தானா…
பிரம்மன் சிலையை பார்த்து…
ஜீவனை கொடுத்தானா…
தீண்டாமல் திருட சொன்னானா…
என்னை இன்று…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

BGM

ஆண் : ஒரு மைல் தூரம்…
இது காதல் கடிதம்…
அவளுக்கு எழுதி…
நான் அஞ்சல் சேர்ப்பேன்…

ஆண் : இனி அவள் முத்தம்
அது சேமித்து வைக்க…
என்னுடல் முழுதும்…
நான் உதடுகள் கேட்டேன்…

ஆண் : சொர்க்கத்தில் என்னை பூட்டி…
சாவியை தொலைத்தாளே…
பூக்களின் தொட்டிலில் போட்டு…
லாலிகள் படித்தாளே…
பாறை மீது பூவாய் பூத்தாளே…
என்னில் இன்று…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

ஆண் : சிட்டுக்குருவியின் சிறகு வாங்கி…
அட பறக்கணும் போல இருக்கு…
வெட்டுக்கிளியின் கால்கள் வாங்கி…
அட குதிக்கணும் போல இருக்கு…
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே…
இது உண்மை தானே…
இதயத்தை காணவில்லை…
அது தொலைந்தும் நான் தேடவில்லை…

BGM


Notes : Idhayathai Kanavillai Song Lyrics in Tamil. This Song from Unnai Kodu Ennai Tharuven (2000). Song Lyrics penned by Ilayakamban . இதயத்தை காணவில்லை பாடல் வரிகள்.