பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுகபாரதி | பாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண் | தரன்குமார் | லாடம் |
Siru Thoduthalilae Song Lyrics in Tamil
பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…
ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்…
—BGM—
ஆண் : எனக்கே என்னை தெரியாமல்…
இருந்தேன் அன்பே எதற்காக…
சிரிப்பால் உலகை கொடுத்தாயே…
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே…
பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா…
எதை நான் சொல்வேன் பதிலாக…
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே…
இயல்பாய் மனதை திறந்தாயே…
ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…
பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல்…
நெருக்கத்திலே…
ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…
—BGM—
ஆண் : அலையே இல்லா கடல் போல…
இருந்தேன் அன்பே எதற்காக…
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே…
கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே…
பெண் : மழையே இல்லா நிலம் போல…
பொறுத்தேன் அன்பே உனக்காக…
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக…
எடுத்தாய் எனையும் அழகாக…
ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…
பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே…
ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…
—BGM—
பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…
ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே தேங்க…
—BGM—
Notes : Siru Thoduthalilae Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. சிறு தொடுதலிலே பாடல் வரிகள்.