Tag Archives: யுகபாரதி

சிறு தொடுதலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீ & ஹரிசரண்தரன்குமார்லாடம்

Siru Thoduthalilae Song Lyrics in Tamil


பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே நான்…

BGM

ஆண் : எனக்கே என்னை தெரியாமல்…
இருந்தேன் அன்பே எதற்காக…
சிரிப்பால் உலகை கொடுத்தாயே…
இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே…

பெண் : நான் உனக்கென இருப்பது தெரியாதா…
எதை நான் சொல்வேன் பதிலாக…
இனிப்பாய் என்னை நீ கவர்ந்தாயே…
இயல்பாய் மனதை திறந்தாயே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

பெண் : ஒரு முறை கூடல் பல முறை தேடல்…
நெருக்கத்திலே…

ஆண் : ஒரு முறை காதல் இரு முறை மோதல்…
பல முறை சாதல் வாழ்க்கையிலே…

BGM

ஆண் : அலையே இல்லா கடல் போல…
இருந்தேன் அன்பே எதற்காக…
கிடைத்தாய் கரையாய் நடந்தேனே…
கிழக்காய் உதித்தாய் உடைந்தேனே…

பெண் : மழையே இல்லா நிலம் போல…
பொறுத்தேன் அன்பே உனக்காக…
கொடுத்தாய் உன்னை நீ முழுதாக…
எடுத்தாய் எனையும் அழகாக…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

பெண் : எது வரை காதல் அது வரை காமம் பூமியிலே…

ஆண் : எது வரை நீயோ அது வரை நானோ…
இது வரை ஆசை காதலிலே…

BGM

பெண் : சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய்…
சிறகுகள் பூக்க…
வரும் இரவுகளில் இன்னும் இன்னும்…
நான் கேட்க…

ஆண் : இது வரையிலும் நான் எண்ணவில்லையே…
இனிமையை வாங்க…
சில நொடிகளிலே உந்தன் அன்பிலே தேங்க…

BGM


Notes : Siru Thoduthalilae Song Lyrics in Tamil. This Song from Laadam (2009). Song Lyrics penned by Yugabharathi. சிறு தொடுதலிலே பாடல் வரிகள்.


மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபென்னி டயல்ப்ரீதம்Merry Christmas

Merry Christmas Title Track Song Lyrics in Tamil


ஆண் : ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…

ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே…
ஆகாட்டி தாளம் போடுதே…
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே…
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே…

ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட…
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா…

ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…

BGM

ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்…
எங்கேயும் போகாதே…
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்…
எப்போதும் கேட்காதே…

ஆண் : தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்…
எங்கேயும் போகாதே…
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்…
எப்போதும் கேட்காதே…

ஆண் : ஆடாத காலும் ஆடுதே…
ஆனந்த கோலம் போடுதே…
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே…
வெவ்வேறு வண்ணம் சூடுதே…

ஆண் : ஆலோலம் பாடும் நாளிதே…
ஆகாட்டி தாளம் போடுதே…
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே…
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே…

ஆண் : தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட…
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாடா…

ஆண் : கேட்கும் முன்னாலே சொல்வோம் மேரி கிறிஸ்மஸ்…
கேக்கை எல்லோரும் ஊட்ட மேரி கிறிஸ்மஸ்…

BGM


Notes : Merry Christmas Title Track Song Lyrics in Tamil. This Song from Merry Christmas (2024). Song Lyrics penned by Yugabharathi. மேரி கிறிஸ்மஸ் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.


தித்திடவே தித்திடவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபாம்பே ஜெயஸ்ரீதினாஜனா

Thithi Thidavae Song Lyrics in Tamil


BGM

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…

பெண் : பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

பெண் : நீ வார்த்தை பேசிட இனிப்பாயா…
கேட்கும் பொழுதே பறிப்பாயா…
நீ போர்வை கூசிட அணைப்பாயா…
அணைப்பாயா அணைப்பாயா…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…

BGM

பெண் : தலை கோதி உன் தலை கோதி…
நான் முழுதாக கலைகிறேன்…
இமை மோதி உன் இமை மோதி…
நான் படு காயம் அடைகிறேன்…

பெண் : ஏ வசிய மருந்தாய் வசிய மருந்தாய்…
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே…

பெண் : இதழின் இதழால் இளைபோடு…
நீ இரவு முழுதும் இறை தேடு…
மனதை மனதால் அணைப்போடு…
என் புடவை நெருப்பில் விளையாடு…
விளையாடு விளையாடு…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…

BGM

பெண் : கொதிப்பாகி உன் உடலாலே…
நான் குடை சாய நேர்ந்தது…
ஒரு பாதி உன் உயிராலே…
நான் குளிர் காய சேர்ந்தது…

பெண் : ஏ நடக்கும் தீயே நடக்கும் தீயே…
முத்த தீயில் வாத மேனியனே…

பெண் : இரும்பு மார்பில் வாசித்தேனே…
நான் கரும்பு வேர்வை ருசித்தேனே…
ஆசை வெட்கம் வார்பேனே…
உன் ஆயுள் நுனிவரை பூப்பேனே…
பூப்பேனே பூப்பேனே…

பெண் : தித்திடவே தித்திடவே…
ஒரு முறை முத்தம் கொடுப்பாயா…
கொடுப்பாயா கொடுப்பாயா…

பெண் : பத்திக்கிடவே பத்திக்கிடவே…
பல முறை இன்பம் எடுப்பாயா…
காட்டும் பொழுதே பதிப்பாயா…

பெண் : நீ வார்த்தை பேசிட இனிப்பாயா…
கேட்கும் பொழுதே பறிப்பாயா…
நீ போர்வை கூசிட அணைப்பாயா…
அணைப்பாயா அணைப்பாயா…

BGM


Notes : Thithi Thidavae Song Lyrics in Tamil. This Song from Jana (2004). Song Lyrics penned by Yugabharathi. தித்திடவே தித்திடவே பாடல் வரிகள்.


உயிரே உயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரீட்டா & மணிசர்மாமணி சர்மாமலைக்கோட்டை

Uyire Uyire Song Lyrics in Tamil


ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

ஆண் : உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…
உன் கண்ணோரம் வாழ…
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…

BGM

ஆண் : உன் பட்டு கன்னம் புத்தகம்…
அதில் உதடுகள் எழுதுவதெப்படி…
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா…
அது பகலிலும் ஒளிர்வது எப்படி…

ஆண் : உன் வீதி சேர்ந்ததும் வருகிற பதட்டம்…
குறைப்பது குறைப்பது எப்படி…
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்…
வருவது வருவது எப்படி…

ஆண் : என் வாழ்க்கையா என் வேட்கையா…
ரெண்டாகவும் தெரிந்தாயே…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…

ஆண் : உயிரே உயிரே உறைந்தேனே…
நான் உன்னை கண்ட அந்த நொடி…
உறவை உறவை துறந்தேனே…
நீ என்னை கண்ட இந்த நொடி…

BGM

ஆண் : உன் எச்சில் முத்தம் சம்மதம்…
அது தினசரி தொடர சம்மதம்…
உன் உச்சுகொட்டல் சம்மதம்…
அது உயிர் குழி பறிக்க சம்மதம்…

ஆண் : உன் காதின் ஓரமாய் புரளும் முடி போல்…
கலைய கோடி சம்மதம்…
உன் ஈர சேலையில் வழியும் துளி போல்…
உருள நானும் சம்மதம்…

ஆண் : இனி என் ஞாபகம் உன் பூ முகம்…
கண்டி போலே எனை காட்டும்…

ஆண் : எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா…
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா…
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா…
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா…


Notes : Uyire Uyire Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. உயிரே உயிரே பாடல் வரிகள்.


ஓ பேபி நீ தேவாமிர்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிராகுல் நம்பியார்மணி சர்மாமலைக்கோட்டை

Oh Baby Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ பேபி நீ தேவாமிர்தம்…
பேபி நீ பஞ்சாமிர்தம்…
பேபி நீ புஷ்பத்தாவரம்…

ஆண் : ஓ பேபி நீ தீபாவளி…
பேபி நீ சூராவளி…
பேபி நீ வாச மார்கழி…

ஆண் : அம்மாடி அவ பாதம்பட்டா பாற பூவாகும்…
அப்பாடி அவ கையிபட்டா நீரும் சாராயம்…
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்…

BGM

ஆண் : ஓ பேபி நீ தேவாமிர்தம்…
பேபி நீ பஞ்சாமிர்தம்…
பேபி நீ புஷ்பத்தாவரம்…

BGM

ஆண் : ஏ ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்…
ஏ ஓடக்கரை மீனு அவ கால கொத்த ஏங்கும்…
ஏ காஞ்சிபட்டுச் சேல அவ கட்டிக் கொள்ள ஏங்கும்…
ஏ நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்…

ஆண் : சோல காத்தாடியா செவத்தப்புள்ள நின்னாடா…
செத்துப்போன எல்லாருமே திரும்பி வந்தாண்டா…
காதல் பூசாரியா கனவு பூச செஞ்சாடா…
கல் விழுந்த கொளத்த போல அலம்ப வச்சாடா…

ஆண் : அம்மாடி அவ பாதம்பட்டா பாற பூவாகும்…
அப்பாடி அவ கையிபட்டா நீரும் சாராயம்…
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்…

BGM

ஆண் : நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்…
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்…
நான் தாலிக்கட்டும் போது அவ தல குனிஞ்சா போதும்…
நான் நாலுபுள்ள கேக்க அவ நெகங்கடிச்சா போதும்…

ஆண் : ஊத்துத் தண்ணீரா உள்ளுக்குள்ள பூத்தாடா…
உலகெல்லாம் அவதான்னு உணர வச்சாடா…
காத்து கருப்பாட்டம் கண்ணோட சேர்ந்தாடா…
கனவுக்குள்ள ஸ்ரீதேவியா கதபடிச்சாடா…

ஆண் : அம்மாடி அவ பாதம்பட்டா பாற பூவாகும்…
அப்பாடி அவ கையிபட்டா நீரும் சாராயம்…
ஐயோடி அவ என்ன என்ன தொட்டா என்னாகும்…

BGM


Notes : Oh Baby Song Lyrics in Tamil. This Song from Malaikottai (2007). Song Lyrics penned by Yugabharathi. ஓ பேபி நீ தேவாமிர்தம் பாடல் வரிகள்.


புத்தம் புது பாட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிபுஷ்பவனம் குப்புசாமி & எஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்தென்றல்

Putham Puthu Paattu Song Lyrics in Tamil


ஆண் : வணக்கம் வணக்கம் வணக்கம்…
நான் வாழும் பூமிக்கு வணக்கம்…
இருக்கோ இல்லையோ தெரியாது…
ஒரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்…

ஆண் : குத்த வச்சு கூத்து பாக்கும் உங்களுக்கு வணக்கம்…
உச்சியில வந்து பாக்கும் நிலாவுக்கும் வணக்கம்…
பரம்பரை சொல்லி தந்த பாட்டுக்கும்தான் வணக்கம்…
நான் பறை கொட்ட தோலு தந்த மாடுக்கும்தான் வணக்கம்…
வணக்கம் வணக்கம் வணக்கம்…

BGM

ஆண் : புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே…
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே…
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே…
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே…

ஆண் : பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே…
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே…
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே…
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே…

BGM

ஆண் : ஹேய்… புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே…
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே…
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே…
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே…

BGM

ஆண் : ஏ… மாடு வால புடிச்சி மாடகுளம் கடந்து…
தாமர பூ பறிச்சி தந்தேனய்யா என் மச்சினிக்கு …
ஆ… மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி…
தங்க செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு…

ஆண் : என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆல மர பொந்துக்குள்ளே…
ஆதியிலே புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே…
என் பச்சகிளி அது பறந்த பின்னே…
நான் ஒத்தை கிளி நாள செத்த கிளி…

ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தன தந்தன தந்தன தந்தன…

BGM

ஆண் : தந்தன தந்தன தந்தன தந்தன…
தந்தன தந்தன தந்தன தந்தன…

BGM

ஆண் : ராஜா டாக்கீஸுகுள்ள ரகசியமா நான் குதிக்க…
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான் அந்த ரங்கசாமி…
நேத்து நெனவாக நாள கனவாக…
இன்று என் காலடியில் நழுவுதடா மனம் உருகுதடா…

ஆண் : வந்த தேதி சொன்னதுண்டு…
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு…
போகும் தேதி எந்த தேதி…
ஊரில் யாரும் சொன்னதுண்டா…

ஆண் : போகும் தேதி என் போல் கண்டாருண்டா…
அதை கண்டு கொண்ட நானும் கடவுள்தாண்டா…

ஆண் : பறை பறை பறை பறை…
பறை பறை பறை பறை…
விலங்கு விரட்ட பிறந்த பறை…
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை…

BGM

ஆண் : கடைசி தமிழன் இருக்கும் வரை…
காதில் ஒலிக்கும் பழைய பறை…
வீர பறை வெற்றி பறை…
போர்கள் துடிக்கும் புனிதப் பறை…

ஆண் : கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா…
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா…
இது விடுதலை இசை புது வீறுகொள் இசை…
வேட்டை ஆடி வாழ்ந்த எங்கள் மக்களின் இசை…

ஆண் : என் பாட்டன் முப்பாட்டான்களோட போய் சேரப் போறேன்…
இப்போ நான் மறுபடியும் அம்மா கர்ப்ப பையிலேயே படுத்துகிட்டேன்…
எல்லாரும் அம்மாவோட வயிதுகுள்ள இருக்குரப்ப…
தெரியுமாமே ஒரு இருட்டு அது இப்போ எனக்கு தெரியுது…
கத கதப்பா இருக்கு…
நான் மறுபடியும் பொறந்து வருவேன்டா…
பத்திரமா பாத்துகுங்க என் பறையை…

ஆண் : என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவகோனே…
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவகோனே…


Notes : Putham Puthu Paattu Song Lyrics in Tamil. This Song from Thendral (2004). Song Lyrics penned by Yugabharathi. புத்தம் புது பாட்டு பாடல் வரிகள்.


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜி. வி. பிரகாஷ் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Manithan Enbavan Dheivamaagalam Song Lyrics in Tamil


BGM

ஆண் : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…

ஆண் : பாதை கொஞ்சம் மாறும்போது பக்தன் ஆகலாம்…
போதை கொஞ்சம் ஏறும்போது வள்ளல் ஆகலாம்…
போகும் பாதை போக போக நீளம் ஆகலாம்…
உன் பாவம் கூட நாளை இங்கு வேதம் ஆகலாம்…

BGM

ஆண் : கண் கலங்கி நிற்கும் போது தாயை தேடலாம்…
தாயை வடிவில் யாரோ வந்து உன்னை சேரலாம்…
மாற்றம் வந்து சேருமென்று காத்திருக்கலாம்…
மாசடைந்த மனித நெஞ்சம் தோற்கடிக்கலாம்…

ஆண் : இருட்டிடாமல் வெளிச்சம் இல்லை…
உண்மை சொல்லலாம்…
அழுக்கில்லாமல் புனிதம் இல்லை…
என்ன சொல்லலாம்…

BGM

ஆண் : கருணை ஒன்று தீயை போல மனதை தீண்டலாம்…
எரியும் மெழுகில் செய்த பாவம் உருகி தீரலாம்…
நதியில் மூழ்கி எழுந்த உள்ளம் மோட்சம் காணலாம்…
நடந்திடாத நதியும் இங்கே அசுத்தம் ஆகலாம்…

ஆண் : கருப்பு இல்லாமல் கடலும் இல்லை கால்கள் நிற்கலாம்…
கலக்கமுற்றால் எதுவும் இல்லை நாம் சிக்கலாம்…

ஆண் : மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…

ஆண் : பாதை கொஞ்சம் மாறும்போது பக்தன் ஆகலாம்…
போதை கொஞ்சம் ஏறும்போது வள்ளல் ஆகலாம்…
போகும் பாதை போக போக நீளம் ஆகலாம்…
உன் பாவம் கூட நாளை இங்கு வேதம் ஆகலாம்…

BGM


Notes : Manithan Enbavan Dheivamaagalam Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் பாடல் வரிகள்.


கண்டேன் கண்டேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகார்த்திக் & ஸ்வேதா மோகன்வித்யாசாகர்பிரிவோம் சந்திப்போம்

Kandaen Kandaen Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் காதலை…
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்…
கொண்டேன் ஆவலை…

பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் காதலை…
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்…
கொண்டேன் ஆவலை…

ஆண் : பட்டின் சுகம் வெல்லும் விரல்…
மெட்டின் சுகம் சொல்லும் குரல்…
எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே…

பெண் : பிள்ளை மொழி சொல்லை விட…
ஒற்றை பனை கள்ளை விட…
போதை தரும் காதல் வர தொலைந்தேன்…
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்…

பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்…

ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் காதலை…
கொண்டேன் கொண்டேன் கொண்டேன்…
கொண்டேன் ஆவலை…

BGM

ஆண் : மோதும் மோதும் கொலுசொலி…
ஏங்கும் ஏங்கும் மனசொலியை பேசுதே…

பெண் : போதும் போதும் இதுவரை யாரும் கூறா…
புகழுரை ஏன் கூசுதே…

ஆண் : பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி…
பெண் : பேசாது போனாலும் நீ என் சங்கதி…

ஆண் : கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை…
விக்கல் முதல் தும்மல் வரை…
கட்டில் முதல் தொட்டில் வரை…
அவளை அவளை அவளை அவளை…

பெண் : கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் காதலை…

ஆண் : கொண்டேன் கொண்டேன் கொண்டேன்…
கொண்டேன் ஆவலை…

BGM

பெண் : காணும் காணும் இருவிழி காதல் பேச…
இமைகளிலே கவிதைபடி…

ஆண் : ஏதோ ஏதோ ஒருவித ஆசை தோன்ற…
தனிமை இது கொடுமையடி…

பெண் : நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே…
ஆண் : தூங்காமல் கைசேர காதல் தங்குமே…

பெண் : ரெட்டை திமிா் அச்சத்திலே…
நெஞ்சுக்குழி வெப்பத்திலே…
சுட்டித்தனம் வெட்கத்திலே…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் காதலை…

பெண் : கொண்டேன் கொண்டேன் கொண்டேன்…
கொண்டேன் ஆவலை…

ஆண் : பட்டின் சுகம் வெல்லும் விரல்…
மெட்டின் சுகம் சொல்லும் குரல்…

பெண் : எட்டித் தொட நிற்கும் அவள் எதிரே எதிரே…

ஆண் : பிள்ளை மொழி சொல்லை விட…
ஒற்றை பனை கள்ளை விட…

பெண் : போதை தரும் காதல் வர தொலைந்தேன்…
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்…

பெண் & ஆண் : கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்…
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்…


Notes : Kandaen Kandaen Song Lyrics in Tamil. This Song from Pirivom Snathippom (2008). Song Lyrics penned by Yugabharathi. கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்.


அற்றைத் திங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமது பாலகிருஷ்ணன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்சிவப்பதிகாரம்

Atrai Thingal Song Lyrics in Tamil


BGM

பெண் : அற்றைத் திங்கள் வானிடம்…
ஆண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
பெண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
ஆண் : சொக்கும் ராகம் யாழிடம்…
பெண் : காணுகின்ற காதல் என்னிடம்…
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்…
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்…
ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்…
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

BGM

பெண் : அடிதொட முடிதொட ஆசை பெருகிட…
நேரும் பலவித பரிபாஷை…

ஆண் : பொடிபட பொடிபட நாணம் பொடிபட…
கேட்கும் மனதினில் உயிரோசை…

பெண் : முடிதொட முகந்தொட மோகம் முழுகிட…
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்…

ஆண் : உருகிடஉருகிட ஏக்கம் உருகிட…
கூடும் அனலிது குளிர்வீசும்…

பெண் : குலுங்கினேன் உடல் கூசிட…
கிறங்கினேன் விரல் நீந்திட…

ஆண் : மயங்கினேன் சுகம் சேர்ந்திட…
தளும்பினேன் எனை நீ தொட…
பாய்ந்திட ஆய்ந்திட…

பெண் : காணுகின்ற காதல் என்னிடம்…
ஆண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…

ஆண் : அற்றைத் திங்கள் வானிடம்…
பெண் : அல்லிச் செண்டோ நீரிடம்…
ஆண் : சுற்றும் தென்றல் பூவிடம்…
பெண் : சொக்கும் ராகம் யாழிடம்…

BGM

ஆண் : உடலெது உடையெது தேடும் நிலையிது…
காதல் கடனிது அடையாது…

பெண் : இரவெது பகலெது தேடும் சுகமிது…
சாகும் வரையிலும் முடியாது…

ஆண் : கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது…
காமப் பசி இது அடங்காது…

பெண் : வலமெது இடமெது வாட்டும் கதையிது…
தீண்டும் வரையிலும் விளங்காது…

ஆண் : நடுங்கலாம் குளிர்வாடையில்…
அடங்கலாம் ஒரு ஆடையில்…

பெண் : தயங்கலாம் இடைவேளையில்…
உறங்கலாம் அதிகாலையில்…
கூடலில் ஊடலில்…

ஆண் : காணுகின்ற காதல் என்னிடம்…
பெண் : நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்…


Notes : Atrai Thingal Song Lyrics in Tamil. This Song from Sivappathigaram (2006). Song Lyrics penned by Yugabharathi. அற்றைத் திங்கள் பாடல் வரிகள்.


ஜிங்கு ஜிக்கா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசோலார் சாய் & கல்பனாடி. இமான்மைனா

Jingu Chikka Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்கே நீயும் கிளம்பிப்போற சொல்லு வேகமா…
நானும் துணைக்கி வாறேன்…
பேசிக்கிட்டே கண்ணே போவோமா…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கிப்போட்டு…
ஜிலு ஜிலுக்குற ரவிக்கப்போட்டு…
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா விலகுங்க…
நீங்க எப்போதுமே தொணைக்கி வேணாம் எட்டி நகருங்க…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : நாடு ரொம்ப கெட்டுப்போச்சி…
நல்லதெல்லாம் செத்துப்போச்சி…
கூட வந்து இருக்கிறேனே கட்டுக்காவலா…
நீயும் கூடாதென்னு சொல்லாதடி குட்டி கோகிலா… ஹேய்…

BGM

ஆண் : ராயங்கூரு மூனு மயிலு…
நாங்குனேரி நூறு மயிலு…
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி…
சேவல் கூவும்போது உடுத்திக்கலாம் கொஞ்சம் விலகடி…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

பெண் : சீராலூரு அஞ்சு மயிலு…
சிதம்பரமோ அம்பது மயிலு…
வேலூருல ஏற்கனவே கம்பி என்னுன…
அந்த வெட்கம் கெட்ட மறந்துப்புட்டு இப்போ துள்ளுற…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : செங்கிப்பட்டி ஒம்பது மயிலு…
சிங்கப்பூரு எத்தன மயிலு…
அத்தன ஊரும் சுத்திப்பார்த்த ஆளு யாரடி…
உன்ன ஆராய்ஞ்சு நான் பார்க்கவேணும் ஜோடி சேரடி…

BGM

ஆண் : பூதலூரு ஏழு மயிலு…
பூண்டிக்கோயிலு நாலு மயிலு…
காதலோட உன்ன நானும் கட்டிப்புடிக்கவா…
இல்ல காவி வேட்டி கட்டிக்கிட்டு பட்டை அடிக்கவா…

BGM

பெண் : கும்பகோணம் ஆறு மயிலு…
குளித்தலையோ நாலு மயிலு…
ஊருப்பூரா உதபட்டும் நீ இன்னும் திருந்தல…
உங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணும் மதிக்கல…

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

ஆண் : மாயவரம் எட்டு மயிலு…
மன்னார்குடி பத்து மயிலு…
இறைக்காத கேணியில நீரு ஏதடி…
என்ன ஏத்துக்கிட்டு இஷ்டம்போல தூருவாறடி…
அடியே ஹேய்…

BGM

ஆண் : ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…
ஜிங்கு ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா இக் ஜிக்கா…

BGM


Notes : Jingu Chikka Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Yugabharathi. ஜிங்கு ஜிக்கா பாடல் வரிகள்.