Tag Archives: பக்தி பாடல்கள்

பக்தி பாடல்கள்

Amman Pakthi Padal varigal

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கல்பனாதாசன்பி. சுசீலாகே. வீரமணிஅம்மன் பாடல்கள்

Raksha Raksha Jaganmatha Song Lyrics in Tamil


BGM

பெண் : ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…

குழு : ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…

பெண் : மங்கள வாரம் சொல்லிட வேண்டும்…
மங்கள கண்டிகை ஸ்லோகம்…

குழு : ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…

பெண் : மங்கள வாரம் சொல்லிட வேண்டும்…
மங்கள கண்டிகை ஸ்லோகம்…
இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே…
உமையவள் திருவருள் சேரும்…

பெண் : இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே…
உமையவள் திருவருள் சேரும்…
உமையவள் திருவருள் சேரும்…

பெண் : ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…

BGM

பெண் : படைப்பவள் அவளே காப்பவள் அவளே…
அழிப்பவள் அவளே சக்தி…
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே…
அடைக்கலம் அவளே சக்தி…

BGM

பெண் : படைப்பவள் அவளே காப்பவள் அவளே…
அழிப்பவள் அவளே சக்தி…
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே…
அடைக்கலம் அவளே சக்தி…

பெண் : ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி…
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி…

குழு : ஜெய ஜெய சங்கரி கௌரி மனோகரி…
அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி…

பெண் : சிவ சிவ சங்கரி சக்தி மஹேஸ்வரி…
திருவருள் தருவாள் தேவி…
திருவருள் தருவாள் தேவி…

பெண் : ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…

BGM

பெண் : கருணையில் கங்கை கண்ணணின் தங்கை…
கடைக்கண் திறந்தால் போதும்…
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்…
அருள்மழை பொழிவாள் நாளும்…

BGM

பெண் : கருணையில் கங்கை கண்ணணின் தங்கை…
கடைக்கண் திறந்தால் போதும்…
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்…
அருள்மழை பொழிவாள் நாளும்…

பெண் : நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்…
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்…

குழு : நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்…
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்…

பெண் : பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்…
நாமம் சொன்னால் நன்மை தருபவள்…
நாமம் சொன்னால் நன்மை தருபவள்…

குழு : ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…
சர்வ சக்தி ஜெயதுர்கா…


Notes : Raksha Raksha Jaganmatha Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Kalpanadasan. ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா பாடல் வரிகள்.


கலைவாணி நின் கருணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சோமுபி. சுசீலாஎம்.கீரவாணிஅம்மன் பாடல்கள்

Kalaivani Nin Song Lyrics in Tamil


BGM

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…
கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…

பெண் : அலங்கார தேவதையே வனிதாமணி…
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி…
கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…

BGM

பெண் : மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்…
மரகத வளைக்கரங்கள் மாணிக்க வீணை தாங்கும்…
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்…
அருள் ஞானக்கரம் ஒன்றில் ஜெபமாலை விளங்கும்…

பெண் : ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்…
ஸ்ருதியோடு லயபாவ ஸ்வரராக ஞானம்…
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்…
சரஸ்வதி மாதா உன் வீணையில் எழும் நாதம்…

BGM

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…

BGM

பெண் : வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்…
வீணையில் எழும் நாதம் தேவி உன் சுப்ரபாதம்…
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்…
வேணுவில் வரும் நாதம் வாணி உன் சக்ரபாதம்…

பெண் : வானகம் வையகம் உன் புகழ் பாடும்…
வானகம் வையகம் உன் புகழ் பாடும்…
வேண்டினேன் உன்னைப் பாட தருவாய் சங்கீதம்…

BGM

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…
அலங்கார தேவதையே வனிதாமணி…
இசைக்கலை யாவும் தந்தருள்வாய் கலைமாமணி…

பெண் : கலைவாணி நின் கருணை தேன்மழையே…
விளையாடும் என் நாவில் செந்தமிழே…


Notes : Kalaivani Nin Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by K. Somu. கலைவாணி நின் கருணை பாடல் வரிகள்.


செவப்பு சேலை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சோமுL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Sevappu Selai Song Lyrics in Tamil


BGM

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
சிறப்புடனே பவனி வந்து…
சிந்தையிலே குடி புகுந்து…
கருணை மனம் கொண்டு…
நம்மை காக்க வந்தாளாம்…

பெண் : அவ மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
மரகதத்தில் திலகமிட்டு…
மரிக்கொழுந்து மலரெடுத்து…
சிரத்தினிலே சூடிக்கொண்டு பவனி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…

BGM

பெண் : உன் வேப்பிலையும் திருநீரும்…
வேண்டியதை தந்திடுமே அம்மா…
காப்பது உன் திரிசூலம்…
கவலை யாவும் தீரும் அம்மா…

பெண் : மாபெரும் பக்தர்கள் கூட்டம்…
உன் சன்னதியில் அம்மா…
ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்…
கைகள் அணைத்திடுமே அம்மா…

பெண் : தொட்டியங்குளந்தன்னில் வாழும் எங்க மகமாயி…
மட்டில்லாத பாசம் கொண்ட எங்க மகமாயி…

பெண் : சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
சக்தியிலே நெருப்பெடுத்து சதிராடும் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…
கட்டி காக்கும் அன்னை போல காத்திடுவாள் மாரி…

பெண் : செவப்பு சேலை கட்டிக்கிட்டு…
வேப்பிலையும் எடுத்துக்கிட்டு…
வேற்காட்டு கருமாரி ஆடி வந்தாளாம்…

பெண் : அவள் விருப்புடனே தொழுபவரின்…
வினைகளையே ஓட வைத்து…
பொறுப்புடனே நம்மை காக்க ஆடி வந்தாளாம்…

பெண் : மாரியம்மா கருமாரியம்மா…
மாரியம்மா கருமாரியம்மா…
கருமாரியம்மா…


Notes : Sevappu Selai Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Somu. செவப்பு சேலை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


பூவாடை கட்டிக்கிட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Poovadai Kattikittu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக் கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…

BGM

பெண் : பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…
பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…

பெண் : ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…

பெண் : கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…

BGM

பெண் : பாம்பு படை சூழ்ந்திடவே…
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா…
பம்பை மேளம் முழங்கிடவே…
பவனி வரும் முப்பாத்தா…

BGM

பெண் : பாம்பு படை சூழ்ந்திடவே…
வேம்புத்தேரில் ஏறும் ஆத்தா…
பம்பை மேளம் முழங்கிடவே…
பவனி வரும் முப்பாத்தா…

பெண் : நோன்பு கொண்டு தொழுபவரின்…
நோய் தீர்க்கும் மாரியாத்தா…
நோன்பு கொண்டு தொழுபவரின்…
நோய் தீர்க்கும் மாரியாத்தா…

பெண் : வேண்டும் வரம் தந்து நம்மை…
எப்போதும் காத்திடும் ஆத்தா…
வேண்டும் வரம் தந்து நம்மை…
எப்போதும் காத்திடும் ஆத்தா…

பெண் : சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா…
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா…
சேமாத்தா பூவாத்தா நல்லாத்தா…
சூராத்தா கருத்தாத்தா என்னாத்தா…

BGM

பெண் : பட்டு சேலை பளபளக்க…
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க…
வெட்டருவாளுடன் மாகாளி…
வினைகளை விரட்டிட ஓடி வந்தா…

BGM

பெண் : பட்டு சேலை பளபளக்க…
குங்குமப்பொட்டு சொலிசொலிக்க…
வெட்டருவாளுடன் மாகாளி…
வினைகளை விரட்டிட ஓடி வந்தா…

பெண் : எட்டுதிக்குகள் புகழ் மணக்க…
கொட்டு வாத்தியம் இசையொலிக்க…
எட்டுதிக்குகள் புகழ் மணக்க…
கொட்டு வாத்தியம் இசையொலிக்க…

பெண் : பொட்டழகி பூமாயி…
பூவும் பொட்டும் தந்து நிற்பா…
பொட்டழகி பூமாயி…
பூவும் பொட்டும் தந்து நிற்பா…

பெண் : எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா…
வீராத்தா மேகாத்தா காளியாத்தா…
எல்லாத்தா முப்பாத்தா மணியாத்தா…
வீராத்தா மேகாத்தா காளியாத்தா…

பெண் : பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பூவாடை கட்டிக்கிட்டு…
தாழம்பூ சூட்டிக்கிட்டு…
பொன்னாத்தா சுகுமாரி ஆடியிலே ஆடி வந்தா…

பெண் : பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…
பூப்போல சிரிச்சிக்கிட்டு…
தீச்சட்டி எடுத்துக்கிட்டு…

பெண் : ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…
ஆசைப்பட்டு கேக்குறதெல்லாம்…
கொடுக்க வந்தா மாரியாத்தா…

பெண் : கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…
கண்ணாத்தா சின்னாத்தா நாகாத்தா…
செல்லாத்தா ஏழாத்தா என்னாத்தா…


Notes : Poovadai Kattikittu Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. பூவாடை கட்டிக்கிட்டு பாடல் வரிகள்.


மகமாயி சமயபுரத்தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழ் நம்பிL.R. ஈஸ்வரிதேவாஅம்மன் பாடல்கள்

Magamaayi Samayapura Song Lyrics in Tamil


BGM

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

பெண் : கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

BGM

பெண் : கண்கொடுக்கும் கண்ணபுர தேவி…
அருள் தருவாள் இமயமலைச் செல்வி…
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி…
அருள் தருவாள் இமயமலைச் செல்வி…

பெண் : மூவிலை வேல் கைகொண்ட காளி…
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

BGM

பெண் : வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு…
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு…
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு…
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு…

பெண் : திருநீறே அம்மா உன் மருந்து…
அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து…

BGM

பெண் : பெற்றவளே நீ அறிவாய் என்னை…
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை…
பெற்றவளே நீ அறிவாய் என்னை…
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை…

பெண் : கற்றகலை சிறு துளியே எனக்கு…
அதை கடலாக்கி வைத்த புகழ் உனக்கு…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…


Notes : Magamaayi Samayapura Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Tamil Nambi. மகமாயி சமயபுரத்தாயே பாடல் வரிகள்.


கண்ணபுர நாயகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
UnknownL.R. ஈஸ்வரிUnknownஅம்மன் பாடல்கள்

Kannapura Nayagiye Song Lyrics in Tamil


பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா… அம்மா…
கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : உத்தமியே உன் அருளை நாடி வந்தோம்…
பம்பை உடுக்கையோடு…
உன் மகிமை பாடி வந்தோம்…

பெண் : பச்சிலையில் தேர் எடுத்து வர வேண்டும்… அம்மா…
பச்சிலையில் தேர் எடுத்து வர வேண்டும்…
உன் பக்தருக்கு வேண்டும் வரம் தர வேண்டும்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : வேப்பிலையில் நோய் எல்லாம் தீர்த்திடுவாய்…
மன வேதனையை திருநீறில் மாற்றிடுவாய்…
காப்பாற்ற சூலமதை ஏந்திடுவாய்…
தினம் கற்பூர ஜோதியிலே வாழ்ந்திடுவாய்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

BGM

பெண் : மலை ஏறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்…
அரிசி மாவிளக்கை ஏத்தி வச்சி பொங்கலிட்டோம்…
மலை ஏறும் தாய் உனக்கு கும்பமிட்டோம்…
அரிசி மாவிளக்கை ஏத்தி வச்சி பொங்கலிட்டோம்…

பெண் : உலகால பொறந்தவளே அருள் தருவாய்…
உலகால பொறந்தவளே அருள் தருவாய்…
எங்க வீடெல்லாம் பால் போங்க வரம் தருவாய்…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க கரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…

பெண் : கண் திறந்து பார்த்தாலே பொதுமம்மா…
எங்க கவலை எல்லாம்…
மனச விட்டு நீங்குமம்மா… அம்மா…

பெண் : கண்ணபுர நாயகியே மாரியம்மா…
நாங்க காரகமேந்தி ஆட வந்தோம் பாருமம்மா…


Notes : Kannapura Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Unknown. கண்ணபுர நாயகியே பாடல் வரிகள்.


தெய்வத்தின் தெய்வம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
எஸ். மூக்கையாL.R. ஈஸ்வரிவீரமணி & சோமுஅம்மன் பாடல்கள்

Deivathin Deivam Song Lyrics in Tamil


BGM

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…

பெண் : வேண்டியதை கொடுத்திடுவாய் வேதவல்லி மாரி…
கோமதியே சங்கரியே குணவதியே மகமாயி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரியம்மா…

BGM

பெண் : கருமை நிறம் கொண்டவளே…
காத்தாயி கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே…
கண்கண்ட கருமாரி…

பெண் : கருமை நிறம் கொண்டவளே…
காத்தாயி கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே…
கண்கண்ட கருமாரி…

பெண் : ஓயாமல் நின் நாமம்…
உரைக்கின்ற உன் மக்கள்…
ஓயாமல் நின் நாமம்…
உரைக்கின்ற உன் மக்கள்…
மாறாத நின் புகழை…
பாடிடுவேன் அருள் மாரி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
வேற்காட்டு மாரியம்மா…
வேற்காட்டு மாரி…

BGM

பெண் : கல்லாக இருந்தாலும்…
கருணை உள்ளம் கொண்டவள் நீ…
காணவரும் பக்தருக்கு…
காட்சி தரும் தேவி நீ…

பெண் : கல்லாக இருந்தாலும்…
கருணை உள்ளம் கொண்டவள் நீ…
காணவரும் பக்தருக்கு…
காட்சி தரும் தேவி நீ…

பெண் : காலன் கூட உன்னைக்கண்டு…
காதவழி சென்றிடுவான்…
காலன் கூட உன்னைக்கண்டு…
காதவழி சென்றிடுவான்…
காத்தாயி கருமாரி…
மகமாயி மாகாளி…

பெண் : தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…
தெய்வத்தின் தெய்வம் எங்கள் வேற்காட்டு மாரி…
தெவிட்டாத தீந்தமிழில் பாடிடுவோம் மாரி…


Notes : Deivathin Deivam Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by S. Mookiah. தெய்வத்தின் தெய்வம் பாடல் வரிகள்.


கற்பூர நாயகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அவிநாசிமணிL.R. ஈஸ்வரிகண்மணிராஜாஅம்மன் பாடல்கள்

Karpoora Nayagiye Song Lyrics in Tamil


பெண் : லிங்கேஸ்வர பூஜித்த வாகினி…
சுசீந்திர சர்வ மதான்கினி…
கலபகஸ்தூரி சுகந்த சுந்தரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

—BGM—

பெண் : விற்கால வேதவள்ளி விசாலாட்சி…
விழிக்கோல மாமதுரை மீனாட்சி…
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே…
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

BGM

பெண் : புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி…
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி…
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி…
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி…

பெண் : கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி…
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி…
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி…
உன்னடிமைச் சிறியவளை நீ ஆதரி…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

பெண் : நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்…
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழிய வேண்டும்…
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்…
கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்…

BGM

பெண் : சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்…
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்…
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா…
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…
உன் மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…

பெண் : அம்மா கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

BGM

பெண் : காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…

பெண் : நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நிலமாகி பயிராகி உணவாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…

பெண் : தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை…

BGM

பெண் : கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை…
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை…
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை…
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை…

பெண் : செம்பவள வாயழகி உன்னெழிலோ…
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை…
அம்பளவு விழியாலே உன்னை என்றும்…
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை…

BGM

பெண் : அன்புக்கே நானடிமையாக வேண்டும்…
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்…
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்…
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்…

பெண் : பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்…
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்…
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…


Notes : Karpoora Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Avinasimani. கற்பூர நாயகியே பாடல் வரிகள்.


மாரியம்மா எங்கள் மாரியம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கீதப்ரியாL.R. ஈஸ்வரிகுன்னக்குடி வைத்தியநாதன்அம்மன் பாடல்கள்

Mariamma Engal Mariamma Song Lyrics in Tamil


பெண் : வரமளித்தது உலகமெல்லாம்…
வாழ வைக்க வந்தவளே…
கரம் குவித்து வேண்டுகின்றோம்…
காத்திடுவாய் கருமாரி…
காத்திடுவாய் கருமாரி…

BGM

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…

BGM

பெண் : நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து…
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு…

BGM

பெண் : நேரினிலே நீ இருக்கும் கோவிலிலே வந்து…
நெஞ்சமதில் உன்பதமே தஞ்சமென கொண்டு…

பெண் : கோறும் வரம் யாவும் தந்திடுவாய் என்று…
கோறும் வரம் யாவும் தந்திடுவாய் என்று…

பெண் : கூறுதம்மா அன்பார் திரு கூட்டமெல்லாம் இங்கு…
கூறுதம்மா அன்பார் திரு கூட்டமெல்லாம் இங்கு…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…

BGM

பெண் : திரு சாம்பல் அணிந்து கொண்டால்…
மனமும் மகிழுதாம்…
தீராத நோய்களையும் தீர்த்து வைத்துக்குதாம்…

BGM

பெண் : திரு சாம்பல் அணிந்து கொண்டால்…
மனமும் மகிழுதாம்…
தீராத நோய்களையும் தீர்த்து வைத்துக்குதாம்…

பெண் : வருவார் தம் வாழ்வில் எல்லா…
வளமும் பெருகுதாம்…
வருவார் தம் வாழ்வில் எல்லா…
வளமும் பெருகுதாம்…

பெண் : வாழ்த்துகின்ற மனதில் என்றும்…
இன்பம் தருவதாம்…
உன்னை வாழ்த்துகின்ற மனதில் என்றும்…
இன்பம் தருவதாம்…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…

பெண் : மாரியம்மா எங்கள் மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…
உன்னை வணங்குகின்றோம் கரு மாரியம்மா…


Notes : Mariamma Engal Mariamma Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Geethapriya. மாரியம்மா எங்கள் மாரியம்மா பாடல் வரிகள்.


தாயே கருமாரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலைவாணன்L.R. ஈஸ்வரிகலைவாணன்அம்மன் பாடல்கள்

Thaaye Karumaari Song Lyrics in Tamil


BGM

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…

BGM

பெண் : ஆயிரம் கண்கள் உடையவளே…
ஆலயத்தின் தலைமகளே…
ஆயிரம் கண்கள் உடையவளே…
ஆலயத்தின் தலைமகளே…

பெண் : கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்…
காலமெல்லாம் காத்தருள்வாய்…
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்…
காலமெல்லாம் காத்தருள்வாய்…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…

BGM

பெண் : அன்னை உந்தன் சன்னதியில்…
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்…
அன்னை உந்தன் சன்னதியில்…
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்…

பெண் : அம்மா உந்தன் பொன்னடியில்…
அனுதினமும் சரணடைவோம்…
அம்மா உந்தன் பொன்னடியில்…
அனுதினமும் சரணடைவோம்…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…

BGM

பெண் : சிங்கமுக வாகனத்தில்…
சிங்கார மாரியம்மா…
சிங்கமுக வாகனத்தில்…
சிங்கார மாரியம்மா…

பெண் : வந்துவரம் தந்திடுவாய்…
எங்கள் குலதெய்வம் அம்மா…
வந்துவரம் தந்திடுவாய்…
எங்கள் குலதெய்வம் அம்மா…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…

பெண் : தாயே கருமாரி…
எங்கள் தாயே கருமாரி…
தேவி கருமாரி…
துணை நீயே மகமாயி…


Notes : Thaaye Karumaari Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Kalaivanan. தாயே கருமாரி பாடல் வரிகள்.