Tag Archives: மகாநதி ஷோபனா

ஈர நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & மகாநதி ஷோபனாயுவன் ஷங்கர் ராஜாஅரவிந்தன்

Eera Nila Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே…
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ…
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்…

பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM

பெண் : நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது…
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்…

பெண் : முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை…
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்…

பெண் : நம்மை விழி சேர்த்ததோ…
இல்லை விதி சேர்த்ததோ…
உள்ளம் ஒன்றானதே…
போதும் இன்பம் போதும்…

ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM

ஆண் : தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது…
என் நெஞ்சில் பால் ஊரும் அன்பு தவிப்பு…

பெண் : தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு…
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு…

ஆண் : சேரும் நதி ரெண்டுதான்…
பாதை இனி ஒன்றுதான்…
வெள்ளை மழை மண்ணிலே…
கூடும் வண்ணம் சூடும்…

ஆண் & பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…

BGM


Notes : Eera Nila Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஈர நிலா பாடல் வரிகள்.


ஸ்ரீரங்க ரங்க நாதனின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம், உமா ரமணன் & மகாநதி ஷோபனாஇளையராஜாமகாநதி

Sri Ranga Ranganathanin Song Lyrics in Tamil


பெண் : கங்கா சங்காச காவேரி…
ஸ்ரீரங்கேச மனோஹரி…
கல்யாணகாரி கலுசாரி…
நமஸ்தேஸ்து சுகாசரி…

BGM

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…

பெண் : இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…

BGM

பெண் : கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்…
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்…
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்…
ரங்கனின் பேர் சொல்லி சாமரம் வீசும்…

பெண் : அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம்…
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்…
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்… ம்ம்…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…

பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…

BGM

ஆண் : கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்…
கன்னி உன் மறு வீடு தென்னகம் ஆகும்…
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்…
மங்கள நீராட முன் வினை தீர்க்கும்…

ஆண் : நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி…
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தேவலோகமே தானடி…
வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி…

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…
இன்பம் பொங்கும் தென் கங்கை நீராடி…
தென்றல் போல நீ ஆடடி…
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி…
தெய்வப் பாசுரம் பாடடி…

ஆண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…

ஆண் & பெண் : ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…
ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி…


Notes : Sri Ranga Ranganathanin Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாடல் வரிகள்.


Va Va En Thalaiva Song Lyrics in Tamil

வா வா என் தலைவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிணி, பி.உன்னிகிருஷ்ணன் & மகாநதி ஷோபனாதேவாசந்தித்த வேலை

Va Va En Thalaiva Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…

BGM

பெண் : வா வா என் தலைவா…
தலையணையை பங்கிடவா…

பெண் : மல்லிகையின் மடலுக்குள்ளே…
மர்ம கதைதான் இருக்கு…
மர்மக்கதை படிப்பதற்கு…
இருட்டுக்குள்ளும் வழி இருக்கு…

ஆண் : பூவே உன் கதவுகள் எல்லாம்…
பூட்டிதான் கிடக்கு…
பத்து விரல் சாவி எல்லாம்…
என் வசம் இருக்கு…

பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…

BGM

ஆண் : நெஞ்சில் ஒரு துளி இடமில்லையா…
நீயே வழங்கிட மனமில்லையா…
வேருக்கும் மண்ணுக்கும் இடைவெளியா…
உரிமை எனக்கில்லையா…

BGM

பெண் : காகித பூமி நான் இல்லையா…
தருகிற மேகம் நீ இல்லையா…
பூமியின் மர்மங்கள் நனைத்திடையா…
பூக்கள் மலர்திடையா…

ஆண் : அழகின் மொத்தம் நான் அணைக்க…
ஆயிரம் கைகள் வேண்டுமடி… தலைவி…

பெண் : சூரிய தாகம் தீரும் வழி…
சுந்தர பானம் அள்ளி குடி… தலைவா…

ஆண் : கூடலிலே பெண்ணின் கண்கள்…
மூடியே கிடக்கு…

பெண் : கோடுகளை தாண்டும் செய்கை…
சம்மதம் அதற்கு…

BGM

பெண் : காற்றில் ஒலிகள் மிதக்கும் வரை…
கடலில் ஒரு துளி இருக்கும் வரை…
காலத்தின் கடை நொடி கரையும் வரை…
கண்ணா கலந்திருப்போம்…

BGM

ஆண் : சுற்றும் உலகம் நிற்கும் வரை…
சூரிய குமுழி உடையும் வரை…
வானம் வயதாகி உதிரும் வரை…
கண்ணே இணைந்திருப்போம்…

பெண் : உதடுகள் கொண்டு வெட்கம் துடைத்து…
உயிரே என்னை வழி நடத்து… தலைவா…

ஆண் : எதில் எதில் சுகம் என்று அறிவுறுத்து…
அதில் அதில் கொண்டு என்னை நிலைநிறுத்து… தலைவி…

பெண் : கட்டில் மீது விளக்கின் கண்கள்…
மூடுதல் எதற்கு…

ஆண் : இல்வழக்கில் சாட்சி இல்லை…
என்று செய்வதற்கு…

பெண் : வா வா என் தலைவா…
வந்துவிடு என் தலைவா…

BGM

பெண் : வா வா என் தலைவா…
தலையணையை பங்கிடவா…

ஆண் : மல்லிகையின் மடலுக்குள்ளே…
மர்ம கதைதான் இருக்கு…
மர்மக்கதை படிப்பதற்கு…
இருட்டுக்குள்ளும் வழி இருக்கு…

BGM


Notes : Va Va En Thalaiva Song Lyrics in Tamil. This Song from Sandhitha Velai (2000). Song Lyrics penned by Vairamuthu. வா வா என் தலைவா பாடல் வரிகள்.


கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & மகாநதி ஷோபனாதேவாகனவே கலையாதே

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

ஆண் : உறவே வருக…
நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…

பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

BGM

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை கொடு…
உன் திருமுகம் தெரியட்டுமே…
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு…
கண் நிலவுகள் மலரட்டுமே…

ஆண் : உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா…
உன் கண்மணியில் என் காலம் விடியாதா…
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா…
உயிரின் குரல்தான் அடி உனக்கு கேட்கவில்லையா…

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

BGM

பெண் : நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு…
என் நிழலுக்குள் கரைந்துவிடு…
பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்…
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு…

பெண் : உன் நேசம்தான் என் வாழ்வின் ஆதாயம்…
உன் நெஞ்சில்தான் முடியும் என் ஆதாயம்…
நாளை நம் விரகங்கள் நம் பேரில் உருவாகட்டும்…
உயிரகள் மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்…

பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

பெண் : உறவே வருக…
நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

—BGM—


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadhe (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.