பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் & மகாநதி ஷோபனா | யுவன் ஷங்கர் ராஜா | அரவிந்தன் |
Eera Nila Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே…
விழி நான் மூடியதும் என் தூக்கம் ஆனவள் நீ…
அழகே கை சேரும் சொந்தம் இன்பம் இன்பம்…
பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
—BGM—
பெண் : நீருக்கு நிறம் ஏது நேசத்தில் பேதம் வராது…
உன் அன்பில் அழுதாலும் கண்ணீர் இனிக்கும்…
பெண் : முள் மீது என் பாதை பூவாகும் உந்தன் பார்வை…
நீ பாடும் தாலாட்டில் சோகம் உறங்கும்…
பெண் : நம்மை விழி சேர்த்ததோ…
இல்லை விதி சேர்த்ததோ…
உள்ளம் ஒன்றானதே…
போதும் இன்பம் போதும்…
ஆண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
—BGM—
ஆண் : தாயான பூமாது தோள் மீது சாய்ந்திடும் போது…
என் நெஞ்சில் பால் ஊரும் அன்பு தவிப்பு…
பெண் : தலைமுறை கண்டாலும் காணாது உந்தன் அன்பு…
எப்போதும் வேண்டும் உன் இன்ப அணைப்பு…
ஆண் : சேரும் நதி ரெண்டுதான்…
பாதை இனி ஒன்றுதான்…
வெள்ளை மழை மண்ணிலே…
கூடும் வண்ணம் சூடும்…
ஆண் & பெண் : ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே…
—BGM—
Notes : Eera Nila Song Lyrics in Tamil. This Song from Aravindhan (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. ஈர நிலா பாடல் வரிகள்.