Tag Archives: பிரசாந்தினி

கண்ணுக்குள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கட்டளை ஜெயாசத்ய பிரகாஷ், சரண்யா ஸ்ரீனிவாஸ் & பிரசாந்தினிஜஸ்டின் பிரபாகரன்காலக்கூத்து

Kannukkulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே…
இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான்…
அடி இப்போதே உனக்கு தாரேன் வாரியா…

பெண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

BGM

ஆண் : ஒன்ன நான் சுத்தி பாக்கணுமே…
சொக்கித்தான் நெத்தி வேர்க்கணுமே…

பெண் : எங்க ஒம்புத்தி போகுறதோ…
என்ன நீ கொஞ்சம் ஆள விடு…

ஆண் : ஆசையா நெருங்கயுல…
லேசா நீ ஒதுங்கிறியே…

பெண் : நான் உன்ன சேர்ந்திடும் நேரத்துல…
நம் தூரமும் ஓடுமே தூரத்துல…
துளி வேர் விடுற நெஞ்சு ஈரத்துல…
ஆண் : நீயும் கண்ணீரை சிந்துனா நானும் வாடுவேன்…

ஆண் : கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…

பெண் : ஆஹான்…

ஆண் : என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

BGM

ஆண் : உச்சி மோந்து நான் பாக்கையில…
நெஞ்சில் ஆசையும் ஊறுதடி…

பெண் : பொத்தி நான் வச்ச ஆசையெல்லாம்…
முத்தம் நீ தந்தா தீருமடா…

ஆண் : பாசமா மொறைக்கிறியே
கோவமா அணைக்கிறியே…

பெண் : என் கண்ணு நீயின்னு ஆன பின்னே…
நான் பாக்குற வேறெந்த ஆணும் பெண்ணே…
எங்க போகையிலும் நீயும் வேணும் முன்னே…
ஆண் : இந்த ஜென்மத்தில் உன்மத்தம் உன்மேல் ஆகுறேன்…

பெண் : கண்ணுக்குள்ள… ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…
ஆண் : கொல்றாளே…

பெண் : என்ன கொல்லும் உன் நினைப்ப உள்ளுக்குள்ள…
ஆண் : எப்புடி எப்புடி சேத்து வச்சு சொத்தெழுதி தருவியா…

ஆண் : அடியோட என் மனச மடியோட சாச்சவளே…
ஆண் & பெண் : இங்க என்கிட்ட இருக்கும் உசுரையும்தான்…
அடி இப்போதே உனக்கு தர வாரேனே…


Notes : Kannukkulla Song Lyrics in Tamil. This Song from Kaalakkoothu (2018). Song Lyrics penned by Kattalai Jaya. கண்ணுக்குள்ள பாடல் வரிகள்.


எங்கே என் இதயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைடாக்டர். பர்ன், கிரிஷ் & பிரசாந்தினிவிஜய் எபினேசர்கண்டேன்

Enge En Idhayam Song Lyrics in Tamil


ஆண் : உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா… ஏ ஏஹே ஹே…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

ஆண் : உன்னைக் கண்டேனே…

ஆண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
பெண் : கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : இமைப்பொழுது உன் நெஞ்சில் இருந்து…
நான் நீங்காதவனாக வேண்டும் தருவாயா தருவாயா…

ஆண் : என் அன்பே அன்பே எனை விண்ணைப் பிடிக்கும்…
திறனும் ஆற்றலும் உன்னையே சார்ந்தது…
உணர்வாயா உணர்வாயா என் அன்பே அன்பே…

BGM

ஆண் : காரிருளில் சூரியன் நீரலையில் தாமரை…
தாகத்தில் வேகும் பாலை மண்ணில் வான்மழை…

பெண் : வாய் அசைத்து பார்க்கிறேன்…
வார்த்தைகளில் உன் மொழி…
உன் நாவில் வந்து தீர்த்தமாகும் தேன் துளி…

ஆண் : கடிகாரம் காட்டுமா மனம் செல்லும் வேகத்தை…
புயலாகி உன்னை நான் அடைவேன்…

ஆண் : நீ செல்லும் வழி எல்லாம் மரம் ஆவேன்…
ஒரு சொட்டு வெயில் கூட விடமாட்டேன்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

குழு : உனைக் கண்டேனே…

பெண் : ஓ… இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

ஆண் : ஹோ… உன்னைக் கண்டேனே என்னைத் தந்தேனே ஆஹா…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…
உள்ளுணர்வே பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

BGM

பெண் : காற்று வரம் வாங்கினேன்…
மூங்கில் வழி நீங்கினேன்…
சங்கீதமாக உன்னைத்தானே பாடினேன்…

ஆண் : காத்திருந்த நாட்களில் காதல் ஒரு ஆறுதல்…
காணாமல் சென்று பின்பு தோன்றும் வானவில்…

ஆண் : பிழை சேர்ந்த போதிலும்…
குறை என்ற போதிலும்…
உனக்காகதான் அதை செய்தேன்…

பெண் : இனி என்னை பிரியாதே ஒரு நாளும்…
பிரிந்தால் என் உயிரே உன் சுமையாகும்…

ஆண் : எங்கே என் இதயம் எங்கே…
எங்கே நான் தேடி பார்த்தேன்…
அன்பே நீ கொண்டு சென்றாய் நியாயம்தானா…

பெண் : இங்கே உன் இதயம் வந்து நின்றே…
என் கதவை தட்டி கொண்டே…
நிற்பதை கண்டேன் உண்மைதானா…

பெண் : ஹோஓ… தொலைதுார வெளிச்சங்கள் நீயே…
மலையோர வெளிச்சமும் நீயே…

ஆண் : அன்பில் சந்தேகம் கொள்ளாதே…
கொண்டால் என் ஜீவன் நில்லாதே…

ஆண் : உன்னைக் கண்டேனே… கண்டேனே…
என்னைத் தந்தேனே… தந்தேனே…
சொற்சுவையே பொன்சிலையே வா பேபி… பேபி…

ஆண் : உள்ளுணர்வே பெண் விழியே… பெண் விழியே…
பொய் சொன்னாலும் என் காதல் உண்மை பேபி… பேபி…

ஆண் : என் செவிகளில் கவிதையைப் போல… போல…
என்னுள் சென்றாய் புது உணர்வுகளாக… ஆக…
என் நந்தவன பூக்களைப்போல… போல…

ஆண் : தினம் மலர்கின்றாய் விரல் தீண்ட வேண்டும்…
வரம் வேண்டும் தருவாயா…


Notes : Enge En Idhayam Song Lyrics in Tamil. This Song from Kandaen (2011). Song Lyrics penned by Thamarai. எங்கே என் இதயம் பாடல் வரிகள்.


Lolita Song Lyrics in Tamil

லோலிட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & பிரசாந்தினிஹாரிஸ் ஜெயராஜ்எங்கேயும் காதல்

Lolita Song Lyrics in Tamil


ஆண் : லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே…

BGM

ஆண் : பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்…
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்…
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே…
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே…

ஆண் : லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…

ஆண் : பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்…
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்…
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே…
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே…

ஆண் : லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…

BGM

பெண் : கொட்டும் போதே மழை…
தொட்டால் விட்டால் பிழை…
வார்செய் வானம் மாற்றி பார்க்கிறாய்…

பெண் : பெண்கள் எல்லாம் செடி…
பற்றி கொள்ளும் கொடி…
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்…

ஆண் : நான் நால்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா…
யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா…
நான் அலை நுாறை அடை காக்கும் கடல் அல்லவா…
என் ஆகாயம் அதில் கூட பல வெண்ணிலா…

ஆண் : மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்…
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்…
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே…
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே…

ஆண் : லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…

BGM

ஆண் : தானாய் வந்தால் ருசி…
தள்ளி சென்றால் ரசி…
என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா…

ஆண் : முத்தம் என்றால் சிரி…
கட்டி கொண்டால் வெறி…
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா…

பெண் : நீ சொல்லும் பல நூறில் நானில்லையே…
உன் அழகான பல பூவில் தேன் இல்லையே…
உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே…
நீ ருசி பார்க்க தலை தாழ்த்தும் அரும்பில்லையே…

ஆண் : லோலிட்டா ஹா லோலிட்டா…
உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே…
உண்மையை நான் சொல்லட்டா…
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே…

BGM


Notes : Lolita Song Lyrics in Tamil. This Song from Engeyum Kaadhal (2011). Song Lyrics penned by Thamarai. லோலிட்டா பாடல் வரிகள்.


லவ் பண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.கே. & பிரசாந்தினிஹாரிஸ் ஜெயராஜ்12பி

Love Pannu Song Lyrics in Tamil


ஆண் : ஒரு புன்னகை…
பூவே சிறு பூக்களின் தீவே…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

BGM

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

ஆண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ…
ஓஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : ஒரு புன்னகை பூவே…
சிறு பூக்களின் தீவே…
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

ஆண் : என் வாலிப நெஞ்சம்…
உன் காலடி கெஞ்சும்…
சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

ஆண் : நா கெஞ்சி கேட்கும் நேரம்…
உன் நெஞ்சின் ஓரம் ஈரம்…
அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

BGM

ஆண் : சூரியன் வாசல் வந்து…
ஐஸ்க்ரீம் கொடுக்கும்…

குழு : உடாதம்மா… பீலாதம்மா…

பெண் : சந்திரன் உள்ளே வந்து…
சாக்லெட் கொடுக்கும்…

குழு : சுத்தாதம்மா… ரீலுதாம்மா…

ஆண் : உன் படுக்கை அறையிலே…
ஒரு வசந்தம் வேண்டுமா…
உன் குளியல் அறையிலே…
விண்டர் சீசன் வேண்டுமா…

ஆண் : நீ மாற சொன்னதும்…
நான்கு சீசனும் மாற வேண்டுமா…
லவ் பண்ணு…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு… லவ் பண்ணு…

BGM

ஆண் : எண்பது ஆண்டுகள்…
இளமை வேண்டுமா…

குழு : மெய்யாகுமா… மெய்யாகுமா…

ஆண் : சொடக்கொன்று போட்டதும்…
சொர்க்கம் வேண்டுமா…

குழு : மெய்யாகுமா… மெய்யாகுமா…

பெண் : அட வெள்ளை வெள்ளையாய்…
ஓர் இரவு வேண்டுமா…
புது வெளிச்சம் போடவே…
இரு நிலவு வேண்டுமா…

ஆண் : உன்னை காலை மாலையும்…
சுற்றி வருவது…
காதல் செய்யவே…
லவ் பண்ணு…

குழு : ஐயோ பண்ணு…

ஆண் : எங்கேயோ போகின்ற மேகம் நிற்குது…
என் பேரை உன் பேரை சொல்லி அழைக்குது…
லவ் பண்ணு…

குழு : லவ் பண்ணு… லவ் பண்ணு…
ஐயோ பண்ணு…

ஆண் : ஒரு புன்னகை பூவே…
சிறு பூக்களின் தீவே…
நீ என்னை மட்டும் காதல் பண்ணு…

ஆண் : என் வாலிப நெஞ்சம்…
உன் காலடி கெஞ்சும்…
சிறு காதல் பிச்சை போடு கண்ணு…

பெண் : நீ கெஞ்சி கேட்கும் நேரம்…
என் நெஞ்சின் ஓரம் ஈரம்…
அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ…

BGM


Notes : Love Pannu Song Lyrics in Tamil. This Song from 12B (2001). Song Lyrics penned by Vairamuthu. லவ் பண்ணு பாடல் வரிகள்.


அய்யயோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சரண் & பிரசாந்தினிஜி. வி. பிரகாஷ் குமார்ஆடுகளம்

Ayyayo Song Lyrics in Tamil


பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : ரா ரா ரா ரர ரா ரா…
ரா ரா ரா ரர ரா…

ஆண் : அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

BGM

ஆண் : உன்னை தொடும் அனல்காத்து…
கடக்கையிலே பூங்காத்து…
குழம்பி தவிக்குதடி என் மனசு…

பெண் : ஹோ… திருவிழா கடைகளைப் போல…
திணறுறேன் நான்தானே…
எதிரில் நீ வரும்போது…
மிரளுறேன் ஏன்தானோ…

ஆண் : கண்சிமிட்டும் தீயே…
என்ன எரிச்சிப்புட்ட நீயே…

பெண் : தரா ரா ரா ரா ரா ரா…
தரா ரா ரா ரா ரா…

பெண் : அய்யயோ நெஞ்சு…

ஆண் : அலையுதடி…

பெண் : ஆகாயம் இப்போ…

ஆண் : வளையுதடி…

பெண் : என் வீட்டில் மின்னல்…

ஆண் : ஒளியுதடி…

பெண் : ஓ… என்மேல நிலா…

ஆண் : பொழியுதடி…

BGM

பெண் : தனன னானே னானானா…
தன்னனா தனனா தனனா…
தனன னானே னனானா…
தன்னனா தனனா தனனா னானானானா…
தனனானா தனனானா தானானா…

ஆண் : மழைச்சாரல் விழும் வேளை…
மண்வாசம் மணம் வீச…
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்…

பெண் : ஹோ… கோடையில அடிக்கிற மழையா…
நீ என்ன நனைச்சாயே…
ஈரத்தில அணைக்கிற சுகத்த…
பார்வையிலே கொடுத்தாயே…

ஆண் : பாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன…
ஊரோட வாழுற போதும் யாரோடும் சேரல நான்…

ஆண் : ஓ… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…

ஆண் : உன்ன பார்த்த அந்த நிமிஷம்…
மறைஞ்சி போச்சு நகரவே இல்ல…
தின்ன சோறும் செரிக்கவே இல்ல…
கொலம்புறேன் நானே…

ஆண் : உன் வாசம் அடிக்கிற காத்து…
என் கூட நடக்கிறதே…
என் சேவல் கூவுற சத்தம்…
உன் பேர கேக்குறதே…

ஆண் : ஹே… அய்யயோ நெஞ்சு அலையுதடி…
ஆகாயம் இப்போ வளையுதடி…
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி…
என்மேல நிலா பொழியுதடி…


Notes : Ayyayo Song Lyrics in Tamil. This Song from Aadukalam (2011). Song Lyrics penned by Snehan. அய்யயோ பாடல் வரிகள்.


முன்தினம் பார்த்தேனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபிரசாந்தினி & நரேஷ் ஐயர்ஹரிஸ் ஜெயராஜ்வாரணம் ஆயிரம்

Mundhinam Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : ஹாய் மாலினி…
ஐ எம் கிருஷ்ணன்…
நான் இத சொல்லியே ஆகனும்…
நீ அவ்வளவு அழகு…
இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு…
இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க…
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

BGM

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

BGM

குழு (ஆண்கள்) : காதலே… சுவாசமே…

BGM

ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து…
நிகர் செய்ய பொன்னை வைத்தால்…
துலாபாரம் தோற்காதோ பேரழகே…

பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை…
முதல் காதல் சிந்தும் கண்ணை…
அணைக்காமல் போவேனோ… ஆருயிரே…

ஆண் : ஓ… நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி…
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி…
வினா நூறு கனாவும் நூறு…
விடை சொல்லடி…

பெண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
உள்ளமும் புண்ணானதே…

பெண் : இத்தனை நாளாக…

ஆண் : ஓ மை லவ்…

பெண் : உன்னை நான் பாராமல்…

ஆண் : எஸ் மை லவ்…

பெண் : எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

BGM

பெண் : கடல் நீலம் மங்கும் நேரம்…
அலைவந்து தீண்டும் தூரம்…
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே…

ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய்…
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்…
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே…

பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன்…
உறங்காமலே…
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்…
நெருங்காமலே…
உனையன்றி எனக்கு ஏது…
எதிர்காலமே…

ஆண் : முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக…
நெஞ்சமும் புண்ணானதே…

ஆண் : இத்தனை நாளாக…
உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…

ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா…
ஏக்கத்தில் நான் தேய்வதா…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…
இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன…
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன…

BGM

ஆண் : வெண்ணிலா…
வெண்ணிலா… வெண்ணிலா…

BGM


Notes : Mundhinam Song Lyrics in Tamil. This Song from Vaaranam Aayiram (2008). Song Lyrics penned by Thamarai. முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்.