Tag Archives: கார்த்திக் நேதா

ஊஞ்சல் மனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாயுவன் ஷங்கர் ராஜா, ரஞ்சித் கோவிந்த் & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாலத்தி

Oonjal Manam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

பெண் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்…
மனதோரம் முதல் காதல் தோன்றும்…
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்…
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்…

BGM

பெண் : எது ஆனால் என்ன…
உன்னை விட்டு தர மாட்டேன்…
சிறு கண்ணில் வைத்து…
கண்ணில் வைத்து காத்து கிடப்பேன்…

பெண் : அட காலம் வந்து உனை காயம் செய்யும் போது…
என் காதல் என்னும் மாயம் தந்து தேற்றிடுவேன்…

பெண் : வயதானால் கூட உன்னைவிட்டு…
தள்ளி செல்ல மாட்டேன்…
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்…

பெண் : பலநூறு கதை பேச எண்ணி…
அன்பு முகம் ஏந்தி…
காதோரம் மூச்சில் காதல் உரைப்பேன்…

ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே…
பேரன்பின் தூதே…
நீ என்னும் தூரம் வரை…
நானும் நடப்பேன்…

ஆண் : அன்பே அன்பே அன்பே…
நீ உள்ள வாழ்வில்…
தோற்றாலும் மீண்டும் மீண்டும்…
நானே ஜெயிப்பேன்…

பெண் : தாலாட்ட காதல் வந்தால்…
காயம் யாவும் ஆறாதோ…
பேசாமல் மார்பில் தூங்கிடவா…

பெண் : மெளனத்தை மெளனம் சென்று…
ஒட்டு கேட்கும் இந்நேரம்…
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்…

BGM


Notes : Oonjal Manam Song Lyrics in Tamil. This Song from Laththi (2022). Song Lyrics penned by Karthik Netha. ஊஞ்சல் மனம் பாடல் வரிகள்.


நீ நீ போதுமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபத்மப்ரியா ராகவன்சுந்தரமூர்த்தி கே.எஸ்ஜீவி 2

Nee Nee Pothume Song Lyrics in Tamil


பெண் : ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே…
பரமானந்தம் ஆனந்தம் ஆனந்தமே…
ஸ்ரீ ராமனும் மணமகன் ஆனானே…
நம்ம ஜானகி மணமகள் ஆனாளே…

BGM

பெண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

ஆண் : வா வா தூரலே…
இனி பாலைவனம் இந்த வாழ்வில் இல்லை…
பேரன்பொன்றிலே இளைப்பாறுதே காதலே…

பெண் : ஒளியே இல்லாத பூவொன்று…
வெளிச்ச கரையில் சேர்ந்ததே…
ஒரு வினா இல்லாமல் நெஞ்சில் நெஞ்சில்…
கொஞ்சம் சாயவா…

ஆண் : உனையே கண்ணாக கொண்டேன் நானே…
கானம் யாவும் காதலே…
திருவிழா என்னாளும் அன்பில் அன்பில்…
அன்பில் காட்டவா…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

பெண் : உடல் மீறியே எழும் ஆவேசம்…
அட தாங்குமோ அந்த ஆகாசம்…
இது ஆசையாய் வந்த ஆயாசம்…
இவன் காதலே கல்மிஷம்…

ஆண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

BGM

பெண் : கவிதை கனமே…
இனிய கனமே…
பெரிய வரமே…
வா வா வா வா வா…

பெண் : இனிய வலியே…
ஆண் : வலியின் முறையே…
பெண் : தினவின் பொறியே…
ஆண் : அனைக்கும் பனியே…

பெண் : புதிய கவியே…
ஆண் : எதுவும் சரியே…
பெண் : வா வா வா வா வா…

பெண் : கோடி விண்மீன்கள் வானில் உண்டாம்…
எனது விண்மீன்கள் நீ தானே…
வாரி அணைக்கின்ற அன்பின் கையில்…
வாஞ்சையாய் பூக்கின்றேன்…

பெண் : யாரும் உதவாத வாழ்வில் இன்று…
யானை பலம் போல வந்தாயே…
நானம் விலகாத போதும் அன்பே…
மார்பிலே சாய்கிறேன்…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

BGM

ஆண் : பிறவி துணையே…
உறவின் சுனையே…
வினையின் வினையே…
வா வா வா வா வா…

ஆண் : உலகம் மறந்து…
பெண் : நினைவும் மறந்து…
ஆண் : உனக்குள் கலந்து…
பெண் : கனமும் பிறந்து…

ஆண் : வியந்து வியந்து…
பெண் : வியந்து வியந்து…
ஆண் : வா வா வா வா வா…
பெண் : வா வா வா வா வா…

ஆண் : யாரும் இல்லாத நேரம் பார்த்து…
காதலில் என்னை சாய்ப்பாயே…

பெண் : நானும் உணராத பெண்மை இங்கு…
காதலும் காட்டுதே…
கண்ணும் காணாத கண்ணீர் போல…
நானும் உள்ளேயே வந்தேனே…

ஆண் : நின்று ஒளிவீசும் வின்மீண் போல…
வாழ்க்கையே ஆனாதே…

பெண் : விடும் மூச்சில் உடல் தீயாகும்…
விழும் வேர்வையே இங்கு பாயாகும்…
பெறும் மெளனமே இங்கு சங்கீதம்…
எதை கேட்டிடும் என் மனம்…

பெண் : உடல் மீறியே எழும் ஆவேசம்…
அட தாங்குமோ அந்த ஆகாசம்…
இது ஆசையாய் வந்த ஆயாசம்…
இவன் காதலே கல்மிஷம்…

பெண் : நீ நீ போதுமே…
அட பார்வை என ஒன்று தேவை இல்லை…
நீ வழிகாட்டினால்…
என் வாழ்க்கையும் வாழுமே…

BGM


Notes : Nee Nee Pothume Song Lyrics in Tamil. This Song from Jiivi 2 (2022). Song Lyrics penned by Karthik Netha. நீ நீ போதுமே பாடல் வரிகள்.


ஜெர்னி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபிரதீப் குமார்கோவிந்த் வசந்தாஜானு

Journey Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் என்பது யாரோ பெருந்திரளினிலே ஏடே…
நான் என்பதை வீசி எழுந்தேனே மனமே…
தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே கூவி…
வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச…

ஆண் : போகாதொரு ஆழம்தேடி…
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்…
வாழாதொரு வாழ்வைத் தீண்டி…
தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன்…

ஆண் : காணாதொரு வெளிச்சத்தில்…
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்…
வீழாதொரு நிலையினிலே…
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்…

ஆண் : ஆழ் என்பது மெய்ஞான போதம்…
இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…
போல் என்பது பகட்டு வாதமே…
இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…

ஆண் : நாள் என்பதும் பொய்யான காலம்…
இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும்…
கேள் என்குதே தெளிந்த ஞானமே…
கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே…

BGM

ஆண் : ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும்…
ஓர்உயிர் என்றே இருப்பேனே…
குழம்பாமல் யார் உடைத்தாலும்…
சிரிக்கின்ற பொம்மைப் போலே…
நான் என் இயல்பில் இருப்பேன்…

ஆண் : ஓடும் நதியின் மேலே…
உட்காரும் தட்டான் போலே…
லேசாக அமர்ந்தே பறப்பேனே…

ஆண் : புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்து…
தான் தூங்கும் மழலைப் போலே…
பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்…

ஆண் : பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்…
இப்போது இப்போது இப்போது கண்ணாக…
பேருண்மையில் கலந்துபோகிறேன்…
இப்போது இப்போது இப்போது ஒன்றாக…

ஆண் : பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்…
இப்போது இப்போது இப்போது நன்றாக…
பேராற்றலில் கரைந்துபோகிறேன்…
பூத பேத வாத மோகம் மறைகிறதே…

BGM

ஆண் : நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல் போலே…
யார் எனை அசைத்தே ரசித்தாரோ…
சலிக்காமல் பேரலை மேலே விளையாடும் காகம் போலே…
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்…

ஆண் : சீறும் புலியைப் பார்த்தே…
சிரிக்கின்ற சிசுவைப் போலே…
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே…

ஆண் : பதறாமல் பூவிழும் குளத்தின் மேலே…
உருவாகும் வளையல் போலே…
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்…

குழு : வாகாய் வாகாய் வாழ்கிறேன்…
பாகாய்ப் பாகாய் ஆகிறேன்…
தோதாய்த் தோதாய்ப் போகிறேன்…
தூதாய்த் தூதாய் ஆகிறேன்…

BGM

ஆண் : போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன்…
காதாய்க் காதாய்க் கேட்கிறேன்…

குழு : ஆரோ ஆராரிரிரோ…
ஆண் : தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம்…
குழு : ஆரோ ஆராரிரிரோ…
ஆண் : தாய்ப்போல் பாடுதே…
குழு : ஆரோ ஆரோ ஆராரிரிரோ…
ஆண் : ஆரோ…


Notes : Journey Song Lyrics in Tamil. This Song from Jaanu (2020). Song Lyrics penned by Karthik Netha. ஜெர்னி பாடல் வரிகள்.


அடிக்கடி முடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஹரிஹரன் & சத்யன்சி. சத்யாபொன்மாலை பொழுது

Adikkadi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

ஆண் : தனிமைகள் இன்று ரசிக்கிறேன்…
தரை இறங்கிட மறுக்கிறேன்…
இலை நுனியினில் வசிக்கிறேன்…
முதன் முதலாய் தொலைகிறேன்…

ஆண் : விரல் கோர்த்து கோர்த்து அட நடக்கையில்…
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்…
உடல் வாசம் வாசம் வந்து கரைகிறேன்…
எடை தீர்ந்த போதும் அட கனக்கிறேன்…
மெல்ல மெலிகிறேன்…
கொஞ்சம் உறைகிறேன் ஏன்…

குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM

ஆண் : தனி மரம் வசிப்பது போலே ஏனோ இன்று…
புது வித கழகங்கள் கூடும் வாழ்வில் இங்கு…

ஆண் : கனவுகள் இன்று படிக்கிறேன்…
கடல் புறங்களில் திரிகிறேன்…
இமை விசிறியில் பறக்கிறேன்…
எதை எதையோ வியக்கிறேன்…

குழு : காதல் வந்த பின்னால் தவித்திடும் பதட்டம்…
தோளில் சாய்ந்து கொண்டு…
ஆண் : மெல்ல நினைப்பதை மறந்திட நான்…

குழு : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
ஆண் : நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM

ஆண் : தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள…
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல…

ஆண் : உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க…
உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க…

BGM

ஆண் : காதல் எல்லாம் நம்மை காதல் கொள்ள…
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள…

ஆண் : ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய்…
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன்…

ஆண் : அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்…
நீ அணு தினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்…
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்து கொண்டாய்…
நீ இருவிழி எனும் படைகளை அனுப்பி வைத்தாய்…

BGM


Notes : Adikkadi Song Lyrics in Tamil. This Song from Ponmaalai Pozhudhu (2013). Song Lyrics penned by Karthik Netha. அடிக்கடி முடி பாடல் வரிகள்.


முன்னாடி போற புள்ள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாதிவ்யா குமார், ஸ்வேதா மோகன் & கோல்டு தேவராஜ்ஜிப்ரான்நய்யாண்டி

Munnadi Pora Pulla Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…

பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா…
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா…

பெண் : அ பட பட பட பட பட வென…
பந்தயம் வச்சானே…
அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே…

ஆண் : ம் மொள மொள மொள மொளன்னு…
சம்மளம் கொண்டேனே…
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே…

பெண் : ஆசையா தாக்குற…

ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

BGM

ஆண் : ஒரு துளி மழையில குழிச்சேன் குழிச்சேன்…
தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன்…

பெண் : காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா…
ஆண் : காட முட்ட கண்ணுகுள்ள காதல் அரிக்குதே…

பெண் : நீ பாத்த நான் பாத்தே…
ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி…

ஆண் : ஹே பம் பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்…

ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…

பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா…
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா…

ஆண் : அ பட பட பட பட பட வென…
பந்தயம் வச்சானே…
பெண் : அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே…

பெண் : ம் மொள மொள மொள மொளன்னு…
சம்மளம் கொண்டேனே…
வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே…

பெண் : ஆசையா தாக்குற…

BGM

பெண் : தொண தொண தொணவென பேச பேச…
நகக்குறி பதிக்கணும் கூச கூச…

ஆண் : வீட்டுகுள்ள வானவில்ல நீதான் விரிக்கிற… ஏய் ஏய் ஏய்…
பெண் : நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற…

BGM

ஆண் : காலாற நீ நடந்தா கேணி தண்ணி…
எட்டி எட்டி உன்னப் பாக்கும்…

BGM

ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா…
தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா…

பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா…
சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா…

{ ஆண் : ஹே பம்பம் என் புத்திக்குள்ள…
ரம்பம் உன் கண்ணுகுள்ள…
பிம்பம் என் நெஞ்சுக்குள்ள…
பம்பம் பம்பம்… } * (3)


Notes : Munnadi Pora Pulla Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Karthik Netha. முன்னாடி போற புள்ள பாடல் வரிகள்.


இனிக்க இனிக்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாசுசான் டி மெல்லோ, பத்மலதா & நிவாஸ்ஜிப்ரான்நய்யாண்டி

Innika Innika Song Lyrics in Tamil


BGM

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…

ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…

பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல…
எனக்குள் பரவுவாய்…
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது…
சலனம் கூட்டுவாய்…

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…

BGM

பெண் : மரண நேர வாழ்க்கை…
இது மடியில் கரையும் வேட்கை…
நம் அழுது சிரிக்கும் சேட்டை…
அட திமிரி தெளியும் வேட்டை…

ஆண் : யாரின் தோளில் யாரோ…
அடி யாரின் காலில் யாரோ…
நாமும் இரண்டு பேரோ…
அடி கிழிந்த ஒன்றைத் தாளோ…

BGM

ஆண் : சதையே சிதையா அடடா விதையா…

பெண் : ஒரு ஜோடி காமம் கூடி கூடி…
கோற்று மேட்டில் ஞானம் காணுதோ…

BGM

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு நதிகள் பாய்வதென்ன…
பனியில் கடலும் தூங்கியதே…

ஆண் : தவிக்க தவிக்க தேடல் என்ன…
தவணை முறையில் ஊடல் என்ன…
காற்று மலையை சாய்க்கிறதே…

பெண் : சிலந்தி வலையில் வெளிச்சம் போல…
எனக்குள் பரவுவாய்…
நகங்கள் வேர்க்கும் இனிய பொழுது…
சலனம் கூட்டுவாய்…

பெண் : இனிக்க இனிக்க பார்ப்பதென்ன…
இரண்டு தடவை கேட்பதென்ன…
வேர்வை குளமாய் ஆகிறது…


Notes : Innika Innika Song Lyrics in Tamil. This Song from Naiyaandi (2013). Song Lyrics penned by Karthik Netha. இனிக்க இனிக்க பாடல் வரிகள்.


நானே உன் கருவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஅனுஸ்ரீஷான் ரஹ்மான்கண்ணகி

Baby’s Lullaby Song Lyrics in Tamil


BGM

பெண் : நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…

BGM

பெண் : ஜனனத்தின் ஓரம்…
மரணத்தின் நடுவே…
நான் செல்லும் தூரம்…
எல்லாம் உன் பாரம்…

பெண் : நீ கேட்க மறுக்கும் சங்கீதம் நானோ…
உண்மை சொல்லம்மா…
உன்னை பார்க்க வேண்டுமே…
ஒன்றாய் கேட்க வேண்டுமே…

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ…
ஒருமுறை ஆராரி ராரோ…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில்…

பெண் : இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…


Notes : Baby’s Lullaby Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. நானே உன் கருவே பாடல் வரிகள்.


சேயே என் சிறகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாபாம்பே ஜெயஸ்ரீஷான் ரஹ்மான்கண்ணகி

Mother’s Lullaby Song Lyrics in Tamil


BGM

பெண் : சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…

பெண் : அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…

BGM

பெண் : உள்ளே ஓர் ஈரம் உருவாகும் நேரம்…
கண்ணீரின் வலி யாவும் சுவையாகி போகும்…
எப்போதும் காணும் எதுவொன்றும் மாறும்…
இனிது தூங்கம்மா…

பெண் : கொள்ளை போன ஓர் மனம்…
அன்னை ஆன ஒர் கணம்…
உனக்கென்ன ஆராரி ராரோ…
உனக்கென்ன ஆராரி ராரோ…
உனக்கென்ன ஆராரி ராரோ…
ஆராரி ராரோ உயிரில் சுரக்கும்…

பெண் : அருள் வாழ்வில் வீசுதே…
உடல் பூத்து கூசுதே…
உனக்கென்ன ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உனது விருப்பம் என்னை ஈன்றதே…


Notes : Mother’s Lullaby Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. சேயே என் சிறகே பாடல் வரிகள்.


இதுவெல்லாம் மயக்கமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாகௌரி லெட்சுமி & ஷான் ரஹ்மான்ஷான் ரஹ்மான்கண்ணகி

Idhuvellaam Mayakama Song Lyrics in Tamil


BGM

பெண் : புதிதான வாழ்வில் கேள்வி தீருமோ… ஓ…
மாலை ஆகிடுமோ…
புகை ஆகிடுமோ…
பிறை வந்திடுமோ…
இறை ஆகிடுமோ…

பெண் : இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா…
முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா…
அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே…
உருதுணை ஆகுமோ…

பெண் : சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய்…
எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா…

பெண் : அகந்தையின் திரு உருவே…
மமதையின் மறு உருவே…
உனக்கிவள் உடைமை இல்லை…

BGM

பெண் : வெங்காயம் போலவே ஆண்கள் என்றாலும் ரசித்தேன் நான்…
என் தேடல் பெரிதே அன்பே நீ கானா மறுத்தாய் போ…

பெண் : முகம் மீறி சதை மீறி எதை தேடினேன்…
நான் என்னை ஊற்றி என்னை மூட்டி எதை காண்கிறேன்…
ஓ காதலே ஓ காதலே…
உன் மீதும் காரி உமிழ்ந்தேன்…


Notes : Idhuvellaam Mayakama Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. இதுவெல்லாம் மயக்கமா பாடல் வரிகள்.


Aagaasa Veedu Kattum Song Lyrics in Tamil

ஆகாச வீடு கட்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாகெளதம் பரத்வாஜ்ஜஸ்டின் பிரபாகரன்டியர் காம்ரேட்

Aagaasa Veedu Kattum Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே…
சின்னூண்டு கூடுகட்ட வந்தேன்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
உன்னோடு வாசல் வரை வந்தேன்…

BGM

ஆண் : மென் ஆம்பல் புன்னைகையின் பேரன்பிலே…
விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே…
உன்னை காணவே… ஏஏஏஏ…
ஆசை ஒவ்வொன்றும் ஒற்றை காலில் நின்றெங்கும்…
அதற்காகவே… ஏஏஏஏ…
வாசல் படியோரம் எந்தன் வாழ்க்கை குடியேறும்…

BGM

ஆண் : எவரும் காண்ங்கள இவன் படும் அவதி…
இதயத் துடிப்பினில் அலைகளின் சுருதி…
விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி…
உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி…

BGM

ஆண் : ஆகாச வீடு கட்டும் உன் கண்ணில்…
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்…
சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி…
திறன தீர நன தீனா…


Notes : Aagaasa Veedu Kattum Song Lyrics in Tamil. This Song from Dear Comrade (2019). Song Lyrics penned by Karthik Netha. ஆகாச வீடு கட்டும் பாடல் வரிகள்.