Category Archives: 1994 Movies

1994 Movies

karuppu-nila-song-lyrics

கருப்பு நிலா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாஎன் ஆசை மச்சான்

Karuppu Nila Song Lyrics in Tamil


பெண் : கருப்பு நிலா… கருப்பு நிலா…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

பெண் : சின்ன மானே மாங்குயிலே…
உன் மனசுல என்ன குறை…
பெத்த ஆத்தா போல் இருப்பேன்…
இந்த பூமியில் வாழும் வர…

பெண் : எட்டு திசை யாவும்…
கட்டி அரசாள…
வந்த ராசா நீதானே…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

BGM

பெண் : பத்து மாசம் மடியேந்தி…
பெத்தெடுத்த மகராசி…
பச்ச புள்ள உன்ன விட்டு…
போனதென்னி அழுதாயா…

பெண் : மாமன் வந்து என்னை காக்க…
நானும் வந்து உன்னை தாக்க…
நாம் விரும்பும் இன்பம் எல்லாம்…
நாளை வரும் நமக்காக…

பெண் : காலம் உள்ள காலம்…
வாழும் இந்த பாசம்…
பூ விழி இமை மூடியே…
சின்ன பூவே கண்ணுறங்கு…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

BGM

பெண் : வண்ண வண்ண முகம்காட்டி…
வானவில்லின் நிறம்காட்டி…
சின்ன சின்ன மழலை பேசி…
சித்திரம் போல் மகனே வா…

பெண் : செம்பருத்தி மலர் போலே…
சொக்க வெள்ளி மணி போலே…
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன…
கண்மணியே மடிமேல் வா…

பெண் : பாட்டு தமிழ் பாட்டு…
பாட அத கேட்டு…
ஆடிடும் விளையாடிடும்…
தங்க தேரே நீதானே…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…

பெண் : ஏ… மானே மாங்குயிலே…
உன் மனசுல என்ன குறை…
பெத்த ஆத்தா போல் இருப்பேன்…
இந்த பூமியில் வாழும் வர…

பெண் : எட்டு திசை யாவும்…
கட்டி அரசாள…
வந்த ராசா நீதானே…

பெண் : கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்…
துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்…


Notes : Karuppu Nila Song Lyrics in Tamil. This Song from En Aasai Machan (1994). Song Lyrics penned by Kalidasan. கருப்பு நிலா பாடல் வரிகள்.


போறாளே பொன்னுத்தாயி (சோகம்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்கருத்தம்மா

Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil


பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

BGM

பெண் : நீ வச்ச பாசம்…
நீ சொன்ன நேசம்…
கடைசியில் ஊமையும் ஊமையும்…
பேசிய பாஷையடி…

பெண் : தெக்கத்தி காத்து…
திசை மாறி வீச…
ஒன்னொன்னா மேகம்…
ஓடுதடி ஓடுதடி…

பெண் : உசுருள்ள நாத்து ஒன்னு…
வாடுதடி வாடுதடி…
கடைசியில் சாமிக்கு நேர்ந்தது…
சாதிக்கு ஆனதடி…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : ஓஓஓஓ… ஓஓ… ஓஓஓஓ…
ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

பெண் : நெஞ்சுக்குழி காஞ்சு…
நெடுங்காலம் ஆச்சு…
ஒரு உயிர் வீட்டுக்கும் காட்டுக்கும்…
கூட்டுக்குள் இழுக்குதும்மா…

பெண் : சேமிச்ச காசு…
செல்லாமப் போச்சு…
சொல்லாத சொல்லு…
பாரம் அம்மா பாரம் அம்மா…
சோத்துக்கும் சொந்தத்துக்கும்…
தூரமம்மா தூரமம்மா…

பெண் : பொறு பொறு ஏழைக்கும் வாழைக்கும்…
நாளைக்கு நன்மையம்மா…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

பெண் : சாமந்திப் பூவா…
ஊமத்தம் பூவா…
கருத்தம்மா எந்தப் பூவம்மா…

பெண் : அஞ்சாறு சீம…
உள்ளூரில் ஏங்க…
பொதி மாட்டு வண்டி மேலே…
போட்டு வச்ச மூட்டை போல…

பெண் : போறாளே பொன்னுத்தாயி…
பொல பொலவென்று கண்ணீர் விட்டு…
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு…

பெண் : பால் பீச்சும் மாட்ட விட்டு…
பஞ்சாரத்துக் கோழியை விட்டு…
போறாளே பொட்டப்புள்ள ஊரை விட்டு…

BGM


Notes : Poraley Ponnuthai (Sad) Song Lyrics in Tamil. This Song from Karuthamma (1994). Song Lyrics penned by Vairamuthu. போறாளே பொன்னுத்தாயி (சோகம்) பாடல் வரிகள்.


என் காதலே (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்ஏ.ஆர்.ரகுமான்டூயட்

En Kadhale (Male) Song Lyrics in Tamil


ஆண் : லவ் இஸ் டார்ச்சர்…
வேர்ட்ஸ் கான்ட் ஜஸ்ட் எக்ஸ்பிரஸ்…
லவ் இஸ் கேம்பல்…
வித் டியர்ஸ் ஆஃப் பெயின்…
இன் லைஃப்ஸ் டிஸ்ட்ரஸ்…
லவ் மேக் யுவர் லைஃப் எ ஸ்ட்ரயின்…
வேர் மனி ஸ்டாண்ட்ஸ்…
டூ லூஸ் தி கேம்…
லவ் ஹேஸ் திஸ் கிரேஸி நேம்…
வேர் பெயின் அண்ட் ஸாரோ…
டை டவுன் இன் ஷேம்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…

BGM

ஆண் : கிள்ளுவதை கிள்ளி விட்டு…
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே நீ பூ எறிந்தால்…
எந்த மலையும் கொஞ்சம் குழையும்…
காதலே நீ கல் எறிந்தால்…
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்…

ஆண் : இனி மீள்வதா… ஆஅ…
இல்லை வீழ்வதா…
உயிர் வாழ்வதா… ஆஅ…
இல்லை போவதா…
அமுதென்பதா விஷம் என்பதா…
உன்னை அமுதவிஷமென்பதா…

BGM

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

BGM

ஆண் : காதலே உன் காலடியில்…
நான் விழுந்து விழுந்து தொழுதேன்…
கண்களை நீ மூடிக்கொண்டால்…
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்…

ஆண் : இது மாற்றமா… ஆஅ…
தடுமாற்றமா…
என் நெஞ்சிலே… ஏ…
பனி மூட்டமா…
நீ தோழியா இல்லை எதிரியா…
என்று தினமும் போராட்டமா…

ஆண் : என் காதலே என் காதலே…
என்னை என்ன செய்ய போகிறாய்…
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ…
ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய்…

ஆண் : சிலுவைகள் சிறகுகள்…
ரெண்டில் என்ன தர போகிறாய்…
கிள்ளுவதை கிள்ளிவிட்டு…

BGM


Notes : En Kadhale (Male) Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. என் காதலே (ஆண்) பாடல் வரிகள்.


என்னவளே அடி என்னவளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்ஏ. ஆர். ரகுமான்காதலன்

Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…
இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…
ஒரு உருண்டையும் உருலுதடி…

ஆண் : காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…
ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…
ஒரு கலக்கமும் தோன்றுதடி…

ஆண் : இது சொர்க்கமா நரகமா…
சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…
உன் வார்த்தையில் உள்ளதடி…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால்…
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…

ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்…
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…

ஆண் : என் காதலின் தேவையை…
காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…


Notes : Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. என்னவளே அடி என்னவளே பாடல் வரிகள்.


பொங்கலோ பொங்கல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஇளையராஜாமகாநதி

Pongalo Pongal Song Lyrics in Tamil


—BGM—

குழு : பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…

—BGM—

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடைக் கட்டிடும்…
தெய்வ மங்கையடி…

குழு : ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…
ஹே தையம் தீயம் தக்கு தீயம் தக்கு…

குழு : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…

—BGM—

பெண் : முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால…
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால…
சேத்தோட சேர்ந்த விதை நாத்து விடாதா…
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா…

பெண் : செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம்தான்…
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம்தான்…

குழு : நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது…
வானில் இல்லையடி…
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது…
கனவில் இல்லையடி…

பெண் : தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது…
பாட்டு சொல்லடியோ…
வண்ண மங்கையர் ஆடிடும்…
மகாநதியை போற்றி சொல்லடியோ…
இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு…
அன்பின் அன்னையடி…
இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்…
தெய்வ மங்கையடி…


Notes : Pongalo Pongal Song Lyrics in Tamil. This Song from Mahanadhi (1994). Song Lyrics penned by Vaali. பொங்கலோ பொங்கல் பாடல் வரிகள்.


அஞ்சலி அஞ்சலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஏ. ஆர். ரகுமான்டூயட்

Anjali Anjali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : காதல் வந்து தீண்டும் வரை…
இருவரும் தனி தனி…
காதலின் பொன் சங்கிலி…
இணைத்தது கண்மணி…

ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்…
எந்த துளி மழைத் துளி…
காதலில் அது போல நான்…
கலந்திட்டேன் காதலி…

ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்…
தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

பெண் : ஹ்ம்ம்… அஹா…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ…

பெண் : சீதையின் காதல் அன்று…
விழி வழி நுழைந்தது…
கோதையின் காதல் இன்று…
செவி வழி புகுந்தது…

பெண் : என்னவோ என் நெஞ்சிலே…
இசை வந்து துளைத்தது…
இசை வந்த பாதை வழி…
தமிழ் மெல்ல நுழைந்தது…

பெண் : இசை வந்த திசை பார்த்து…
மனம் குழைந்தேன்…
தமிழ் வந்த திசை பார்த்து…
உயிர் கசிந்தேன்…
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…

பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி…
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி…
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி…
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—

ஆண் : அழகியே உனை போலவே…
அதிசயம் இல்லையே…
அஞ்சலி பேரைச் சொன்னேன்…
அவிழ்ந்தது முல்லையே…

ஆண் : கார்த்திகை மாதம் போனால்…
கடும் மழை இல்லையே…
கண்மணி நீயில்லையேல்…
கவிதைகள் இல்லையே…

ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…

ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…

—BGM—


Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.