பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | ஏ. ஆர். ரகுமான் | டூயட் |
Anjali Anjali Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
—BGM—
ஆண் : காதல் வந்து தீண்டும் வரை…
இருவரும் தனி தனி…
காதலின் பொன் சங்கிலி…
இணைத்தது கண்மணி…
ஆண் : கடலிலே மழை வீழ்ந்தபின்…
எந்த துளி மழைத் துளி…
காதலில் அது போல நான்…
கலந்திட்டேன் காதலி…
ஆண் : திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்…
தினமொரு புதுப் பாடல் படித்துவிட்டேன்…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…
ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
பெண் : ஹ்ம்ம்… அஹா…
ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்… ம்ம்…
ஆஅ… ஆ… ஆஅ… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஆ… ஆஅ…
ஆஆ… ஆஅ… ஆஅ… ஆஆ…
பெண் : சீதையின் காதல் அன்று…
விழி வழி நுழைந்தது…
கோதையின் காதல் இன்று…
செவி வழி புகுந்தது…
பெண் : என்னவோ என் நெஞ்சிலே…
இசை வந்து துளைத்தது…
இசை வந்த பாதை வழி…
தமிழ் மெல்ல நுழைந்தது…
பெண் : இசை வந்த திசை பார்த்து…
மனம் குழைந்தேன்…
தமிழ் வந்த திசை பார்த்து…
உயிர் கசிந்தேன்…
அஞ்சலி அஞ்சலி இவள் கலைக்காதலி…
பெண் : அன்பே உன் அன்புக்கு புஷ்பாஞ்சலி…
நண்பா உன் கண்ணுக்கு நடனாஞ்சலி…
கண்ணா உன் இசை வாழ கீதாஞ்சலி…
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி…
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
—BGM—
ஆண் : அழகியே உனை போலவே…
அதிசயம் இல்லையே…
அஞ்சலி பேரைச் சொன்னேன்…
அவிழ்ந்தது முல்லையே…
ஆண் : கார்த்திகை மாதம் போனால்…
கடும் மழை இல்லையே…
கண்மணி நீயில்லையேல்…
கவிதைகள் இல்லையே…
ஆண் : நீயென்ன நிலவோடு பிறந்தவளா…
பூவுக்குள் கருவாகி வளர்ந்தவளா…
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி…
ஆண் : பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
ஆண் : அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி…
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி…
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி…
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி…
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…
—BGM—
சரிகம சர்வான் தமிழ் – மியூசிக் பிளேயர் 5000 பாடல்களுடன்Notes : Anjali Anjali Song Lyrics in Tamil. This Song from Duet (1994). Song Lyrics penned by Vairamuthu. அஞ்சலி அஞ்சலி பாடல் வரிகள்.