Category Archives: 2003 Movies

kadhal-mattum-purivathillai-song-lyrics

காதல் மட்டும் புரிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்…
இன்று என்னை காணவில்லை…
வெயில் இல்லை மழை இல்லை…
பார்த்தேனே வானவில்லை…

ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்…
கொல்லாமல் கொல்கின்ற அழகை…
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து…
வரைந்தேன் அவளை…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

BGM

ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்…
நீ வந்து குடை விரித்தாய்…
எந்தன் பெயரே மறந்திருந்தேன்…
நீ இன்று குரல் கொடுத்தாய்…

ஆண் : என் கண்ணாடி மனதில்…
இப்போது என் முகம் பார்த்தேன்…
நீ வந்த பொழுதில்…
எந்தன் நெஞ்சம் பூத்தேன்…

ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை…
நட்பில் கவலை புரிவதில்லை…
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்…
இரவும் பகலும் பார்ப்பதில்லை…

BGM

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…


Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.


உன்னை தோழி என்பதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை தோழி என்பதா…
என் பாதி என்பதா…
இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…

ஆண் : ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…

BGM

ஆண் : இதை காதல் என்பதா…
என் தேடல் என்பதா…
ஒரு மேகம் போலவே…
மனம் மிதந்து போகுதே…
மழை நின்ற போதிலும்…
மர கிளைகள் தூறுதே…


Notes : Unnai Thozhi Enbatha Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. உன்னை தோழி என்பதா பாடல் வரிகள்.


தத்தி தத்தி தாவுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thathi Thathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தத்தி தத்தி தாவுதே நெஞ்சம்…
தங்க சிலையை பார்த்ததாலே…
விட்டு விட்டு போகுதே நெஞ்சம்…
வெள்ளை மனதில் வீழ்ந்ததாலே…

ஆண் : பார்வை பார்வை பார்த்ததால் நெஞ்சம்…
பஞ்சாய் பற்றி கொண்டதாலே…
காலம் தூரம் கனவினில் நெஞ்சம்…
கால்கள் இன்று வானம் மேலே…

BGM


Notes : Thathi Thathi Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தத்தி தத்தி தாவுதே நெஞ்சம் பாடல் வரிகள்.


தொட்டு தொட்டு போகும் தென்றல்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஷ் ராகவேந்திராயுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil


பெண் : ஆஆஆ… ஆஆ…

BGM

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

BGM

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

BGM

ஆண் : இந்த கனவு நிலைக்குமா…
தினம் காணக்கிடைக்குமா…
உன் உறவு வந்ததால்…
புது உலகம் கிடைக்குமா…
தோழி உந்தன் கரங்கள் தீண்ட…
தேவனாகி போனேனே…

ஆண் : வேலி போட்ட இதயம் மேலே…
வெள்ளை கொடியை பார்த்தேனே…
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே…
பாத சுவடு ஒன்று தெரிகிறதே…
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான்…
வாழ்ந்து பார்த்து விழுந்திடலாமே…

ஆண் : ம்ம்… தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

பெண் : ஆஆஆ… ஆஆ…
ஆஆஆ… ஆஆ…

BGM

ஆண் : விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே…
கண்கள் சிவந்து தலை சுத்தியதே…
இதயம் வலிக்குதே இரவு கொதிக்குதே…
இது ஒரு சுகம் என்று புரிகிறதே…

ஆண் : நேற்று பார்த்த நிலவா என்று…
நெஞ்சம் என்னை கேட்கிறதே…
பூட்டி வைத்த உறவுகள் மேலே…
புதிய சிறகு முளைக்கிறதே…

ஆண் : இது என்ன உலகம் என்று தெரியவில்லை…
விதிகள் வரை முறைகள் புரியவில்லை…
இதய தேசத்தில் இறங்கி போகையில்…
இன்பம் துன்பம் எதுவும் இல்லை…

ஆண் : தொட்டு தொட்டு போகும் தென்றல்…
தேகம் எங்கும் வீசாதோ…
விட்டு விட்டு தூரும் தூரல்…
வெள்ளமாக மாறாதோ…

ஆண் : ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே…
அவள் பார்க்கும் பார்வைதான் குளிர்கிறதே…
போகும் பாதைதான் தெரிகிறதே…
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது…

ஆண் : வார்த்தையா இது மௌனமா…
வானவில் வெறும் சாயமா…
வண்ணமா மனம் மின்னுமா…
தேடி தேடி தொலைந்திடும் பொழுது…

BGM


Notes : Thottu Thottu Pogum Thendral Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein(2003). Song Lyrics penned by Na. Muthu Kumar. தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள்.


ஒன்றா ரெண்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபாம்பே ஜெயஸ்ரீஹாரிஸ் ஜெயராஜ்காக்க காக்க

Ondra Renda Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…

ஆண் (வசனம்) : சொல்லு…

குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…
கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…

பெண் : தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…

பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…

—BGM—

பெண் : உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…

பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

—BGM—

பெண் : சந்தியாக் கால மேகங்கள்…
உன் வானில் ஊர்வலம் போகுதே…
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே…
உன் நடையின் சாயலே தோணுதே…

பெண் : நதிகளிலே நீராடும்…
சூரியனை நான் கண்டேன்…
வேர்வைகளின் துளி வழிய…
நீ வருவாய் என நின்றேன்…

பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்…
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்…
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே… தோன்றுதே…

—BGM—

பெண் : அன்பே இரவை கேட்கலாம்…

குழு (பெண்கள்) : இரவை கேட்கலாம்…

பெண் : விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…

குழு (பெண்கள்) : இரவே நீளுமா…

பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…


Notes : Ondra Renda Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒன்றா ரெண்டா பாடல் வரிகள்.


யார் யார் சிவம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகமல்ஹாசன் & கார்த்திக்வித்யாசாகர்அன்பே சிவம்

Yaar Yaar Sivam Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…

BGM

ஆண் : வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

ஆண் : ஆத்திகம் பேசும்…
அடியார்க்கெல்லாம்…
சிவமே அன்பாகும்…
நாத்திகம் பேசும்…
நல்லவருக்கோ…
அன்பே சிவமாகும்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…

BGM

ஆண் : வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

BGM

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
வாழ்வே தவம்…
அன்பே சிவம்…

ஆண் : இதயம் என்பது சதைதான் என்றால்…
எறிதழல் தின்றுவிடும்…
அன்பின் கருவி இதயம் என்றால்…
சாவை வென்றுவிடும்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

BGM

ஆண் : யார் யார் சிவம்…
நீ நான் சிவம்…
அன்பின் பாதை…
சேர்ந்தவனுக்கு…
முடிவே இல்லையடா…
மனதின் நீளம்…
எதுவோ அதுவே…
வாழ்வின் நீளமடா…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…

குழு (ஆண்கள்) : அன்பே சிவம்…
அன்பே சிவம் என்போம்…


Notes : Yaar Yaar Sivam Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. யார் யார் சிவம் பாடல் வரிகள்.


பூவாசம் புறப்படும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் பிரகாஷ் & சாதனா சர்கம்வித்யாசாகர்அன்பே சிவம்

Poo Vaasam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ… ஆ…

BGM

பெண் : ஆ…

BGM

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

பெண் : உயிரல்லதெல்லாம்…
உயிர் கொள்ளும் என்றால்…
உயிருள்ள நானோ…
என்னாகுவேன்…

ஆண் : உயிர் வாங்கிடும்…
ஓவியம் நீயடி… இ… இ…

BGM

ஆண் : பூவாசம் புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ வந்து விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

BGM

ஆண் : ம்ம்ம்ம்…
புள்ளி சேர்ந்து
புள்ளி சேர்ந்து… ஓவியம்…
உள்ளம் சேர்ந்து
உள்ளம் சேர்ந்து… காவியம்…

பெண் : கோடு கூட…
ஓவியத்தின் பாகமே…
ஊடல் கூட காதல்…
என்று ஆகுமே…

ஆண் : ஒரு வானம் வரைய…
நீல வண்ணம்…
நம் காதல் வரைய…
என்ன வண்ணம்…

பெண் : என் வெட்கத்தின்…
நிறம் தொட்டு…
விரல் என்னும்…
கோல் கொண்டு…
நம் காதல்…
வரைவோமே…
வா… ஆ… ஆ…

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…
தீ… வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

BGM

பெண் : ஆ… ஆ…

BGM

பெண் : ஆ…

BGM

பெண் : ஓவியத்தின்…
ஜீவன் எங்கு உள்ளது…

ஆண் : உற்றுப் பார்க்கும்…
ஆளின் கண்ணில் உள்ளது…

பெண் : பெண்ணுடம்பில்…
காதல் எங்கு உள்ளது…

ஆண் : ஆண் தொடாத…
பாகம் தன்னில் உள்ளது…

பெண் : நீ வரையத் தெரிந்த…
ஒரு நவீன கவிஞன்…
பெண் வசியம் தெரிந்த…
ஒரு நளிந்த கலைஞன்…

ஆண் : மேகத்தை ஏமாற்றி…
மண்சேரும் மழை போலே…
மடியோடு விழுந்தாயே…
வா… ஆ… ஆ…

ஆண் : பூவாசம்…
புறப்படும் பெண்ணே…
நான் பூ வரைந்தால்…

பெண் : ம்ம்ம்… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…

ஆண் : தீ வந்து…
விரல் சுடும் கண்ணே…
நான் தீ வரைந்தால்…

பெண் : உயிரல்லதெல்லாம்…
உயிர் கொள்ளும் என்றால்…
உயிருள்ள நானோ…
என்னாகுவேன்…

ஆண் : உயிர் வாங்கிடும்…
ஓவியம் நீயடி…

BGM

பெண் : ஆ… ஆ…

BGM

பெண் : ஆ…

BGM


Notes : Poo Vaasam Song Lyrics in Tamil. This Song from Anbe Sivam (2003). Song Lyrics penned by Vairamuthu. பூவாசம் புறப்படும் பாடல் வரிகள்.