பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
தாமரை | பாம்பே ஜெயஸ்ரீ | ஹாரிஸ் ஜெயராஜ் | காக்க காக்க |
Ondra Renda Song Lyrics in Tamil
பெண் (வசனம்) : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
ஆண் (வசனம்) : சொல்லு…
குழு (பெண்கள்) : ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…
பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…
பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…
—BGM—
பெண் : பெண்களை நிமிர்ந்து பார்த்திட…
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே…
கண்களை நேரா பாத்து தான்…
நீ பேசும் தோரணை பிடிக்குதே…
பெண் : தூரத்தில் நீ வந்தாலே…
என் மனசில் மழையடிக்கும்…
மிகப்பிடித்த பாடல் ஒன்றை…
உதடுகளும் முணுமுணுக்கும்…
பெண் : மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம்…
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும்…
—BGM—
பெண் : உனது கண்களில்…
எனது கனவினை காண போகிறேன்…
பெண் : ஒன்றா ரெண்டா ஆசைகள்…
எல்லாம் சொல்லவே…
ஓர் நாள் போதுமா…
அன்பே இரவை கேட்கலாம்…
விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…
—BGM—
பெண் : சந்தியாக் கால மேகங்கள்…
உன் வானில் ஊர்வலம் போகுதே…
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே…
உன் நடையின் சாயலே தோணுதே…
பெண் : நதிகளிலே நீராடும்…
சூரியனை நான் கண்டேன்…
வேர்வைகளின் துளி வழிய…
நீ வருவாய் என நின்றேன்…
பெண் : உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்…
நானும் சொந்தம் என்ற எண்ணம் தரும்…
மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே…
சாகத் தோன்றுதே… தோன்றுதே…
—BGM—
பெண் : அன்பே இரவை கேட்கலாம்…
குழு (பெண்கள்) : இரவை கேட்கலாம்…
பெண் : விடியல் தாண்டியும்…
இரவே நீளுமா…
குழு (பெண்கள்) : இரவே நீளுமா…
பெண் : என் கனவில்… ஆ ஹா…
நான் கண்ட… ஆ ஹா…
நாளிது தான் கலாபக்காதலா…
பார்வைகளால்… ஆ ஹா…
பல கதைகள்… ஆ ஹா…
பேசிடலாம் கலாபக்காதலா…
Notes : Ondra Renda Song Lyrics in Tamil. This Song from Kaakha Kaakha (2003). Song Lyrics penned by Thamarai. ஒன்றா ரெண்டா பாடல் வரிகள்.