Category Archives: தாஜ் மஹால்

கரிசல் தரிசல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி. ஸ்ரீகுமார் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Karisal Tharasal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…

பெண் : நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…

ஆண் : ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி…
வருவேன் கோழி ஒறங்க…
கண்ணுபடுமிண்டு காத்துரூவம் கொண்டு…
வருவேன் நிலவு மயங்க…

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
வரவா ஊரும் அடங்க…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…

ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ன னா ன னா நானா…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே… ஏ மச்சக்கண்ணியே…

BGM

பெண் : என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…
என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…

ஆண் : ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு…
எல்லா நெசம் இனி நீயே என் வசம்…
நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம்தான் கூரை பிரிக்கிறதோ… ஓ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

ஆண் : நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

BGM

ஆண் : மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…
மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…

ஆண் : பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு…
அது நழுவி வாயில் விழுந்தாச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…

ஆண் : சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…
சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…


Notes : Karisal Tharasal Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. கரிசல் தரிசல் பாடல் வரிகள்.


செங்காத்தே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துடி.கே. கலாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Senkathay Song Lyrics in Tamil


பெண் : செங்காத்தே செங்காத்தே செங்காத்தே… ஏ…
செங்காத்தே செங்காத்தே செங்காத்தே… ஏ…

பெண் : உலக காதலர் பெரும் மூச்செல்லாம்…
உனக்குள் சுமந்து சுமந்து சூடாகினாய்…

பெண் : காதல் கதை எல்லாம் நீ அறிவாய்…
எங்கள் காதலையும் நீ கேளாய்…
எங்கள் காதலையும் நீ கேளாய்…

பெண் : அட கருவுக்குள் உயிர் தந்த காத்தே…
எங்க காதலுக்கு உயிர் கொடு காத்தே…
எங்க உடம்புக்குள் உலவிடும் காத்தே…
எங்க உயிர்க்கொரு வழி சொல்லு காத்தே…

பெண் : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே…

குழு : யாத்தே யாத்தே நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே இமை துடிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் வலிக்கிறதே யாத்தே…

BGM

பெண் : செங்காத்தே செங்காத்தே… ஏ…

பெண் : கல்லரையின் காதலரை நீ எழுப்ப வா வா…
அட காதலர் சாகலாம் உண்மை காதல் சாகாது…
உடல்கள் மறைந்தாலும் உணர்வுகள் மறையாது…

{ குழு : யாத்தே யாத்தே விழி தூங்கவில்லை யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் தாங்கவில்லை யாத்தே…
யாத்தே யாத்தே உடல் அழிந்துவிடும் யாத்தே…
யாத்தே யாத்தே உயிர் அழிவதில்லை யாத்தே… } * (2)

பெண் : உயிர் அழிவதில்லை யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…
உயிர் அழிவதில்லை யாத்தே…


Notes : Senkathay Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. செங்காத்தே பாடல் வரிகள்.


திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Tirupatchi Aruvalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள…
தீட்டிகிட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும்…
வாசத்துக்கே எச்சி விட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில…
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம்தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வெச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…


Notes : Tirupatchi Aruvalla Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.


அடி மஞ்ச கிழங்கே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி மணி, ஃபெஜி, கங்கா & காஞ்சனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Adi Manja Kizhange Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
தனனனனா தான தனனா…
தனனனனா தான தனனா…

BGM

பெண் : குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…
குமரிபுள்ள குமரிபுள்ள குளிக்க வாறங்க…
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க…

பெண் : பருவபுள்ள பருவபுள்ள குளிக்க போராங்க…
அட ஆத்தங்கர பறவைகளே அங்கிட்டுப் போயிருங்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

BGM

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
மருதாணி புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க…
ம்ம்ம்… நாளைக்கு…

BGM

பெண் : வெள்ள சுண்ணாம்பு வச்சுக்கிட்டு…
வெத்தலைய போட்டுக்கிட்டு…
அடிநாக்கு செவந்திருக்கான்னு அவன கேட்டுக்க…

பெண் : அவனா…
இல்ல இல்ல அவர கேட்டுக்க…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…

பெண் : அடி மஞ்ச கிழங்கே…
அடி மஞ்ச கிழங்கே…
மஞ்ச தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…
தேச்சி குளிக்கும் தங்க கிழங்கே…


Notes : Adi Manja Kizhange Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. அடி மஞ்ச கிழங்கே பாடல் வரிகள்.


Eetchi Elumichi Song Lyrics in Tamil

ஈச்சி எலுமிச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. அருந்ததி & கிருஷ்ண ராஜ்ஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Eetchi Elumichi Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…

BGM

பெண் : மாயோ மாயோ மாயோ யோ யோ…
மாயோ மாயோ மாயோ யோ யோ…
மாயோ மாயோ மாயோ யோ யோ…
மாயோ மாயோ யோ யோ…

BGM

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…
ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி…
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி…
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

BGM

பெண் : மய மாயோ மய மாயோ யோ…
மய மாயோ மய மாயோ யோ…
மய மாயோ மய மாயோ யோ…
மய மாயோ மய மாயோ யோ…

பெண் : மாயோ… ஓஒ ஓஒ ஓஒ ஓஒ…
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ…

பெண் : ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக…
துளிக துளிக விழுதே…

ஆண் : சிறுதண்ணி தோளோடும் மாறோடும் விழுந்து…
தொடாத எடமும் தொடுதே…

ஆண் : ஒத்த மழத்துளி பாத்த எடம்…
பித்துக்குளி இவன் பாக்கலையே…

பெண் : பூத்தும் அரும்பு பூக்கலையே…
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே…

ஆண் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே…
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே…

பெண் : பாட்டு சத்தம் கேக்கலையே…
அந்தி பகல் ஏதும் பாக்கலையே…

ஆண் : மஞ்ச கிழங்கே ஒன்ன பாத்துப்புட்டேன்…
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்…

பெண் : நெஞ்சு குழிகுள்ள வேர்த்துப்புட்டேன்…
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

பெண் : தொழுவோடு சேராத பொலிகாள கூட…
கொடைய பாத்து மெரளும்…

ஆண் : கொடகண்டு மெரளாத கோடாளி காள…
தாவணி பாத்து மெரளும்…

ஆண் : பாசி மணி ரெண்டு கோக்கயில…
பாவி மனசயும் கோத்தவளே…
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள…
நெஞ்சில் தீய வச்சு போனவளே…

BGM

ஆண் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்…
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி…
வாத்து முட்டைய போல உதட்டில்…
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி…

BGM

ஆண் : கையில் கைய வச்சு அழுத்திக்கடி…
கண்ணில் கண்ண வச்சு கலந்துக்கடி…
நெஞ்சில் நெஞ்ச வச்சு படுத்துக்கடி…
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி…
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி…

ஆண் : ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…
ஈச்சி எலுமிச்சி…
ஏடி கருவாச்சி…

ஆண் : மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…
மாயே மாயே யோ…


Notes : Eetchi Elumichi Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. ஈச்சி எலுமிச்சி பாடல் வரிகள்.


திருப்பாச்சி அருவாள

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீராம் & கல்பனாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Thirupachi Aruvalla Song Lyrics in Tamil


BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : போர் தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

பெண் : எங்கூரு பொம்பளைய மோப்பமிட வந்தவன…
எங்கசியான் மூக்கறுத்தாக…

ஆண் : எங்காட்ட திருடி தின்னு சப்பு கொட்டி நின்னவன…
எங்காத்தா நாக்கறுத்தாக…

பெண் : எங்க குறும்பாட்டு கறி கொழம்பு…
குளிதலையில் மண மணக்கும் வாசத்துக்கே எச்சிவிட்டீக…

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வச்ச…
கொறட்டாத்து தண்ணியில ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க…

பெண் : அட கோம்பா மான் தோப்புல…
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக…

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்…
அப்பனுக்கு செலவில்லாம ரிப்பனுக்கு வெட்டிகிட்டீக…

பெண் : அட களவாணி கோத்திரமே காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே…
காளமாட்டு மூத்திரமே…
எப்ப நீங்க திருந்தப்போறீங்க…

BGM

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

BGM

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி…
தப்பு செஞ்சா தலையிலடி…
பரம்பரையா எங்க கொள்கையடா…

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட…
மத்ததெல்லாம் வாழ மட்ட…
மானம் காக்க வீரம் வேணுமடா…

ஆண் : அட சோளக்கூழு கேட்டு வந்தா…
சோறு போட்டு விசிறிவிடும்…
ஈரமுள்ளது எங்க வம்சமடா…

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா…
கூறு போட்டு பங்கு வைக்கும்…
வீரம்தானே எங்க அம்சமடா…

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு போறதில்ல…
வந்த சண்டைய விடுவதில்ல…
வரிப்புலிதான் தோத்ததில்லையடா…

—BGM—

ஆண் : எங்க உறைய விட்டு வாள் எடுத்தா…
ரத்த ருசி காட்டி வைக்கும்…
வழக்கம் எங்க குல வழக்கமடா…

ஆண் : நான் தட்டி வச்சா புலி அடங்கும்…
எட்டு வச்சா மல உருகும்…
தொட்டதெல்லாம் துலங்க போகுதடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
சிங்கம் பெத்த பிள்ளையின்னு தெரிய வைப்போம் வாடா வாடா…

BGM

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு எட்டு வச்சு வாடா வாடா…
எட்ட நிக்கும் சூரியன எட்டி தொடு வாடா வாடா…

ஆண் : போர்தானே நம்ம ஜாதி பொழுதுபோக்கு வாடா வாடா…
பூவெல்லாம் நம்ம ஊரில் புலிநகமா மாறும் வாடா…

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு வெளிய சொன்ன ஆளுகள…
வெள்ளாவியில் போட்டு வெளுத்துக்கட்டு வாடா வாடா…

ஆண் : திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…
திருப்பாச்சி அருவாள தீட்டிகிட்டு வாடா வாடா…


Notes : Thirupachi Aruvalla Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. திருப்பாச்சி அருவாள பாடல் வரிகள்.


குளிருது குளிருது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Kulirudhu Kulirudhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

ஆண் : கடலிலே தீ பிடித்தால்…
மீன்களின் கனவுகள் கலைவதில்லை…
ஊர்களில் தீ பிடித்தால்…
காதலில் உறவுகள் எரிவதில்லை…

ஆண் & பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது
காதல் உறவாடி…

பெண் : நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

BGM

பெண் : இதயத்தில் வலி ஒன்று வருது…
உன் இமைகளின் முடி கொண்டு தடவு…

பெண் : நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு…
இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு…

ஆண் : இது தண்ணீர் ஊற்றியா தீரும்…
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்…

பெண் : தேகங்கள் பரிமாற…
நம் உள்ளங்கள் இடம் மாறும்…

ஆண் : பேரின்ப பூஜைகளே…
உன் பெண்மைக்கு பரிகாரம்…

பெண் : மழை இல்லாமலும்…
தென்றல் சொல்லாமலும்…

ஆண் & பெண் : நம் நெஞ்சுக்குள் இப்போது…
லட்சம் பூ மலரும்…

ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

BGM

ஆண் : நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்…
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்…

பெண் : முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா…
அட முத்தமிட வேறு இடம் இல்லையா…

ஆண் : மழைத் துளி மழை துளி தொல்லையா…
அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா…

பெண் : சுற்றி எல்லாம் எரிகிற போது…
நாம் இன்பம் கொள்வது ஏது…

ஆண் : அடி பூகம்ப வேலையிலும்…
இரு வான்கோழி கலவி கொள்ளும்…

பெண் : தேகத்தை அணைத்து விடு…
சுடும் தீ கூட அணைந்துவிடும்…
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்…

ஆண் : சுற்றி நின்றாலும் தீவண்ணம்…
அணைவது தின்னம்…

ஆண் & பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…

ஆண் : கடலிலே தீ பிடித்தால்…
மீன்களின் கனவுகள் கலைவதில்லை…
ஊர்களில் தீ பிடித்தால்…
காதலில் உறவுகள் எரிவதில்லை…

BGM


Notes : Kulirudhu Kulirudhu Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. குளிருது குளிருது பாடல் வரிகள்.


சொட்ட சொட்ட (ஆண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீநிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Sotta Sotta Song Lyrics in Tamil (Male)


ஆண் : அடி நீ எங்கே…
அடி நீயெங்கே… ஏ…
அடி நீயெங்கே…
அடி நீயெங்கே…
அடி நீயெங்கே…

BGM

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

BGM

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

BGM

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…

ஆண் : மழை தண்ணி உசிர கரைக்குதே…
உசிர் உள்ள ஒருத்திக்கு…
தாஜ் மஹால கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி…

BGM

ஆண் : அடி நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடியே நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

BGM

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

BGM

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM

ஆண் : உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழையல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…

BGM

ஆண் : உனக்காக பரிசு ஒன்று கொண்டேன்…
எதற்காக நீ விலகி நின்றாய்…
நான் மழையல்லவே…
ஏன் ஒதுங்கி நின்றாய்…

BGM

ஆண் : எனைக்கண்டு சென்ற கனவே…
உயிரைத் துண்டு செய்த மலரே…
வந்து மழையிழாடு மயிலே மயிலே…

ஆண் : உன் நாணம் என்ன கண்ணே…
மேகம் அட்சதை போடும்போது…
தலையை நீட்ட வேண்டும் கண்ணே கண்ணே…

ஆண் : நீருக்கும் நமக்கும் ஒரு தேவபந்தம்…
அன்பே உருவானது…
நீருக்குள் முகம் பார்த்த ஜோடி ஒன்றை…
மீண்டும் மழை சேர்த்தது…

ஆண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மகாலு…
குடையொன்னு குடையொன்னு தா கிளியே…

BGM

ஆண் : விட்டுவிட்டு துடிக்குது என் நெஞ்சு…
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு வா வெளியே…

BGM

ஆண் : அடி நீ எங்கே…
நீ எங்கே…
அடி நீ எங்கே…
நீ எங்கே…
நீ எங்கே…
பூ வைத்த பூ எங்கே…

ஆண் : மழை தண்ணி உசிர கரைக்குதே…
உசிர் உள்ள ஒருத்திக்கு தாஜ் மஹால…
கட்டி கொடுத்தவனும் நான்தாண்டி…

BGM

ஆண் : அடி நீ எங்கே எங்கே
நீ எங்கே… கண்ணீருல
மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடியே நீ எங்கே எங்கே
நீ எங்கே…
கண்ணீருல
மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடி நீ எங்கே எங்கே நீ எங்கே…
கண்ணீருல மழையும் கரிக்குதே…

BGM

ஆண் : அடியே நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM

ஆண் : நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM

ஆண் : நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…
நீ எங்கே… நீ எங்கே…

BGM


Notes : Sotta Sotta Song Lyrics in Tamil (Male). This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. சொட்ட சொட்ட (ஆண்) பாடல் வரிகள்.


சொட்ட சொட்ட (பெண்)

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Sotta Sotta (Female) Song Lyrics in Tamil


பெண் : அடி நீ இங்கே…
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே…

பெண் : தாலி கட்ட கழுத்து அரிக்குதே…
இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க…
அந்த முரட்டு பயலும் வருவானா

BGM

பெண் : இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க…
அந்த முரட்டு பயலும் வருவானா…

BGM

பெண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு…
குடையேதும் வேணாம் வா மாயா…

BGM

பெண் : இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்…
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா…

BGM

பெண் : அடி நீ இங்கே…
அடி நீயிங்கே…
நீ இங்கே… நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே…

பெண் : தாலி கட்ட கழுத்து அரிக்குதே…
இந்த சிறுக்கி மக உசிர உருக்கி குடிக்க…
அந்த முரட்டு பயலும் வருவானே…

BGM

பெண் : இந்த சேலை வாங்கிக்கொண்டு…
சேலை வாங்கிதான்…
சொந்தச்சேலை தருவானே…

BGM

பெண் : இந்த சேலை வாங்கிக்கொண்டு…
சேலை வாங்கிதான்…
சொந்தச்சேலை தருவானே…

பெண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு…
குடையேதும் வேணாம் வா மாயா…

BGM

பெண் : இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்…
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா…

BGM

பெண் : அடி நீ இங்கே…
அடி நீயிங்கே…
நீ இங்கே… நீ இங்கே…

BGM

பெண் : உனக்காக உயிர் பூத்து நின்றேன்…
உனக்காக கன்னி காத்து நின்றேன்…
இன்னும் நானும் சிறுமிதான்…
எப்போதென்னை பெண் செய்குவாய்…

BGM

பெண் : உனக்காக உயிர் பூத்து நின்றேன்…
உனக்காக காத்து காத்து நின்றேன்…
இன்னும் நானும் சிறுமிதான்…
எப்போதென்னை பெண் செய்குவாய்…

BGM

பெண் : வந்து மூன்று முடிச்சு போடு…
பின்பு முத்த முடிச்சு போடு…
என்னை மொத்தமாக மூடு மூடு…

பெண் : நீ எனக்குள் புதையல் எடுக்க…
நானும் உனக்குள் புதையல் எடுக்க…
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு…

பெண் : இளமையின் தேவை எது எது என்று…
அறிந்தவன் நீயல்லவா…
இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்…
அன்பே நீ சொல்லவா…

பெண் : சொட்ட சொட்ட நனையுது தாஜ் மஹாலு…
குடையேதும் வேணாம் வா மாயா…

BGM

பெண் : இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்…
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா…

BGM

பெண் : அடி நீ இங்கே…
அடி நீயிங்கே…
நீ இங்கே… நீ இங்கே…


Notes : Sotta Sotta (Female) Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. சொட்ட சொட்ட (பெண்) பாடல் வரிகள்.