பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | பி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதா | ஏ.ஆர்.ரகுமான் | தாஜ் மஹால் |
Kulirudhu Kulirudhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…
ஆண் : கடலிலே தீ பிடித்தால்…
மீன்களின் கனவுகள் கலைவதில்லை…
ஊர்களில் தீ பிடித்தால்…
காதலில் உறவுகள் எரிவதில்லை…
ஆண் & பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது
காதல் உறவாடி…
பெண் : நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…
—BGM—
பெண் : இதயத்தில் வலி ஒன்று வருது…
உன் இமைகளின் முடி கொண்டு தடவு…
பெண் : நெஞ்சுக்குள்ளே எரியுது நெருப்பு…
இத நீர் கொண்டு அணைப்பது உன் பொறுப்பு…
ஆண் : இது தண்ணீர் ஊற்றியா தீரும்…
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்…
பெண் : தேகங்கள் பரிமாற…
நம் உள்ளங்கள் இடம் மாறும்…
ஆண் : பேரின்ப பூஜைகளே…
உன் பெண்மைக்கு பரிகாரம்…
பெண் : மழை இல்லாமலும்…
தென்றல் சொல்லாமலும்…
ஆண் & பெண் : நம் நெஞ்சுக்குள் இப்போது…
லட்சம் பூ மலரும்…
ஆண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…
—BGM—
ஆண் : நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்…
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்…
பெண் : முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா…
அட முத்தமிட வேறு இடம் இல்லையா…
ஆண் : மழைத் துளி மழை துளி தொல்லையா…
அட அடை மழை தாங்க எண்ணம் இல்லையா…
பெண் : சுற்றி எல்லாம் எரிகிற போது…
நாம் இன்பம் கொள்வது ஏது…
ஆண் : அடி பூகம்ப வேலையிலும்…
இரு வான்கோழி கலவி கொள்ளும்…
பெண் : தேகத்தை அணைத்து விடு…
சுடும் தீ கூட அணைந்துவிடும்…
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்…
ஆண் : சுற்றி நின்றாலும் தீவண்ணம்…
அணைவது தின்னம்…
ஆண் & பெண் : குளிருது குளிருது இருஉயிர் குளிருது…
காதல் உறவாடி…
நகருது நகருது ஒருவிரல் நகருது…
மோட்ச வழி தேடி…
ஆண் : கடலிலே தீ பிடித்தால்…
மீன்களின் கனவுகள் கலைவதில்லை…
ஊர்களில் தீ பிடித்தால்…
காதலில் உறவுகள் எரிவதில்லை…
—BGM—
Notes : Kulirudhu Kulirudhu Song Lyrics in Tamil . This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. குளிருது குளிருது பாடல் வரிகள்.