Category Archives: காதலன்

காதலன்

Pettai Rap Song Lyrics in Tamil

பேட்ட ராப்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சங்கர்சுரேஷ் பீட்டர்ஸ், தேனி குஞ்சரம்மாள் & ஷாகுல் ஹமீதுஏ. ஆர். ரகுமான்காதலன்

Pettai Rap Song Lyrics in Tamil


BGM

ஆண் : சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்ட ராப்…
பேட்ட ராப்… பேட்ட ராப்… பேட்ட ராப்…

BGM

ஆண் : இன்று என்ன நாளை என்ன தினசரி அதே…
காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே…
மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே…
கோபம் வந்தால் கொஞ்சம் ஒத்திவைப்போமே…

ஆண் : அட கெட் அப் அண்ட் டான்ஸ்…
இதுதான் உன் சான்ஸ்…
உன் கையில் எல்லாமே இருக்குதடா…

ஆண் : டிஸ்க் ட டிஸ்க் ட மெட்டு போடலாம்…
முதல்ல யார் முதல்ல யார்…
முதல்ல முதல்ல முதல்ல முதல்ல…

குழு : பேட்ட ராப்… பேட்ட ராப்…
பேட்ட ராப்… பேட்ட ராப்…

ஆண் : பேட்ட ராப்…
அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…
அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
பேட்ட ராப்…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…

ஆண் : ஹே… காசு என்ன பணம் என்ன…
இருப்பது ஒரு லைப்…
போதுமடா சாமி எனக்கு ஒரு வைய்ப்…

ஆண் : திறந்து வைப்போமே மனச திறந்து வைப்போமே…
வருவது யார் என விட்டு தான் பாப்போமே…
அட உனக்கென பிறந்தது உனக்கே தான்…
கெடச்சத வச்சிக்கோடா அவ்வளவுதான்…

ஆண் : நடப்பதுதான் நடப்பதுதான் உண்மை…
விடியும் பார் விடியும் பார்…
விடிய விடிய விடிய விடிய…

குழு : பேட்ட ராப்… பேட்ட ராப்…
பேட்ட ராப்… பேட்ட ராப்…
பேட்ட ராப்… ஓஓ… பேட்ட ராப்… ஓஓ…
பேட்ட ராப்… ஓஓ… பேட்ட ராப்… ஓஓ…
பேட்ட ராப்…

ஆண் : வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு…
புள்ளகுட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன…
ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும…
பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே…

ஆண் : ஒரென்னா ரெண்டன்னா உண்டியெல்லாம் ஒடச்சி…
நாலென்னா எட்டன்னா கடன உடன வாங்கி…
ஒரென்னா ரெண்டன்னா உண்டியெல்லாம் ஒடச்சி…
நாலென்னா எட்டன்னா கடன உடன வாங்கி…

ஆண் : அண்டா குண்டா அடகு வச்சி…
அஞ்சு பத்து பிச்ச எடுத்தும்…
பத்தல பத்தல பத்தல பத்தல…

ஆண் : ஞானபழமே ஞானபழமே…
நீ செவ்வாபேட்ட ஞானபழமே…

ஆண் : ஞானபழமே… ஓஓ…
ஞானபழமே… ஓ…ஓ…
நீ செவ்வாபேட்ட… ஓ…ஓ…
ஞானபழமே… ஓ…ஓ…

ஆண் : சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்…
சைதாபேட்ட ராணிபேட்ட கிரோம்பேட்ட பேட்ட ராப்…

ஆண் : அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…
அம்மாபேட்ட ஐயம்பேட்ட…
தேனாம்பேட்ட தேங்காமட்ட…

ஆண் : ஏய் சாராயம் கருவாடு துண்டுபீடி வௌவாலு…
குடுச குப்பத்தொட்டி பக்கத்துல டீ கட…
ரிக்சா காத்தாடி பாட்லோடு மாஞ்சா…
கில்லி கோலி லுங்கி பானா கானா பாட்டு பாடலாமா…

ஆண் : ஆள அஞ்சல பஜாரு நிஜாரு…
கன்னியப்பன் முனியம்மா கிரி கெஜா மணி…
எம்ஜியாரு சிவாஜி ரஜினி கமலு…
பகுலு பிகிலு செவுலு அவுலு…
ஆல் ஷோஸ் அவுஸ் புல்லு…

{ குழு : பேட்ட ராப் பேட்ட ராப்…
பேட்ட ராப் பேட்ட ராப்…
பேட்ட ராப் பேட்ட ராப்…
பேட்ட ராப் பேட்ட ராப்… } * (2)

பெண் : ஸ்டாப் இட்…
ஆண் : எவ அவ…


Notes : Pettai Rap Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Shankar. பேட்ட ராப் பாடல் வரிகள்.


எர்ரானி குரதானி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஏ. ஆர். ரகுமான்காதலன்

Erani Kuradhani Song Lyrics in Tamil


BGM

குழு : ஓரப்போ… ஓரப்போ… ஓரப்போ…

பெண் : ஏய் எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…

BGM

பெண் : எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…

BGM

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

குழு : கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…
கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…

பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா…
குழு : மலை ஏறு கோபாலா…

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

BGM

ஆண் : இந்த ஒரு பூவுக்குத்தான்…
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்…

பெண் : காமன் வந்து சண்டப் புடிக்க…
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்…

ஆண் : அச்சாரம் போடத்தான்…
ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே…

குழு : தேனே தேனே தேனே…
செந்தேனே தேனே னே…

பெண் : ஆதாரம் காட்டத்தான்…
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே…

குழு : யானைப் பசி எனக்கு…
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு…

குழு : இடைவேள முடிஞ்சு…
பாரைய்யா என்னென்னமோ இருக்கு…

ஆண் : அடியே உன் தேகம்…
ரத்த ஓட்டம் பாய்கிற தந்தம்…

பெண் : அடடா உன் நெஞ்சில்…
புது புது கவிதைகள் பொங்கும்…

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

குழு : கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…
கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…

பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா…
குழு : மலை ஏறு கோபாலா…

பெண் : எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
சத்தானி சுக்கநேனு கோபாலா…
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா…

BGM

பெண் : நெத்தியில முத்தம் கொடுத்தா…
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்…

ஆண் : காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா…
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்…

பெண் : மச்சானே மச்சானே…
அச்சம் விட்டுப் போனது தன்னாலே…

குழு : லே லே லே லே…
தன்னாலே லே லே லே…

ஆண் : அச்சச்சோ அச்சச்சோ…
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே…

பெண் : சிக்குபுக்கு ரயிலே…
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு…

ஆண் : எக்கு தப்பு நடந்தா…
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு…

பெண் : அடடா இப்போது உலகத்த மறந்தது உள்ளம்…
ஆண் : இதுதான் பெண்பூவே உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்…

பெண் : கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா…
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா…
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா…
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா…

குழு : கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…
கோபாலா கோபாலா…
மலை ஏறு கோபாலா…

பெண் : பழம் கண்ட பின்னாலும் தின்னாத வெளவாலா…
குழு : மலை ஏறு கோபாலா…

பெண் : ஆஹா… எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
சத்தானி சுக்கநேனு கோபாலா…
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா…

குழு : எர்ரானி குரதானி கோபாலா…
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா…
சத்தானி சுக்கநேனு கோபாலா…
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா…


Notes : Erani Kuradhani Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. எர்ரானி குரதானி பாடல் வரிகள்.


ஊர்வசி ஊர்வசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஏ.ஆர்.ரகுமான், சுரேஷ் பீட்டர்ஸ் & ஷாகுல் ஹமீதுஏ. ஆர். ரகுமான்காதலன்

Urvasi Urvasi Song Lyrics in Tamil


ஆண் : மருஹாபா… ஆஆ… ஆஆ… ஆஆ…
மருஹாபா… மருஹாபா… ஆஆ… ஆஆ…
மருஹாபா… மருஹாபா… ஆஆ… ஆஆ…

BGM

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

BGM

ஆண் : ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி…

BGM

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

BGM

ஆண் : பேசடி ரதியே ரதியே…
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்…
நீயடி கதியே கதியே…
ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

BGM

ஆண் : ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : தண்டசோருன்னு அப்பன் சொன்னா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வழுக்கு தலையன் திருப்பதி போனா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…

BGM

ஆண் : கேளடி ரதியே ரதியே…
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்…
தெரியுமா சகியே சகியே…
காதல் நரம்பு எந்த பக்கம்…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

BGM

ஆண் : கண்டதும் காதல் வழியாது…
கண்களால் ரத்தம் வழியாது…
பூனையில் சைவம் கிடையாது…
ஆண்களில் ராமன் கிடையாது…

ஆண் : புரட்சிகள் ஏதும் செய்யாமல்…
பெண்ணுக்கு நன்மை விளையாது…
கண்ணகி சிலைதான் இங்குண்டு…
சீதைக்கு தனியா சிலையேது…

ஆண் : பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : பண்டிக தேதி சண்டேயில் வந்தா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : அழுத காதலி அண்ணான்னு சொன்னா…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…
ஊசி போல ஒடம்பிருந்தா தேவை இல்ல பார்மசி…

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே…
குழு : டேக் இட் ஈசி பாலிசி…

ஆண் : வானவில் வாழ்க்கையில்…
குழு : வாலிபம் ஒரு பேண்டசி…

BGM

ஆண் : பகலிலே கலர்கள் பாராமல்…
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்…
சுதந்திரம் மட்டும் இல்லாமல்…
சொர்கமே இருந்தும் என்ன பயன்…

ஆண் : பிகருகள் யாரும் இல்லாமல்…
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்…
இருபது வயதில் ஆடாமல்…
அறுபதில் ஆடி என்ன பயன்…


Notes : Urvasi Urvasi Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. ஊர்வசி ஊர்வசி பாடல் வரிகள்.


இந்திரையோ இவள் சுந்தரியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரிகூடராசப்ப கவிராயர்சுனந்தா, கல்யாணி மேனன் & மின்மினிஏ. ஆர். ரகுமான்காதலன்

Indirayo Ival Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…

பெண் : மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…

பெண் : உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்…
சங்கணி வீதியிலே…

பெண் : மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி…
பொன் பந்து கொன்டாடினளே…

பெண் : மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…


Notes : Indirayo Ival Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Thirikudarasappa Kavirayar. இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் வரிகள்.


முக்காலா முக்காபுலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஏ. ஆர். ரகுமான், மனோ & சுவர்ணலதாஏ. ஆர். ரகுமான்காதலன்

Mukkala Mukkabala Song Lyrics in Tamil


BGM

ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…

பெண் : லவ்வுக்கு காவலா…
பதில் நீ சொல்லு காதலா…
பொல்லாத காவலா செந்தூர பூவிலா…
குழு : வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா…

ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…

BGM

பெண் : ஜுராசிக் பார்க்கில் இன்று…
சுகமான ஜோடிகள் ஜாஸ் மியூசிக் பாடி வருது…

ஆண் : பிக்காசோ ஓவியந்தான்…
பிரியாமல் என்னுடன் டெக்சாசில் ஆடி வருது…

பெண் : கவ் பாயின் கண் பட்டதும்…
ப்ளேபாயின் கை தொட்டதும்…
உண்டான செக்ஸானது…
ஒன்றாக மிக்ஸானது…

ஆண் : ஜாஸ் மியூசிக் பெண்ணானதா…
ஸ்ட்ராபெரி கண்ணானதா…
லவ் ஸ்டோரி கொண்டாடுதா…
கிக்கேறி தள்ளாடுதா…

பெண் : நம் காதல் யாருமே எழுதாத பாடலா…

ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…

BGM

பெண் : துப்பாக்கி தூக்கி வந்து குறி வைத்து தாக்கினால்…
தோட்டாவில் காதல் விழுமா…

ஆண் : செம்மீன்கள் மாட்டுகின்ற வலை கொண்டு வீசினால்…
பெண்மீன்கள் கையில் வருமா…

பெண் : பூகம்பம் வந்தால் என்ன…
பூலோகம் வெந்தால் என்ன…
ஆகாயம் துண்டாகுமா…
என்னாளும் ரெண்டாகுமா…

ஆண் : வாடி என் வண்ணக்கிளி…
மீனைப்போல் துள்ளிகுதி…
செய்வோம் ஓர் காதல் விதி…
காலம் நம் ஆணைப்படி…

பெண் : சந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா…

ஆண் : முக்காலா முக்காபுலா…
லைலா ஓ லைலா…
முக்காபுலா சொக்காமலா…
லைலா ஓ லைலா…

BGM


Notes : Mukkala Mukkabala Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vaali. முக்காலா முக்காபுலா பாடல் வரிகள்.


காதலிக்கும் பெண்ணின்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம், உதித் நாராயண் & பல்லவிஏ. ஆர். ரகுமான்காதலன்

Kadhalikum Pennin Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்…
தொட்டு நீட்டினால்…
ஆண் : சின்ன தகரம் கூட…
தங்கம்தானே…

ஆண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண…
கன்னம் ரெண்டிலே…
ஆண் : மின்னும் பருவும் கூட…
பவளம்தானே…

ஆண் : சிந்தும் வேர்வை…
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை…
மோட்ஷம் ஆகும்…

ஆண் : காதலின் சங்கீதமே…
ஆண் : ம் ஹும்… பூமியின் பூபாளமே…
ஆண் : காதலின் சங்கீதமே…
ஆண் : ம் ஹும்… பூமியின் பூபாளமே…

BGM

ஆண் : சா நீ சா…
சா ரி கா ரி சா ரி…
சா நீ பா நீ சா நீ சா…
சா மா மா பா கா ரி சா…

ஆண் : சா நீ சா…
சா ரி கா ரி சா ரி…
சா நீ பா நீ சா நீ சா…
சா மா மா பா கா ரி சா…

BGM

பெண் : காதலிக்கும் பெண் எழுதும்…
கை எழுத்திலே…
கண்ட பிழைகள் கூட…
கவிதை ஆகுமே…

பெண் : காதல் ஒன்றும்…
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே…
எச்சில் கூட புனிதம் ஆகுமே…

ஆண் : குண்டு மல்லி…
ரெண்டு ரூபாய்…
உன் கூந்தல் ஏறி…
உதிரும் பூ கோடி ரூபாய்…

பெண் : பஞ்சு மிட்டாய்…
அஞ்சு ரூபாய்…
நீ பாதி தின்று தந்ததால்…
லட்ச ரூபாய்…

BGM

பெண் : காதலிக்கும் பெண்ணின் கைகள்…
தொட்டு நீட்டினால்…
குழு : சின்ன தகரம் கூட…
தங்கம்தானே…

பெண் : காதலிக்கும் பெண்ணின் வண்ண…
கன்னம் ரெண்டிலே…
குழு : மின்னும் பருவும் கூட…
பவளம்தானே…

ஆண் : சிந்தும் வேர்வை…
தீர்த்தம் ஆகும்…
சின்ன பார்வை…
மோட்ஷம் ஆகும்…

பெண் : காதலின் சங்கீதமே…
ஆண் : ம் ஹும்… பூமியின் பூபாளமே…
பெண் : காதலின் சங்கீதமே…
ஆண் : ம் ஹும்… பூமியின் பூபாளமே…

BGM

பெண் : காதல் ஒன்றும்…
நல்ல நேரம் பார்ப்பதில்லையே…
ராகு காலம் கூட ராசி ஆகுமே…

ஆண் : காதலுக்கு அன்னபட்ஷி…
தேவை இல்லையே…
காக்கை கூட தூது போகுமே…

பெண் : காதல் ஜோடி குறைவதில்லை…
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை…

ஆண் : இதில் அர்ப்பமானது…
எதுவும் இல்லை…
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை…

குழு : வானும் மண்ணும் மாறியே போகும்…
காதல் என்றும் வாழுமே…
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்…
காற்றில் என்றும் கேட்குமே…

குழு : காதல் கெட்ட வார்த்தையா…
என்ன யாரும் சொல்லலாம்…
நீ சொல்லவேண்டும் என்று…

குழு : காதல் முள்ளின் வேலியா…
என்ன யாரும் செல்லலாம்…
நீ செல்லவேண்டும் என்று…

BGM


Notes : Kadhalikum Pennin Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. காதலிக்கும் பெண்ணின் பாடல் வரிகள்.


என்னவளே அடி என்னவளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்ஏ. ஆர். ரகுமான்காதலன்

Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil


BGM

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்…
இன்று வசப்படவில்லையடி…
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா…
ஒரு உருண்டையும் உருலுதடி…

ஆண் : காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்…
ஒரு நிமிஷமும் வருஷமடி…
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்…
ஒரு கலக்கமும் தோன்றுதடி…

ஆண் : இது சொர்க்கமா நரகமா…
சொல்லடி உள்ளபடி…
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்…
உன் வார்த்தையில் உள்ளதடி…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…

BGM

ஆண் : கோகிலமே நீ குரல் கொடுத்தால்…
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்…
கோபுரமே உன்னைச் சாய்த்துக்கொண்டு…
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்…

ஆண் : வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க…
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்…
வருடவரும் பூங்காற்றையெல்லாம்…
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்…

ஆண் : என் காதலின் தேவையை…
காதுக்குள் ஓதிவைப்பேன்…
உன் காலடி எழுதிய கோலங்கள்…
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி தேடி வந்தேன்…

ஆண் : காதலென்றால் பெரும் அவஸ்தையென்று…
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்…
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து…
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்…

ஆண் : என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…


Notes : Ennavale Adi Ennavale Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Vairamuthu. என்னவளே அடி என்னவளே பாடல் வரிகள்.