Category Archives: 1988 Movies

1988 Movies

கண்ணுக்குள்ள தூக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாதெற்கத்திக் கள்ளன்

Kannukulla Thookam Pochu Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

பெண் : மோகத்துல தேகத்திலே…
ஆசை வரும் வேகத்திலே…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

BGM

பெண் : ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன்…
ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்…
ஆளான நாள்தோறும் ஏதோ தேடுறேன்…
ராசா உன் பேர் சொல்லி ராகம் பாடுறேன்…

பெண் : காமன் கணை போட்டு போனா…
காயும் நிலா பாயும் வீணா…
சாயங்காலம் நேரமானா…
நோயில் விழும் தேகம் தானா…
நீதான் காரணம் நீயா மாறணும்…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

BGM

பெண் : பூவாடை காத்தாட போதை ஏறுது…
மேலாடை பாலாடை பாதை மாறுது…
பூவாடை காத்தாட போதை ஏறுது…
மேலாடை பாலாடை பாதை மாறுது…

பெண் : பூட்டி வச்ச வீட்டுக்குள்ள…
புள்ளி வச்ச காட்டுக்குள்ள…
பாத்துக்கோங்க யாருமில்ல…
சேத்துகிட்டா பாரமில்ல…
ஏதோ ஆகுது ஏனோ நோகுது…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…

பெண் : மோகத்துல தேகத்திலே…
ஆசை வரும் வேகத்திலே…

பெண் : அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…
அள்ளிக் கொடு மாமா…
சொல்லிக் கொடு ஆமா…

பெண் : கண்ணுக்குள்ள தூக்கம் போச்சு…
எண்ணமெல்லாம் உன் மேலே…
பொண்ணுக்குள்ள ஏதோ ஆச்சு…
சாஞ்சுக்கோங்க என் மேலே…


Notes : Kannukulla Thookam Pochu Song Lyrics in Tamil. This Song from Therkathi Kallan (1988). Song Lyrics penned by Gangai Amaran. கண்ணுக்குள்ள தூக்கம் பாடல் வரிகள்.


ஒத்தடி ஒத்தடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & சுனந்தாஇளையராஜாதர்மத்தின் தலைவன்

Othadi Othadi Song Lyrics in Tamil


BGM

பெண் : நீல விழி ஓரம் நிலவே காயும்…
இசைதான் இங்கே நதியாய் பாயும்…
ரசித்தால் போதும் மடிமேல் சாயும்…
பாவை நான்…

BGM

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…

BGM

ஆண் : வில்லாதி வில்லனடி…
எனக்கு இணையா கில்லாடி இல்லையடி…
அட வெச்சாலும் வச்சானடி…
உனக்கு சரியாகத்தான் மச்சானும் ஒத்த வெடி…

ஆண் : சொல்லனும் வந்தனம்…
இல்ல மூலையில் குந்தனும்…

ஆண் : மக்கு போல் நிக்குற செக்கு போல் சுத்துற…
சிக்கலில் சிக்கலாமா…
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி…
இப்படி முழிக்கலாமா…

ஆண் : சக்கர கட்டியே சந்தன தொட்டியே…
அஞ்சாத ஆண்சிங்கம் நானடி…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டு தான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மாடி…

BGM

ஆண் : தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்…
தில்லானா ஆடட்டுமா…
அட இந்தாடி டப்பாங்குத்து இதுல பெரிய ஆளு நான்…
சும்மா நீ வாய பொத்து…

ஆண் : வித்தையா கத்தவன்…
அடி பேருதான் பெத்தவன்…
பத்து பேர் மத்தியில் சொத்தையா சொல்லையா…
என்னை நீ என்னலாமா…

ஆண் : அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்…
சந்தியில் நிக்கலாமா…
என்னடி சங்கதி அம்மணி உங்கதி…
பின்னாலே என்னாகும் பாரடடி…

ஆண் : ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே நம்மடி…

ஆண் : பட்டணம் அறிஞ்ச போக்கிரி…
அடி பட்டியம் தெரிஞ்ச பக்கிரி…

ஆண் : அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அட வாமா பாப்பம்மா…
ஆடி பாப்போமா…
வேட்டுதான் போட்டுதான் பாப்போமா…

ஆண் : அடி ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடி…


Notes : Othadi Othadi Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Vaali. ஒத்தடி ஒத்தடி பாடல் வரிகள்.


மஞ்சப் பொடி தேய்க்கையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெண்பகமே செண்பகமே

Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

BGM

ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி…
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி…
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி…
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி…

ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி…
பொன்னோட பூவோட கூடி…
கண்ணாடி பாராத காயம் தேடி…
கண்ணே நான் தெம்மாங்கு பாடி…

ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும்…
ஏறும் மோகம் தானாத் தீரும்…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

BGM

ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன…
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன…
தேனாறு உன் உதடு வந்ததென்ன…
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன…

ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு…
எப்போது ஊர்கோலம் கூறு…
பன்னீரு பூவாகத் தூவும் போது…
பஞ்சாங்கம் நாளென்ன கூறு…

ஆண் : கையும் கையும் கூடும் நேரம்…
காதல் ராகம் காத்தும் பாடும்…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…


Notes : Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil. This Song from Shenbagame Shenbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்.


முத்தமிழ் கவியே வருக

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ்.சித்ராஇளையராஜாதர்மத்தின் தலைவன்

Muthamizh Kaviyae Song Lyrics in Tamil


BGM

பெண் : முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…
முத்தமிழ் கவியே வருக…
முக்கனிச் சுவையே வருக…
காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக…
காதல் என்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக… ஓ…

BGM

பெண் : காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான்…
காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன்…

ஆண் : கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்…
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்…

பெண் : மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட…
என்னோடு நீ ஆட ஓடோடி வா…

ஆண் : காணாத சொர்க்கங்கள் நான் காணத்தானே…
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா…

பெண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்…
இன்பம் கோடி… ஆஆ…

ஆண் : ஆ… முத்தமிழ் கலையே வருக…
முக்கனிச் சுவையும் தருக… ஓ…

BGM

ஆண் : தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து…
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து…

பெண் : நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து…
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து…

ஆண் : வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம்…
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா…

பெண் : என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்…
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா…

ஆண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்…
இன்பம் கோடி… ஆஆ…

பெண் : ஆஆ… முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…

ஆண் : காதலென்னும் தீவினிலே…
காலங்கள் நாம் வாழ நாள் வந்தது…

பெண் : முத்தமிழ் கவியே வருக…
முக்கனி சுவையே வருக…

ஆண் : முத்தமிழ் கலையே வருக…
முக்கனி சுவையும் வருக… ஓ…


Notes : Muthamizh Kaviyae Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Panju Arunachalam. முத்தமிழ் கவியே வருக பாடல் வரிகள்.


ராதா அழைக்கிறாள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாதெற்கத்திக் கள்ளன்

Radha Azhaikkiral Song Lyrics in Tamil


BGM

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

BGM

பெண் : பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே…
பூ மல்லிகையே என் புன்னகையே…
பொட்டு வைத்துப் பார்க்கிறேன் நீ காணவே…
பூ மல்லிகையே என் புன்னகையே…

பெண் : மொட்டு விட்ட பூவைக் கட்டிக் கொள்ள வா வா…
மெட்டிச் சத்தம் கேட்டு மெட்டுக் கட்டு தேவா…
நீயும் நானும் பாலோடு தேனாய்ச் சேர…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…

BGM

பெண் : ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள…
ஊடல் என்னும் நாடகம் ஏன் தேவையா…
வா கட்டிக் கொள்ள நீ தொட்டுக் கொள்ள…

பெண் : மின்னல் இடை பாகம்…
கன்னி இவள் தேகம்…
மன்னனுக்கு யோகம்…
மன்மதனின் யாகம்…
பாரம் தீர தோளோடு தோளும் சேர…

பெண் : ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…

பெண் : மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே…
மாலையாக கூடிடும் வேளையாக…

பெண் : உன்னை ராதா அழைக்கிறாள்…
காதல் ராகம் இசைக்கிறாள்…
உன்னை ராதா ராதா ராதா…


Notes : Radha Azhaikkiral Song Lyrics in Tamil. This Song from Therkathi Kallan (1988). Song Lyrics penned by Gangai Amaran. ராதா அழைக்கிறாள் பாடல் வரிகள்.


vaasalile-poosani-poo-song-lyrics-in-tamil

வாசலிலே பூசணிப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாசெண்பகமே செண்பகமே

Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…

ஆண் : பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது…
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது…

பெண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சதென்ன வச்சதென்ன…
நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…

BGM

பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே…
சொந்தம் நானே…
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது…

ஆண் : ஆஆ… கோலம் போட்டு ஜாடை சொன்னது…
கன்னி மானே…
கோடு நமக்கு யாரு போட்டது…

பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு…
உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்…
நெத்தியில பொட்டு வச்சு…
உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்…

ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா…
நாளும் நாளும் சந்தோஷம்…

பெண் : ராகம் தாளம் சேரும் நேரம்…
ஆனந்தம் பாடும் சங்கீதம்…

ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…

பெண் : நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…

BGM

ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது…
பொன்னி ஆறு…
மோகத்தோடு கூடிப் பாடுது…

பெண் : ஆஆ… கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது…
உங்க பாட்டு…
கேள்வி போல என்னை வாட்டுது…

ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டைவிட்டு…
பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு…
ஆனந்தமாய்ப் பாடி வரும்…

பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி…
என்னை இப்போ கிள்ளாதே…

ஆண் : போதும் போதும் கண்ணால் என்னைக்…
கட்டி இழுக்கிற செண்பகமே…

பெண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சதென்ன வச்சதென்ன…
நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…

பெண் : பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது…
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது…

ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…


Notes : Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil. This Song from Senbagame Senbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. வாசலிலே பூசணிப்பூ பாடல் வரிகள்.


சேலை கட்டும் பெண்ணுக்கொரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராஹம்சலேகாகொடி பறக்குது

Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…

BGM

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

BGM

பெண் : ஓஓ… கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்…
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்…

ஆண் : ஹா ஆ… ஆயிரம் உண்டு…
என்னோடு மச்சங்கள்…
ஆயினும் என்ன…
நெஞ்சோடு அச்சங்கள்…

பெண் : ஆனந்த சங்கமத்தில்…
அச்சம் வருமா…
பூக்களை கிள்ளுவதால்…
ரத்தம் வருமா…

ஆண் : இது போல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

பெண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

BGM

ஆண் : ஓஓ… காதல் வெண்ணிலா…
கையோடு வந்ததோ…
கண்கள் ரெண்டுமே…
கச்சேரி பண்ணுதோ…

பெண் : ஓஓ… மோகமந்திரம்…
கண்ணோடு உள்ளதோ…
மூடு மந்திரம்…
பெண்ணோடு உள்ளதோ…

ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய்…
யானை வந்தது…
மேகத்தை தூது விட்டாய்…
வானம் வந்தது…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…

பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…

ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…

பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…

ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…

பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…

ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…


Notes : Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil. This Song from Kodi Parakuthu (1988). Song Lyrics penned by Vairamuthu. சேலை கட்டும் பெண்ணுக்கொரு பாடல் வரிகள்.


தென்மதுரை வைகை நதி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம், பி. சுசீலா & மலேசியா வாசுதேவன்இளையராஜாதர்மத்தின் தலைவன்

Thenmadurai Vaigainadhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…

ஆண் : தேய்கின்றது…
தேய்கின்றது பொன் மாலை நிலா…
தேயாதது நம் ஆசை நிலா…
இது வானம் போலே வாழும் பாசம்…

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…

BGM

ஆண் : நம்மை போல நெஞ்சம் கொண்ட…
அண்ணன் தம்பி யாரும் இல்லை…
தன்னை போல என்னை என்னும்…
நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை…

ஆண் : தம்பி உந்தன் உள்ளம்தானே…
அண்ணன் என்றும் வாழும் எல்லை…
ஒன்றாய் காணும் வானம் எங்கும்…
ரெண்டாய் மாற நியாயம் இல்லை…

ஆண் : கண்ணோடு தான் உன் வண்ணம்…
நெஞ்சோடு தான் உன் எண்ணம்…
முன்னேறு நீ மென்மேலும்…
என் ஆசைகள் கை கூடும்…
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க…

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…

BGM

ஆண் : நெஞ்சில் என்னை நாளும் வைத்து…
கொஞ்சும் வண்ண தோகை ஒன்று…
மஞ்சள் மாலை மேளம் யாவும்…
கண்ணில் காணும் காலம் உண்டு…

ஆண் : பூவை சூடி பொட்டும் வைக்க…
மாமன் உண்டு மானே மானே…
உள்ளம் தன்னை கொள்ளை கொண்ட…
கள்வன் இங்கு நானே நானே…

ஆண் : உன்னோடுதான் என் ஜீவன்…
ஒன்றாக்கினான் நம் தேவன்…
நீ தானம்மா என் தாரம்…
மாறாதம்மா என் நாளும்…
இந்த நேசம் பாசம் நாளும் வாழ்க…

ஆண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…

பெண் : தேய்கின்றது பொன் மாலை நிலா…
தேய்கின்றது பொன் மாலை நிலா…
தேயாதது நம் ஆசை நிலா…

ஆண் : இது வானம் போலே வாழும் பாசம்…

ஆண் & பெண் : தென்மதுரை வைகை நதி…
தினம் பாடும் தமிழ் பாட்டு…
தென்மதுரை வைகை நதி…


Notes : Thenmadurai Vaigainadhi Song Lyrics in Tamil. This Song from Dharmathin Thalaivan (1988). Song Lyrics penned by Vaali. தென்மதுரை வைகை நதி பாடல் வரிகள்.