பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி | இளையராஜா | செண்பகமே செண்பகமே |
Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…
ஆண் : பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது…
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது…
பெண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சதென்ன வச்சதென்ன…
நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…
—BGM—
பெண் : பிரிச்ச போதும் பிரியவில்லையே…
சொந்தம் நானே…
வழியை மறந்த குயிலும் சேர்ந்தது…
ஆண் : ஆஆ… கோலம் போட்டு ஜாடை சொன்னது…
கன்னி மானே…
கோடு நமக்கு யாரு போட்டது…
பெண் : நெஞ்சுக்குள்ள நெஞ்ச வச்சு…
உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்…
நெத்தியில பொட்டு வச்சு…
உங்களத்தான் தொட்டுக்கிட்டேன்…
ஆண் : நானும் நீயும் ஒண்ணா சேர்ந்தா…
நாளும் நாளும் சந்தோஷம்…
பெண் : ராகம் தாளம் சேரும் நேரம்…
ஆனந்தம் பாடும் சங்கீதம்…
ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
பெண் : நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…
—BGM—
ஆண் : மீண்டும் மீண்டும் கூடிச் சேருது…
பொன்னி ஆறு…
மோகத்தோடு கூடிப் பாடுது…
பெண் : ஆஆ… கேட்டுக் கேட்டுக் கிறங்கத் தோணுது…
உங்க பாட்டு…
கேள்வி போல என்னை வாட்டுது…
ஆண் : ஆத்து வெள்ளம் மேட்டைவிட்டு…
பள்ளத்துக்கு ஓடி வரும்
ஆசையிது தேடிக்கிட்டு…
ஆனந்தமாய்ப் பாடி வரும்…
பெண் : ஏதோ ஒண்ணைச் சொல்லிச் சொல்லி…
என்னை இப்போ கிள்ளாதே…
ஆண் : போதும் போதும் கண்ணால் என்னைக்…
கட்டி இழுக்கிற செண்பகமே…
பெண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சதென்ன வச்சதென்ன…
நேசத்திலே எம்மனச…
தச்சதென்ன தச்சதென்ன…
பெண் : பூவும் பூவும் ஒண்ணு கலந்தது இப்போது…
தேனும் பாலும் பொங்கி வழியுது இப்போது…
ஆண் : வாசலிலே பூசணிப்பூ…
வச்சுப்புட்டா வச்சுப்புட்டா…
நேசத்திலே எம்மனச…
தச்சுப்புட்டா தச்சுப்புட்டா…
Notes : Vaasalile Poosani Poo Song Lyrics in Tamil. This Song from Senbagame Senbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. வாசலிலே பூசணிப்பூ பாடல் வரிகள்.