மஞ்சப் பொடி தேய்க்கையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாசெண்பகமே செண்பகமே

Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

BGM

ஆண் : குத்தாலச் சாரலுக்கு யோகமடி…
குண்டு மல்லிப் பூவுக்கொரு நேரமடி…
விட்டாக்கா ஏறுதொரு பாரமடி…
தொட்டுத் தொட்டு சேர்ந்த பின்பு தீருமடி…

ஆண் : ஒன்னோட கையாக நானும் மாறி…
பொன்னோட பூவோட கூடி…
கண்ணாடி பாராத காயம் தேடி…
கண்ணே நான் தெம்மாங்கு பாடி…

ஆண் : ஒண்ணாச் சேர வந்தா போதும்…
ஏறும் மோகம் தானாத் தீரும்…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

BGM

ஆண் : மொட்டான மொட்டு ஒன்னு பூத்ததென்ன…
பூவுக்குள்ள தேனு வந்து சேர்ந்ததென்ன…
தேனாறு உன் உதடு வந்ததென்ன…
தேனெடுத்து நான் அருந்த நேரம் என்ன…

ஆண் : ஒன்னோட பூ மேனி ஓடும் தேரு…
எப்போது ஊர்கோலம் கூறு…
பன்னீரு பூவாகத் தூவும் போது…
பஞ்சாங்கம் நாளென்ன கூறு…

ஆண் : கையும் கையும் கூடும் நேரம்…
காதல் ராகம் காத்தும் பாடும்…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…

ஆண் : தண்ணி தொட்ட பாகம் எல்லாம்…
இந்தக் கண்ணன் தொடும் காலம் எப்போ…
கண்ணனுக்கு நல்ல பதில் சொல்லு புள்ள…

ஆண் : மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…
மஞ்சப் பொடி தேய்க்கையிலே…
என் நெஞ்சத் தொட்டு தேய்ச்ச புள்ள…


Notes : Manja Podi Theikkaiyile Song Lyrics in Tamil. This Song from Shenbagame Shenbagame (1988). Song Lyrics penned by Gangai Amaran. மஞ்சப் பொடி தேய்க்கையிலே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top