செம்மீனே செம்மீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன் & சுனந்தாஇளையராஜாசெவ்வந்தி

Semmeene Semmeene Song Lyrics in Tamil


BGM

ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு…
கல்யாண மாலை கொண்டு வாரேன்…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்…

குழு : தானான தானனான தானானா…
தானான தானனான தானானா…

பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு…
கல்யாண மாலை கொண்டு வா வா…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா…

BGM

பெண் : கால் கடுக்க காத்திருந்தேன்…
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்…
காதலனை காணலியே காரணத்தை நானறியேன்…

ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்…
திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்…

பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்…
ஓயாது நானும் கொண்ட மோகம்…
என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்…

ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு…

பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா…

BGM

ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க…
கூந்தல் ஒன்னு ஆடுதங்கே…
என் விரலால் பொட்டு வைக்க…
நெற்றியொண்ணு வாடுதங்கே…

பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து…
இடைவெளி இல்லாமல் போனது காத்து…

ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும்…
நீரின்றி வாடும் இளநாத்து…
ஓடை நீரின்றி வாடும் இளநாத்து…

பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு…

ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன்…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்…

பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா…


Notes : Semmeene Semmeene Song Lyrics in Tamil. This Song from Sevvanthi (1994). Song Lyrics penned by Vaali. செம்மீனே செம்மீனே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top