பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பி. ஜெயச்சந்திரன் & சுனந்தா | இளையராஜா | செவ்வந்தி |
Semmeene Semmeene Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு…
கல்யாண மாலை கொண்டு வாரேன்…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்…
குழு : தானான தானனான தானானா…
தானான தானனான தானானா…
பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு…
கல்யாண மாலை கொண்டு வா வா…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா…
—BGM—
பெண் : கால் கடுக்க காத்திருந்தேன்…
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்…
காதலனை காணலியே காரணத்தை நானறியேன்…
ஆண் : தினசரி நான் பார்த்த தாமரைப்பூவும்…
திருமுகம் காட்டாது போனதென்ன பாவம்…
பெண் : ஊர் தடுத்தும் யார் தடுத்தும்…
ஓயாது நானும் கொண்ட மோகம்…
என்றும் ஓயாது நானும் கொண்ட மோகம்…
ஆண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு…
பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா…
—BGM—
ஆண் : நான் வழங்கும் பூ முடிக்க…
கூந்தல் ஒன்னு ஆடுதங்கே…
என் விரலால் பொட்டு வைக்க…
நெற்றியொண்ணு வாடுதங்கே…
பெண் : இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து…
இடைவெளி இல்லாமல் போனது காத்து…
ஆண் : நான் திரும்பி வரும் வரைக்கும்…
நீரின்றி வாடும் இளநாத்து…
ஓடை நீரின்றி வாடும் இளநாத்து…
பெண் : செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே…
மலைசாதிப் பொண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு…
ஆண் : கல்யாண மாலை கொண்டு வாரேன்…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்…
பெண் : கல்யாண மாலை கொண்டு வா வா…
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா…
Notes : Semmeene Semmeene Song Lyrics in Tamil. This Song from Sevvanthi (1994). Song Lyrics penned by Vaali. செம்மீனே செம்மீனே பாடல் வரிகள்.