Tag Archives: பரத்வாஜ்

ovoru-pookalume-song-lyrics-in-tamil

ஒவ்வொரு பூக்களுமே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கே.எஸ். சித்ராபரத்வாஜ்ஆட்டோகிராப்

Ovoru Pookalume Song Lyrics in Tamil


பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

BGM

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்…
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்…
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

BGM

பெண் : உள்ளம் என்றும் எப்போதும்…
உடைந்து போகக் கூடாது…
என்ன இந்த வாழ்க்கையென்ற…
எண்ணம் தோன்றக் கூடாது…

பெண் : எந்த மனிதன் நெஞ்சுக்குள்…
காயம் இல்லை சொல்லுங்கள்…
காலப்போக்கில் காயமெல்லாம்…
மறைந்து போகும் மாயங்கள்…

பெண் : உளி தாங்கும் கற்கள்தானே…
மண்மீது சிலையாகும்…
வலி தாங்கும் உள்ளம்தானே…
நிலையான சுகம் காணும்…

பெண் : யாருக்கில்லை போராட்டம்…
கண்ணில் என்ன நீரோட்டம்…
ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால்…
ஒரு நாளில் நிஜமாகும்…

பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…

பெண் : வாழ்க்கை கவிதை வாசிப்போம்…
வானம் அளவு யோசிப்போம்…
முயற்சி என்ற ஒன்றை மட்டும்…
மூச்சு போல சுவாசிப்போம்…

பெண் : லட்சம் கனவு கண்ணோடு…
லட்சியங்கள் நெஞ்சோடு…
உன்னை வெல்ல யாருமில்லை…
உறுதியோடு போராடு…

ஆண் : மனிதா உன் மனதை கீறி…
விதை போடு மரமாகும்…
அவமானம் படுதோல்வி…
எல்லாமே உரமாகும்…

பெண் : தோல்வியின்றி வரலாறா…
துக்கம் என்ன என் தோழா…
ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்…
அந்த வானம் வசமாகும்…

பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…
வாழ்வென்றால் போராடும் போா்க்களமே…
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே…
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே…

பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்…
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்…
மனமே ஓ மனமே நீ மாறிவிடு…
மலையோ அது பனியோ நீ மோதி விடு…

BGM


Notes : Ovoru Pookalume Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Pa.Vijay. ஒவ்வொரு பூக்களுமே பாடல் வரிகள்.


மேகங்கள் என்னைத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்அமர்க்களம்

Megangal Ennai Thottu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…

ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல…
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே…
என் பிரியத்தை அதனால் குறைக்கமாட்டேன்…
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே…
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்…
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்…
துண்டு துண்டாய் உடைந்த மனத் தூள்களையெல்லாம்…
அடி தூயவளே உனக்குள் தொலைத்துவிட்டேன்…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே…
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்…
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்…
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்…

ஆண் : எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன்…
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்…
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன்…
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

BGM

ஆண் : மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்…
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி…
ஓடி ஓடிப் போகாதே ஊமை பெண்ணே…
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி…

ஆண் : மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…
மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு…
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு…

ஆண் : தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு…
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு…
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்…
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை…

ஆண் : ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல…
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை…


Notes : Megangal Ennai Thottu Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. மேகங்கள் என்னைத் தொட்டு பாடல் வரிகள்.


சத்தம் இல்லாத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்பரத்வாஜ்அமர்க்களம்

Satham Illatha Song Lyrics in Tamil


பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

BGM

ஆண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

ஆண் : உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்…
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்…
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்…
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்…

ஆண் : இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்…
இளமை கெடாத மோகம் கேட்டேன்…
பறந்து பறந்து நேசம் கேட்டேன்…
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்…

ஆண் : புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்…
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்…
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்…
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்…

ஆண் : நிலவில் நனையும் சோலை கேட்டேன்…
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்…
நடந்து போக நதிக்கரை கேட்டேன்…
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்…

ஆண் : தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்…
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்…
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்…
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்…

ஆண் : பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்…
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்…
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்…
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்…

ஆண் : உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்…
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்…
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்…
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்…

ஆண் : எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்…
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்…
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்…
காமம் கடந்த யோகம் கேட்டேன்…

ஆண் : சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்…
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்…
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்…
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்…

ஆண் : பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்…
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்…
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்…
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்…

ஆண் : மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்…
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்…
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்…
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்…

ஆண் : விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்…
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்…
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்…
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்…

ஆண் : பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்…
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்…
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்…
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்…

ஆண் : பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்…
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்…
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்…
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்…

ஆண் : சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்…
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்…
மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன்…
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்…
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்…

ஆண் : இடியைத் தாங்கும் தோளை கேட்டேன்…
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்…
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்…
தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன்…

ஆண் : சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்…
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்…
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்…
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்…

ஆண் : சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்…
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்…
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்…
போலியில்லாத புன்னகை கேட்டேன்…

ஆண் : தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்…
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்…
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்…
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்…

ஆண் : காசே வேண்டாம் கருணை கேட்டேன்…
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்…
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்…
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்…

ஆண் : இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை…
இதிலே எதுவும் நடக்கவில்லை…
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று…
மரணம் மரணம் மரணம் கேட்டேன்…


Notes : Satham Illatha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சத்தம் இல்லாத பாடல் வரிகள்.


மெட்டு தேடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.எஸ்.விஸ்வநாதன்பரத்வாஜ்காதல் மன்னன்

Mettu Thedi Song Lyrics in Tamil


BGM

ஆண் : மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு…

BGM

ஆண் : அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…

BGM

ஆண் : மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு…
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…

ஆண் : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

குழு (ஆண்கள்) : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

BGM

ஆண் : கண்ட காதலை வெளிய சொல்ல…
நெஞ்சில் தைரியம் இல்லை பலருக்கு…
நீ இருட்டில் நின்று கண் அடித்தால்… ஆஹா…

BGM

ஆண் : நீ இருட்டில் நின்று கண் அடித்தால்…
அது எப்படி தெரியும் அவளுக்கு…

ஆண் : வண்டு வந்து சொல்லும் வரைக்கும்…
தன் வயசு தெரியாது மலருக்கு…
வண்டு வந்து சொல்லும் வரைக்கும்…
தன் வயசு தெரியாது மலருக்கு…

ஆண் : நீ உந்தன் நெஞ்சை தேங்காய் போல…
உடைத்து காட்டப்பா அவளுக்கு…

ஆண் : ஆஹா… மெல்ல மெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…

குழு (ஆண்கள்) : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

BGM

ஆண் : ஆ ஹா… ஆ ஆ ஆ ஆ ஆ ஆ… ஹோ ஹோ…
கனவில் மட்டும் கட்டி அணைத்தால்…
காதல் வருமா கன்னிக்கு…
கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால்…
கவிதை வருமா கழுதைக்கு…

ஆண் : கனவில் மட்டும் கட்டி அணைத்தால்…
காதல் வருமா கன்னிக்கு…
கவி கண்ணதாசன் போல் தண்ணியடித்தால்…
கவிதை வருமா கழுதைக்கு…

ஆண் : விரும்பிய காதலி கிடைக்காவிட்டால்…
மீசை வளர்த்தது என்னத்துக்கு…
சம்பிரதாயம் குறுக்கே வந்தால்…
சாய்த்து போடப்பா அடுப்புக்கு…

ஆண்: ஆஹா… மெல்லமெல்ல மிச்சம் எல்லாம் சொல்லித்தாரேன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…
நான் மெஸ்சு கிஸ்சு ரெண்டும் கண்ட விஸ்வநாதன்டா…

ஆண் : மெட்டு தேடி தவிக்குது ஒரு பாட்டு…
அந்த பாட்டுக்குள்ளே துடிக்குது ஒரு மெட்டு…

ஆண் : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
இல்ல விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

குழு (ஆண்கள்) : அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…
அத கண்ணதாசன் கண்டு சொன்னா ரசிக்காதா…
மெஸ்சு விஸ்வநாதன் கண்டு சொன்னா ருசிக்காதா…

BGM


Notes : Mettu Thedi Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மெட்டு தேடி பாடல் வரிகள்.


திலோத்தமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபரத்வாஜ் & அனுபமா பரத்வாஜ்காதல் மன்னன்

Thilothamma Song Lyrics in Tamil


ஆண் : நான் மடி ஏந்தி மண் போல் யாசித்தேன்…
என் மழைத்துளியே ஏன் தான் யோசித்தாய்…
மனம் தாங்காதே…
பின் வாங்காதே…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

—BGM—

பெண் : இது மெய்தானே உன்னைக் கேட்கிறேன்…
அட என் கண்ணை நானே பார்க்கிறேன்…
என் கண்ணீரில் நன்றி சொல்கின்றேன்…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

பெண் : ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ…

பெண் : மாற்றம் மனதிலொரு மாற்றம்….
மாற்றம் விழியில் தடுமாற்றம்…
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு…

ஆண் : ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி… ஹே ஹி…
காதல் அனைவருக்கும் பூவோ…
எனக்கு மட்டும் முள்ளோ…
முள்ளோ உன்னால் சொல்லாமலே முத்தாடவோ…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

BGM

ஆண் : இது சொல்லாத சோகம் அல்லவா…
அதை மௌனங்கள் சொல்லும் அல்லவா…
தள்ளிப்போனாலும் உள்ளம் போகாது…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…

பெண் : இவள் நெஞ்சோடு ஏதோ உள்ளது…
அதை உன் காதில் சொன்னால் நல்லது…
மௌனம் தீர்ப்போமா…
மீண்டும் பார்ப்போமா…

ஆண் : திலோத்தமா…
திலோத்தமா…
திலோத்தமா…


Notes : Thilothamma Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.


வானும் மண்ணும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன் & கே.எஸ். சித்ராபரத்வாஜ்காதல் மன்னன்

Vaanum Mannum Song Lyrics in Tamil


ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…

பெண் : ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை…
அது இனம் பார்ப்பதில்லை…
அது பொசுக்கென்று பூத்திடுதே…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…
மண்ணில் நீலம் ஒட்டிக்கொண்டதே…

பெண் : ஒரு மூங்கில் காடெறிய…
சிறு பொறி ஒன்று போதும்…
அந்த பொறி இன்று தோன்றியதே…

ஆண் : காதல் இடம் பார்ப்பதில்லை…
அது இனம் பார்ப்பதில்லை…
அது பொசுக்கென்று பூத்திடுதே…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : நியாயமா இது பாவமா…
என்று சொல்ல யாரும் இங்கு இல்லை…

பெண் : மௌனமே மொழியானதால்…
அட பாஷை என்பதொரு தொல்லை…
அடுத்தொன்று தோன்றவில்லை…

ஆண் : ஆ ஆ… வெண்ணிலா நீராற்றிலே என்றும்…
வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை…

பெண் : வெண்ணிலா தங்க சேற்றிலே…
இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை…
இலக்கணம் பார்க்கவில்லை…

ஆண் : பிறக்கும் மொட்டுகள் தேதி…
பார்ப்பதுவும் இல்லை…

பெண் : ஆ ஆ… உறவு மாறலாம்…
உந்தன் கையில் அது இல்லை…

ஆண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

பெண் : எவ்விடம் மழை தூவலாம் என்று…
மேகம் யோசிப்பது உண்டோ…
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு…
காதல் கூடுவது உண்டோ…
உணர்ச்சிக்கு பாதை உண்டோ…

ஆண் : விதியினும் காதல் வலியது…
இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ…
காதலின் திசை ஆயிரம்…
அது கண்டு சொன்னவர்கள் உண்டோ…
கனவுக்கு வேலியுண்டோ…

பெண் : காலம் சொல்லுவதை காதல்…
கேட்பதுவும் இல்லை…

ஆண் : ஆ ஆ… ஆசை என்ற நதி…
அணையில் நிற்பதுவும் இல்லை…

பெண் : ஒரு நீரோடை மீனுக்கு…
கரை மேல் ஆசை வந்தது…
இனி என்னென்ன நேர்ந்திடுமோ…

BGM

ஆண் : வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே…

பெண் : மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே…


Notes : Vaanum Mannum Song Lyrics in Tamil. This Song from Kadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. வானும் மண்ணும் பாடல் வரிகள்.


ஒரு வார்த்தை கேட்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிருஷ்ணகுமார் குன்னத் & சாதனா சர்கம்பரத்வாஜ்ஐயா

Oru Vaartha Kekka Song Lyrics in Tamil


பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

BGM

பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…
இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…
மணமாலை ஒன்ன பூ பூவாய் கோர்த்திருந்தேன்…
அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டி கிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

BGM

பெண் : ஊருக்குள்ள ஓடும் தெருவில்…
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்…
நீ நடந்த சுவடுகள் இருந்தால்…
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்…

ஆண் : இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட…
அது திறக்கல என்றதுமே உடைச்சுப்புட்ட…

பெண் : நீ கிடைக்க வேண்டும் என்று…
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்…
பேச்சியம்மன் கோயில் சாமி…
பேப்பர் சாமி ஆனது என்ன…

ஆண் : கண்ணுக்குள்ள ஓடிய உன்ன துரத்த…
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச…
மனசுக்குள் ஒளிஞ்சிடும் உன்ன விரட்ட…
உசுருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச…

பெண் : ஓ… நீ கொடுத்த கல் கூட…
செங்கல் சாமி ஆனதய்யா…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…
அந்த பார்வை பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

BGM

பெண் : அடுத்த வீட்டு கல்யாணத்தின்…
பத்திரிக்கை பார்க்கும்போது…
நமது பேரை மணமக்களாக…
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்…

ஆண் : நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு…
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு…

பெண் : கட்டபொம்மன் உருவம் போல…
உன்ன வரைந்து மறைத்தே வைத்தேன்…
தேசபற்று ஓவியம் என்று…
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட…

ஆண் : அணைகட்டு போலவே இருக்கும் மனசு…
நீ தொட்டு ஒடஞ்சது என்ன…
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்…
பூ பட்டு சரிஞ்சது என்ன…

பெண் : வேப்ப மரம் சுத்தி வந்தேன்…
அரச மரமும் பூத்ததய்யா…
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்…

ஆண் : ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன்…

பெண் : இந்த பார்வை பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன்…

ஆண் : அந்த பார்வை பார்க்க முடியாம…
நான் ஒதுங்கி நின்னேன்…

பெண் : சூரியன சூரியன சுருக்கு பையில்…
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்…

பெண் : சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா…
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிகிட்டேன்…
தண்ணிக்குள்ளதான் நட்ட தாமரை கொடி…
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே…

BGM


Notes : Oru Vaartha Kekka Song Lyrics in Tamil. This Song from Ayya (2004). Song Lyrics penned by Pa Vijay. ஒரு வார்த்தை கேட்க பாடல் வரிகள்.


மாரிமுத்து மாரிமுத்து

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதேவாபரத்வாஜ்காதல் மன்னன்

Marimuthu Marimuthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்…
காதலுக்கு கோடு ஏதப்பா…

ஆண் : ஹேய்… பட்ட தண்ணி போட்டாலும்…
பாரின் தண்ணி போட்டாலும்…
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா…

ஆண் : பொத்தி பொத்தி மறைப்பது என்னப்பா…
அது ஒத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா…
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா…
சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா…

ஆண் : முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா…
ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா…
அட பூ இட்டு மணக்கும் பொம்பளைங்க கிடைச்சா…
பூமியில நித்தம் வேற என்னப்பா… ஆ… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM

ஆண் : ஹே தாமு… ஹே மாமு…
ஹே தாமு… ஹே மாமு…

ஆண் : என்ன மேட்டர் டாவு மேட்டர்…
அப்படி இப்படி மேல கீழ லெஃப்ட் ரைட் சைடு வாங்கி…
பத்தல பத்தல அடி வாங்கி எஸ்கேப்…

BGM

ஆண் : காலமும் வாழ்க்கையும் பூட்டியே கெடக்குது…
காதல் என்னும் சாவி உண்டு தொறக்க…
காதலும் கர்ப்பமும் தும்மலும் ஒண்ணுதான்…
மூனையும் எத வச்சு மறைக்க…

ஆண் : அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க…
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க…
இதயம் விட்டு விட்டு துடிக்க…
அவ இருக்குற தெச மட்டும் மணக்க…

ஆண் : ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க…
எதுக்கப்பா பசி வந்து கெடக்க…
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா…
ஈதுண்டு தெரியுது கிழக்கா… ஓய்…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா…
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா…

ஆண் : மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா…
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா…

BGM


Notes : Marimuthu Marimuthu Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. மாரிமுத்து மாரிமுத்து பாடல் வரிகள்.


கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஃபெபி & அட அலி அசாத்பரத்வாஜ்காதல் மன்னன்

Kanni Pengal Nenjukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…

குழு (ஆண்கள்) : கையெழுத்து போட்டவன்…

பெண் : பத்துபேர்கள் மத்தியில்…

குழு (ஆண்கள்) : பளிச்சென்று உள்ளவன்…

பெண் : அழுக்கு சட்டை போட்டாலும்…

குழு (ஆண்கள்) : அழகாய் தோன்றும் ஆணழகன்…

பெண் : பெண்ணின் பின்னால் சுற்றாமல்…

குழு (ஆண்கள்) : பெண்ணே சுற்றும் பேரழகன் எவனோ… ஓ ஓ…

பெண் : கல்வி இல்லா கண்ணியரும்…
கடிதம் எழுத செய்கிறவன்…
காதலித்த பெண் மனதில்…
கல்லை எறிந்து போகிறவன் எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண் : சுவர் எல்லாம் பெண்கள் ஒட்டி தொட்டு பார்க்கும் வயசு…
உறவாடும் கனவை கண்டு உச்சி கொட்டும் உதடு…
ரதி தேவி பேத்தி போல மனைவி தேடும் மனசு…
எதிர் வீட்டை அத்தை வீடாய் எண்ணி பார்க்கும் வயசு…

பெண் : சின்ன பெண்கள் இடையே…
சிக்கி கொண்ட போதும்…
அலைகள் முட்டும் பாறை போல…
அசையாதுள்ள வீரன் எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண்: முன்னால் மலர்கள் என்று ஒரு போதும் இல்லை…
முன்னால் இளமை ஒன்று வர போவதும் இல்லை…
நம் நாட்டில் மக்கள் தொகை தொண்ணூற்றாறு கோடி…
அழகான பெண்கள் மட்டும் ஐம்பத்தாறு கோடி…

பெண்: இதில் பெண்கள் வந்து கண்கள் வைப்பவன் யாரோ…
அவன் பேரை கேளுங்கள்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

BGM

பெண் : மதம் என்ன ஜாதி என்ன…

குழு (ஆண்கள்) : மறந்து போனோம் நாங்கள்…

பெண் : பல ஊரு பறவைக்கெல்லாம்…

குழு (ஆண்கள்) : இதுதான் வேடந்த்தாங்கள்…

பெண் : உணவொடு பசியை கூட…

குழு (ஆண்கள்) : பகிர்ந்து கொள்வோம் நாங்கள்…

பெண் : கிழமை தேதி பார்ப்பதும் இல்லை…

குழு (ஆண்கள்) : நகரும் எங்கள் நாட்கள்…

பெண் : எதுவும் இல்லை கையில் எல்லாம் உள்ளது நெஞ்சில்…
நாளை எந்தன் காலம் என்று பாடல் பாடும் காளை எவனோ…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…

பெண் : கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள்…
கையெழுத்து போட்டவன்…
பெண்ணின் பின்னால் சுற்றாமல்…
பெண்ணே சுற்றும் பேரழகன்…

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே… அவனே…
காதல் மன்னன்… காதல் மன்னன்…
காதல்மன்னன்… காதல் மன்னன்…

BGM

குழு (ஆண்கள்) : ஹே ஹே ஹே ஹே ஹே…


Notes : Kanni Pengal Nenjukkul Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. கன்னிப்பெண்கள் நெஞ்சுக்குள் பாடல் வரிகள்.


உன்னைப் பார்த்த பின்பு நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்பரத்வாஜ்காதல் மன்னன்

Unnai Paartha Pinbu Naan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்…

ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…
இளமை இளமை பாதித்தேன்…
கொள்ளை கொண்ட அந்த நிலா…
என்னைக் கொன்று கொன்று தின்றதே…
இன்பமான அந்த வலி…
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

ஆண் : ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்…
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்…
என் உயிரில் நீ பாதி என்று…
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்…

ஆண் : எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்…
இப்படி என் மனம் துடித்ததில்லை…
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு…
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை…

ஆண் : நீ வருவாயோ…
இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னைத் தருவாயோ…
இல்லை கரைவாயோ…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—

ஆண் : நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்…
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி…
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்…
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி…

ஆண் : மரபு வேலிக்குள் நீ இருக்க…
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை…
இமயமலை என்று தெரிந்த பின்னும்…
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை…

ஆண் : நீ வருவாயோ…
இல்லை மறைவாயோ… ஏ ஏ ஏ ஏ ஏ…
தன்னைத் தருவாயோ…
இல்லை கரைவாயோ…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…
என் நினைவு தெரிந்து நான்…
இதுபோல இல்லையே…
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்…
இரவும் பகலும் சிந்தித்தேன்…

ஆண் : இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்…
இளமை இளமை பாதித்தேன்…
கொள்ளை கொண்ட அந்த நிலா…
என்னைக் கொன்று கொன்று தின்றதே…
இன்பமான அந்த வலி…
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே…

ஆண் : உன்னைப் பார்த்த பின்பு நான்…
நானாக இல்லையே…

—BGM—


Notes : Unnai Paartha Pinbu Naan Song Lyrics in Tamil. This Song from Kaadhal Mannan (1998). Song Lyrics penned by Vairamuthu. உன்னைப் பார்த்த பின்பு நான் பாடல் வரிகள்.