Tag Archives: ஜோஷ்வா ஸ்ரீதர்

விலகாதே எனதுயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil


BGM

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே…

BGM

ஆண் : மானே ஏனோ உந்தன் மௌனம் புரியவில்லை…
உன்னை தேற்ற ஒரு மொழியும் கையிலில்லை…
ஆனால் உன் மேல் உள்ள காதலும் குறையவில்லை…

ஆண் : வழி தெரியாத ஒளி தெரியாத…
ஒரு வித காட்டில் மாட்டி கொண்டேன்…
என்னை அறியாமல் நீ செல்லும் போது காயம் கொண்டேனே…
காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : அன்பே அன்பே என் காதல் பொய்யில்லையே…
அன்பே அன்பே அதை சொல்ல வழியில்லையே…
அன்பே அன்பே நீ இன்றி நான் இல்லையே…
அட கடவுள் தந்த வரம் கையில் வந்தவுடன் பிரிந்து போகின்றதே…

BGM

ஆண் : தனிமை தீவில் என் நாட்கள் ஓடுதடி…
பெண்ணே விழியில் உன் முகமே தெரியுதடி…
ஆஆ… ஒரு நாள் வருவாய் என்று எல்லாம் ஏங்குதடி…

ஆண் : சிறு பிள்ளை தவறை தாய் அறிவாலே…
அது போல் என்னை மன்னிப்பாயா…
இடைவெளி இன்னும் கூடிட நீயும் தண்டிப்பாயோ…
சொல்காலம் என் காதல் உந்தன் காதில் சொல்லிடுமே…

ஆண் : விலகாதே எனதுயிரே…
விலகாதே எனதுயிரே…
நீ போனால் அடி பிரியாதோ எனதுயிரே…

ஆண் : ஓஹோஓ… பழகாமல் என் கிளியே…
பறக்காதே நீ வெளியே…
அடி நீ போனால் உடன் பிரியாதோ எனதுயிரே… ஹோ ஓஓ…

BGM

ஆண் : எனதுயிரே…

BGM


Notes : Vilagaadhe Enadhuyirae Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. விலகாதே எனதுயிரே பாடல் வரிகள்.


மழை பொழிந்திடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்மது ஐயர் & ஜோஷ்வா ஸ்ரீதர்ஜோஷ்வா ஸ்ரீதர்ஒரு குப்பைக் கதை

Mazhai Pozhindhidum Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை பொழிந்திடும் நேரம்…
மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…

பெண் : தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…

பெண் : ஒரு முறை ஒரு மயக்கம்…
மறுமுறை ஒரு தயக்கம்…
என்னை அது எரிக்கும்… ஆஹா ஆஆ…

பெண் : எது வரை இது போகும்…
அது வரை நாம் போவோம்…
ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா…

ஆண் : இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற…
உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம்…
அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற…
கடலில் விழும் நதியாய் காதல் சேர…

BGM

பெண் : எங்கே எனை ஈர்த்தாய் நான் அறியேன் அன்பே…
எப்படி என்னை சாய்த்தாய் இன்று நான் விழுந்தேன் அன்பே…
அச்சம் மடம் நாணம் அதை துறந்தேன் அன்பே…

பெண் : ஏனோ என்னுள்ளே ஏதோ ஆனதடா…
தானாய் உன் தோளில் சாய்கிறேன்…
மேகம் மேல் ஏறி நெஞ்சம் நீந்துதடா…
விண்மீன் கூட்டத்தில் நான் கலந்தேன்…

ஆண் : இதயம் இரண்டும் உருகி இன்றது ஒன்றென மாற…
உயிர்கள் கலக்கும் பொன் மாலை நிமிடம்…
அடடா பெண்ணே பெண்ணே இனி நான் நான் என்ன கூற…
கடலில் விழும் நதியாய் காதல் சேர…

BGM

ஆண் : காமம் மோகம் ஏக்கம் தாகம்…
துக்கம் போகும்… ஓஹோ ஓஓ…
தேகம் எங்கும் என்றும் வாடும் நேரம்…
தூரம் போகும்… ஓஹோ ஓஓ…

பெண் : மழை பொழிந்திடும்…
நேரம் மனதில் ஓர் ஈரம்…
இன்னும் என்ன தூரம்… ஆஹா ஆஆ…

பெண் : தீயென உன் மோகம்…
திரியென என் தாகம்…
தீ பற்றிடும் நேரம்… ஆஹா ஆஆ…

பெண் : ஒரு முறை ஒரு மயக்கம்…
மறுமுறை ஒரு தயக்கம்…
என்னை அது எரிக்கும்… ஆஹா ஆஆ…

பெண் : எது வரை இது போகும்…
அது வரை நாம் போவோம்…
ஒன்றென ஒன்றாவோம் வா வா வா வா…


Notes : Mazhai Pozhindhidum Song Lyrics in Tamil. This Song from Oru Kuppai Kathai (2015). Song Lyrics penned by Na. Muthukumar. மழை பொழிந்திடும் பாடல் வரிகள்.


இவன்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சுனிதா சாரதிஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Ivanthan En Kanavodu Song Lyrics in Tamil


BGM

பெண் : இவன்தான்…
என் கனவோடு வருபவனோ…
என் மனதோடு வாழ்பவனோ…
என் உயிரோடு கலந்தவனோ…
என் வயதோடு கரைந்தவனோ…

பெண் : இவன்தான்…
என் இதழோடு சிரிப்பவனோ…
என் இரவோடு விழிப்பவனோ…
என் இமையாக துடிப்பவனோ…
என் சுமையாக இருப்பவனோ…

பெண் : என் கூந்தல் காட்டில் தொலைந்திடுவானோ…
என்னை கூறு போட வருபவனோ…
இந்த சிறுக்கி மனசை பிடித்திடுவானோ…
என் ஆசை பொறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்…

பெண் : இவன்தான்…
என் பாவாடை பூக்களிலே ஒரு தேன் தேட பிறந்தவனோ…
என் தேய்கின்ற நினைவுகளை தேன் நிலவாக்க பிறந்தவனோ…

பெண் : லலலலல்லா தரராரா…
தர ர ர ரா ரா ர ர ர ரா ராரா…
இந்த சிறுக்கி மனசை பிடித்தவனோ…
தரராரா தர ர ர ரா…
ரா ர ர ர ரா ராரா தர ர ர ர ரா…

BGM


Notes : Ivanthan En Kanavodu Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. இவன்தான் பாடல் வரிகள்.


கிறு கிறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & பாப் ஷாலினிஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Kiru Kiru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…
பெண் : கெறங்குற நொறுங்குற…

ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…
பெண் : முழிக்கிற இழுக்கற…

ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன்…
நான் தீ கோழியா துடிக்கிறேன்…
பெண் : தவிக்கிற துடிக்கிற…

ஆண் : விக்கி விக்கி வழுகிறேன்…
நான் வில்ல போல வளையுறேன்…
பெண் : வழுக்கற வளையற…

BGM

ஆண் : குறுக்கும் நெடுக்கும் பாத்து பாத்து…
கிறுக்கு புடிச்சு அலையுறேன்…
குலுக்கி போட்ட சோழிய போல…
கண்ணு அடிச்சு சொருகுறேன்…
பெண் : அலையுற சொருகுற…

ஆண் : முறுக்கி வச்ச தாம்பு கயிற…
மடங்கி மடங்கி மருகுறேன்…
மந்திரிச்ச ஆட்ட போல…
எந்திரிச்சு மொணங்குறேன்…
பெண் : மருகுற மொணங்குற…

ஆண் : ஈரவானம் மேல ஏறும் எலி போல நொலையுறேன்…
திரை போட்டு தங்க சிலைய திருடத்தானே திரியுறேன்…
பெண் : நொழையுற திரியுற…

BGM

ஆண் : கொட்ட கொட்ட கண் முழிச்சு ஆந்த போல ஏங்குறேன்…
கிட்ட தட்ட வௌவாலாக தலை கீழாக தொங்குறேன்…
பெண் : ஏங்குற தொங்குற…

ஆண் : குட்டி போட்ட பூன போல…
கூச்சம் விட்டு சிணுங்குறேன்…
பூட்டு போட்ட பொட்டிய போல…
பத்திரமாக பதுங்குறேன்…
பெண் : சிணுங்குற பதுங்குற…

ஆண் : நீ சிரிக்கும் நேரம் பாத்து…
பசியினு கெஞ்சுறேன்…
நீயும் கொஞ்சம் சம்மதிச்சா…
பாத்திரத்த முழுங்குறேன்…
பெண் : கெஞ்சுற முழுங்குற…

ஆண் : கிறு கிறு கிறு வென கெறங்குறேன்…
நான் நொறு நொறு நொறு என நொறுங்குறேன்…

BGM

ஆண் : திரு திரு திரு வென முழிக்கிறேன்…
நான் தரையில நூல இழுக்குறேன்…

BGM

ஆண் : திக்கி தடவி தவிக்கிறேன்…
நான் தீ கோழியா துடிக்கிறேன்…

BGM

ஆண் : விக்கி விக்கி வழுகிறேன்…
நான் வில்ல போல வளையுறேன்…

BGM


Notes : Kiru Kiru Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. கிறு கிறு பாடல் வரிகள்.


அல்லாவே எங்களின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownமாணிக்க விநாயகம்ஜோஷ்வா ஸ்ரீதர்அரண்

Allahve Engalin Song Lyrics in Tamil


BGM

ஆண் : அல்லாவே எங்களின் தாய் பூமி…
பூவாசம் பொங்கியதால் ஏரி…
அல்லாவே எங்களின் தாய் பூமி…
பூவாசம் பொங்கியதால் ஏரி…

ஆண் : பூவனம் போர்க்களம் ஆனதேனோ…
பனிவிழும் மலைகளில் பலிகள் ஏனோ…
யா அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாதா…
யா அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா…

ஆண் : உம்மை நானும் கேட்பது மீண்டும் எங்கள் காஷ்மீர்…
யா அல்லா என் காஷ்மீர் அழகாய் மாறாதா…
யா அல்லா என் காஷ்மீர் அமைதி காணாதா…

ஆண் : ஒ… அந்த ஆப்பிள் தோட்டம் எங்கே…
கல்லறை தோட்டம் ஆனதா…
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே…
ரத்த கோலம் பூண்டதா…

ஆண் : வாழ்கையே இங்குதான் வலிகளாய் போனதே…
எங்கள் பெண்கள் முகங்கள் சிவந்ததெல்லாம்…
நாணம் கொண்டு அன்று…
மரணம் கண்டு இன்று…

ஆண் : ஒ… எங்கள் காஷ்மீரின் ரோஜா பூ…
விதவைகள் பார்த்து அழத்தானா…
ஒ… எங்கள் காஷ்மீரின் வாரிசுகள்…
மரணத்தின் கையில் விழத்தானா…

ஆண் : எங்கள் மண்ணில் குண்டு வைத்து…
எங்கும் ஓலம்…
எங்களின் கண்ணில் கத்தி வைத்து…
குத்தும் காலம்…

ஆண் : ஒ அல்லா எங்கு போகும் காஷ்மீர் புறாக்கள்…
ஒ அல்லா என்று தோன்றும் காஷ்மீர் விழாக்கள்…

ஆண் : எங்கள் அன்றைய காஷ்மீர்…
எங்கள் காஷ்மீர்… ஒ ஹோ…

BGM

ஆண் : எங்கள் சொர்க்க பூமியை இன்று…
சாக்காடாய் யார் செய்தார்…
எங்கள் சொந்த பிள்ளையை பலி கேட்கும்…
சதி எல்லாம் யார் செய்தார்…

ஆண் : கலவரம் முடியுமா நிலவரம் மாறுமா…
எங்கள் வீட்டுத் தோட்டம் முன்பு போல்…
பூக்கள் பூத்திட வேண்டும்…
புதை குழி அழிந்திட வேண்டும்…

BGM

ஆண் : சாலையில் சென்று வர இன்று…
ஒ சாவினை வென்று வர வேண்டும்…
சாலையில் சென்று வர இன்று…
சாவினை வென்று வர வேண்டும்…

ஆண் : இந்த நிலையை தந்ததாரோ புரியவில்லை…
கண்களை மூடியும் தூக்கம் இல்லை…
மேகம் கூட கண்ணீரை சோகமாய் சிந்துதே…

ஆண் : எங்கள் காஷ்மீர்… எங்கள் காஷ்மீர்…
எங்கள் காஷ்மீர்… எங்கள் காஷ்மீர்…

BGM


Notes : Allahve Engalin Song Lyrics in Tamil. This Song from Aran (2006). Song Lyrics penned by Unknown. அல்லாவே எங்களின் பாடல் வரிகள்.


காற்றில் ஈரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ஸ்ரீசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Kaatril Eeram Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…

ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…

ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம்…
இதயக் கூட்டில் நீந்திடுதே…
நடை பாதை பூக்கள் எல்லாம்…
கைகள் நீட்டிடுதே…

ஆண் : நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மீது பூத்திடுதே…
வாழ்க்கையை பிடிக்கிறதே…

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…

ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…

BGM

ஆண் : ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்…
உயிரோடு வாழும் பயணம் இந்த பயணம்…
இது தொடர்ந்திட வேண்டும்…

ஆண் : அருகில் உனதருகில் நான் வாழும்…
நிகழ் காலம் போதும் நிமிடம் இந்த நிமிடம்…
இது உறைந்திட வேண்டும்…

ஆண் : மௌனத்தில் சில நேரம்…
மயக்கத்தில் சில நேரம்…
தயக்கத்தில் சில நேரம்…
இது என்னவோ புது உணர்விங்கே…

ஆண் : கண்ணருகில் சில தூரம்…
கை அருகில் சில தூரம்…
வழித்துனையைக் கேட்கிறதே வா வா…

ஆண் : ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன்…
இங்கு இதனை ஈரமோ…
நம் கண்களில் ஓரமா…
புதுக் கனவுகள் நூறும்…

ஆண் : இது என்ன இது என்ன…
இந்த நாள் தான் திருநாளா…
இதற்காக இதற்காக…
காத்திருந்தோம் வெகு நாளா…

ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம்…
இதயக் கூட்டில் நீந்திடுதே…
நடை பாதை பூக்கள் எல்லாம்…
கைகள் நீட்டிடுதே…

ஆண் : நீங்காத புன்னகை ஒன்று…
உதட்டின் மீது பூத்திடுதே…
வாழ்க்கையை பிடிக்கிறதே…

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…

ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…

BGM


Notes : Kaatril Eeram Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றில் ஈரம் பாடல் வரிகள்.


ஒரு தேவதை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிளிண்டன் & ஸ்வேதா மோகன்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Oru Devadai Song Lyrics in Tamil


ஆண் : ஹ்ம்ம் ஒ… ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

ஆண் : என்னோடு புது மாற்றம் தந்தாள்…
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்…
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்…
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ…

ஆண் : கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்…
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்…

BGM

ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

BGM

பெண் : என் வானில் மேகங்கள் சொல்லாமல் தூறுதே…
என் காதல் வானிலை சந்தோஷம் தூவுதே…
நீ தந்தான் பார்வை நனைந்தாளே பாவை…
அன்பே அன்பே எந்தன் நெஞ்சில்…

பெண் : ஒளி வீசும் காலை…
இருள் பூசும் மாலை…
உந்தன் முகம் எந்தன் கண்ணில்…

ஆண் : மின்சாரம் இல்லா நேரத்தில்…
மின்னலாய் வந்து ஒளி தருவாள்…
அந்த வெளிச்ச மழையில் நான் நனைந்திடுவேன்…

ஆண் : விரல் தொட்டு விடும் தூரத்தில்…
மனம் சுட்டெரிக்கும் பாரத்தில்…
புரியாத போதை இது புரிந்த போதும்…
அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்…

BGM

ஆண் : அவள் மாலையில் மலர்ந்திடும் மலர் அல்லவா…
வாசனை என் சொந்தம்…
அவள் அனைவரும் ரசித்திடும் நதி அல்லவா…
அலை மட்டும் என் சொந்தம்…

BGM

ஆண் : கண்ணாடி அவள் பார்த்ததில்லை…
ஏன் என்று நான் கேட்டதில்லை…
அவள் அழகை அளக்கும் ஒரு கருவி அல்ல…

ஆண் : அவள் கட்டளையை கேட்டு தான்…
நான் கட்டுப்பட்டு வாழுவேன்…
அறியாத பாதை இது அறிந்த போதும்…
அவள் பக்கம் வர பக்கம் வர படபடக்கும்…

BGM

ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

ஆண் : என்னோடு புது மாற்றம் தந்தாள்…
எங்கெங்கும் உரு மாற்றம் தந்தாள்…
என் வாழ்வில் ஒரு ஏற்றம் தந்தாள்…
அவள் எனக்கு என்று இந்த மண்ணில் வந்து பிறந்தவளோ…

ஆண் : கண் தூங்கும் போதும் காதல் தந்தாள்…
அவள் கடவுள் தந்த பரிசாக கையில் கிடைத்தாள்…

BGM

ஆண் : ஒரு தேவதை வீசிடும் பார்வையிலே…
விழுவது ஒரு சுகம்…
அவள் தூரத்தில் வருவதை பார்க்கையிலே…
கரைவதும் ஒரு சுகம்…

BGM


Notes : Oru Devadai Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு தேவதை பாடல் வரிகள்.


Thottu Thottu Ennai Song Lyrics in Tamil

தொட்டு தொட்டு என்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண் & ஹரிணி சுதாகாஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Thottu Thottu Ennai Song Lyrics in Tamil


ஆண் : தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

பெண் : தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

ஆண் : விழியில் விழுந்து…
வழியினை மறக்கிறேன்…

பெண் : உனக்குள் உம்…
தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…

BGM

ஆண் : தொட்டு தொட்டு என்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

பெண் : தொட்டு தொட்டு என்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

BGM

ஆண் : தாய் உடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்…
உடனே மறக்கும்…
உன்னுடன் பேசும் வார்த்தைகள் எல்லாம்…
உள்ளே நிலைக்கும்…

BGM

பெண் : முதல் முறை உன்னை பார்த்தது எங்கே…
மனதும் தேடும்…
மலை நின்ற பின்னும் மரகிளை இங்கே…
மெதுவாய் தூவும்…

ஆண் : இதயத்தின் உள்ளே…
இமயத்தை போலே…
சுமைகளை வைத்தால் காதல்…

பெண் : உலகத்தில் உள்ள…
சித்ரவதைகெல்லாம் செல்ல…
பெயர் வைத்தால் காதல்…

BGM

ஆண் : எங்கே நான் போனாலும்…
என் வாழ்வில் என்றும்…
உன் நிழலில் இளைப்பாற வருவேன் கண்ணே…

ஆண் : மரணம்தான் வந்தாலும் பூசெண்டு தந்து…
உன் மடியில் தலைசாய்த்து…
இறப்பேன் பெண்ணே…

BGM

ஆண் : கருவிழி ரெண்டும் கருவறைதானோ…
மீண்டும் பிறந்தேன்…
கங்கரூவை போல நெஞ்சுக்குள்ளே நானும்…
உன்னை சுமந்தேன்…

BGM

பெண் : உன்னை போல யாரும்…
என்னை தாண்டி போனால்…
உன்னை நினைப்பேன்…

பெண் : உந்தன் ஆசை முகம்…
பார்த்து கிடக்கத்தான் உயிரை சுமப்பேன்…

ஆண் : நெருங்கவும் இல்லை…
விலகவும் இல்லை…
நெஞ்சம் செய்யும் தொல்லை காதல்…

பெண் : தொடக்கமும் இல்லை…
முடிவுகள் இல்லை…
கடவுளை போலே காதல்…

BGM

பெண் : தொட்டு தொட்டு உன்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

குழு : சிற்பமாக யார் செய்ததோ…

ஆண் : தொட்டு தொட்டு உன்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…

குழு : திட்டமிட்டு யார் வென்றதோ…

பெண் : விழியில் விழுந்து…
வழியினை மறக்கிறேன்…

ஆண் : உனக்குள்… ஆ ஆ…
தொலைந்து உயிரோடு கலக்கிறேன்…

BGM

பெண் : தொட்டு தொட்டு உன்னை…
வெற்று கழி மண்ணை…
சிற்பமாக யார் செய்ததோ…

ஆண் : தொட்டு தொட்டு உன்னை…
பட்டாம்பூச்சி பெண்ணை…
திட்டமிட்டு யார் வென்றதோ…


Notes : Thottu Thottu Ennai Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. தொட்டு தொட்டு என்னை பாடல் வரிகள்.


உனக்கென இருப்பேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்ஜோஷ்வா ஸ்ரீதர்காதல்

Unakena Irupen Song Lyrics in Tamil


ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

BGM

ஆண் : கண்ணிர் துளிகளை…
கண்கள் தாங்கும்…
கண்மணி காதலின்…
நெஞ்சம்தான் தாங்கிடுமா…

ஆண் : கல்லறை மீதுதான்…
பூத்த பூக்கள்…
என்றுதான் வண்ணத்து…
பூச்சிகள் பார்த்திடுமா…

ஆண் : மின்சார கம்பிகள் மீது…
மைனாக்கள் கூடுகட்டும்…
நம் காதல் தடைகளை தாண்டும்…

ஆண் : வளையாமல் நதிகள் இல்லை…
வலிக்காமல் வாழ்க்கை இல்லை…
வருங்காலம் காயம் ஆற்றும்…

ஆண் : நிலவொளியை மட்டும் நம்பி…
இலை எல்லாம் வாழ்வதில்லை…
மின்மினியும் ஒளிகொடுக்கும்…

BGM

ஆண் : தந்தையும் தாயயும்…
தாண்டி வந்தாய்…
தோழியே இரண்டுமாய்…
என்றுமே நான் இருப்பேன்…

ஆண் : தோளிலே நீயுமே சாயும்போது…
எதிர்வரும் துயரங்கள்…
அனைத்தையும் நான் எதிா்ப்பேன்…

ஆண் : வெந்நீரில் நீ குளிக்க…
விறகாகி தீ குளிப்பேன்…
உதிரத்தில் உன்னை கலப்பேன்…

ஆண் : விழிமூடும் போதும் உன்னை…
பிரியாமல் நான் இருப்பேன்…
கனவுக்குள் காவல் இருப்பேன்…

ஆண் : நான் என்றால் நானே இல்லை…
நீதானே நானாய் ஆனேன்…
நீ அழுதால் நான் துடிப்பேன்…

ஆண் : உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்…

ஆண் : கண்மணியே… கண்மணியே…
அழுவதேன்… கண்மணியே…
வழித்துணை நான் இருக்க…


Notes : Unakena Irupen Song Lyrics in Tamil. This Song from Kaadhal (2004). Song Lyrics penned by Na. Muthukumar. உனக்கென இருப்பேன் பாடல் வரிகள்.


மழை வரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சூசன்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Mazhai Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…

பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

BGM

பெண் : அறியாதொரு வயதில் விதைத்தது… ஓஓ… ஓஓ…
அதுவாகவே தானாய் வளர்ந்தது… ஓஓ…
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்… ஓஓ… ஓஓ…
அட யாரதை யாரதை பறித்தது… ஓஓ…

பெண் : உன் கால்தடம் சென்ற வழி…
பார்த்து நானும் வந்தேனே…
அது பாதியில் தொலைந்ததடா…

BGM

பெண் : நான் கேட்டது அழகிய நேரங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்… ஓஓ…
நான் கேட்டது வானவில் மாயங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது வழிகளில் காயங்கள்… ஓஓ…

பெண் : இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே…
அது உயிருடன் எரிக்குதடா…

பெண் : ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…
ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…

பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…


Notes : Mazhai Varum Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. மழை வரும் பாடல் வரிகள்.