மழை வரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சூசன்ஜோஷ்வா ஸ்ரீதர்வெப்பம்

Mazhai Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…

பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

BGM

பெண் : அறியாதொரு வயதில் விதைத்தது… ஓஓ… ஓஓ…
அதுவாகவே தானாய் வளர்ந்தது… ஓஓ…
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில்… ஓஓ… ஓஓ…
அட யாரதை யாரதை பறித்தது… ஓஓ…

பெண் : உன் கால்தடம் சென்ற வழி…
பார்த்து நானும் வந்தேனே…
அது பாதியில் தொலைந்ததடா…

BGM

பெண் : நான் கேட்டது அழகிய நேரங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது விழிகளில் ஈரங்கள்… ஓஓ…
நான் கேட்டது வானவில் மாயங்கள்… ஓஓ… ஓஓ…
யார் தந்தது வழிகளில் காயங்கள்… ஓஓ…

பெண் : இந்த காதலும் ஒரு வகை சித்ரவதை தானே…
அது உயிருடன் எரிக்குதடா…

பெண் : ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…
ஓஹோ… ஓஹோ ஹோ…
ஹோ ஓ… ஹோஹோஓ…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…

பெண் : உன் தோளில் சாயும்போது…
உற்சாகம் கொள்ளும் கண்கள்…
நீ எங்கே எங்கே என்று…
உன்னை தேடி தேடி பார்க்கிறது…

பெண் : உன்னோடு போகும்போது…
பூ பூக்கும் சாலையாவும்…
நீ எங்கே என்று என்னை…
கேட்ட பின்பு வாடிடுதே…

பெண் : மழை வரும் அறிகுறி…
என் விழிகளில் தெரியுதே…
மனம் இன்று நனையுதே…
இது என்ன காதலா சாதலா…

பெண் : பழகிய காலங்கள்…
என் பார்வையில் விரியுதே…
பாதைகள் நழுவுதே…
இது ஏனோ ஏனோ…


Notes : Mazhai Varum Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. மழை வரும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top