பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கார்த்திக் & ஸ்ரீசரண் | ஜோஷ்வா ஸ்ரீதர் | வெப்பம் |
Kaatril Eeram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…
ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…
ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம்…
இதயக் கூட்டில் நீந்திடுதே…
நடை பாதை பூக்கள் எல்லாம்…
கைகள் நீட்டிடுதே…
ஆண் : நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மீது பூத்திடுதே…
வாழ்க்கையை பிடிக்கிறதே…
ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…
ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…
—BGM—
ஆண் : ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்…
உயிரோடு வாழும் பயணம் இந்த பயணம்…
இது தொடர்ந்திட வேண்டும்…
ஆண் : அருகில் உனதருகில் நான் வாழும்…
நிகழ் காலம் போதும் நிமிடம் இந்த நிமிடம்…
இது உறைந்திட வேண்டும்…
ஆண் : மௌனத்தில் சில நேரம்…
மயக்கத்தில் சில நேரம்…
தயக்கத்தில் சில நேரம்…
இது என்னவோ புது உணர்விங்கே…
ஆண் : கண்ணருகில் சில தூரம்…
கை அருகில் சில தூரம்…
வழித்துனையைக் கேட்கிறதே வா வா…
ஆண் : ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன்…
இங்கு இதனை ஈரமோ…
நம் கண்களில் ஓரமா…
புதுக் கனவுகள் நூறும்…
ஆண் : இது என்ன இது என்ன…
இந்த நாள் தான் திருநாளா…
இதற்காக இதற்காக…
காத்திருந்தோம் வெகு நாளா…
ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம்…
இதயக் கூட்டில் நீந்திடுதே…
நடை பாதை பூக்கள் எல்லாம்…
கைகள் நீட்டிடுதே…
ஆண் : நீங்காத புன்னகை ஒன்று…
உதட்டின் மீது பூத்திடுதே…
வாழ்க்கையை பிடிக்கிறதே…
ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ…
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ…
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா…
ஆண் : நேற்று நாளை அது பொய்யானதோ…
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா…
—BGM—
Notes : Kaatril Eeram Song Lyrics in Tamil. This Song from Veppam (2011). Song Lyrics penned by Na. Muthukumar. காற்றில் ஈரம் பாடல் வரிகள்.