Tag Archives: எம்.எஸ்.விஸ்வநாதன்

சிந்து நதியின்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்டி.எம். சௌந்தரராஜன், L.R. ஈஸ்வரி & ஜே.வி.ராகவுலுஎம்.எஸ். விஸ்வநாதன்கை கொடுத்த தெய்வம்

Sindhu Nadhiyin Song Lyrics in Tamil


ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…

BGM

ஆண் : சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

ஆண் : கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்…
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…
சிங்க மராட்டியர் தம் கவிதைக் கொண்டு…
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM

பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…
ஆண் & பெண் : மனசிதி நீ கோசம் மனுகட நீ கோசம்…

ஆண் : மமதா வேதம் மாயனி மதுபாசம்…
ஆண் & பெண் : மமதாஅவேதம் மாயனி மதுபாசம்…
மனசிதி நீ கோசம் மனு கட நீ கோசம்…

BGM

ஆண் : நீ கண் கனராகம்…
பெண் : நீ மதி அனுராகம்…
ஆண் : மன ஈ வைபோகம்…
பெண் : பகுதன் அலையோகம்…

ஆண் : வளபுலபுகுலாசம்…
பெண் : நரபுல தராசம்…
ஆண் : வஹிதின அவகாசம்…
பெண் : சா நலிவுலு ஆவேசம்…

BGM

ஆண் : சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…
சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்…
சேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்…

ஆண் : வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…
வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்…
மையத்து நாடுகளில் பயிர் செய்யுவோம்…

ஆண் : சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

BGM


Notes : Sindhu Nadhiyin Song Lyrics in Tamil. This Song from Kai Kodutha Deivam (1964). Song Lyrics penned by Mahakavi Subramania Bharathiyar. சிந்து நதியின் பாடல் வரிகள்.


கல்யாணமே ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்லலிதா

Kalyaaname Song Lyrics in Tamil


பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று…
தாரை வார்க்கும்வரை…
பெண்ணின் வீடு காலகாலம்…
தலைவன் அழைக்கும் வரை…
அந்த தலைவன் அழைக்கும் வரை…

பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…
பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…

பெண் : உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

BGM

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே…
அன்னை மொழி சொன்னது…
அன்னை மொழி சொன்னது…

பெண் : இந்த விளக்கம் எதற்காக சொன்னேன்…
இன்று ஏதாவது…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : நேற்று கதையை நேற்றோடு மறப்போம்…
இன்று முதலிரவு இன்று முதலிரவு…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…


Notes : Kalyaaname Song Lyrics in Tamil. This Song from Lalitha (1976). Song Lyrics penned by Kannadasan. கல்யாணமே ஒரு பாடல் வரிகள்.


நீ வருவாய் என

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கல்யாணி மேனன்எம்.எஸ். விஸ்வநாதன்சுஜாதா

Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை…
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை…
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…

பெண் : இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு…
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு…
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…

பெண் : குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…

பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு…
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு…
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM


Notes : Nee Varuvaiyena Naan Song Lyrics in Tamil. This Song from Sujatha (1980). Song Lyrics penned by Kannadasan. நீ வருவாய் என பாடல் வரிகள்.


சக்தியில்லாமல் உலகேது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன்எம்.எஸ்.விஸ்வநாதன்தேவி தரிசனம்

Sakthi Illamal Ulagedhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…
சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…

ஆண் : பக்தியை மறவாதே என் மகளே…
உன் பாதையிலே வருவாள் திருமகளே…

ஆண் : சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…

BGM

ஆண் : துன்பங்கள் எல்லாமும் சோதனைதான்…
அதைத் துடைப்பதும் தேவி செய்யும் சாதனைதான்…
துன்பங்கள் எல்லாமும் சோதனைதான்…
அதைத் துடைப்பதும் தேவி செய்யும் சாதனைதான்…

ஆண் : பந்தங்கள் எங்கேதான் ஓடிவிடும்…
அவள் பார்வை பட்டால் போதும் கூடிவிடும்…

ஆண் : சக்தியில்லாமல் உலகேது…
அந்த தத்துவம் சிலருக்கு புரியாது…


Notes : Sakthi Illamal Ulagedhu Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. சக்தியில்லாமல் உலகேது பாடல் வரிகள்.


தேவியின் காலடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்தேவி தரிசனம்

Deviyin Kaaladi Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவியின் காலடி திருப்பாதம் விளையாட…
திசைகளில் இரு நான்கு உலகமும் வடிவாக…
தேவியின் கண் கொஞ்சம் திறந்தாட அசைந்தாட…
திகழ்ந்திடும் கதிரவனின் ஒளியங்கு உருவாக…

BGM

ஆண் : தேவியின் மறுகண்ணில் தெளிவான ஒளி தோன்ற…
தேய்பிறை வளர் பிறையில் வெண்மதி நிலையாக…

BGM

ஆண் : கார்குழல் நளினங்கள் கலகல என்றாட…
கார்முகில் கூட்டங்கள் வானெங்கும் நிறைந்தோட…

BGM

ஆண் : கணம் தோறும் அவள் மூச்சு மார்பினைத் தாலாட்ட…
காற்றினில் உயிர் மூச்சு பிறந்தது சுகமாக…
சக்தியின் குண்டலங்கள் தகதிமி என்றாட…
தங்கு கடல் நதிகள் மலைகள் எழுந்தாட…

BGM

ஆண் : ஒரு கை அசைய உயிரினம் வளர…
மறுகை அசைய மனிதர்கள் பிறக்க…
குழு : ஓம் ஓம் ஓம்…

ஆண் : ஆவி வளர்ப்பது தேவி தரிசனம்…
பாவம் தவிர்ப்பது தேவி தரிசனம்…
காவல் கொடுப்பது தேவி தரிசனம்…
காலத்தை வெல்வது தேவி தரிசனம்…
தேவி சரணம்… தேவி தரிசனம்… தேவி சரணம்…

BGM


Notes : Deviyin Kaaladi Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. தேவியின் காலடி பாடல் வரிகள்.


ஆலயமென்றால் ஆலயம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்சீர்காழி கோவிந்தராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்தேவி தரிசனம்

Alayam Endraal Alayam Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

BGM

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

ஆண் : காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

BGM

ஆண் : சாலை வழியே தனியே சென்றால்…
தானும் வருவாள் பவானியே…

BGM

ஆண் : தாயே சரணம் என்று விழுந்தால்…
தன் கை கொடுப்பாள் பவானியே…
தாயே சரணம் என்று விழுந்தால்…
தன் கை கொடுப்பாள் பவானியே…

BGM

ஆண் : காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி…
காரிகைமார்கள் கூடுகின்றார்…

BGM

ஆண் : கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே…
காளியின் பெருமை பாடுகின்றார்…
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே…
காளியின் பெருமை பாடுகின்றார்…

ஆண் : காளி திரிசூலி…
குழு : காளி திரிசூலி…
ஆண் : நீலி ஜெகன்மாதா…
குழு : நீலி ஜெகன்மாதா…

ஆண் : தேவி பராசக்தி…
குழு : தேவி பராசக்தி…
ஆண் : ஓம் சக்தி பவானி…
குழு : பவானி பவானி…

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…

BGM

ஆண் : தாலியைக் காட்டி வேலியை நினைந்து…
தம்மை மறந்தே ஆடிகின்றார்…

BGM

ஆண் : தர்மம் என்பதை காணாதவர்கள்…
சன்னிதி முழுவதும் தேடுகின்றார்…

BGM

ஆண் : பாளையத்தம்மா இருப்பதை மறந்து…
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்…

BGM

ஆண் : பட்டப் பகலில் கண்களை இழந்து…
பாதையை மாற்றி ஓடுகின்றார்…

BGM

ஆண் : தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்

BGM

ஆண் : தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி…
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்…

BGM


Notes : Alayam Endraal Alayam Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. ஆலயமென்றால் ஆலயம் பாடல் வரிகள்.


வான் நிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ். விஸ்வநாதன்பட்டினப்பிரவேசம்

Vaan Nila Nila Alla Song Lyrics in Tamil


BGM

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…
தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…

ஆண் : நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…
மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…

ஆண் : மான் இல்லாத ஊரிலே…
சாயல் கண்ணிலா…
பூ இல்லாத மண்ணிலே…
ஜாடை பெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

BGM

ஆண் : தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…
தெய்வம் கல்லிலா…
ஒரு தோகையின் சொல்லிலா…

ஆண் : பொன்னிலா பொட்டிலா…
புன்னகை மொட்டிலா…
அவள் காட்டும் அன்பிலா…

ஆண் : இன்பம் கட்டிலா…
அவள் தேகம் கட்டிலா…
இன்பம் கட்டிலா…
அவள் தேகம் கட்டிலா…

ஆண் : தீதிலா காதலா ஊடலா கூடலா…
அவள் மீட்டும் பன்னிலா…

BGM

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

BGM

ஆண் : வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…
வாழ்க்கை வழியிலா…
ஒரு மங்கையின் ஒளியிலா…

ஆண் : ஊரிலா நாட்டிலா…
ஆனந்தம் வீட்டிலா…
அவள் நெஞ்சின் ஏட்டிலா…

ஆண் : சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…
சொந்தம் இருளிலா…
ஒரு பூவையின் அருளிலா…

ஆண் : எண்ணிலா ஆசைகள்…
என்னிலா கொண்டது ஏன்…
அதைச் சொல்வாய் வெண்ணிலா…

BGM

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…

ஆண் : தேன் நிலா எனும் நிலா…
என் தேவியின் நிலா…
நீ இல்லாத நாள் எல்லாம்…
நான் தேய்ந்த வெண்ணிலா…

ஆண் : வான் நிலா நிலா அல்ல…
உன் வாலிபம் நிலா…


Notes : Vaan Nila Nila Alla Song Lyrics in Tamil. This Song from Pattina Pravesam (1977). Song Lyrics penned by Kannadasan. வான் நிலா பாடல் வரிகள்.


கேள்வியின் நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகாஎம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Kelviyin Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…

BGM

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…
கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்…
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா…
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா…
கதை எப்படி அதன் முடிவெப்படி…
கதை எப்படி அதன் முடிவெப்படி…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்…

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ…
மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ…
செல்வாளோ செல்வாளோ…

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…
பதில் ஏதய்யா…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
பார்த்துக்கொண்டால்…

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன…

பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : உடல் எப்படி…
ஒன்றில் இருந்தாற்படி…
மனம் எப்படி…
நீ விரும்பும் படி…

BGM

பெண் : கேள்வியின் நாயகியே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

BGM

பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…
பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
திரு முருகா… திரு முருகா…

BGM


Notes : Kelviyin Nayagane Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. கேள்வியின் நாயகனே பாடல் வரிகள்.


தென்றலது உன்னிடத்தில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Thendraladhu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : ச க ம ப க ம க ச…
நி ச நி பக ம நி ப ச…
க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச ச… } * 2

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

BGM

ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…

பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…

ஆண் : இதுவரை கனவுகள்…
இளமையின் நினைவுகள்…
ஈடேறும் நாளின்றுதான்…

பெண் : எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்…
என்னாசை உன்னோடுதான்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

BGM

பெண் : சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…
சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…

ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…
தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…

பெண் : அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்…
ஆனந்த நீராடுவோம்…

ஆண் : தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்…
ஏகாந்தம் நாம் பாடுவோம்…

ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

ஆண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…

பெண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
ஆண் & பெண் : காவியம் தந்ததோ…


Notes : Thendraladhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kannadasan. தென்றலது உன்னிடத்தில் பாடல் வரிகள்.


ஏழு ஸ்வரங்களுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…

BGM

பெண் : காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்… ம்ம்ம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…

BGM

பெண் : காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி…
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி…

பெண் : ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும்…
மனிதன் இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…
இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்… ல்ல்ல்ல்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…

BGM

பெண் : எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்…
நீ எனக்காக உணவு உண்ட எப்படி நடக்கும்…
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு…
அதில் நமக்காக நம் கையால் செய்வது நன்று…
நமக்காக நம் கையால் செய்வது நன்று…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…

BGM

பெண் : ஆரம்பத்தின் பிறப்பும் உன் கையில் இல்லை…
என்றும் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை…
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்…
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM

பெண் : நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க…
அதை நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க…

பெண் : வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க…
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல…
வேதனையும் மாறும் மேகத்தைப் போல…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி…
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…
வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…

பெண் : ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…

BGM


Notes : Yezhu Swarangalukkul Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. ஏழு ஸ்வரங்களுக்குள் பாடல் வரிகள்.