பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகி | எம்.எஸ்.விஸ்வநாதன் | அந்த 7 நாட்கள் |
Thendraladhu Song Lyrics in Tamil
—BGM—
{ ஆண் : ச க ம ப க ம க ச…
நி ச நி பக ம நி ப ச…
க க ரி ம ம க ப ப ம ப த ரி நி ச ச… } * 2
பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
பெண் : பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…
பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
—BGM—
ஆண் : உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…
உள்ளம் எங்கும் பொங்கும் ஆசை…
இன்று தங்கரதம் ஏறியது…
பெண் : உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை…
இன்று கங்கை என மாறியது…
ஆண் : இதுவரை கனவுகள்…
இளமையின் நினைவுகள்…
ஈடேறும் நாளின்றுதான்…
பெண் : எதுவரை தலைமுறை அதுவரை தொடர்ந்திடும்…
என்னாசை உன்னோடுதான்…
ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…
பெண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
—BGM—
பெண் : சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…
சந்தம் தேடி சிந்து பாடி…
உந்தன் சன்னதிக்கு நான் வருவேன்…
ஆண் : தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…
தஞ்சை கோவில் சிற்பம் போலே…
ஒரு முத்திரையை நான் பதிப்பேன்…
பெண் : அனுதினம் இரவெனும் அதிசய உலகினில்…
ஆனந்த நீராடுவோம்…
ஆண் : தினமொரு புது வகை கலைகளை அறிந்திடும்…
ஏகாந்தம் நாம் பாடுவோம்…
ஆண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…
ஆண் : தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
பெண் : பெண்மையின் சொர்க்கமே…
பார்வையில் வந்ததோ…
ஆண் & பெண் : காவியம் தந்ததோ…
Notes : Thendraladhu Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kannadasan. தென்றலது உன்னிடத்தில் பாடல் வரிகள்.