சங்கீதப் பூ மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஇரண்டில் ஒன்று

Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil


BGM

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…

பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…

BGM

ஆண் : மார்கழிப் பனியினிலே…
நல்லதோர் மோகம் கூடுதடி…
மாந்தளிர் மேனி தொட்டால்…
அது தானாக ஓடுதடி…

பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு…
அதைத் தாண்டாதே ஆசையினால்…
பூ மாலையை நீ சூடும் அன்று…
சுகம் தேனாகத் தேடி வரும்…

ஆண் : காத்திருந்து காத்திருந்து…
கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன…

பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…

BGM

பெண் : காய் ஒன்று கனியாமல்…
அதை சுவைக்கின்ற ஆசை என்ன…
கல்யாணம் ஆகாமல்…
என்னைப் பெண்டாள நினைப்பதென்ன…

ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது…
என்றும் நீதானே என் சொந்தம்…
மாலை என்றும் ஒரு வேலி என்றும்…
என்னை வாட்டாமல் கொண்டாடு…

பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்…
மூளை கொஞ்சம் மாறியதென்ன…

ஆண் : தீராது தீராது நோயும் தீராது…

பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…

ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…


Notes : Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. சங்கீதப் பூ மழையே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top