பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | மனோ & கே.எஸ். சித்ரா | இளையராஜா | இரண்டில் ஒன்று |
Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
ஒரு நோயால் என்று மனம் வாடி நின்றேன்…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
மருந்தும் நீதானே நோயைத் தீர்க்க நீ வா…
பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
—BGM—
ஆண் : மார்கழிப் பனியினிலே…
நல்லதோர் மோகம் கூடுதடி…
மாந்தளிர் மேனி தொட்டால்…
அது தானாக ஓடுதடி…
பெண் : பாவை என்றால் ஒரு வேலி உண்டு…
அதைத் தாண்டாதே ஆசையினால்…
பூ மாலையை நீ சூடும் அன்று…
சுகம் தேனாகத் தேடி வரும்…
ஆண் : காத்திருந்து காத்திருந்து…
கண்கள் ரெண்டும் பூத்ததும் என்ன…
பெண் : ஆகாது ஆகாது வேகம் கூடாது…
ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
—BGM—
பெண் : காய் ஒன்று கனியாமல்…
அதை சுவைக்கின்ற ஆசை என்ன…
கல்யாணம் ஆகாமல்…
என்னைப் பெண்டாள நினைப்பதென்ன…
ஆண் : ஆசை வந்தால் அங்கு வெட்கம் ஏது…
என்றும் நீதானே என் சொந்தம்…
மாலை என்றும் ஒரு வேலி என்றும்…
என்னை வாட்டாமல் கொண்டாடு…
பெண் : மோகம் என்னும் தீயில் உந்தன்…
மூளை கொஞ்சம் மாறியதென்ன…
ஆண் : தீராது தீராது நோயும் தீராது…
பெண் : சங்கீதப் பூ மழையே…
உன் சந்தேகம் தீரலியா…
கெட்டி மேளம் கொட்டி ஒரு தாலி கட்டு…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
விருந்தும் நான் ஆவேன்…
நோயைத் தீர்க்கும் மருந்தாவேன்…
ஆண் : சங்கீதப் பூ மழையே…
என் சந்தேகம் தீரலியே…
Notes : Sangeetha Poo Mazhaiyae Song Lyrics in Tamil. This Song from Irandil Ondru (1988). Song Lyrics penned by Panchu Arunachalam. சங்கீதப் பூ மழையே பாடல் வரிகள்.