கவிதை அரங்கேறும் நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
குருவிக்கரம்பை சண்முகம்பி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன்அந்த 7 நாட்கள்

Kavithai Arangerum Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ச ச க நி ச ப நி ச ச…
ச ச ச ம க நி ச ப நி ச ச…
நி ச ச ப ப ப ப ப ப த ம ம…
ம ம க ம க க ம க ம நி த க ரி ஸ நி…

ஆண் : சப்த ஸ்வர தேவி யுனரு…
இனி என்னில் வர தானம் அருளு…
நீ அழகில் மம நாவில் வாழு…
என் கழுவில் ஒளி தீபம் ஏற்று…
சப்த ஸ்வர தேவி யுனரு…

BGM

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

BGM

பெண் : பார்வை உன் பாதம் தேடி…
வரும் பாவை என் ஆசை கோடி…
பார்வை உன் பாதம் தேடி…
வரும் பாவை என் ஆசை கோடி…
இனி காமன் பல்லாக்கில் ஏறி…
நாம் கலப்போம் உல்லாச ஊரில்…

ஆண் : உன் அங்கம் தமிழோடு சொந்தம்…
அது என்றும் திகட்டாத சந்தம்…

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

BGM

ஆண் : கைகள் பொன்மேனி கலந்து…
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து…
கைகள் பொன்மேனி கலந்து…
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து…
இனி சொர்க்கம் வேறு ஒன்று எதற்கு…
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு…

பெண் : மனம் கங்கை நதியான உறவை…
இனி எங்கே இமை மூடும் நிலைமை…

பெண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

BGM

பெண் : நீரில் நின்றாடும் போதும்…
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்…
அது நேரில் நீ வந்த மாயம்…
இந்த நிலைமை எப்போது மாறும்…

ஆண் : என் இளமை மழை மேகம் ஆனால்…
உன் இதயம் குளிர் வாடை காணும்…

ஆண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…

பெண் : இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…

ஆண் & பெண் : கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…


Notes : Kavithai Arangerum Neram Song Lyrics in Tamil. This Song from Andha 7 Naatkal (1981). Song Lyrics penned by Kuruvikkarambai Shanmugam. கவிதை அரங்கேறும் நேரம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top