பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | குங்குமச்சிமிழ் |
Nilavu Thoongum Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
பெண் : இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…
ஆண் : இது ஒரு தொடர்கதை…
பெண் : தினம் தினம் வளர்பிறை…
ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
—BGM—
ஆண் : நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே…
பெண் : வானம் காற்று பூமி இவை சாட்சியானதே…
ஆண் : நான் உனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்…
பெண் : நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம்…
ஆண் : நான் இனி நீ…
பெண் : நீ இனி நான்…
ஆண் : வாழ்வோம் வா கண்ணே…
பெண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…
ஆண் : இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…
பெண் : நிலவு தூங்கும் நேரம்…
—BGM—
ஆண் : கீதை போலக் காதல் மிகப் புனிதமானது…
பெண் : கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது…
பெண் : வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்…
ஆண் : வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்…
பெண் : ஏன் மயக்கம்…
ஆண் : ஏன் தயக்கம்…
பெண் : கண்ணா வா இங்கே…
ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
பெண் : இரவு தூங்கினாலும்…
உறவு தூங்கிடாது…
ஆண் : இது ஒரு தொடர்கதை…
தினம் தினம் வளர்பிறை…
ஆண் : நிலவு தூங்கும் நேரம்…
நினைவு தூங்கிடாது…
Notes : Nilavu Thoongum Song Lyrics in Tamil. This Song from Kunguma Chimizh (1985). Song Lyrics penned by Vaali. நிலவு தூங்கும் நேரம் பாடல் வரிகள்.