கேள்வியின் நாயகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம் & பி.எஸ்.சசிரேகாஎம்.எஸ். விஸ்வநாதன்அபூர்வ ராகங்கள்

Kelviyin Nayagane Song Lyrics in Tamil


BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…
எல்லோரும் நடிக்கின்றோம்
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்…
கன்று பால் அருந்தும் போதா காளை வரும்…

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…

BGM

பெண் : சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்…
கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்…
தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா…
வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா…
கதை எப்படி அதன் முடிவெப்படி…
கதை எப்படி அதன் முடிவெப்படி…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
தேடுகின்றான் தேடுகின்றான் தேடுகின்றான்…

பெண் : தலைவன் திருச்சாலூர் வந்துவிட்டான்…
மங்கை தரும தரிசனத்தை தேடுகின்றான்…
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ…
மங்கை அவனோடு திருமலைக்குச் செல்வாளோ…
செல்வாளோ செல்வாளோ…

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…

BGM

பெண் : கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு…
பதில் ஏதய்யா…

பெண் : கேள்வியின் நாயகனே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…

BGM

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
பார்த்துக்கொண்டால்…

பெண் : ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்…
அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன…

பெண் : இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால்…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…
அவை இரண்டுக்கும் பார்வையிலே பேதம் என்ன…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே…
நமது பேதம் தனை மறந்து நடக்கும் முன்னே…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன…
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன் வேறு என்ன…

பெண் : உடல் எப்படி…
ஒன்றில் இருந்தாற்படி…
மனம் எப்படி…
நீ விரும்பும் படி…

BGM

பெண் : கேள்வியின் நாயகியே…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதம்மா…

பெண் : இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

BGM

பெண் : பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…
பழனி மலையிலுள்ள வேல் முருகா…
சிவன் பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…

பெண் : பிடிவாதம் தன்னை விடு பெரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
கொஞ்சம் பிரியத்துடன் பக்கத் திரு முருகா…
திரு முருகா… திரு முருகா…

BGM


Notes : Kelviyin Nayagane Song Lyrics in Tamil. This Song from Apoorva Raagangal (1975). Song Lyrics penned by Kannadasan. கேள்வியின் நாயகனே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top