Tag Archives: என்.ஆர். ரகுநந்தன்

பொய்யாகி போகாதோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லிஜேஷ் குமார்தீபா செல்வன்என்.ஆர். ரகுநந்தன்யாவரும் வல்லவரே

Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…
பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

ஆண் : தாயின்னு நினச்சு மண்ணில் சரிஞ்சா…
சேய்யுனு நினச்சு ஊர அனைச்சான்…

ஆண் : பூவெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள முகம் பார்க்க…
ஊரெல்லாம் இருந்துருச்சு…
என் புள்ள சொல்ல கேட்க…
என் புள்ள சொல்ல கேட்க…

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

BGM

ஆண் : வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடுது தண்ணி மறந்துருச்சு…
வந்த சூரியனும் வாசலோட நின்னுருச்சு…
மாடுகண்ணு எல்லாம் தவுடு தண்ணி மறந்துருச்சு…
தவுடு தண்ணி மறந்துருச்சு…

ஆண் : தழவாழ இலை போட்டு…
சோறு போட காத்திருந்தேன்…
மல போல போன புள்ள…
சில போல வந்துருக்கான்…

ஆண் : மூஞ்சி எல்லாம் நான் வச்ச…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி…

ஆண் : மொத்தத்துல என் உசுரு…
காத்துல தான் போயிருச்சு…
காத்துல தான் போயிருச்சு…

ஆண் : பொய்யாகி போகாதோ இந்த சேதி…
என் புள்ள வருவான்னு சொல்லாதோ குலசாமி…

BGM


Notes : Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil. This Song from Yaavarum Vallavare (2024). Song Lyrics penned by Deepa Selvan. பொய்யாகி போகாதோ பாடல் வரிகள்.


வந்தாரு வந்தாரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஜெயமூர்த்திஎன்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Vandhaaru Vandhaaru Song Lyrics in Tamil


BGM

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

ஆண் : பாரு இவரு மாசு…
படிக்காத காமராசு…
பதறாம ஊர பாதுகாக்கும்…
பக்காவான பாஸு…

ஆண் : பாசமான பேசு…
பண்பான ஜோதிபாசு…
பெரியோருக்காக பேசுகின்ற…
தம்பி மேல கேஸு…

ஆண் : ஊர நல்லா புரிஞ்சவரு…
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

BGM

ஆண் : ஊர தோள் மேல தாங்கும் ஆள் போல…
வாழ்ந்து வாராரே ரகளையில…
ஓவர் பேச்சால வேர்ல்ட் வார் போல…
கூட்டி கொள்வாரே எதிரிகள…

ஆண் : காதலர கண்டா கடுகா வெடிப்பாரு…
அவமானம் காதல் என்று அடியோட பிரிப்பாரு…
சாதி தவறில்ல அத காக்க நினைப்பாரு…
எதிராளி யாரும் இல்ல இருந்தாலும் ஜெயிப்பாரு…

ஆண் : சும்மா இருப்பாரு…
சுவரெங்கும் சிரிப்பாரு…
அம்மா அப்பா தெய்வமுன்னு…
அட்வைஸ் கொடுப்பாரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

BGM

ஆண் : வீட்ட தாண்டாம பொண்ண காப்பாரு…
காட்டு தீ போல வளந்தவரு…
போட்டி போடாம வேல பாப்பாரு…
ஆட்டம் போடாத அலை இவரு…

ஆண் : வேதனைய சொன்னா அது தீர துடிப்பாரு…
விவகாரம் யாரும் செஞ்சா வெறி ஏற கொடுப்பாரு…
ஏழையின்னு வந்தா துணையாக இருப்பாரு…
பணம் காச பாத்திடாம பசியாற கொடுப்பாரு…

ஆண் : சும்மா இருப்பாரு…
சுவரெங்கும் சிரிப்பாரு…
சொக்க வைக்கும் அன்புலதான்…
சொந்தம் வளப்பாரு…

ஆண் : வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…
வந்தாரு வந்தாரு மாப்ள சிங்கம்…
எந்நாளும் மங்காத ஆம்பள தங்கம்…

ஆண் : பாரு இவரு மாசு…
படிக்காத காமராசு…
பதறாம ஊர பாதுகாக்கும்…
பக்காவான பாஸு…

ஆண் : பாசமான பேசு…
பண்பான ஜோதிபாசு…
பெரியோருக்காக பேசுகின்ற…
தம்பி மேல கேஸு…

ஆண் : ஊர நல்லா புரிஞ்சவரு…
இந்த உலகம் பூரா அறிஞ்சவரு…

BGM


Notes : Vandhaaru Vandhaaru Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. வந்தாரு வந்தாரு பாடல் வரிகள்.


ஒருவாட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Oruvaatti Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : மீன பாத்த கொக்காக…
நீ கொத்தி போற சொல்லாம…
பொட்ட காடு என நீதான்…
செஞ்சதென்ன வெள்ளாம…

ஆண் : வாயார நீ பேச தள்ளாடுறேன் தாங்காம…
ஆகாரம் செல்லாம அல்லாடுறேன் தூங்காம…

ஆண் : போற பாதை போகாம…
வேற ஏதும் தோணாம…
பாக்குறேனே உன்ன நானும்…
வச்ச கண்ணு வாங்காம…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

BGM

ஆண் : வேலை ஏதும் செய்யாம…
நான் நிக்குறேனே வீணாக…
மூளை கெட்ட ஆள போல…
சொக்குறேனே லூசாக…

ஆண் : பூவான ஆண் நானும்…
வெம்புறேனே காயாக…
யாரோடும் பேசாம…
ஒன்டுறேனே தீவாக…

ஆண் : சூரகாத்து நீயாக…
சோளப்பொரியும் நானாக…
என்ன நீயும் சுத்தி வார…
ஆள கொள்ளும் பேயாக…

ஆண் : ஒருவாட்டி உன பாத்து…
உசுரே கரைஞ்சு போயிருச்சு…
பசுமாட்டு மடிப்போல…
மனசும் கவிச்சு ஆயிருச்சு…

ஆண் : என்ன செஞ்ச எனக்கேதோ ஆச்சு…
சொல்ல சொல்ல சுடுதே என் மூச்சு…
மத யானை மிதமான கதையா போச்சு…


Notes : Oruvaatti Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. ஒருவாட்டி பாடல் வரிகள்.


எதுவுமே தோணலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிநரேஷ் ஐயர்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Edhuvumae Thonnale Song Lyrics in Tamil


BGM

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

ஆண் : மனசுல பூக்கள…
அவ நட்டா போற போக்குல…
பரவுர காத்துல…
என்ன பட்ட போட்டா மூச்சுல…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

BGM

ஆண் : அவ போகிற வழி போகல…
அவ வீதியில் குடியேறல…
இருந்தாலுமே அவ ஞாபகம் என நீங்கள…

ஆண் : அவ மேல நான் குறியாகல…
அவ போல நான் திமிர் ஆகல…
முடிபோடுறா என கூந்தலா மனம் தாங்கல…

ஆண் : எத்தன பாவிக கூட நின்னாலும்…
கொன்னுடுதே அவ வாசன ஆள…
கட்டிட தாலியும் சேலையும் வாங்க…
சொல்லிடுறா முறைமாமனப்போல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பார்வை மூலையில…
மெதுவா மெதுவா சரிஞ்சேனனே போதையிலே…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…

BGM

ஆண் : அவளால நான் தல சீவல…
அவ வீட்டுல உறவாடல…
அநியாயமா அவ பேருல பழி போடல…

ஆண் : பெருசாக நான் தடுமாறல…
புதுசாக நான் புகழ் பாடல…
இரு காலுமே அவளாலதான் நடமாடல…

ஆண் : வக்கனையா அவ ஜாடைய பாத்து…
வட்டமும் போட்டது வாலிப மூள…
சக்கரையா அவ பேசிட கேட்டு…
வந்தது வாழ்வெனபோகுறேன் மேல…

ஆண் : பொதுவா பொதுவா அவ பேசி போகையிலே…
மெதுவா மெதுவா மசிஞ்சேனே காதலில…

ஆண் : நான் அவள ரசிக்க அழக வியக்க…
பசியும் வரல…
வாய் மொழிய மறக்க முடங்கி கிடக்க…
பொழுதும் ரகள…

ஆண் : எதுவுமே தோணலே…
எனக்கு என்ன ஆச்சு மாப்ள…
ஒரு முறை நேருல…
அவ கண்ண பாத்தா தேவல…


Notes : Edhuvumae Thonnale Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. எதுவுமே தோணலே பாடல் வரிகள்.


அடி தேனி சந்தையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லா.வரதன்அந்தோனி தாசன் & மீனாட்சி இளையராஜாஎன்.ஆர்.ரகுநந்தன்இடிமுழக்கம்

Adi Theni Sandhaiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…

ஆண் : அடி மல்லிக பூவ கொண்டையில் சூட…
காத்து கிடக்கிறேன்டி…
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி…

பெண் : அட ஆண்டிப்பட்டியில்…
ஆணிபுடுங்க வந்த மகராசா…
அட நான் முள்ளிருக்கும் ரோசா…
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா…

பெண் : இந்த கரட்டு பட்டி…
இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு…
உன் கையில் சிக்காது…
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது…

BGM

ஆண் : இந்த செவத்த பொம்பள…
பெருத்த கூட்டத்தில் ஆடுறத பாரு…
ஆட்டம் பாத்து சொக்கி நிக்குதூரு…
அடி உன் சொந்த பந்தம் யாரு…

ஆண் : அடி சிக்குன்னு உடம்பு பாக்குன்னு எனக்கு…
மோகம்தான் ஏறுதடி…
கிட்ட வந்தா உன் முகம் மாறுதடி…

பெண் : அட சும்மானாயிருக்கறேன் வம்பு வழக்குற…
வாயும் தான் கூசமா…
மூடிக்கிட்டு போடா நீ பேசாம…

பெண் : நான் பாத்தா பச்சபுள்ள…
பாஞ்சா கீரிபுள்ள…
படமும் தான் காட்டாதே…
உன் படம் என் தியேட்டரில் ஓடாதே…

BGM

ஆண் : அடி கோழி கொழம்பு போல…
நீயும் என இழுக்கிறியே…
கோபம் வந்தா கொத்திச்சு நிக்குறே…
வீரத்தில வெளஞ்சு நிக்குறியே…

ஆண் : நீ புலிய வெறட்டும் முரத்துக்காரி…
என வெறட்டுரியே…
முச்சந்தியில் என நிறுத்திரியே…
பக்கம் வந்தா எட்டி உதைக்கிறியே…

பெண் : உங்க வீர தீர மிடுக்குயெல்லாம்…
இப்போ உடச்சாச்சு…
ஒத்துங்கடா எங்களோட ஆட்சி…
எங்களுக்குப் பயம் விட்டு போச்சு…

பெண் : இந்த கரட்டு காட்டில்…
முளச்சு நல்லா படிச்சு வந்தாச்சு…
பல பல சாதன செஞ்சாச்சு…

பெண் : ஒரு வீட்டுக்குள் அடச்ச திமிர…
கள பறிச்சாச்சு…
கண்டம் விட்டு பறந்து போயாச்சு…

BGM

ஆண் : அடி தேனி சந்தையில்…
தேரு போல அசஞ்சு வந்தவளே…
எனக்குன்னு அமஞ்சு நின்னவளே…
காத்திரிக்கேன் வாடி பூங்குயிலே…

ஆண் : அடி மல்லிக பூவ கொண்டையில் சூட…
காத்து கிடக்கிறேன்டி…
கண்ணு ரெண்டும் பூத்து கிடக்கிறேன்டி…

பெண் : அட ஆண்டிப்பட்டியில்…
ஆணிபுடுங்க வந்த மகராசா…
அட நான் முள்ளிருக்கும் ரோசா…
எங்கிட்டே நீ தூக்க வேணாம் கூசா…

பெண் : இந்த கரட்டு பட்டி கன்னிமயிலு…
உன் கையில் சிக்காது…
உன் குசும்பு எங்கிட்ட ஆகாது…

BGM


Notes : Adi Theni Sandhaiyil Song Lyrics in Tamil. This Song from Idimuzhakkam (2024). Song Lyrics penned by La.Varadhan. அடி தேனி சந்தையில் பாடல் வரிகள்.


நேற்றும் பார்ட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்பு & ரணினா ரெட்டிஎன்.ஆர்.ரகுநந்தன்புலிவால்

Netrum Party Song Lyrics in Tamil


ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

ஆண் : தண்ணீர் கற்கள் மோதும்…
ஓசை ஒன்றே போதும்…
கோப்பை தான் என் கோட்டை…
ஹே எங்கும் எப்போதும்…

ஆண் : நெஞ்சை பிய்க்கும் பாடல்…
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்…
காதல் இல்லா காண்டக்ட்…
ஹே போதும் எப்போதும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

BGM

ஆண் : பிளாட்டினத்தில் கட்டில்தான்…
உண்பேன் தங்கதட்டில்தான்…
பாபோ எந்தன் டாய்லெட் ரோலோ…
பட்டில் பட்டில்தான்…

பெண் : நான் குளிக்க மார்ட்டினி…
கொண்டு வந்து கொட்டு நீ…
நானும் நீயும்தானே இங்கே டெட்லி கூட்டணி…

ஆண் : உலகத்தில் உயர்ந்தது தேர்ந்தெடுத்து…
அதில் வசித்திட வசித்திட பிறப்பெடுத்தேன்…

பெண் : உனக்கென்று உயரத்தில் எனை வளர்த்து…
நீ ரசித்திட ருசித்திட உனை அடைந்தேன்…

ஆண் : தேகங்கள் மோதி கண்ணில் மின்னல் வெட்டட்டும்…
இன்னும் கொஞ்சம் மேலே போக வானம் தட்டட்டும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

BGM

ஆண் : நீயோ எந்தன் கைப்பற்ற…
பார்ட்டி ஃபுளோரில் தீப்பற்ற…
பார்க்கும் கண்கள் ஒவ்வொன்றிலும்…
ஜே ஜே ஜெலஸ்ஸி…

பெண் : முத்தம் என்னும் சூப் கொஞ்சம்…
தந்தால் என்னாகும் உன் நெஞ்சம்…
தேகம் மொத்தம் இன்னும் கெஞ்சும்…
அய்யோ பேய் பசி…

ஆண் : பசித்து நீ எடுக்கையில் சுவை இருக்கும்…
உந்தன் அரிசியில் பெண்ணே எந்தன் பெயர் இருக்கும்…

பெண் : பெயர்களின் அவசியம் இனி எதற்கு…
உந்தன் தொலைபேசி எண்ணை மட்டும் கொடு எனக்கு…

ஆண் : நாளும் எண்கள் வேறு…
இங்கே நாளும் பெண்கள் வேறு…
வாழும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும்…
வேறாய் மாறட்டும்…

குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும்…

ஆண் : நேற்றும் பார்ட்டி இன்றும் பார்ட்டி…
வாழ்வில் என்றும் பார்ட்டி…
போதை கூட்டி தீயை மூட்டி…
சொர்க்கம் காட்டும் பார்ட்டி…

ஆண் : தண்ணீர் கற்கள் மோதும்…
ஓசை ஒன்றே போதும்…
கோப்பைதான் என் கோட்டை…
ஹே எங்கும் எப்போதும்…

ஆண் : நெஞ்சை பிய்க்கும் பாடல்…
கொஞ்சி மொய்க்கும் பெண்கள்…
காதல் இல்லா காண்டக்ட்…
ஹே போதும் எப்போதும்…

{ குழு : சுற்றிடும் பூமி சுற்றிடும் பூமி…
போதையில் சுற்றட்டும்…
வற்றிடும் நெஞ்சம் வெற்றிடம் எல்லாம்…
இன்பம் பற்றட்டும் …} * (2)

BGM


Notes : Netrum Party Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. நேற்றும் பார்ட்டி பாடல் வரிகள்.


ரத்த கண்ணீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஷ் ராகவேந்திராஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Raththa Kanneer Song Lyrics in Tamil


ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர்தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஏன் இந்த கதி ஏன் இந்த விதி…
நொந்தேன் உயிர் நொந்தேன்…
நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்…

ஆண் : என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை…
அடி இல்லை…
என் பாவங்களில் நீ பங்கு பெற…
நியாயம் இல்லை…

ஆண் : பாதைதான் காணாமல் பட்டம்தான் விடுகின்றேன்…
போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன்…
பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…

BGM

ஆண் : ஊர் பேசியதும் யார் ஏசியதையும்…
நெஞ்சை சுட வில்லை…
நீ துன்பமுற நான் கண்டுவர…
ஜீவன் இல்லை…

ஆண் : என் தண்டனையில் நீ வாடுவது குற்றம்…
என் குற்றம்…
என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை…
சுற்றும் சுற்றும்…

ஆண் : போதைக்குள் பிறந்தாலும்…
என் காதல் பொய் இல்லை…
சேற்றோடு பிறந்தாலும்…
தாமரையில் அழுக்கில்லை…
வா பெண்ணே உன்னைவிட்டால் வாழ்வில்லை…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…
காயம் செய்த ஊருக்கு…
என் நியாயம் மட்டும் தெரியவில்லை…

ஆண் : அறிந்தே நான் செய்த பிழை…
ஆண்டவர் தான் பொறுப்பாரே…
அறியாமல் செய்த பிழை…
அன்பே நீ பொறுப்பாயா…
மன்னித்தே என்னை கொள்ளமாட்டாயா…

ஆண் : ரத்த கண்ணீர் முடியவில்லை…
என் ராத்திரி மட்டும் விடியவில்லை…


Notes : Raththa Kanneer Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. ரத்த கண்ணீர் பாடல் வரிகள்.


தேவன் மகளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவி.வி. பிரசன்னா & சைந்தவிஎன்.ஆர். ரகுநந்தன்நீர்ப்பறவை

Devan Magale Song Lyrics in Tamil


BGM

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

ஆண் : என்றோ அடி என்றோ…
உன் உயிரில் உரிமை தந்தாய்…
இன்றே அடி இன்றே…
உடல் உரிமை தந்தாய்…

பெண் : நுனியில் விரல் நுனியில்…
ஒரு நூதன தீண்டல் செய்தாய்…
அடியில் உயிர் அடியில்…
ஓர் அற்புதம் செய்தாய்…

ஆண் : உன் ஆசை பாசை எல்லாம்…
பூட்டி கொண்டாயே…
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

BGM

பெண் : கண்ணீர் என் கண்ணீர்…
என் கன்னம் காயும் முன்னே…
பன்னீர் உன் பன்னீர்…
உயிர் பரவ கண்டேன்…

ஆண் : கொடியில் ஒரு கொடியில்…
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே…
மடியில் உன் மடியில்…
சிறு மரணம் கொண்டேன்…

பெண் : என் கர்தரங்கள் படைத்த…
வெற்று பாண்டம் நான்…
அதில் உன்னை ஊற்றி…
என்னை நிறைத்தாய்…

ஆண் : தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே தேவன் மகனே…
சிலுவை காடு பூத்தது போலே…
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

ஆண் : தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

பெண் : தேவன் மகனே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…


Notes : Devan Magale Song Lyrics in Tamil. This Song from Neerparavai (2012). Song Lyrics penned by Vairamuthu. தேவன் மகளே பாடல் வரிகள்.


கிச்சு கிச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிசரண் & அனிதாஎன்.ஆர்.ரகுநந்தன்புலிவால்

Kichu Kichu Song Lyrics in Tamil


BGM

பெண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

பெண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

ஆண் : பச்ச மனசுல பெட்ரோல் ஊத்தி…
பத்த வைக்கும் பையன் நான்தானே…

பெண் : உச்சந் தலையில ஐஸ் கிரீம் வச்சு…
உச்சு கொட்ட வெப்பேன் நான்தானே…

ஆண் : பூட்ட திறக்காதே…
என்ன போட்டு தாக்காதே…

பெண் : ரூட்ட கடக்காதே…
கொக்கி போட்டு இழுக்காதே…

ஆண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

பெண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

BGM

ஆண் : கிள்ளாத பூக்கள் பார்க்கிறேன்…
கிள்ளாத ஆப்பிள் கேக்கிறேன்…
வான் ஊற்றிலும் தேன் ஊற்றிலும்…
ஹார்மோனின் தாகம் தீர்க்கிறேன்…

பெண் : முடி கொண்ட மார்பில் சாய்கிறேன்…
உள் காட்டில் பூக்கள் மேய்கிறேன்…
உன் பார்வையில் உள் வேர்வையில் உறவாகிறேன்…

ஆண் : ஒவ்வொரு பெண்ணும் அடி ஒவ்வொரு சுகம்…
நீயும் எவ்வித சுகம் என்று கண்டு பிடிப்பேன்…
முன்னொரு சுகம் அடி பின்னொரு சுகம்…
அந்த மோகன கதை என்ன சொல்லி கொடுப்பேன்…

பெண் : முன்னோட்டமா வெள்ளோட்டமா…
விளையாட்டு தான் வினையாகுமே வேண்டாமடா…

ஆண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

பெண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

BGM

பெண் : நச்சென்று முத்தம் வைக்கிறாய்…
நரம்போட என்னை தைக்கிறாய்…
மூச்சு குரல் தேனரும் படி…
முழுசாக என்னை மொய்க்கிறாய்…

ஆண் : கண்ணோடு கண்ணை வைக்கிறாய்…
உன்னோடு என்னை தைக்கிறாய்…
சில்லென்றொரு சிறு செய்கையால் தீ வைக்கிறாய்…

பெண் : சின்ன சின்னதாய் சில வன்முறை செய்தாய்…
அதை செல்லம் செல்லமாய் நான் ரசித்திருந்தேன்…
எக்க சக்கமாய் என்னை கட்டி பிழிந்தாய்…
அதன் பக்க விளைவை நான் பொறுத்திருந்தேன்…

ஆண் : கத்திராணியா ஓ ரதி தேவியா ஓ…
கட்டில்களில் கொள்ளை இடும் கள வானியா…

பெண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

ஆண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…

பெண் : உச்சந் தலையில ஐஸ் கிரீம் வச்சு…
உச்சு கொட்ட வெப்பேன் நான்தானே…

ஆண் : பச்ச மனசுல பெட்ரோல் ஊத்தி…
பத்த வைக்கும் பையன் நான்தானே…

பெண் : ரூட்ட கடக்காதே…
கொக்கி போட்டு இழுக்காதே…

ஆண் : பூட்ட திறக்காதே…
என்ன போட்டு தாக்காதே…

பெண் : கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
கிச்சு கிச்சு கிச்சு பண்ணி…
முன்னோட்டம் பாக்குற…

ஆண் : பிச்சு பிச்சு பிச்சு திங்க…
பிச்சு பிச்சு பிச்சு திங்க…
கண்ணால கேக்குற…


Notes : Kichu Kichu Song Lyrics in Tamil. This Song from Pulivaal (2014). Song Lyrics penned by Vairamuthu. கிச்சு கிச்சு பாடல் வரிகள்.


Kaara Karuuna Song Lyrics in Tamil

கார கருண இடுப்பழகே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிகல்பனா & எம். எல். ஆர். கார்த்திகேயன்என்.ஆர். ரகுநந்தன்மாப்ள சிங்கம்

Kaara Karuuna Song Lyrics in Tamil


BGM

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…

ஆண் : நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்தா நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

BGM

ஆண் : காங்கேயம் காளை உன்னால மூள…
மாடாகி போறேனே மொத்ததில…

பெண் : மாராப்பு சேலை மச்சான் உன்னால…
சூடாகி போகுது வெக்கத்துல…

ஆண் : பொழுது சாயும் வரையில்…
நீ புதையல் போல தெரிவ…

பெண் : ஏ… பொழுது சாஞ்ச பிறகு…
நீ அதையும் தேடி வருவ…

ஆண் : பல தினுசா சினுங்கிடுவ…
என முழுசா திருடி தின்னுடுவ…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

BGM

ஆண் : மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள…
நோகாம நான் தாரேன் பத்து புள்ள…

பெண் : ஆகாத சொல்ல நீ வீசி செல்ல…
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள…

ஆண் : எதையும் தாங்கும் இதயம்…
உன் அழக பார்த்தா சரியும்…

பெண் : என் உறுதியான முடிவும்…
நீ உரசி போனா முறியும்…

ஆண் : எரியும் விளக்கு அணையும்…
புது வெளிச்சம் இனிமேதான் தெரியும்…

ஆண் : கார கருண இடுப்பழகே…
கண்ண கவரும் குருக்கழகே…
நாறா என நீ கிழிக்காத…
என நாளும் பொழுதும் விலகாத…

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே…
தேனு முட்டாய் இனிப்பழகே…
ராங்கா என நீ நினைக்காத…
என ராவும் பகலும் ஒதுக்காத…

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு…
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு…

பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு…
நல்ல தேதி பாத்து தாலி கட்டு…


Notes : Kaara Karuuna Song Lyrics in Tamil. This Song from Mapla Singam (2015). Song Lyrics penned by Yugabharathi. கார கருண இடுப்பழகே பாடல் வரிகள்.