Category Archives: நந்தா

அம்மா என்றாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Amma Endrale Song Lyrics in Tamil


BGM

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…

ஆண் : யாரோ யார் யாரோ என்றே…
தாயும் சேய்யும் இருப்பாரோ… ஓ…
விடையே இல்லாமல்…
இந்த ஜென்மம் முழுதும் வாழ்வாரோ…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

BGM

ஆண் : தெய்வமும் நீயும் உண்மைகள் பேச…
ஊமைகள்தானோ சொல் உன் வாழ்வில்…
நீ கொண்ட சோகம் நீ கொண்ட மௌனம்…
தீர்ந்திடும் நாள் வருமே…

ஆண் : அந்தோ உன் தலை மேலே பேரிடிபோல…
காலனும் வந்தானே…
அந்த காலனின் பேரை கேட்கிறபோதோ…
உன் மகன் பேர்தானே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…

BGM

ஆண் : சேய் குரல் கேட்டால் தாய் உயிரோடு…
ஓர் வலி ஏற்படுமே தாலாட்ட…
அன்னை இல்லாத பிள்ளைகள் கண்ணில்…
யாரும் இல்லா வெறுமை…

ஆண் : மண்ணில் நுண் உயிர்கூட தன்னுயிர் தந்த…
தாய் உயிர் தேடாதா…
அம்மா உன் மடியோடு என் தலை சாய்ந்தால்…
மாய்வதில் ஓர் சுகமே…

ஆண் : அம்மா என்றாலே…
அதை கேட்கவும் உன்னால் ஆகாதோ…
ஆரோ ஆரிரோ…
அதை பாடவும் உன்னால் முடியாதோ…


Notes : Amma Endrale Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pa. Vijay. அம்மா என்றாலே பாடல் வரிகள்.


கள்ளி அடி கள்ளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஅனுராதா ஸ்ரீராம் & ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Kalli Adi Kalli Song Lyrics in Tamil


குழு : கள்ளி அடி கள்ளி…
எங்கே கண்டாய்…
முதலில் என்ன கதைச்சாய்…
உண்மை எல்லாம் சொல்லு…

பெண் : சிரித்திடும் வாவி கரையோரம்…
காத்து நான் கிடந்தனன்…
பதுங்கி மெல்ல வந்தவன்…
பகடி பகடி என்ன போங்கடி…

குழு : முழு நிலவு காயும்…
நிலவில் மீன்கள் வாடும் தென்னாடு…
அங்கே இருந்து இங்கே…
வாழ வந்த பெண்ணே நீ பாடு…

பெண் : நம்மை அணைக்க ஆளில்லை…
என்று தனத்தி கிடந்தோம் நெஞ்சுக்குள்ளே…

குழு : தமிழர் சொந்தம் நாம் எந்நாளும்…

BGM

குழு : ஓ… நல்லூரின் விதியென்று திரிந்தோமடி…
தேரின் பின்னே அலைந்தோமடி…

குழு : கடலொன்று நடுவிலே…
இல்லை என்று கொள்வினம்…
எங்கள் நாடும் இந்த நாடும் ஒன்றுதான்…
தமிழன் தமிழந்தான்…

பெண் : புது உடுப்புகள் கிடைக்குமா அக்கா…

BGM

குழு : நமது உறவெல்லாம் நம் நாட்டில்தான்…
என்றும் நினைத்தோம் தவறாகதான்…
இங்கும் உறவு உள்ளது…
தமிழர் மனது பெரியது…

பெண் : அட உனக்கென வந்த இடத்தில்…
மருமகள் ஆகினான்…

குழு : ஏ… புதிய பாலம் கண்ணில் தெரிகிறதே…

பெண் : எந்த கலங்கம் இல்லை என்று ஆகுதே…
தெருடி வாழ்வாயே…

பெண் : கள்ளி அடி கள்ளி…
உங்கள் கைகள் இணையும் அந்த பொழுதில்…
எங்கள் வாழ்கை விரியும்…
மேற்கே மறைந்தாலும் கிழக்கே உதிக்கும்…
அந்த கதிரின் சூடராய்…
எங்கள் விடியல் தெரியும்…

பெண் : கனவுகள் எனது என நினைத்தேன்…
இன்று நான் அறிந்தனன்…
இருளின் கரம் விலகுமே…
உங்கள் கனவும் நனவாகுமே…


Notes : Kalli Adi Kalli Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Thamarai. கள்ளி அடி கள்ளி பாடல் வரிகள்.


ஓராயிரம் யானை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாநந்தா

Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM

ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…

ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…

ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…

BGM


Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.


எங்கெங்கோ கால்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஇளையராஜாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Engengo Kalgal Song Lyrics in Tamil


ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

BGM

ஆண் : காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே…
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே…

ஆண் : எதனை கொண்டு நாம் வந்தோம்…
எதனை கொண்டு போகின்றோம்…
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

BGM

ஆண் : காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ…
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ…

ஆண் : வாழ்க்கை எங்கு போய் சேரும்…
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது…

ஆண் : எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்…
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்…

ஆண் : உன் சொந்தம் இங்கு யார் யாரோ…
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ…
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு…

BGM


Notes : Engengo Kalgal Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Pazhani Barathi. எங்கெங்கோ கால்கள் பாடல் வரிகள்.


mun-paniya-song-lyrics

முன் பனியா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & மால்குடி சுபாயுவன் ஷங்கர் ராஜாநந்தா

Mun Paniya Song Lyrics in Tamil


BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…
அறியாத சுகங்கள் கண்டேன்…
மாற்றம் தந்தவள் நீ தானே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…

பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…

BGM

ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…

ஆண் : இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…

பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே…
சங்கதி என்ன சொல்லடி வெளியே…
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…
ஏலோ ஏலோ ஏலே ஏலோ…

BGM

ஆண் : என் பாதைகள் என் பாதைகள்…
உனது வழிபார்த்து வந்து முடியுதடி…
என் இரவுகள் என் இரவுகள்…
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…

ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…

BGM

ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே…

BGM


Notes : Mun Paniya Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Palani Barathi. முன் பனியா பாடல் வரிகள்.