பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | பி. உன்னிகிருஷ்ணன் | யுவன் ஷங்கர் ராஜா | நந்தா |
Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
—BGM—
ஆண் : குழலோசை இல்லை குயிலோசை இல்லை…
இடியோசை ஒன்றே அறிந்தாயே…
முரணோடு வாழ்ந்து முள்ளோடு சேர்ந்து…
அன்பால் இன்று பூப்பூக்கின்றாய்…
ஆண் : ஒரு ராஜா வருந்தாமல்…
அட புத்தன் ஜனனம் இல்லை…
மனம் நொந்து நொறுங்காமல்…
அட சித்தன் பிறப்பதும் இல்லை…
வாழ்ந்தாய் தீயின் மடியில்…
சேர்ந்தாய் தீர்த்தக் கரையில்…
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
ஆண் : தாய் வயிற்றில் தலை கீழாக…
உன் வழியோ இல்லை நேராக…
தோள் சாய புது உறவிங்கே…
தூண் எல்லாம் இனி தூளாக…
ஆண் : ஓராயிரம் யானை கொன்றால் பரணி…
ஆதலால் யுத்தம் இருக்கு கவனி…
—BGM—
Notes : Orayiram Yanai Kondru Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ஓராயிரம் யானை பாடல் வரிகள்.