Category Archives: ஆசை

ஷாக் அடிக்குது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுரேஷ் பீட்டர்ஸ் & ஜி.வி.பிரகாஷ் குமார்தேவாஆசை

Shokkadikuthu Song Lyrics in Tamil


ஆண் : ஹைய்யோ ஹையைய்யோ…
ஹைய்யோ ஹையைய்யோ…

BGM

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும்…
பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது…
தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான்…
மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது…

குழு : ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…
ஹே ஹைய்யோ ஹையையைய்யோ… ஹோ ஹோ…

BGM

ஆண் : ஏன் நகங்கல கடிக்கிறா…
இடை துடிக்கிறா…
கன்னுல மின்னலை பாய்ச்சுறா…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா…
நெஞ்சை பறிக்கிறா…
பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா…

ஆண் : ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ…
ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோ ஓ…

ஆண் : அச்சா அச்சா பகுத் அச்சா…
பச்சசை கிளி…
வச்சா வச்சா கன்னில் வச்சா…
கிக்கு பொடி…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

BGM

ஆண் : நீ என்ன கொஞ்சம் விரும்பினா…
லவ் அரும்பின தடிய நொடிய திங்கிரே…

ஆண் : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : நீ ஒரு முத்தம் வழங்கினா…
தொட்டு தழுவினா…
விழிய மட்டுமே கொஞ்சுரே…

ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ…
ஹைய்யோ ஹையையைய்யோ…

ஆண் : சோரி சோரி படா சோரி…
இந்த பொன்னு…
ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி…
சொல்லும் கன்னு…
தில் டெர தீவானா…
உன்ன விட்டு போவேனா…

ஆண் : ஷாக் அடிக்குது சோனா…
நீ நடந்து போனா…
ஹாட் அடிக்கிது தானா…
நீ ராஜஸ்தான் மானா…

BGM


Notes : Shokkadikuthu Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. ஷாக் அடிக்குது பாடல் வரிகள்.


Thiloththama Song Lyrics in Tamil

திலோத்தமா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாதேவாஆசை

Thiloththama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா…
தந்தவள் நீயம்மா…
கனவினில் ஒன்று குறைந்தாலும்…
களைபவன் நானம்மா…

BGM

ஆண் : இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே…
குழு : என்ன…

பெண் : இரவு இப்போது நீளம் ஆனதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே…
குழு : என்ன…

ஆண் : எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
என் போ் இப்போது மறந்து போனதே…
குழு : என்ன…

பெண் : வானம் இப்போது பக்கம் வந்ததே…
என்ன என்ன என்ன என்ன என்ன என்ன…
தூக்கம் உன்னாலே தூரம் ஆனதே…
குழு : என்ன…

BGM

ஆண் : ஓஹோ… ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே…
அது பிாிவதில்லை…

பெண் : ஓஹோ… ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே…
சொல்லும் அறிவதில்லை…

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…

BGM

ஆண் : காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில்…
குழு : இல்லை…

பெண் : கண்கள் இல்லாமல் காட்சி என்பதே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
கனவே இல்லாமல் நிலவு என்பதே…
குழு : இல்லை…

ஆண் : தண்ணீா் இல்லாமல் எந்த மீனும்…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
தலைவி இல்லாமல் காதல் காவியம்…
குழு : இல்லை…

பெண் : மண்ணை தொடாத மழையும் வானிலே…
இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை…
உன்னைத் தொடாமல் உறவு என்பதும்…
குழு : இல்லை…

ஆண் : ஓஹோ… இந்த இயற்கையெல்லாம்…
நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன…

பெண் : ஓஹோ… இது காதலுக்கே உள்ள ஜீவ குணம்…
இதில் கலக்கமென்ன…

ஆண் : ஒரு முறை எந்தன் நெஞ்சில்…
காதை வைத்து கேளடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : இருதயம் உந்தன் பேரை சொல்லும்…
சொல்லும் பாரடியோ…
குழு : திலோத்தமா…

ஆண் : ஆயிரம் கனவுகள் அம்மம்மா…
தந்தவள் நீயம்மா…
கனவினில் ஒன்று குறைந்தாலும்…
களைபவன் நானம்மா…

BGM


Notes : Thiloththama Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vairamuthu. திலோத்தமா பாடல் வரிகள்.


புல்வெளி புல்வெளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராதேவாஆசை

Pulveli Pulveli Song Lyrics in Tamil


BGM

பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…

பெண் : அதை சூாியன் சூாியன் வந்து…
செல்லமாய் செல்லமாய் கிள்ளி…
எழுப்புது எழுப்புது ஏனம்மா…

பெண் : இதயம் பறவை போலாகுமா…
பறந்தால் வானமே போதுமா…
நான் புல்லில் இறங்கவா…
இல்லை பூவில் உறங்கவா…

பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…

BGM

பெண் : சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட் சிட்டுக்குருவி…
சிட்டாகச் செல்லும் சிறகைத் தந்தது யாரு…
பட்பட்பட்பட் பட்பட்பட் பட்டாம்பூச்சி…
பலநுாறு வண்ணம் உன்னில் தந்தது யாரு…

பெண் : இலைகளில் ஒளிகின்ற பூக் கூட்டம்…
எனைக்கண்டு எனைக்கண்டு தலையாட்டும்…
கிளைகளில் ஒளிகின்ற குயில் கூட்டம்…
எனைக்கண்டு எனைக்கண்டு இசை மீட்டும்…

பெண் : பூவனமே எந்தன் மனம்…
புன்னகையே எந்தன் மதம்…

பெண் : அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள்…
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்…

BGM

பெண் : புல்வெளி புல்வெளி தன்னில்…
பனித்துளி பனித்துளி ஒன்று…
தூங்குது தூங்குது பாரம்மா…

BGM

பெண் : துல்துல்துல் துல்துல்துல்லும் அணிலே…
மின்னல்போல் வேகம் தந்தது யாரு…
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென ஓடும் நதியே…
சங்கீத ஞானம் பெற்றுத் தந்தது யாரு…

பெண் : மலையன்னை தருகின்ற தாய்ப்பால் போல்…
வழியுது வழியுது வெள்ளை அருவி…
அருவியை முழுவதும் பருகிவிட…
ஆசையில் பறக்குது சின்னக்குருவி…

பெண் : பூவனமே எந்தன் மனம்…
புன்னகையே எந்தன் மதம்…

பெண் : அம்மம்மா…
வானம் திறந்திருக்கு பாருங்கள்…
எனை வானில் ஏற்றிவிட வாருங்கள்…

BGM


Notes : Pulveli Pulveli Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. புல்வெளி புல்வெளி பாடல் வரிகள்.


மீனம்மா அதிகாலையிலும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஆசை

Meenamma Athikalayilum Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

பெண் : அம்மம்மா… முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை…
எல்லாம் ஒரு காவியமே…

ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும்…
சின்னச் சின்ன மோதல்களும்…
மின்னல் போல வந்து வந்து போகும்…

பெண் : ஊடல் வந்து மோதல் வந்து…
முட்டிக் கொண்டபோதும்…
இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்…

ஆண் : இரு மாதங்கள் நாட்கள் செல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : நிறம் மாறிடும் பூக்கள் அல்ல…

பெண் : ஆஆஆ…

ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும்…
உந்தன் ஞாபகமே…

BGM

ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில்…
ஒளி சிந்தும் ராத்திாியில்…
இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல்…
புது வித்தை காட்டிடவா…

பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு…
தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு…
அதை மூடாமல் தாழ் போடாமல்…
எனைத் தொட்டுத் தீண்டுவதா…

ஆண் : மாமன்காரன்தானே மாலை போட்ட நானே…
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்…
மீனம்மா… மழை உன்னை நனைத்தால்…
இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்…

பெண் : அம்மம்மா… வெயில் உன்னை அடித்தால்…
இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்துவிடும்…

BGM

ஆண் : அன்று காதல் பண்ணியது…
உந்தன் கன்னம் கிள்ளியது…
அடி இப்போதும் நிறம் மாறாமல்…
இந்த நெஞ்சில் நிற்கிறது…

பெண் : அங்கு பட்டுச் சேலைகளும்…
நகை நட்டு பாத்திரமும்…
உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே…
அது கண்ணில் நிற்கிறது…

ஆண் : ஜாதிமல்லிப் பூவே…
தங்க வெண்ணிலாவே…
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு…

BGM

ஆண் : மீனம்மா… உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும்…
தென்றல் காத்திருக்கு…

பெண் : அம்மம்மா… உன்னை காதலித்து புத்தி பேதலித்து…
புஷ்பம் பூத்திருக்கு…

BGM


Notes : Meenamma Athikalayilum Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்.


கொஞ்ச நாள் பொறு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன்தேவாஆசை

Konja Naal Poru Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…

ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…

ஆண் : காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…

குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…

BGM

ஆண் : ஓ… நேத்துக்கூட தூக்கத்தில…
பாா்த்தேன் அந்த பூங்குயில…
தூத்துக்குடி முத்தெடுத்து கோா்த்துவச்ச மாலை போல…

ஆண் : வோ்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பாா்த்தா…
அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா…

ஆண் : சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா…
சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா…
வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவப்பா…

ஆண் : தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள…
தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள…

குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…

BGM

பெண் : பச்சை தாவணி பறக்க…
அங்கு தன்னையே அவன் மறக்க…
வச்ச கண்ணு வாங்கலையே…
என் மாமன் கண்ணு தூங்கலையே…

BGM

ஆண் : என்னோடுதான் கண்ணாமூச்சி…
என்றும் ஆடும் பட்டாம்பூச்சி…
கட்டாயம் என் காதல் ஆட்சி…
கைகூடும் தென்றல் சாட்சி…

ஆண் : சிந்தனையில் வந்துவந்து போறா…
சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா…
என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா…
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா…
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா…

ஆண் : ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக…
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக…

குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…

ஆண் : கொஞ்சநாள் பொறு தலைவா…
ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…
கண்ணிரண்டில் போா் தொடுப்பா…
அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

ஆண் : காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…

குழு : ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…


Notes : Konja Naal Poru Song Lyrics in Tamil. This Song from Aasai (1995). Song Lyrics penned by Vaali. கொஞ்ச நாள் பொறு பாடல் வரிகள்.