Category Archives: 1986 Movies

1986 Movies

namma-kada-veedhi-song-lyrics-in-tamil

நம்ம கடை வீதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅம்மன் கோவில் கிழக்காலே

Namma Kada Veedhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : நம்ம கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
அவ நடந்து வந்தா…

குழு : ஆமாம் சொல்லு…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
அது பறந்து வந்தா…

குழு : அப்படி சொல்லு…

ஆண் : ஆஹா… பின்னி முடிச்ச…
அவ ரெட்டை சடையும்…
நல்ல எட்டு எடுத்து…
அவ வச்ச நடையும்…
தூண்டில் ஒன்னு போட்டத போல்…
சுண்டி சுண்டி வந்திழுக்கும்…

ஆண் : நம்ம கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

BGM

ஆண் : ஒரு சிங்காரப் பூங்கொடிக்கு…
ஒரு சித்தாட தானெடுத்து…
அவ சில்லுன்னு சிரிக்கையிலே…
குழு : அடி ஐயடி ஐயா…

ஆண் : சிறு வெள்ளி கொலுசு எதுக்கு…
குழு : அடி ஐயடி ஐயா…

ஆண் : கண்ணாலே சம்மதம் சொன்னா…
கைய புடிச்சா ஒத்துக்குவா…
கல்யாணம் பண்ணணுமின்னா வெக்கப்படுவா…

ஆண் : வேறெதும் சங்கடமில்ல…
சங்கதி எல்லாம் கத்துக்குவா…
விட்டு விலகி நின்னா கட்டிப்புடிப்பா…

ஆண் : வெட்ட வெளியில்…
குழு : அய்யையோ…

ஆண் : ஒரு மெத்தை விரிச்சேன்…
குழு : அய்யய்யோ…

ஆண் : மொட்டு மலர…
தொட்டு பறிச்சேன்…
மெல்ல சிரிச்சா…

ஆண் : ககக கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
குழு : அது பறந்து வந்தா…

BGM

ஆண் : அடி முக்காலும் காலும் ஒன்னு…
இனி உன்னோட நானும் ஒன்னு…
அடி என்னோடு வாடிப்பொண்ணு…
குழு : அடி ஐயாடி அய்யா…

ஆண் : சிறு செம்மீனை போல கண்ணு…
குழு : அடி ஐயாடி அய்யா…

ஆண் : ஹோய் …ஒன்னாக
கும்மியடிப்போம்…
ஒத்து ஒழைச்சா மெச்சிக்குவோம்…
விட்டாக்கா உன் மனச கொள்ளையடிப்பேன்…

ஆண் : கல்யாணப் பந்தலக்கட்டி…
பத்திரிக்கையும் வச்சுக்குவோம்…
இப்போது சொன்னதை எல்லாம்…
செஞ்சு முடிப்போம் தங்கக் குடமே…

ஆண் : தங்க கொடமே…
குழு : ஐயய்யோ…

ஆண் : புது நந்தவனமே…
குழு : ஐய்யய்யோ…

ஆண் : சம்மதம் சொல்லு…
இந்த இடமே இன்பச் சுகமே…

குழு : அடடா… கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…

வசனம் : எப்பா எண்ணான்னே…
இந்த அடி அடிச்சிட்டீங்க…
யாரோட அக்கா மகடா டாய்…

குழு : அண்ணனோட அக்கா மக… ஆன்…
அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…

குழு : அண்ணனோட பச்சைக்கிளி…
அது பறந்து வந்தா…

ஆண் : ஆஹா… பின்னி முடிச்ச
அவ ரெட்டை சடையும்…
நல்ல எட்டு எடுத்து…
அவ வச்ச நடையும்…
தூண்டில் ஒன்னு போட்டத போல்…
சுண்டி சுண்டி வந்திழுக்கும்…

ஆண் : கடை வீதி…
கல கலகலக்கும்…
என் அக்கா மக…
குழு : அவ நடந்து வந்தா…

ஆண் : நம்ம பஸ் ஸ்டாண்டு…
பள பளபளக்கும்…
ஒரு பச்சைக்கிளி…
குழு : அது பறந்து வந்தா…


Notes : Namma Kada Veedhi Song Lyrics in Tamil. This Song from Amman Kovil Kizhakale (1986). Song Lyrics penned by Gangai Amaran. நம்ம கடை வீதி பாடல் வரிகள்.


குழலூதும் கண்ணனுக்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ராஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil


BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

BGM

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : மழைக்காத்து வீசுறபோது…
மல்லிகைப்பூ பாடாதா…
மழை மேகம் கூடுறபோது…
வண்ண மயில் ஆடாதா…

பெண் : என் மேனி தேனெறும்பு…
என் பாட்டு பூங்கரும்பு…
மச்சான் நான் மெட்டெடுப்பேன்…
உன்னதான் கட்டி வைப்பேன்…

பெண் : சுகமான தாளம் தட்டி பாடட்டுமா…
உனக்காச்சு எனக்காச்சு…
சரி ஜோடி நாமாச்சு… கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி போடுதா…

BGM

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : கண்ணா உன் வாலிப நெஞ்சை…
என் பாட்டு உசுப்புறதா…
கற்கண்டு சக்கரையெல்லாம்…
இப்பத்தான் கசக்குறதா…

பெண் : வந்தாச்சு சித்திரைதான்…
போயாச்சு நித்திரைதான்…
பூவான பொண்ணுக்குத்தான்…
ராவானா தேடுதுதான்…

பெண் : மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா…
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சம்…
படும் பாடு கேளையா…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…

பெண் : என் குரலோடு மச்சான்…
உங்க குழலோசைப் போட்டி
போடுதா…

BGM

பெண் : இலையோடு பூவும்…
தலையாட்டும் பாரு…
இலையோடு பூவும் காயும்…
தலையாட்டும் பாரு பாரு…

பெண் : குழலூதும் கண்ணனுக்கு…
குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…
குக்கூ குக்கூ குக்கூ…


Notes : Kuzhaloodhum Kannanukku Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. குழலூதும் கண்ணனுக்கு பாடல் வரிகள்.


ஊரு சனம் தூங்கிருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்லத் திறந்தது கதவு

Ooru Sanam Song Lyrics in Tamil


பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு…
கோலம் போடும் பாட்டாலே…
மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு…
ராகம் பாடும் கேட்டாலே…
சேதி சொல்லும் பாட்டாலே…

பெண் : ஒன்ன எண்ணி நானே…
உள்ளம் வாடிப் போனேன்…
கன்னிப் பொண்ணுதானே…
என் மாமனே என் மாமனே…

பெண் : ஒத்தையிலே அத்த மக…
ஒன்ன நெனச்சி ரசிச்ச மக…
கண்ணு ரெண்டும் மூடலையே…
காலம் நேரம் கூடலையே…

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…

BGM

பெண் : மாமன் ஒதடு பட்டு…
நாதம் தரும் குழலு…
நானா மாறக் கூடாதா…
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்…
கூடும் காலம் வாராதா…
மாமன் காதில் ஏறாதா…

பெண் : நிலா காயும் நேரம்…
நெஞ்சுக்குள்ள பாரம்…
மேலும் மேலும் ஏறும்…
இந்த நேரந்தான்…
இந்த நேரந்தான்…

பெண் : ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்…
ஓலப்பாய போட்டு வச்சேன்…
இஷ்டப்பட்ட ஆச மச்சான்…
என்ன மேலும் ஏங்க வச்சான்…

பெண் : ஊரு சனம் தூங்கிருச்சு…
ஊதக் காத்தும் அடிச்சிருச்சு…
பாவி மனம் தூங்கலையே…
அதுவும் ஏனோ புரியல்லையே…


Notes : Ooru Sanam Song Lyrics in Tamil. This Song from Mella Thirandhathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. ஊரு சனம் தூங்கிருச்சு பாடல் வரிகள்.


தேடும் கண் பார்வை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Thedum Kann Paarvai Song Lyrics in Tamil


ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ…
வெறும் மாயமானதோ… ஓ…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு…
வரும் பாதை பார்த்திரு…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க…

BGM

ஆண் : காண வேண்டும் சீக்கிரம்…
என் காதல் ஓவியம்…
வாராமலே என்னாவதோ…
என் ஆசை காவியம்…

பெண் : வாழும் காலம் ஆயிரம்…
நம் சொந்தம் அல்லவா…
கண்ணாளனே நல்வாழ்த்துகள்…
என் பாட்டில் சொல்லவா…

ஆண் : கனிவாய் மலரே…
உயிர் வாடும்போது ஊடலென்ன…
பாவம் அல்லவா…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

BGM

ஆண் : தேடி தேடி பார்க்கிறேன்…
என் கால்கள் ஓய்ந்ததே…
காணாமலே இவ்வேளையில்…
என் ஆவல் தீருமோ…

பெண் : காற்றில் ஆடும் தீபமோ…
உன் காதல் உள்ளமே…
நீ காணலாம் இந்நாளிலே…
என் மேனி வண்ணமே…

ஆண் : பிரிந்தோம்… இணைவோம்…

பெண் : இனி நீயும் நானும் வாழ வேண்டும்…
வாசல் தேடி வா…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…

பெண் : தேடும் பெண் பாவை வருவாள்… தொடுவாள்…

ஆண் : சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ…

பெண் : வெறும் மாயமாகுமோ…

ஆண் : தேடும் கண் பார்வை தவிக்க…

பெண் : துடிக்க…


Notes : Thedum Kann Paarvai Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தேடும் கண் பார்வை பாடல் வரிகள்.


வா வெண்ணிலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Vaa Vennila Song Lyrics in Tamil


ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : முகம் பார்க்க நானும்…
முடியாமல் நீயும்…
திரை போட்டு உன்னை…
மறைத்தாலே பாவம்…

ஆண் : ஒரு முறையேனும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : திருமுகம் காணும்… ஏஹே… ஏஹே…

பெண் : ஏஹே… ஏஹே…

ஆண் : வரம் தரம் வேண்டும்… ஓ ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : எனக்கது போதும்…

பெண் : யே…

ஆண் : எனைச்சேர… ஆஆஆஆஆஆஆஹா…

ஆண் : எனைச்சேர எதிர்பார்த்து…
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…

BGM

ஆண் : மலர் போன்ற பாதம்…
நடக்கின்ற போது…
நிலம் போல உன்னை…
நான் தாங்க வேண்டும்…

ஆண் : இடையினில் ஆடும்… ஆஆ… ஆஆ…

பெண் : ஆஆ… ஆஆ…

ஆண் : உடையென நானும்… ஏ… ஏ…

பெண் : ஏ… ஏ…

ஆண் : இணை பிரியாமல்… ஓ… ஓ…

பெண் : ஓஓ… ஓஓ…

ஆண் : துணை வர வேண்டும்… ஏ…

ஆண் : உனக்காக… ஆஆஆஆஆஆஹா…
உனக்காக பனிக் காற்றை…
தினம் தூது போக வேண்டினேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்…

ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே…


Notes : Vaa Vennila Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. வா வெண்ணிலா பாடல் வரிகள்.


தில் தில் தில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாமெல்ல திறந்தது கதவு

Dhil Dhil Dhil Song Lyrics in Tamil


ஆண் : தில் தில் தில் தில்… மனதில்…
ஒரு தல் தல் தல் தல்… காதல்…

ஆண் : தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…
ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

BGM

பெண் : வளர்ந்த நாள் முதல் கார்குழலும்…
அழைக்குதே உன்னை பூச்சூட…

ஆண் : மயக்கம் ஏனடி பூங்குயிலே…
தவிக்கிறேன் அடி நான் கூட…

பெண் : விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்…
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்…

ஆண் : கைகள் படாத இடம்தான் இப்போது…
ஆசை விடாத சுகம்தான் அப்போது…

பெண் : ஏக்கம் ஏதோ கேட்கும்…

ஆண் : தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…
ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஆடல் பாடல் கூடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் காதல்…

BGM

ஆண் : மழைக்கு ஏங்கிய மாந்தளிரே…
உனக்கு நான் சிறு தூறல்தான்…

பெண் : வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க…
உனக்கு நான் மலைச்சாரல்தான்…

ஆண் : அடுத்த கட்டம் நடப்பதெப்போ…
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ…

பெண் : மாலை இடாமல் வசந்தம் வராது…
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது…

ஆண் : போதும் போதும் ஊடல்…

பெண் : ஆஆ… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

ஆண் : ஆஹா… தில் தில் தில் தில் மனதில்…
ஒரு தல் தல் தல் தல் காதல்…

பெண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

ஆண் : ஜில் ஜில் இள நெஞ்சில்…
ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்…

பெண் : ஆடல் பாடல் கூடல்…


Notes : Dhil Dhil Dhil Song Lyrics in Tamil. This Song from Mella Thiranthathu Kadhavu (1986). Song Lyrics penned by Vaali. தில் தில் தில் பாடல் வரிகள்.


என்ன சத்தம் இந்த நேரம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுன்னகை மன்னன்

Enna Satham Intha Neram Song Lyrics in Tamil


ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கன்னத்தில் முத்தத்தின் ஈரம்…
அது காயவில்லையே…
கண்களில் ஏன் அந்த கண்ணீர்…
அது யாராலே…

ஆண் : கன்னியின் கழுத்தை பார்த்தால்…
மணமாகவில்லையே…
காதலன் மடியில் பூத்தாள்…
ஒரு பூ போலே…

ஆண் : மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு…
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு…
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…

BGM

ஆண் : கூந்தலில் நுழைந்த கைகள்…
ஒரு கோலம் போடுதோ…
தன்னிலை மறந்த பெண்மை…
அதை தாங்காதோ…

ஆண் : உதட்டில் துடிக்கும் வார்த்தை…
அது உலர்ந்து போனதோ…
உள்ளங்கள் துடிக்கும் ஓசை…
இசை ஆகாதோ…

ஆண் : மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்…
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்…
இளம் காதல் மான்கள்…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…
கிளிகள் முத்தம் தருதா…
அதனால் சத்தம் வருதா அடடா… ஆ…

ஆண் : என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…


Notes : Enna Satham Intha Neram Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. என்ன சத்தம் இந்த நேரம் பாடல் வரிகள்.