யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாதொடரும்

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

பெண் : சொல்லாமல் நீ தீண்டினால்…
எல்லைக் கோட்டை தாண்டினால்…
உன் தாபம்தான் தீருமா…
உன் மோகம்தான் போகுமா…

பெண் : காதல் வலையிலே ஏன் மாட்டினாய்…
இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன்…
எட்டிச் செல்கிறாய்…
கட்டிக் கொள்ள வந்தேன்…
விட்டுச் செல்கிறாய்…

பெண் : கிட்ட வந்து நின்றால்…
கெட்டுப் போகுது…
கட்டவிழ்ந்து நெஞ்சும்…
விட்டுப் போகுது…

ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே… ஏ…
புதிர் போடும் கிளியே கிளியே…
வீணான பழியே பழியே…
உனக்கு வந்த இணையே இணையே…
தொடுப்பதென்ன கணையே கணையே…

பெண் : வேறு இடம் உனக்கிருக்கு…
இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு…
நான் உண்மை என்று கண்டதும்…
உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

BGM

பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே…
கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை…
கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே…
கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே…

ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே… ஏ…
ஒரு போதும் ராமன் இங்கே…
உருமாறிப் போவதும் இல்லை…
கண்ணன் என என்னை நீயும்…
காண்பதிலும் நியாயம் இல்லை…

பெண் : என்ன என்ன கதை இருக்கு…
அதில் இந்தக் கதை இங்கு எதற்கு…

ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா…
கண்ட கதை நிஜமா யார் விளக்குவது…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…

ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால்…
எல்லை கோட்டை தாண்டினால்…
என் தாபம்தான் தீருமா…
உன் கோபம்தான் ஆறுமா…

ஆண் : கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய்…
உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய்…

பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு…
எங்கே எல்லை அங்கே நில்லு…


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from Thodarum (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. யம்மா யம்மா பாடல் வரிகள்.