Tag Archives: பெலா ஷெண்டே

அழகோ அழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பெலா ஷெண்டேடி. இமான்கச்சேரி ஆரம்பம்

Azhago Azhagu Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகு அழகு உலகம் அழகோ அழகு…
அழகு அழகு வாழ்க்கை அழகோ அழகு…

பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு…
முதலில் கிடைத்த முத்தம் அழகு…
முதலில் பூத்த பூவும் அழகு…
முதலில் அமைந்த நட்பும் அழகு…
வானம் கருத்து முதலில் தூவும் துளிகள் அழகு…

BGM

பெண் : அழகுஅழகு மனிதம் அழகோ அழகு…
அழகு அழகு மலரும் நினைவோ அழகு…

பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு…
கடைசி நிமிடத்தூக்கம் அழகு…
கடைசிக்கால நினைவுகள் அழகு…
கடைசிவரையில் கவிதை அழகு…
கடைசிக்கோடு வரையும் போது ஓவியம் அழகு…

BGM


Notes : Azhago Azhagu Song Lyrics in Tamil. This Song from Kacheri Arambam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. அழகோ அழகு பாடல் வரிகள்.


ஓடும் வரையில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கே கே & பெல்லா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாஏகன்

Odum Varayil Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஃப்ரீடம்…

BGM

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

BGM

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஆண் : தடை தாண்டிப் பாரு…
தடை சொல்வதாரு…
விடை தேடிப் பாரு…
உன்னை வெல்வது யாரு யாரு…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

BGM

பெண் : உயிரைக் குடைந்து எத்தனை காலம்…
காதல் சிற்பம் நீ செய்தாய்…
உணர வைக்க எத்தனை காலம்…
எனக்குள் மழையாய் பெய்தாய்…

பெண் : முதல் முதல் நாள் என்னையே பார்த்து…
வெட்கப்பட்டு சிரிக்கிறேன்…
முதன் முதல் உன் கைகளை கோர்த்து…
நீண்ட தூரம் பறக்கிறேன்…

பெண் : இந்த நிமிடம் இந்த நிமிடம் நகரக்கூடாது…
இனிமேலும் உன்னைப் பிரிந்தால்…
எந்தன் உயிர் வாழாது…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

BGM

ஆண் : உன்னை நினைத்து உன்னை நினைத்து…
இளைத்துப் போனதடி இதயம்… ஓஓஓ…

பெண் : உன்னை ரசித்து உன்னை ரசித்து…
களைத்துப் போனதடா விழியும்… ஏஏஏ…

ஆண் : காதல் சொல்ல காலம் நேரம்…
பார்த்துக் கிடந்தாய்…

பெண் : காற்றைக் கூட சிற்பம்…
செய்யும் வித்தை அறிந்தாய்…

ஆண் : வானம் உருளுது பூமி மிதக்குது…
ஏதோ தன்னாலே… ஏஏஏ…

பெண் : ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது…
எல்லாம் உன்னாலே… ஏஏஏ…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஆண் : தடை தாண்டிப் பாரு…
தடை சொல்வதாரு…
விடை தேடிப் பாரு உன்னை…
வெல்வது யாரு யாரு…

ஆண் : ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…

குழு : ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இது என்றும் நமக்குத்தான்…
ஃப்ரீடம் ஃப்ரீடம்…
இந்த பூமி நமக்குத்தான்…


Notes : Odum Varayil Song Lyrics in Tamil. This Song from Aegan (2008). Song Lyrics penned by Snehan. ஓடும் வரையில் பாடல் வரிகள்.


முழுமதி முழுமதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & பெலா ஷெண்டேசதீஷ் சக்ரவர்த்திகனிமொழி

Muzhumadhi Song Lyrics in Tamil


BGM

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

ஆண் : எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…

பெண் : நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது…
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது…
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது…
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

BGM

ஆண் : காவியக் காதல் ஆயிரம் கதைகள்…
பூமிக்கு சொன்னதடி…
நினைவுகளோடு வாழ்வது எந்தன்…
காதல் சொல்லுமடி…

பெண் : உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி…
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே…
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில் எந்தன்…
தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

BGM

ஆண் : நதியின் காதலை கரையிடம் வந்து…
அலைகள் சொன்னதடி…
மறுபடி மறுபடி அலையிடம் அதை…
கரைகள் கேட்குதடி…

பெண் : நதியினில் நீந்தும் நிலமிதை பார்த்து…
வெளிச்சத்தை அள்ளிச் சிந்தாதோ சிந்தாதோ…
காலையில் நமது காதலை ஏந்தி…
வானத்தில் பறந்து செல்லாதோ செல்லாதோ…

ஆண் : முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…

பெண் : நிலவுக்கு நிலவுக்கு இன்றே தெரிந்தது…
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது…
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைக்குது…
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது…

ஆண் : முழுமதி முழுமதி நிலவும் சொன்னது…
முழுவதும் முழுவதும் உண்மைதானது…
உன் போல் யாரும் இல்லை என்றது… ஹோ…


Notes : Muzhumadhi Song Lyrics in Tamil. This Song from Kanimozhi (2010). Song Lyrics penned by Na Muthukumar. முழுமதி முழுமதி பாடல் வரிகள்.


vaanam-mella-song-lyrics-in-tamil

வானம் மெல்ல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜா & பெலா ஷெண்டேஇளையராஜாநீதானே என் பொன்வசந்தம்

Vaanam Mella Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே…
வாசம் வந்ததெப்படி…
காதலான உள்ளம் ரெண்டு…
உயிாிலே இணையும் தருணம் தருணம்…

பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

BGM

ஆண் : அன்று பாா்த்தது…
அந்த பாா்வை வேறடி…
இந்த பாா்வை வேறடி…

BGM

பெண் : நெஞ்சில் கேட்குதே…
உள்ளம் துள்ளி ஓடி…
நீ வந்து போன காலடி…

BGM

ஆண் : கேட்காமல் கேட்பதென்ன…
உன் வாா்த்தை…
உன் பாா்வைதானே… ஓ…
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்…

பெண் : என் ஆசை என்ன என்ன…
நீ பேசி நான் கேட்க வேண்டும்…
இங்கேயே இன்பம் துன்பம் நீதானே…

ஆண் : உந்தன் மூச்சு காற்றைதான்…
எந்தன் சுவாசம் கேட்குதே…
அந்த காற்றை நெஞ்சின் உள்ளில்…
பூட்டி வைத்து காவல் காப்பேனே…

பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

BGM

ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

BGM

பெண் : பாதி வயதிலே…
தொலைந்த கதைகள் தோன்றுது…
மீண்டும் பேசி இணையுது…

BGM

ஆண் : பாதை மாறியே…
பாதம் நான்கும் போனது…
மீண்டும் இங்கு சோ்ந்தது…

பெண் : அன்பே என் காலை மாலை…
உன்னாலே உன்னாலே தோன்றும்…
என் வாழ்வில் நுட்பமாக வந்தாயே…

ஆண் : நில்லாமல் ஓடி ஓடி…
நான் தேடும் என் தேடல் நீதான்…
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே…

பெண் : கண்கள் உள்ள காரணம்…

BGM

ஆண் : உன்னை பாா்க்கத்தானடி…

BGM

ஆண் : வாழும் காலம் யாவும் உன்னை பாா்க்க…
இந்த கண்கள் போதாதே…

ஆண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

பெண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…

ஆண் : பூக்கள் பூக்கும் முன்னமே…
வாசம் வந்ததெப்படி…
காதலான உள்ளம் ரெண்டு…
உயிாிலே இணையும் தருணம் தருணம்…

பெண் : வானம் மெல்ல கீழ் இறங்கி…
மண்ணில் வந்து ஆடுதே…
தூரல் தந்த வாசம்…
இங்கு வீசுது இங்கே…

ஆண் : வாசம் சொன்ன பாஷை என்ன…
உள்ளம் திண்டாடுதே…
பேசி பேசி மௌனம் வந்து பேசுதிங்கே…


Notes : Vaanam Mella Song Lyrics in Tamil. This Song from Neethaane En Ponvasantham (2012). Song Lyrics penned by Na. Muthukumar. வானம் மெல்ல பாடல் வரிகள்.


சின்னஞ்சிறுசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஜாவேத் அலி & பெலா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாகுங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்

Chinnan Sirisu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…

பெண் : புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…

ஆண் : பொதுவாக பருவம்…
ஒரு பூந்தோட்டமாச்சு…

பெண் : வெறும் காடு பிழைக்கும்…
ஒரு நீரோட்டமாச்சு…

ஆண் : விலகாத உறவு…
ஒரு கொண்டாட்டமாச்சு…

பெண் : புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…

ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…

BGM

பெண் : சிடுமூஞ்சி நீதான் என்று…
சொல்லிச்சொல்லி கிள்ளிக்கிள்ளி…
சின்னச்சின்ன சேட்டை செய்தேனா… ஆஆஅ… ஓ…

ஆண் : சந்து பொந்தில் நீதான் வந்தா…
ஒத்திப்போக ஒத்துக்காம…
சண்டியர்போல் வம்புசெய்தேனா… ஓஓஓ…

பெண் : ஓஒ… அரை ட்ரைராயர் போட்டு…
பொய்யா நீ பாடாத லாவணி…

ஆண் : விரல் சூப்பி நின்ன…
புள்ள நீ போட்டாச்சு தாவணி…
விளையாட்டா இருந்த முகம்…
ஏன் வெளிறு போச்சு…

பெண் : வேற என்ன பூப்பு அடைஞ்சேன்…
விவரம் தெரிஞ்சாச்சு…

ஆண் : குறும்பாத்தான் திரிஞ்ச பொண்ணு…
ஏன் குமரியாச்சு…

பெண் : வேற என்ன உடம்பு உனக்கு…
வழங்க முடிவா ஆச்சு…

BGM

ஆண் : மண்ணாலதான் வீடு கட்டி…
நானும் நீயும் வாழுறப்போ…
மீன் கொழம்பு ஆக்கிப் போட்ட நீ… ஓஒ…

பெண் : கமரக்கட்டு கடலை முட்டாய்…
வாங்கினாக்க வாயில் வச்சு…
காக்காக் கடி கடிச்சு தந்தாய் நீ… ஓஒ… ஓஒ…

ஆண் : ஓஒ… கருவாட்டைப் போல…
தீயில என் நெஞ்சை வாட்டுன…

பெண் : அங்காள அம்மன் கோவிலில்…
கண்ஜாடை காட்டின…

பெண் : அடி ஆத்தி…
மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு…

ஆண் : வேறாரு ஆடி அசையும்…
அழகுமணித்தேரு…
அடி ஆத்தி நெனப்புக்குள்ள…
போய் நின்னதாரு…

பெண் : வேறாரு கூச்சம் விடுத்த…
ஈச்சம் மரப் பூவு…

ஆண் : சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…

பெண் : புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…


Notes : Chinnan Sirisu Song Lyrics in Tamil. This Song from Kungumapoovum Konjumpuraavum (2009). Song Lyrics penned by Vaali. சின்னஞ்சிறுசு பாடல் வரிகள்.


மச்சான் மச்சான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜா & பெலா ஷெண்டேயுவன் ஷங்கர் ராஜாசிலம்பாட்டம்

Machaan Machaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

பெண் : மச்சான் மச்சான்…
என் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட என்னை தச்சான்…

ஆண் : ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்…
நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே… ஏ…

பெண் : தாயாகி சில நேரம்…
சேயாகி சில நேரம்…
மடிமேல உன்னை சொமப்பேனே… ஏ…
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே… ஓஓ…

ஆண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

—BGM—

ஆண் : சொல்ல வந்த வார்த்தை…
சொன்ன வார்த்தை சொல்லப்போகும்…
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே… ஏ…

பெண் : என்னை என்ன கேட்ட…
என்ன சொன்ன என்ன ஆனேன்…
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே… ஏ…

ஆண் : பெண்ணே உந்தன் கொலுசு…
எந்தன் மனச மாட்டிப்போகுதே…
போகும் வழி எங்கும் வருவேனே… ஏ… ஏஹே…

பெண் : உன் பேரைத்தான் சொல்லிதினம்…
தாவணியப் போட்டேனே…

ஆண் : உசுரத்தான் விட்டாக்கூட…
உன்னைவிட மாட்டேனே…
மானே அடி மானே… ஏஏ…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சுபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…

—BGM—

ஆண் : ஆசைவச்ச நெஞ்சு…
இலவம் பஞ்சுபோலத்தானே…
உன்னத்தேடி நாளும் பறக்குமே… ஏ…

பெண் : அம்மிக்கல்லு மேல…
கால வச்சு மெட்டிப்போடும்…
அந்த நாளை மனசும் நெனைக்குமே…

ஆண் : கண்ணைமூடி பாத்தா…
எங்கும் நீதான் வந்து போகுற…
உடல் பொருள் ஆவியும் நீதானே… ஏ… ஏஹே…

பெண் : என்ன வேணும் என்ன வேணும்…
சொல்லிப்புடு ராசாவே…

ஆண் : உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே…
தேனே… வந்தேனே… ஏ… ஏஹே…
கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள…

பெண் : கொன்னுப்புட்ட… கொன்னுப்புட்ட…
வந்துபுட்ட செஞ்சபுட்ட என்னை உனக்குதான்…

ஆண் : மச்சான் மச்சான்…
உன் மேல ஆசை வச்சான்…
வச்சு தச்சான் தச்சான்…
உசுரோட உன்னை தச்சான்…


Notes : Machaan Machaan Song Lyrics in Tamil. This Song from Silambattam (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. மச்சான் மச்சான் பாடல் வரிகள்.