satham-illatha-song-lyrics-in-tamil

சத்தம் இல்லாத

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்பரத்வாஜ்அமர்க்களம்

Satham Illatha Song Lyrics in Tamil


பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

பெண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

BGM

ஆண் : சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்…
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்…
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்…
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்…

ஆண் : உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்…
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்…
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்…
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்…

ஆண் : இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்…
இளமை கெடாத மோகம் கேட்டேன்…
பறந்து பறந்து நேசம் கேட்டேன்…
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்…

ஆண் : புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்…
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்…
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்…
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்…

ஆண் : நிலவில் நனையும் சோலை கேட்டேன்…
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்…
நடந்து போக நதிக்கரை கேட்டேன்…
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்…

ஆண் : தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்…
எட்டிப் பறிக்க விண்மீன் கேட்டேன்…
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்…
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்…

ஆண் : பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்…
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்…
மனிதர்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்…
பறவைக்கெல்லாம் தாய்மொழி கேட்டேன்…

ஆண் : உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்…
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்…
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்…
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்…

ஆண் : எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்…
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்…
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்…
காமம் கடந்த யோகம் கேட்டேன்…

ஆண் : சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்…
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்…
உச்சந் தலை மேல் மழையைக் கேட்டேன்…
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்…

ஆண் : பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்…
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்…
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்…
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்…

ஆண் : மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்…
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்…
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்…
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்…

ஆண் : விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்…
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்…
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்…
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்…

ஆண் : பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்…
சூரியன் போல் ஒரு பனித் துளி கேட்டேன்…
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்…
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்…

ஆண் : பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்…
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்…
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்…
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்…

ஆண் : சொந்த உழைப்பில் சோறை கேட்டேன்…
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்…
மழையைப் போன்ற பொறுமையை கேட்டேன்…
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்…
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்…

ஆண் : இடியைத் தாங்கும் தோளை கேட்டேன்…
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்…
துரோகம் தாங்கும் வலிமைக் கேட்டேன்…
தொலைந்து விடாத பொறுமையை கேட்டேன்…

ஆண் : சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்…
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்…
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்…
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்…

ஆண் : சின்ன சின்னத் தோல்விகள் கேட்டேன்…
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்…
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்…
போலியில்லாத புன்னகை கேட்டேன்…

ஆண் : தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்…
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்…
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்…
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்…

ஆண் : காசே வேண்டாம் கருணை கேட்டேன்…
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்…
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்…
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்…

ஆண் : இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை…
இதிலே எதுவும் நடக்கவில்லை…
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று…
மரணம் மரணம் மரணம் கேட்டேன்…


Notes : Satham Illatha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. சத்தம் இல்லாத பாடல் வரிகள்.