பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | வித்யாசாகர் | மொழி |
Kannaal Pesum Penne Song Lyrics in Tamil
ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…
ஆண் : எனது கோரிக்கை நீ கேளடி கேளடி…
உனது கோபங்களும் ஏனடி…
உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி…
எனது சாபங்களை தீரடி…
ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
—BGM—
ஆண் : நிலா பேசுவது இல்லை…
அது ஒரு குறை இல்லையே… ஆ…
குறை அழகென்று கொண்டால்…
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே…
ஆண் : பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றேன்…
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்…
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்…
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்…
ஆண் : வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி…
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி…
ஆண் : ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
—BGM—
ஆண் : எங்கே குறுநகை எங்கே…
குறும்புகள் எங்கே கூறடி… ஓ…
கண்ணில் கடல் கொண்ட கண்ணில்…
புயல் சின்னம் ஏதோ தெரியுதடி…
ஆண் : செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்…
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்…
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்…
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்…
ஆண் : வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி…
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி…
ஆண் : ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…
ஆண் : எனது கோரிக்கை நீ கேளடி கேளடி…
உனது கோபங்களும் ஏனடி…
உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி…
எனது சாபங்களை தீரடி…
Notes : Kannaal Pesum Penne Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. கண்ணால் பேசும் பாடல் வரிகள்.