பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | கே.எஸ். சித்ரா | பரத்வாஜ் | அமர்க்களம் |
Unnodu Vazhadha Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்…
எந்தன் பெண்மை பூப்பூக்கவே…
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்…
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில்…
ன்னை ஏந்தத்தானோ…
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
—BGM—
பெண் : மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது…
முரடா உனை ரசித்தேன்…
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது…
கர்வம் அதை மதித்தேன்…
பெண் : முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ…
என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ…
உன்னைப் போலே ஆண் இல்லையே…
நீயும் போனால் நான் இல்லையே…
நீர் அடிப்பதாலே மீன் நழுவ வில்லையே…
ஆம் நமக்குள் ஊடலில்லை…
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
—BGM—
பெண் : நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன்…
அன்பே தீயாய் இரு…
நீ ஒரு முள் என்றால் நான் அதில் ரோஜா…
அன்பே முள்ளாய் இரு…
பெண் : நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது…
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது…
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்…
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்…
பெண் : நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை…
காதலோடு பேதம் இல்லை…
பெண் : உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…
என் உள்நெஞ்சு சொல்கின்றது…
பூவோடு பேசாத காற்றென்ன காற்று…
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது…
பெண் : மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்…
எந்தன் பெண்மை பூப்பூக்கவே…
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்…
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில்…
என்னை ஏந்தத்தானோ…
—BGM—
Notes : Unnodu Vazhadha Song Lyrics in Tamil. This Song from Amarkalam (1999). Song Lyrics penned by Vairamuthu. உன்னோடு வாழாத பாடல் வரிகள்.