பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
Unknown | கே.எஸ். சித்ரா & திப்பு | பிரவின் மணி | தூத்துக்குடி |
Karuvappaiya Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
கருவாச்சி கவுந்துபுட்டா மனசாட்ச தொலைச்சுப்புட்டா…
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா… ஆ…
பெண் : குண்டூசி மீசைக் குத்தி மேலுதடு காயமாச்சு…
கிறுக்குப் பய பல்லு பட்டு கீழுதடு சாயம் போச்சு…
கிச்சு கிச்சு தாம்பலத்தில் உசுர வச்சு விளையாடுறேன்…
நீதான் வந்து கண்டு புடிக்கணும்டா…
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
—BGM—
ஆண் : வீச்சருவா புடிக்கிற வித்தை தெரிஞ்சவன்…
புத்தகத்த சுமக்கிற பூவ ரசிக்கிறேன்…
பெண் : ஆத்திச்சூடி பாடத்த நித்தம் சொன்னவ…
வள்ளுவனின் மூன்றாம் பால் தேடி படிக்கிறேன்… ஏ…
ஆண் : சோளக்காட்டு பொம்மையப் போல்…
ஒத்தையிலே நின்னேனே…
பெண் : சோடி வரம் கேட்டு உந்தன் துணைக்கு…
நானும் வந்தேனே… ஆ…
ஆண் : ஒடுக்கப்பட்ட கல்லு இவ மூலக்கல்லா ஆகிடத்தான்…
காதல் என்னும் உளி வச்சு ஒடச்சேன்…
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
—BGM—
பெண் : கட்டப்புலி மாடனுக்கு பொங்க வச்சுத்தான்…
கட்டபொம்மன் உன்னோட கைய புடிக்கிறேன்…
ஆண் : தேவதைய சேரத்தான் தெற்கே உதிச்சவன்…
தேனெடுக்கும் நெனப்புல ஓடா இளைக்கிறேன்…
பெண் : ஏ… கொப்பர தேங்காப் பூவ உனக்கு தந்தேனே…
ஆண் : திருவலா மாறி உன்ன திருவிப்புட்டேனே…
பெண் : ஆ… சின்னப் புள்ள ராசாத்தி செம்புலிங்கத்த நேர்ந்துகிட்டேன்…
ரெட்டப்புள்ள பெத்துக் கொடுக்கிறேன் டா…
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
ஆண் : ஏ… கருவாச்ச கவுத்துப் புட்டேன்…
மனசாட்ச புடிச்சிப் புட்டேன்…
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
பெண் : குண்டூசி மீசைக் குத்தி மேலுதடு காயமாச்சு…
கிறுக்குப் பய பல்லு பட்டு கீழுதடு சாயம் போச்சு…
கிச்சு கிச்சு தாம்பலத்தில் உசுர வச்சு விளையாடுறேன்…
நீ தான் வந்து கண்டு புடிக்கணும்டா…
பெண் : கருவாப் பையா கருவாப் பையா…
கருவாப் பையா கருவாப் பையா…
Notes : Karuvappaiya Song Lyrics in Tamil. This Song from Thoothukudi (2006). Song Lyrics penned by Unknown. கருவாப் பையா பாடல் வரிகள்.