pookkalae-sattru-oyivedungal-song-lyrics

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஹரிசரண் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

பெண் : தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தின தக்கிடுதானே நா…
தி திரேரேநா ஆ ஆஆ…
தின தக்கிடுதானே நா…
திரேரேநா… ஆ… தாரே நா நா…
நீ நீ… ஆஆ…

பெண் : இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை…
உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ…
விழி அழகை கடந்து உன் இதயம் நுழைந்து…
என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ…

ஆண் : இவன் பயத்தை அணைக்க…
அவள் இவனை அணைக்க…
அவள் செய்கையில் பெய்வது ஐ…
அவள் விழியின் கனிவில் எந்த உலகம் பணியும்…
சிறு நோயளவு ஐயமில்லை…

பெண் : என் கைகளை கோர்த்திடு ஐ விரலை…
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை…

ஆண் : அவள் இதழ்களை நுகர்ந்துவிட…
பாதை நெடுக…

பெண் : தவம் புரியும்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…
ஹே… ஐ என்றால் அது கடவுள் என்றால்…
அந்த கடவுளின் துகள் அவள்தானா…

ஆண் : ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

BGM

பெண் : நீர்வீழ்ச்சி போலே நின்றவன்…
நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்…
வான் முட்டும் மலையை போன்றவன்…
நான் ஆட ஒரு மேடை ஆனாய்…

ஆண் : என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று…
எனை காணச்செய்தாள்…
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து…
கையில் தந்தாள்…

பெண் : யுகம் யுகம் காண முகம் இது போதும்…
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்…

ஆண் : மறு உயிர் தந்தாள்…
நிமிர்ந்திடச் செய்தாள்…
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : ஹே… ஐ என்றால் அது அழகு என்றால்…
அந்த ஐகளின் ஐ அவள்தானா…

பெண் : ஹே… ஐ என்றால் அது தலைவன் என்றால்…
அந்த ஐகளில் ஐ அவன் நீயா…
ஹையோ என திகைக்கும்…
ஐ என வியக்கும்…
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை…
அவள் தந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…

ஆண் : பூக்களே சற்று ஓய்வெடுங்கள்…
அவள் வந்துவிட்டாள்…
அவள் வந்துவிட்டாள்…


Notes : Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil. This Song from I (2015). Song Lyrics penned by Madhan Karky. பூக்களே சற்று ஓய்வெடுங்கள் பாடல் வரிகள்.